Thursday, December 20, 2007

அப்பா

உடம்பெல்லாம் புழு ஊர்வதுப்போல் இருந்தது குமாருக்கு. தன்னை நினைத்து அவனுக்கே வெறுப்பாய் இருந்தது.

'சே! இந்த மனுஷனோட ரத்தமா என் உடம்புல ஓடுது? இப்படிப்பட்ட கீழ்தரமான ஒருத்தருக்கு மகனா பிறக்க நான் முன் ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ தெரியலையே! ஆண்டவா'

குமாரின் மனதில் பல வாறாக சிந்தனை அலையடித்துக்கொண்டிருந்தது. ஒரு இடத்தில் உட்கார முடியாமல் என்னமோ போல் இருந்தான் மருத்துவமனை ஐ.சி.யூ வாட் வெளியே நின்றிருந்தான்.

"மேடம், இனி இங்கே வச்சு பார்ப்பதுல அர்த்தம் இல்ல. விடியும் வரை உயிரு இருப்பதே பெரிய விஷயம். நீங்க வீட்டுக்கு கொண்டு போறதா இருந்தா சொல்லுங்க. பேப்பர்ல கையெழுத்து போட்டு தர்றேன்" என தன் கையை விரித்தார் டாக்டர் விஜயன்.

தன் முந்தானையால் அடக்கி வைக்க முடியாத அழுகையை மறைக்க வாயை பொத்திக்கொண்டார் காந்திமதியம்மாள். தன் கணவர் தன்னை விட்டு வெகுதூரம் செல்வதை மனம் உணர்ந்தாலும் அதற்கு இடம் கொடுக்க மறுத்தது.

"குமார், இப்ப என்ன பண்றது? டாக்டரே அப்பாவை காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாரே!" தளுத்தளுத்த குரலில் தன் மகனிடம் கேட்டார் காந்திமதியம்மாள்.

"செத்து போட்டும்.. விடுங்க. இவருக்கு போய் இப்படி அழுவுறியேம்மா!"
மனதில் இருந்த கோபம் வார்த்தைகளாய் வெளியானது குமாருக்கு.

"ஏண்டா.. அதுவும் இந்த நேரத்துல உனக்கு என்ன வந்துச்சு? உங்கப்பா மேலே உனக்கென்ன இப்படி திடீர் வெறுப்பு?"

திடீர் வெறுப்புதான். ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவின் மேல் தன் உயிரையே வைத்திருந்தவந்தான் குமார். அப்பாதான் தன்னுடைய குரு. அவரைப்போலவே தன் நடை, உடை, ஸ்டைல் எல்லாம் இருக்க வேண்டும் என அவரை பார்த்து பார்த்து செய்தவனாயிற்றே.. அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போனதை கேள்வி பட்டதும் பதறீப்போய் பட்டணத்திலிருந்து அறக்க பறக்க ஓடி வந்தவன். மூன்றூ நாட்களாய் அப்பாவுக்கு துணையாய் மருத்துவமனையே கதியென்று இங்கேயே விழுந்து கிடப்பவன். அப்பா சீக்கிரம் குணமாக வேண்டும் என நிமிடத்துக்கு ஒரு முறை கடவுளை வேண்டிக்கொண்டிருப்பவன்.. திடீரென என்ன வந்துச்சு இவனுக்கு?

"அம்மா.. அப்பா நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்திட்டாரம்மா"

"என்னடா சொல்ற?"

"அப்பா நம்ம குடும்ப வக்கீலை அழைத்து வர சொன்னாருன்னு மனோகரன் அங்கிளை கூட்டிட்டு வந்தேன். தாகமா இருக்கு தண்ணீர் எடுத்து வர சொல்லி என்னை அனுப்பிவிட்டார். நான் தண்ணீர் எடுத்து ரூம்க்கு வரும்போதுதான் அந்த விஷயத்தை கேட்டேன்......"

சிறிது நேர மௌனத்துக்கு பிறகு,

"அவர் தன்னோட சொத்துல பாதி யாரோ கார்த்திக்கு எழுதி வச்சிருக்கார். மனோகரன் அங்கிள் இது யாருன்னு கேட்டதுக்கு, அவன் என்னோட இன்னொரு மகன். குமாருக்கு மூத்தவன்ன்னு சொன்னது என் காதில் விழுந்துடுச்சு. அப்பா இப்படி உனக்கும் எனக்கும் பச்சை துரோகம் பண்ணிட்டாரேம்மா!"

"குமார்.."

"அப்பா மேலே நீயும் நானும் எவ்வளோ பாசமா இருந்தோம்.. ஒருத்தருக்கொருத்தர் எவ்வளொ அன்பு வச்சிருந்தோம்.. ஆனால், அவர் யாரோ ஒருத்தன் கார்த்திக் மேலே அன்பு வச்சிருக்கார் பாருங்க.. வெளியே நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு உள்ளுக்குள்ள பெண் மோகம் இருந்திருக்கு அவருக்கு. உனக்கு துரோகம் பண்ணிட்டாரு.."

"குமா..."

"நீ ஒன்னும் பேசாதம்மா.. அவருக்கு ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செஞ்சியேம்மா.. அவருக்கு உடம்பு சரியில்லாதபோதேல்லாம் உன்னையும் கவனிக்காமல் அவரையே கண்ணுக்குள்ள வச்சி தாங்கினியே! உனக்கு கண் ஆப்புரேஷன் பண்ணா 2 வாரம் மருத்துவமனையிலேயே தங்கினா அவரை யார் பார்த்துக்குவான்னு சொல்லி நீ இன்னும் அந்த கண் ஆப்புரேஷன் கூட பண்ணாம இருக்கியே! அவருக்காக என்னென்ன தியாகம் பண்ணியிருக்க.. ஆனா, அவர்! யாரோ ஒருத்தியை இத்தனை வருஷமா ஊருக்கு தெரியாமல் வச்சிருக்கார்.. இப்போகூட உனக்கும் எனக்கும் தெரியாமல் மூடி மறைச்சி வக்கீல் மூலமா அவனுக்கு சொத்து எழுதி வச்சி தன் பாவத்தை கழுவ பார்க்கிறார்.. பார்த்தியா?"

"சொத்துதான் உன் பிரச்ச்னையாடா?"

"இல்லம்மா. இந்த எல்லா சொத்தையும் அப்பா அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வச்சிருந்தா கூட நான் ரொம்ப ரொம்ப பெருமை பட்டிருப்பேன். எனக்கு இந்த சொத்துல இருந்து சல்லி காசு வேணாம்மா.. ஆனா, இந்த மனுஷன் இப்படி ஒரு மிருகமா நடந்திருக்கிட்டாரே! அதான்மா என்னால தாங்கலை. அவரோட பையன் கார்த்திக்கே வந்து இவருக்கு கடைசி காரியங்கள் செய்யட்டும்.. செத்தா கூட இவர் முகத்துல விழிக்க மாட்டேன் நான்!"

"அப்படி சொல்லாதடா.. நீதானடா இவருக்கு இந்த காரியங்கள் செய்ய வேணும். அவரோட ஆத்மா சாந்தியடைய வேணாமாடா?"

"அதுக்குதான் அவரோட செல்ல பிள்ளை கார்த்திக் இருக்கான்ல.. இதைப்பத்தி இதுவரை தெரியாமல் இருந்திருக்கியேம்மா. உனக்கு கொஞ்சம் கூட கோபம் வரலை?"

"கார்த்திக் இப்போ ஜெர்மனில இருக்கான்.. ஒரு இஞ்சினியரிங் கம்பேனில சீனியர் இஞ்சினியரா வேலை செய்யுறான்.. போதுமா? இல்ல இன்னும் வேற தகவல் வேணுமா உனக்கு?"

"அட்ரா சக்கைனானா.. உனக்கு ஏற்கனவே இந்த விவகாரம் தெரியுமா? அதான் இந்த மனுஷனுக்கு தான் செய்யுறது ஒரு தப்புன்னு வருத்தமே தெரியாமல் இருக்காரா? இந்த மாதிரி ஆளுங்களுக்கு கொடுக்கிற தண்டனை, இனி யாரும் தன்னோட கட்டிய மனைவிக்கும் பிள்ளைங்களுக்கும் துரோகம் பண்ண தைரியம் இல்லாதவங்களா ஆக்கணும்!!" கோபத்துக்கு உச்சிக்கே போய் விட்டான் குமார்.

"குமார், நான் சொல்றதை கேளுடா.."

"நான் சொல்றதை நீ கேளும்மா.. கார்த்திக்கை பத்தி இவ்வளோ தெரிஞ்சு வச்சிருக்கல்ல.. கண்டிப்பா அவனோட முகவரியும் உங்கிட்ட இருக்கும். கால் பண்ணி அவனை யும் வன் அம்மாவையும் வந்து எல்லா காரியமும் பண்ண சொல்லு. என் அப்பா எப்பவோ செத்துப்போயிட்டார். நான் கிளம்புறேன்"

"டேய் குமார்.. நான் சொல்றதை கேளுடா. நீ இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கிறது கார்த்திக்கோட அம்மாக்கிட்டதாண்டா..."

"அம்மா?"

"ஆமாண்டா.. கார்த்திக் எனக்கும் இன்னொருத்தருக்கும் பிறந்தவன். உன் அண்ணன். என்னை விதவை கோலத்தில் பார்த்த உங்கப்பா என்னை மறுமணம் செஞ்சிக்கிடதுமில்லாமல் கார்த்திக்கையும் தன் சொந்த மகனாத்தான் இப்ப வரைக்கும் நினைக்கிறார். ஆனால் இந்த மறுமணத்துல அவனுக்கு சம்மதமில்லாமல் தன் மாமாக்கிட்டதான் வளர்வேன்னு என்னை விட்டு பிரிஞ்சி இருக்கான். அப்பப்போ உங்கப்பாதான் அவனை போய் பார்ப்பார். எவ்வளவுதான் அவமானப்பட்டாலும் கார்த்திக்தான் தன்னோட முதல் மகன்னு நினைக்கும் ஒரு உத்தமர் உங்கப்பா.."

"அம்மா....."

"சாரி மேடம். பேஷண்ட் இறந்துட்டாரு." நர்ஸ் வந்து சொன்ன அந்த வார்த்தையில் இருவரும் திடுக்கிட்டனர்..

குமார் அப்பா என்று கத்தி கதறி அழுதான். மீண்டும் தன்னை நினைத்து அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. ஒரு உத்தமரை அதுவும் அவர் சாகப்போகும் தருவாயில் இப்படி ஒரு அபாண்ட பழி சுமத்திட்டுமே என மனம் புழுகினான். கண் முன் தன் அப்பா அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார்... மூச்சில்லாமல்..



பி.கு: நண்பர்களின் வற்புருத்தலின் பேரில் இந்த கதையை சர்வேசனின் நச்சுன்னு ஒரு கதை போட்டிக்கு அனுப்புறேன். :-)

Saturday, December 01, 2007

மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்

உரிமைப்போராட்டம், மலேசியாவில் கலவரம் என்று எங்குப்பார்த்தாலும் (தமிழ்மணத்தில் கூட) அதிருகிறது மலேசியா. இதைபப்ற்றி பலரும் பல வகையாக அலசி ஆராய்ந்துவிட்டார்கள். தினசரி நாளிதழ்களிலும், தொலைதொடர்பு சாதனங்களிலும் கிழித்து நாராய் தொங்க விட்டுட்டார்கள்.. ஒவ்வொன்றையும் படிக்கும்போதும் நான் நேரில் கண்ட காட்சிகளில் சிலவற்றவை மாறுப்பட்ட போதிலும் இதற்கென்று தனியாக ஒரு பதிவெழுதவேண்டும் என்று நினைக்கவில்லை.

இன்று TBCD அண்ணாவின் பதிவையும் கோவி அவர்களின் பதிவையும் படித்த போது, அண்டை நாட்டுக்காரர் அவர் கண்ணோட்டத்தில் எழுதிவிட்டார்.. இங்கே வந்து சில மாதங்கள் குடியேறிய TBCDயும் அவர் கண்ணோட்டத்தில் என்னென்ன தெரிந்ததோ அதைப்பற்றியும் எழுதிவிட்டார். இனி, ஒரு மலேசியராக என் கண்ணோட்டத்தில் சில விஷயங்களை பற்றி இங்கே சொல்ல நினைக்கிறேன். என்னுடைய இந்த பதிவு யாரையும் சாராமல் நடுநிலைவாதியாக எழுதுகிறேன்.

1874-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நிலமாய் அவர்களின் ஆட்சியின் உட்படுத்திக்கொண்ட பொழுது அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைக்காக இந்தியர்களும் சீனர்களும் ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டனர் என்று அனைவரும் அறிந்ததே. அப்பொழுதே மலாய், சீன, இந்தியர் ஒன்றுப்பட்டால் போராட்டம் ஆரம்பித்து அவர்களை நாட்டை விட்டு துரத்த இயலும் என்று முன்கூட்டியே உணர்ந்து மூன்று இனத்தவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டனர். எப்படி?

இந்தியர்களை தோட்டப்புறங்களிலும், சீனர்களை ஈயக்குள அருகினுலும், மலாய்காரர்களை கிராமப்புறங்களிலும் தங்கும்படி பார்த்துக்கொண்டனர். மற்ற இனத்தவரிடம் தொடர்பில்லாததால் அவர்கள் இருக்கும் இடமே உலகம் என்று கிணற்று தவளையாகவே இருந்ததும் உண்மைதான்!

இரண்டாம் உலகப்போருக்கு பிறகுதான் சுதந்திரத்தின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் உண்ர்ந்தனர். டாத்துக் ஓன் ஜபார் மாலாயாவில் 1947-இல் பார்ட்டி கெசாத்துவான் மெலாயு என்ற கட்சியை ஆரம்பித்து மலாய் இனத்தவர்களை ஒன்று படுத்தினார். பின்னால் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் மற்றும் து ஹுஸ்ஸேன் ஓன் போன்ற தலைவர்கள் சுதந்திர தீயை அதிகப்படுத்தி ஆகஸ்ட் 31 1957-இல் மலாயாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர்.

இங்கு அவர்களின் சுத்ந்திர வெற்றியின் மிக முக்கிய ஆயுதம் ஒற்றுமை. மூவினத்தவருடைய பிறந்த ஒற்றுமையே மிக குறுகிய காலத்துலேயே சுதந்திரம் பெற வழி வகுத்தது..

ஆனால் இப்போது?

யாரின் மூலமாக சுதந்திரம் கிட்டியதோ.. அவர்களின் மூலமாகவே சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கியது.

1970-ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் பொருளாதார நிலை மிகவும் வருத்தப்படும் நிலையில் இருந்தது. ஆய்வுகளில் மலேசிய பொருளாதாரத்தில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் ஆதிக்கம் தலைத்தோங்கி நிற்பது தெரிந்தது. மலாய்க்காரர்கள் இன்னமும் கிராமப்புறங்களில் சொந்த தொழில்களில் செய்து வறுமை கோட்டின் கீழேதான் இருந்தார்கள். பொருளாதாரத்தை வளர்க்க நினைத்த தலைவர்கள் முதலில் இந்த நிலையை மாற்ற வேண்டும் என நினைத்துதான் பல உரிமைகளை பூமிபுத்ராகாரர்களுக்கு வழங்க தொடங்கினர். ஆனால், அது மற்ற இனத்தவர்களை பாதிக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள்.. அல்லது நினைக்க மறுத்துவிட்டார்களா?

New Economic Policy (NEP) தான் இந்த திட்டங்கள் செயல்படுத்த ஆரம்பித்த பாலிஸி. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றாக அமலப்படுத்தப்பட்டபோது பொருளாதார வளர்ச்சியும் கூடவே வளர்ந்தது. மனிதர்களுக்கு எப்போது போதும் எனும் மனம் வந்திருக்கு? வளர்ச்சி அதிகமாக்க வேண்டும் எனத்தானே நினைப்பாங்க? அதேதான் அடுத்து நடந்தது.

நாலாவது பிரதமராக பதவியேற்ற துன் டாக்டர் மஹாதிர் முகமது 1981-இல் ஆட்சிக்கு வந்தார். அவர் திறமைசாலி. நாட்டை முன்னுக்கு கொண்டு வரணும். அனைத்துலக அளவில் மலேசியா பிரசித்து பெற வேண்டும். பல சாதனைகளை மலேசியா செய்ய வேண்டும் என பல திட்டங்களை வகுத்தார். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் அனைத்தையும் குறுகிய காலத்தில் செய்ய முடியாத சூழ்நிலை. அதனால் பல திட்டங்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் போட்டார். அதில் நலல் வெற்றியும் கண்டார்.

இவரால் மலேசியா பல படிகளை தாண்டி மேலே வந்தது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு தலைவன் தவறு செய்தாலும், அதையும் தாண்டி பல நன்மைகள் நாட்டு மக்களுக்காக செய்தால் கண்டிப்பாக அந்த தலைவனை மக்கள் போற்றுவார்கள். அதற்க்கு உதாரணம் இவரேதான். 20 வருடங்களுக்கும் மேலாகவே இந்த மண்ணில் பிரதமராக இருந்தவர் இவர்.

நாடும் உயர்ந்தது. நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள்.. எல்லாரும் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள். இருந்தும் மலாய்காரர்களின் உரிமைகள் அதிகம். அரசாங்கத்தின் சலுகைகள் அவர்களுக்கு அளவுக்கு மீறியே கிடைத்தது உண்மை. இந்த சலுகைகளை வெட்டவும் முடியாது மஹாதீரினால். அவர் அப்போது அந்த உரிமையின் மேல் கை வைத்திருந்தால், அவர் எப்போதோ பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பார். எல்லா நாட்டிலும் இதுதானே நடக்கிறது!!!!

ஆனால், அப்படி இவர் தூக்கப்பட்டிருந்தால் மலேசியாவால் இந்தளவு சாதிக்க முடிந்திருக்காது. இப்போது நடைமுறையில் இருக்கும் பல திட்டங்களின் பிள்ளையார் சுழி போட்டதும் அவரேதான். இவருக்கு பிறகு வந்தவருக்கு மஹாதிர் அளவுக்கு திறமை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிரதமரால் இந்த பிரச்சனையை கவனிக்க முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நம் இனத்தவரின் தலைவர் இருக்கார் அல்லவா? அவர்தானே நம் நலன்களை பராமரிக்க வேண்டும்? நமக்கு ஏதாவது பிரச்சனையென்றால் ஓடி வந்திருக்க வேண்டும்?

மஹாதீராவது 21 வருடங்கள்தான் ஆட்சியில் இருந்தார். ஆனாலும் நம் இந்திய சமூதாயத்தின் தலைவர், மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா) தலைவர் பொதுத்துறை அமைச்சராகவும் தலைவராகவும் 28 வருடக்காலமாக இருக்கிறாரே! அவர் என்ன செய்தார்? இப்படி மாற்றங்கள் நடக்கும்போதே ஏதாவது செய்திருக்க வேண்டும். சரி, அப்போதுதான் முடியவில்லை..

இந்திய மக்களின் நலனில்தான் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டார்? சரி, நல்லது செய்ய வேனாம்யா.. கெட்டதாவது செய்யாமல் இருக்கலாமே?

அரசாங்கம் ஒன்னும் செய்யவில்லை என்று சொல்வது அபத்தம். பல உதவிகளை நம் சமூதாயத்துக்கு செய்தது. மற்ற தலைவர்களை விட மஹாதீர் காலத்தில் அவர் நிறையவே செய்திருக்கிறார். 10 மில்லியன் ரிங்கிட் டெலிகோம் பங்குகள், 9 லட்சம் ரிங்கிட் எம்.ஏ.எஸ் பங்குகள், 18 லட்சம் ரிங்கிட் எம்.ஐ.எஸ்.சி பங்குகள், 37 லட்சம் ரிங்கிட் டிவி 3 பங்குகள், 55 லட்சம் ரிங்கிட் டெலிகோம் பங்குகள், 1 கோடி 50 லட்சம் ரிங்கிட் எம்.ஆர்.சி.பி பங்குகள் என்று பல வெவ்வேறு காலக்கட்டத்தில் இந்தியர்களுக்காக அரசாங்கம் கொடுத்த பணங்கள் எங்கே போனது? அதை முறையாக கண்காணித்து செயல்பட்டிருந்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணிருக்கலாம்.

சரி, அரசாங்கம் கொடுத்த பணமும் போய்விட்டது. மக்கள் சேமிப்பாக மஇகா ஹோல்டிங்ஸ் ஆரம்பித்த சேமிப்பு திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள் வாயக்கட்டி வயித்தக்கட்டி சம்பாரித்த பணத்தை போட்டாங்களே? முதலுக்கே மோசம் என்பதுபோல போட்ட பணமும் எங்கே என்று தெரியவில்லை.. கிடைக்க வேண்டிய வட்டி பணமும் கிடைக்க வில்லை. இப்படி அரசாங்கம் கொடுத்தப் பணமும் மக்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணமும் கட்சிகளும் தலைவர்களுமே முழுங்கியதில் பாமர மக்களுக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை..

கடந்த வாரம் நடந்த போராட்டத்துக்கும் இதுவே காரணம்.. இவர்கள் தங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை என்று போராடுகிறர்களே! இதுக்கு உண்மையில் யார் காரணம்? மக்களா? தலைவர்களா? இது ஒரு உரிமை போராட்டம்தான்! ஏன்? இந்திய மக்களின் பிரநிதியிடம் இதே மனுவை கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? அவர்களுக்கு அவர்கள் வேலைகளை செய்யவே நேரம் இலலாத போது இந்த மனுவை கவனிக்கவா நேரம் இருக்க போகுது? கிடைக்கிற எல்லா நேரமும் தன் சொந்த அலுவல்களையும் மற்ற கட்சிகளுடன் சண்டைகளும் போடுவதே முழு நேர வேலையாக கொண்டவர்களுக்கு இதை கவனிக்க நேரம் இராது.

சரி, இப்போது இந்த போராட்டத்தை நடத்தியவர்களை பார்ப்போம். இவர்கள் HINDRAF (Hindhu Rights Action Force) என்று ஆரம்பித்திருக்கிறார்கள். HINDRAF எனும் பெயரில் இயங்குவதை விட INDRAF (Indian Rights Action Force) என பெயரில் இயங்கியிருந்துக்கலாம். இது ஒரு இனத்தவரின் போராட்டமாக இல்லாமல், ஒரு மதத்தினரின் போராட்டமாகவே ஆக்கபட்டுள்ளது.

இவர்களின் போராட்டம்தான் என்ன?

1- Discrimination of Indians
2- இந்தியர்களின் வறுமையை ஒழிப்பது
3- தோட்டப்புறத்து இந்தியர்களின் நலனைப் பேணுவது
4- கோவில்கள் இடிப்படுவதை தடுப்பது
5- தமிழ் பள்ளிகளின் நலன்களை பேணுவது

..... இன்றும் நிறைய..
அடுக்கிக்கொண்டே போகலாம். இது எல்லா, மலேசிய இந்தியர்களுக்கும் பொருந்தும். ஆனால், ஏன் இந்துக்களை மட்டும் ஒன்றுக்கூட்டி இந்த போராட்டத்தை நடத்த வேண்டும். கொஞ்ச நஞ்சம் இருக்கும் ஒற்றுமையையும் இது குலைக்க நேரிடும். எந்த ஒரு போராட்டத்துக்கும் முக்கியமான ஒன்று ஒற்றுமை. எந்த மதமும், இனமும் நம்மை விட தாழ்ந்தவர் இல்லை என்ற ஒரு எண்ணம் நமக்கு முதலில் வர வேண்டும். எல்லாரையும் சமமாக மதிக்க வேண்டிய பக்குவம் நமக்கு வர வேண்டும்.

பிறகு, என்ன பண்ண போகிறோம்? ஒரு செயலுக்கு பிறகு என்ன நடக்கும்? அதை எப்படி எதிர்க்கொள்வது? என்பதைப்பற்றியும் பல வழிகளையும் யூகித்து செயல்படுவதே சிறந்தது. அது மற்றவர்களை பாதிக்காத வாறும் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.

பேரணியில் எட்டாயிரக்கணக்கான இந்துக்கள் கலந்துக்கொண்டனர். இதில் முதல் தவறு கண்டிப்பாக அரசாங்கத்தை சான்றது. மனு கொடுப்பது மட்டுமே இவர்களின் குறிக்கோள் என்பதும் அதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கோறியபோது கொடுத்திருந்தால் எல்லாம் சுபமாக நடந்திருக்கும். பேரணியை அனுமதிக்காததுனால் இந்த குழுவிற்கு அரசாங்கத்தின் மேல் மேலும் கோபங்கள் அனுமதித்தது.

சட்டவிரோதமென்று தெரிந்தும் மக்கள் அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டது நம் இந்துக்களின் தவறு. கஷ்டங்கள் யாருக்கு? அடியும், ஜெயிலும், ராசாயண தண்ணீரினால் மூச்சடைப்பும், வாந்தியும், இன்னும் பல கஷ்டங்களும் நமக்கே! சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் கோர்ட் கேஸ் என்று அழைபவர்கள் யார்?

அழகாய் இருந்த பூமியில் கலவரம் என்று அனைத்துலக மேடையில் நம் மலேசிய மானம்தான் கப்பலேறி போய்க்கொண்டிருக்கிறது. இதனால் புதிதாக ஆரம்பிக்கபோகிற பிரச்சனை என்ன தெரியுமா? வெளிநாட்டவர் நம் நாட்டில் முதலீடு செய்ய பயப்படுவர். தன் பங்குகளை திரும்ப பெற்றுக்கொள்வர். நமது பொருளாதாரம் பாதிக்கப்படும். Inflation ஏற்ப்படும். Inflation ஏற்ப்பட்டால் மக்களாகிய நம்மைத்தான் அது பாதிக்கும். 1997-இல் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடி திரும்ப உதிக்கும்.

இப்படி வரப்போகும் பாதிப்புக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு ஒரே வழி. நம் இனத்தலைவர்கள் இறங்கி வந்து இந்த கோறிக்கைகளை கேட்டு தெளிவு படுத்த வேண்டும். அரசாங்கம் ஒரு ஹாட்லைன் (Hotline) ஆரம்பிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், இது நம் இந்திய தலைவர்களிடமே கொடுக்கப்படுவதை கேட்டதும் மனதில் ஒரு அச்சம். திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறி விடுமோ! எவ்வளவு நாள் இது சரியாக பேணப்படும்?

இந்த விவகாரம் பல நாடுகளுக்கு தெரிய வந்தபோது, உதவ முன் வந்தது தமிழ்நாடு. உண்மையில் அந்த உதவி தேவையில்லைதான். உள்நாட்டு பிரச்சனை சுபமாக தீர்த்துவைக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது. இதில் மற்ற நாடுகள் தலையிடுவது லேசாக புகைந்துக்கொண்டிருப்பதை தீக்காடாக மாற்றக்கூடும்.

தமிழ்நாட்டின் உதவும் மனப்பான்மை போற்றக்கூடியதே! ஆனால், அந்த உதவி தேவைபடாது என்று நல்ல படியாக சொல்லியிருக்கலாம் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசீஸ். "Nothing to do with TamilNadu" என்று முகத்தில் அடித்த மாதிரி பேசியது அவரின் தவறு. இரு நாட்டினருக்கும் நல்ல புரிந்துணர்வை இவரின் வார்த்தைகள் புண்பட செய்திருக்கும்.

ஆனால் TBCD சொல்லியபடி:

"இந்த தடைகளையும் மீறி இந்த தலைமுறையினர் சிலர் வளர்ந்திருக்கிறார்கள் என்றால், அது அவர்களின், தனிப்பட்ட கடும் உழைப்பு, முனைப்பு. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்."

என்ற வரிகள் முற்றிலும் உண்மை. சம்பாதிப்பதுக்கும், சுகமாக வாழ்வதுக்கும் மலேசியா ஒரு சிறந்த நாடு. இங்கே வாழ முடியவில்லை என்று சொன்னால் எந்த நாட்டிலும் வாழ முடியாது..

இதை உணர்ந்தால் எல்லார் வாழ்விலும் ஒளிமயமான எதிர்க்காலத்தை காணலாம்.

Sunday, November 25, 2007

உன்னை சரணடைந்தேன்..

சேரனின் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு பாடல் எப்போதும் முனுமுனுக்க வைக்கிற மாதிரி அமைந்திடும்.. இதோ தவமாய் தவமிருந்து படத்திலிருந்து இந்த ஒரு பாடல்..

பிரசன்னாவின் குரல் இனிமையானது. காதல் வந்து (சரவணா), வெயிலோடு விளையாடி(வெயில்), ராதா காதல் வராதா (நான் அவன் இல்லை) என்ற பாடல்களை கேட்டவர்களுக்கு இவரின் குரலை கண்டிப்பாக பிடித்திருக்கும். கல்யாணி மட்டும் சும்மாவா? காலை அரும்பி (கனா கண்டேன்), சும்ம கிடந்த (தம்பி), கோழி குண்டு (எம்டன் மகன்), ஆசை கனவே (இம்சை அரசன்) , கடவுள் தந்த (மாயாவி) போன்ற பாடல்களையே அவர் குரலால் அழகு படுத்தியவர்.





பாடல்: உன்னை சரணடைந்தேன்
பாடகர்: பிரசன்னா, கல்யாணி
இசை: சபேஷ் - முரளி
படம்: தவமாய் தவமிருந்து


பெ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள் இமையை விட்டு என்னையே வந்து நிற்க..
ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்ல..
தாயாக மாறிப்போனாயே
வேறாக தாங்கி நின்றாயே
அயராது ஓடி வந்து
இசையாக நீ இருக்க
கண்ணிருடன் மாயத்திலே
காலமெல்லாம் உப்பைப்போல
உந்தனுள்ளே நானிருப்பேனே..
(உன்னை..)

ஆ: தினந்தோறும் சாமிக்கிட்ட
தீராத ஆயுள் கேட்பேன்
நீ பார்க்கும் பார்வைப்போல
பூவெல்லாம் பூக்க கேட்பேன்
நீ நடக்கும் நிலத்தினிலும்
நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும்
தாய்மையை தந்திடுவேன்
உன் உலகத்தின் மீது நான் மழையாகுவேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதியாகுவேன்

ஆ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
காதல் என்ற சொல்லில் காதலே இல்லையென்பேன்
வாழும் வாழ்க்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்
சொந்தங்கள் யாவும் ஆனாயே
சோகங்கள் ஆற்றி விட்டாயே
அடைக்காக்கும் தாய்க்குருவி
சிறகாகி நீ அணைக்க
முட்டைக்கூட்டில் ஓடுடைத்து
முட்டி மோதும் குஞ்சைப்போல
தினமும் புதிதாய் நானும் பிறப்பேனே..

இதே இசை வேறொரு வரியில்...



Wednesday, November 14, 2007

காதல் குளிர் வில்லனை பார்க்கணுமா?

காதர் குளிருக்கு வில்லன் போட்டோ வேணும்ன்னு ராகவன் அண்ணனும் துர்காவும் கேட்டாங்க..

சரின்னு இது கொடுத்தேன்:


வில்லன் சிரிச்சுட்டே இருக்கார்.. என்னமோ லிஃப்ட் கேட்க நிக்குற மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டாரு அண்ணன். (சிரிச்ச முகத்துக்காரரு அண்ணன் கே.ஆர்.எஸ்.. என்ன செய்தாலும் அவர் முகத்துல வடியிற பாலை துடைக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க.. )

வேற ஒன்னு ட்ரை பண்ண சொன்னார்.. மேன் இன் ப்ளாக் மாதிரி வேணும்ன்னு சொன்னார்.. இப்போ வில்லன் கே.ஆர்.எஸ்:

எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு!
கருப்பு உடையிலும் கலையா இருக்காரு வில்லன்..

கடைசியா இது காட்டினேன்.

இதைப் பார்த்துட்டு ராகவன் அண்ணா சொன்னது: “இவன் வில்லன் மாதிரி இல்ல.. ஹீரோ மாதிரில இருக்கான்.. இதெல்லாம் நான் என் ப்ளாக்ல போட மாட்டேன்”

ம்ம்.. அவர் போடலைன்ன என்ன.. நாமே வெளியிட்டுடுவோம்ன்னு முடிவு பண்ணியாச்சு.. எப்படி இருக்காரு நம்ம வில்லன்?? ;-)

Saturday, November 10, 2007

அழகிய(??) தமிழ்(!!) மகன்???

குடும்பத்தோட கடைசியா நான் தியேட்டரில் பார்த்த படம் பிதாமகன். இந்த வருட தீபாவளிக்கு எப்படியும் எல்லாரும் ஒன்னா ஒரு படம் பார்த்திடணும்ன்னு எங்கண்ணா கங்கணம் கட்டிக்கிட்டு திரிஞ்சாரு. அவர் ஒரு தடவை முடிவு பண்ணிட்டார்ன்னா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம்! என்ன கொடுமை சரவணா இது!!

சரி, என்ன படத்துக்கு போகலாம்ன்னு நாங்க லிஸ்ட் போட ஆரம்பிச்சிட்டோம். ஆப்ஷன்ல மூனு படம் செலக்ட் ஆச்சு: வேல், அழகிய தமிழ் மகன், கண்ணாமூச்சி ஏனடா. அப்பா உடனே, சூர்யா நல்லா நடிப்பான்ல. அந்த பொண்ணு அசின் கூட நல்லா கியூட்டா நடிக்குதுன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அம்மா ஒரு லுக்கு விட்டாங்க பாருங்க. அப்பா அடங்கி போயிட்டாரு. அப்போ டீவில அழகு குட்டி செல்லம்ன்னு பிருத்திவிராஜ் ஆடிக்கொண்டிருந்தார். அப்பா, இவரோட படம் கூட ஒன்னு ரிலீஸ் ஆகுதுப்பா. சத்தியராஜ், ராதிகா கூட நடிக்கிறாங்கன்னு நான் சொன்னதும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச 2 ஓல்ட் ஜெனெரேஷன் ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறதை கேள்விப்பட்டதும் ஓக்கேன்னு சொல்லிட்டாங்க. அண்ணன் வந்தாரு. அழகிய தமிழ் மகனுக்குதான் போகணும்ன்னு ஒரே அடம்.

சரி, சிங்கம் சிங்கிளா கொண்டாடுற கடைசி தீபாவளி. இன்னும் கொஞ்ச நாள்ல மஞ்ச தண்ணி தெளிச்சு பலி கெடா கொடுக்கப்போறதுக்கு முன்னே ஆசையை நிறைவேற்றி வைக்கலாம்ன்னு ஓகே சொல்லிட்டாங்க. விஜய் படமா? அதே மசாலா கதைதானே! என்ன பண்றதுன்னு நான் யோசிக்க, சரி, ஒரு பதிவெழுத ஐடியா கிடைச்சாச்சுன்னு நானே என்னை சமாதான படுத்திக்கிட்டேங்க. அப்பா செலவுல (டிக்கேட் பணம் அப்பாதேனே போடபோறார்) சூனியம்ன்னு தெரிஞ்சும் படவிமர்சனம் எழுதி பல மாதங்கள் ஆச்சேன்னு ஓகே சொல்லிட்டேன்.

படம் ஆரம்பிக்கும்போதே டாக்டர் விஜய்ன்னு வரும்போது பின்னால விசில் பறக்குது! நான் தலையில அடிச்சுக்கிட்டேன். (டாக்டர் பட்டம் இப்படி ச்சீப்பா போச்சே!) படம் ஆரம்பிச்சதும், ஒரு சண்டை, அதை தொடர்ந்து ஒரு பாட்டு, ஹீரோயின் இண்ட்ரோ, ஹீரோயினோட சின்ன சண்டை, அதுக்கப்புறம் காதல் டூயட், அப்புறம் ஹீரோவோட தனி ட்ராக் = கதை(??), சண்டை, சுபம்ன்னு எல்லா விஜய் படம் போலவே இதுவும் அமைஞ்சிருக்கு. நடுநடுவில் குத்துப்பாட்டு. வித்தியாசம் என்னன்னா மற்ற படத்துல ஹீரோ விஜய், வில்லை இன்னொருத்தர். ஆனால் இதில், ஹீரோ = விஜய், வில்லன் = விஜய்.

படம் ஆரம்பிக்கும்போதே காட்டாறு அக்காவை வம்பிழுக்கிற மாதிரி ஒரு பஞ்ச் டயலோக். அடுத்த காட்சியிலேயே நம்ம கவிதாயினி தமிழ் M.Aக்கு போட்டியா ஒரு கவிதை:

"நீயும் நானும் ஒன்னு
காந்தி பிறந்த மண்ணு
டீக்கடையில நின்னு
தின்னு பாரு பன்னு.. "

இதுக்கு க(கா)விதை போட்டியில முதல் பரிசு. என்ன கொடுமை கவிதாயினி இது!!

படம் முழுதும் பஞ்ச் டயலோக் பறக்குது. “எவ்வ்வ்வ்வளவோ செஞ்சிட்டோம்.. இது கூட செய்ய மாட்டோமா என்ன”, “அடடடடடே”, “நான் போக்கிரிடா”ன்னு மார் தட்டி பெருமை பட்டுகொள்கிறார் கதாநாயகன். படம் முழுதும் ஆங்காங்கே இவர் மாலையுடந்தான் திரிகிறார். மாலை மற்றும் புகழ் மேல் என்ன ஈர்ப்போ தெரியவில்லை..

ரஹ்மான் பாடல்களை அருமையாக கம்போஸ் பண்ணியிருக்கிறார். ஆனால், படத்தில் ஒவ்வொரு பாடல்களும் கஷ்டப்பட்டு திணிக்கப்பட்டதுபோல கதைக்கும் பாடல்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் வருகிறது. ஒட்டவே இல்லை! என்ன கொடுமை ரஹ்மான் இது!!

பல காட்சிகளில் விஜயின் நடிப்பு மற்ற நடிகர்களை ஞாபகப்படுத்துகிறது. இரட்டை வேடத்தில் விஜய் என்று அறிவிக்கும்போது, ஏதாவது வித்தியாசம் இருக்குமோ (இல்லைன்னு தெரிஞ்சும்) என்று எதிர்ப்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்! அதே கிறுக்குத்தன நடிப்புதான் இதிலேயும்!

ஷ்ரேயா.. என்னத்த சொல்றது!!! திருவிளையாடல் ஆரம்பம் ஷ்ரேயா, சிவாஜி ஷ்ரேயா, அழகிய தமிழ் மகன் ஷ்ரேயா.. இதில் குறைந்த பட்சம் அஞ்சு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியுமா என்னாலன்னு எனக்கே தெரியலை. அதே கதாப்பாத்திரம், அதே ஸ்டைல், அதே மாதிரி உடைகள்!

தேவையே இல்லாத ஒரு கதாப்பாத்திரம்.. நமிதாவுடையது.. எதுக்கு வந்தார்ன்னே தெரியவில்லை! அந்த அளவு அவருடைய கேரக்டர் படத்துல ஸ்ட்ரோங்கா(!!) இருக்கு! சின்ன வயசுல போடாமல் விட்ட உடையெல்லாம் இப்போ அணிந்தே தீருவேன்னு சபதம் எடுத்துட்டார் போல.. அவர் ஆசையெல்லாம் நிறைவேற்றிகொண்டார்..

ஆங்.. நமிதா கேரக்டரை பத்தி சொல்லும்போது இன்னொரு கேரக்டர் ஞாபகம் வருது. ஷாகிலா! எதுக்கு இவர் வரணும்? அவசியம் என்ன? கடைசி வரைக்கும் எனக்கு விடை கிடைக்கலைங்க. உங்கள் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா..

கதாப்பாத்திரங்கள்தான் சொதப்பிடுச்சு. கதையாவது.... (சாரி.. டாக்டர் விஜய் படத்துல கதையெல்லாம் எதிர்ப்பார்க்கலாமா? ) ரசிக்கும்படியாக இருக்குமான்னு பார்த்தாலும் நீங்க ஏமாந்துதான் போவீர்கள் என்று இப்போதே எச்சரிக்கை கொடுத்துவிடுகிறேன். வீட்டுல ஓட்டையடைக்கிறதுக்கு சுண்ணாம்பு உபயோகிப்பாங்க. அந்த மாதிரி 2 டின் உபயோகிச்சாலும் எல்லா ஓட்டையும் அடைக்க முடியாதுங்க.

2 விஜய்க்கும் வித்தியசம் கூட தெரியவில்லை விஜயின் நெருங்கிய நண்பர்களுக்கு. கருமம் இவங்களுக்குதான் தெரியவில்லை.. காதலி ஷ்ரேயாவுக்குமா தெரியவில்லை? சரி, ஓட்டப்பந்தயம் வச்சி யார் ரியல்.. யாரு போலின்னு கண்டுபிடிக்கிறேன்னு ஒரு அறிவுப்பூர்மா முடிவெடுத்தீங்க. அவங்க ஓடும்போதுக்கூடவா உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை?

க்ளைமேக்ஸ் முன்னே நடக்கும் ச்சேஸிங் காட்சியில் ஒன்றைக்கூட நம்புற கரமா இல்லை. மோட்டர்லேயே 360 டிக்ரீ சுற்றுவதும் பாய்ந்து லாரியில் ஏறுவதும்.. என்ன கொடுமை சார் இது!

இப்படி பட பார்க்கும்போது நானே நிறைய கேள்விகளை அடுக்கி வச்சேன். வந்து எழுதுறதுக்குள்ள எல்லா பாய்ண்டைஉம் மறந்துட்டேன். வேணும்ன்னா திரும்ப பார்த்துட்டு அந்த விட்டுப்போனா ஓட்டைகளை எழுதுவோம்.
ஓட்டையிலேயே பெரிய ஓட்டை க்ளைமேக்ஸ் சீன். அது என்னன்னு நீங்களே பர்த்து தெரிஞ்சிக்கோங்க. யாம் பெற்ற துன்பம் இவ்வகையும் பெருக. :-P

படத்தில் எல்லாமே சொதப்பலாக இருந்தாலும் 2 ப்ளஸ் இருக்கு. ஒன்னு ரஹ்மான். இரண்டாவது எடிட்டிங் ஆண்டனி. அவருடைய எடிட்டிங் சூப்பரா வந்திருக்கு. கேளாயோ பாடலில் வரும் க்ராஃபிக்ஸ் அருமையா வந்திருக்கு.

அழகிய தமிழ் மகன் = அழகிய(??) தமிழ்(!!) மகன்???


பி.கு: இது சங்கம் போட்டிக்கு அல்ல. ;-)

Wednesday, November 07, 2007

குமரனுடன் சில நிமிடங்கள்...

"அக்கா.. தொந்தரவுக்கு மன்னிக்கவும். எனக்கு ஒரு இரண்டு நிமிடம் கிடைக்குமா?"

ஒரு நிமிடம் என்னை திடுக்கிட வைத்த வார்த்தைகள்..

போன வாரம் இதே நாளில் ஒரு புத்தக கடையில் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தபோது அந்த குரல் என் பக்கத்தில் ஒளித்தது.

இதில் என்ன அப்படி ஆச்சர்யம்.. திகைப்புன்னு நீங்க கேட்கலாம் (கேட்காட்டினாலும் நாங்க சொல்லுவோம்ல.. ) வேலைக்காக நான் தினமும் மலேசியாவின் தலைநகரம் (சுந்தர் சி நடிச்ச படமில்லைங்க) குவாலா லும்புருக்கு பயணம் செய்வேன். எனது பிரயாணத்தில் தினமும் பல நூறு பேரை சந்திக்கிறேன். அதில் பலர் இந்தியர்கள் அல்லது மலேசிய தமிழர்கள் ஆவர்.

இதில் பாதி பேருக்கு தமிழே தெரியாது. மீதி உள்ளவர்களுக்கு தமிழ் தெரிந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசுவாங்க. எல்லாம் ஸ்டைலும் வெட்கமும்தான் காரணம். நம் தாய் மொழியில் பேச எதற்க்கு வெட்கம் என்று நானே சிலரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்.

நானே தமிழில் புலவி என்றெல்லாம் சொல்ல வரலைங்க. எனக்கு இருக்கும் தமிழ் அறிவும் கொஞ்சம் கொஞ்சம்தான். நான் தமிழ் பேசும்போதே என்னையும் அறியாமல் மலாயும் ஆங்கிலமும் கலந்து வரும். முடிந்தவரை அப்படி பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சரி, சொல்ல வந்த விஷயம் வேற.. இப்போ வேற எதையோ பேசிட்டு இருக்கேன் பாருங்க..

கே.எல் பட்டணத்தில் இப்படி தமிழில் பேசி நான் கேட்பது ரொம்ப அபூர்வம்தான். அதுவும் சுத்த தமிழில் அழகாய் ஒரு சின்ன பையனின் குரலில் கேட்டபோது ஒரு வித பூரிப்பும் மகிழ்ச்சியும் கூடி வந்தது. அந்த சந்தோஷம் மிக விரைவிலேயே அழிந்தது.

அந்த குரலை கேட்டு நான் திரும்பியபோது ஒரு 12-13 வயது தமிழ்ப்பையன் கையில் ஒரு சின்ன மூட்டையுடன் என்னைப்பார்த்து நின்றிருந்தான். அரைக்கால் சிலுவாருடன் ஆங்காங்கே கிழிந்த இடத்தில் ஒட்டுப்பட்ட சட்டை அணிந்திருந்தான். பழைய உடை என்றாலும் அது சுத்தமாக இருப்பதை பார்த்ததுமே அவன் மேல் ஒரு மரியாதை வந்தது. போட்டிருப்பது புதியதா பழையதா என்பதை பார்ப்பதைவிட அதை எப்படி பாதுக்காக்கிறார்கள் என்பதுதானே சிறந்த் விஷயம்?

"என்ன தம்பி?" நான் வாயை திறந்தேன். வார்த்தையிலேயே பரிவும் சேர்ந்து தம்பி என்ற பாசமும் ஒட்டிக்கொண்டது.

"அக்கா, நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்க்கா. வீட்டுல ரொம்ப கஷ்டம். நான் படிக்கணும். அதுக்கு பணமில்லை" என்றூ சொல்லிக்கொண்டே தன் மூட்டையில் கை விட்டான்..

இவன் பிச்சை எடுக்கும் எண்ணம் கொண்டவன் இல்லை என்பது தெளிவாக புரிந்தது எனக்கு. மனதில் தன்னம்பிக்கையும் நிறைய இருப்பதும் ஓரளவு அவன் முகத்தில் என்னால் கண்டறிய முடிந்தது. அந்த மூட்டையிலிருந்து ஒரு பொருளை எடுத்து காட்டினான்.

"அக்கா, இது நானே செதுக்கியது. Candle Stand. பாருங்க. பிடிச்சிருந்தா வாங்குங்க. RM10தான். என் படிப்புக்கு உதவியா இருக்கும்" என என் கிட்டே நீட்டினான்.

அதை நான் வாங்கிப்பார்த்தேன். சொந்தமாக செய்த வேலைப்பாடு தெரிந்தது. அந்த பையன் உண்மையிலேயே டேலண்டட். ரொம்ப அழகாய் செதுக்கப்படிருந்தது. ஆனால், அது எனக்கு பயன்படாது என்று தோன்றியது.

"தம்பி, எனக்கிது தேவைப்படாதுப்பா. பரவாயில்லை.. இந்த 10 வெள்ளியை வச்சுக்கோ. அக்காவுடைய கிஃப்ட்டா இருக்கட்டும்."

"வேணாம்க்கா." என்று கொஞ்சம் தயங்கினான்.

நான் வற்ப்புறுத்தி அவனின் சட்டை பாக்கேட்டில் திணித்தேன்.

அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் குரல் கேட்டது. அவருக்கு ஒரு 30-35 வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த கடையில புத்தகம் வாங்க வந்தவர் போல. நான் அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்ததும் அவர்,

"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"

அவரின் அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் ஆத்திரம் கொடுத்தது. சிறுவனின் முகம் சுறுங்கியிருந்தது. அந்த பையனின் சந்தோஷத்தை திரும்ப கொண்டு வருவதுக்கும், இவன் அப்படிப்பட்ட சிறுவன் இல்லை என்று அந்த பெரியவரிடம் உணர்த்துவதுக்கும் திரும்ப அவனிடம் பேச்சு கொடுத்தேன்.

"தம்பி உன் பேர் என்னப்பா? என்ன படிக்கிறே?"

"அக்கா, என் பேரு குமரன். ஆறாம் வகுப்பு படிக்கிறேன்."

"படிச்சு பெரிய ஆள் ஆனதும் என்னவா ஆகப்போற?"

"நான் இஞ்சினியராகணும்ங்கிறது அப்பாவோட ஆசை. அவரோட ஆசை நிறைவேற்றனும்ங்கிறது என்னுடைய லட்சியம்." அவனுடைய கண்ணில் சாதிக்கணும்ங்கிற வெறி தெரிந்தது.

"வீட்டுல எத்தனை பேரு? அம்ம அப்பா என்ன பண்றாங்க?"

"எனக்கு ஒரே ஒரு தங்கச்சி. இப்போதான் 7 வயசு. அப்பா இருக்கிற வரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டாரு. அவர் இறந்துட்டாரு. அம்மாதான் ஆங்க்கங்கே வேலை செய்து கொஞ்சம் காசு சேர்த்து என்னை படிக்க வச்சாங்க. இப்போ அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. வேலைக்கு போய் 1 வாரம் ஆச்சு. அதான் இப்போ நானும் வேலைக்கு போறேன்க்கா" அந்த சிறூவன் சொல்லும்போதே கண்ணில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

அதற்க்கு மேல் என்னாலையும் பேச முடியவில்லை.

"அக்கா. இன்னைக்கு நிறைய பேர் இந்த ஏரியாவுக்கு வந்திருக்காங்க. எல்லாரும் தீபாவளி ஷாப்பிங் வந்திருக்காங்க. அவங்க கிட்டேயும் நான் என் பொருளை விற்கணும்க்கா. நான் கிளம்புரேண்க்கா. ரொம்ப நன்றி" என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய மூட்டையை கையில் ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அவன் நடந்து போவதையும், அங்கு ஷாப்பிங் செய்துக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசுவதையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலர் அவனிடம் பரிவுடன் பேசுவதும் சிலர் அவனை விரட்டுவதுமாய் இருந்தாலும் மான்ம் தளராமல் அடுத்தவர்களை சந்தித்தான் குமரன்.

"அண்ணே, அவன் சாதிப்பான் ஒரு நாள்.." என்று என் பக்கத்தில் இருந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு புத்த்கங்கள் வாங்கிவிட்டு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன்.

வழியில் ஒரு அம்மா ஓரத்தில் உட்கார்ந்து இருந்தாங்க. கையில் குமரன் காட்டிய அந்த மெழுகுவர்த்தி சிலை வத்திருந்தார். உடம்பு சரியில்லாமல் இருப்பது அவர் முகம் காட்டிக்கொடுத்தது. நான் என் நடையை தொடர்ந்தேன். சிறிது தூரம் சென்ற பிறகு, திடீரென்று திரும்பி பார்த்தேன். குமரன் அந்த அம்மாவை எழுந்திரிக்க உதவி செய்து ரெண்டு பேரும் ஒன்றாய் நடந்து போனார்கள். அவர்தான் குமரன் சொல்லிய அவர் நோய்வாய்ப்பட்ட அம்மாவாக இருக்குமோ என்று தோணியது.

திரும்பி அந்த சாலை முழுவதும் பார்த்தேன். பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை குதூகலமாக சந்தோஷத்துடன் ஷாப்பிங் செய்துக்கொண்டிருந்தார்கள். நாமெல்லாம் சந்தோஷமாய் புத்தாடையுடன், நல்ல உணவுடன் சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடபோகிறோம். ஆனால், இப்படியும் சிலர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனரே! அவர்களுக்கு இந்த மாதிரி தீபாவளி, பொங்கல் என்ற விழாக்கள் எப்படி இருக்குமோ! atleast ஒரு வேளை உணவாவது வயிறு நிறைய மனசு நிறைய சாப்பிடும்படி அமையுமா?

நண்பர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த
தீபாளி ல்வாழ்த்துக்ள்.....

வீண் விரயம் செய்வதாய் இருந்தால் அதை இவர்களுக்காக செலவழிக்கலாமே?

Monday, November 05, 2007

தேர்தல்: அவசரம் தேவையா?

ரம்ஜான் மாதத்திலிருந்தே அதிகம் பேசப்படும் மூன்று தலைப்புகள்: சிறப்பாக கொண்டாடப்படும் ஹரி ராயா, சாலை விபத்து மற்றும் தேர்தல் எப்போது?. முதல் இரண்டு தலைப்புகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வந்தாலும், மூன்றாவது தலைப்பு இன்னும் அதிகமாக சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

நிறைய பேர் தேர்தல் கூடிய சீக்கிரம் நடக்கும் என்று கணித்திருக்கிறார்கள். சிலர் நவம்பர் ஆரம்பத்தில் என்றும் சிலர் ஏப்ரல் 2008-க்குள் என கணிக்கத்தொடங்கிவிட்டனர். அவர்களின் இந்த கணிப்புக்கு காரணம், தேர்தல் ஏப்ரல் 2008-க்கு பிறகு நடந்தால் அன்வார் இப்ராஹிம் போட்டியில் கலந்துக்கொள்ள முடியுமே!

தேர்தல் சீக்கிரமாய் நடக்க இது ஒரு காரணம் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்த எனக்கு இப்போது பல வேறு காரணங்களும் இதுக்கு காரணமாய் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது என்பது என் கருத்து.

அடுத்த தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு 21 மார்ச் 2009 வரை காலக்கெடு இருக்கின்றது. தேற்தல் என்பது 5 வருடத்துக்கு ஒரு முறை நடக்கும். அரசாங்கத்துக்கு அந்த 5 வருடமும் பவர் இருந்தாலும் 36 மாதங்களுக்கு பிறகு எப்போது வேண்டும்னாலும் பார்லிமெண்டை கலைக்கலாம். மக்களும் எப்போது அடுத்த தேர்தல் வரப்போகிறது என்று ஆரவம் காப்பார்கள். ஏனென்றால், வயதான மக்கள் பிரநிதி அடுத்த தேர்தலில் தேர்வு பெறவில்லையென்றாலும் தோற்றுப்போனாலும் அவருக்கு பென்சேன் (pencen) கிடைக்கும்.

பார்லிமெண்ட் கலைக்கப்படும் தேதியை அதிக ஆர்வத்துடன் காத்திருப்பவர்கள் கண்டிப்பாக எதிர் கட்சிகள்தான். அவர்களே பல கணிப்புகளை நடத்த தொடங்கிவிடுவார்கள். இவர்களைத் தவிர்த்து அரசியல் கண்காணிப்பாளர்களும் பல வகை கணிப்புகளை நடத்த தொடங்கிவிடுவார்கள். இந்த தடவையின் பார்லிமெண்ட் கலைப்பும் வெகு விரைவில் தேர்தலும் நடத்த பல காரணங்களை அடுக்கலாம்.

முதலாவதாக, அன்வார் இப்ராஹிம் தேர்தலில் கலந்துக்கொள்ள முடியாமல் இருக்க தடுக்க. காரணம் அவருடைய அளிக்கப்பட்ட அரசியல் தடா ஆர்டர் ஏப்ரல் 2008-உடன் முடிவுக்கு வருகிறது.

இரண்டாவது, பொருட்களின் விலையேற்றத்தினாலும், லஞ்சத்தினாலும், தப்பாக உபயோகிக்கப்பட்ட பவர்ன்னாலும் அரசாங்கத்தினால் தாங்கிக்கொள்ள முடியாத சில பிரச்சனைகள். மூன்றாவது, கடந்த பட்ஜெட் (budget) அறிவிப்பில் அரசாங்க ஊழியருக்கு சம்பள உயர்வு கொடுத்ததில் மக்கள் கண்டிப்பாக அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை. நான்காவது, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ரிங்கிட் மதிப்பெண் அதிகரித்ததும் மக்களின் மனதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது பெட்ரோல் எண்ணை விலையேற்றம் ஒரு முக்கிய காரணம். தேர்தல் நடக்காத வரை பெட்ரோலின் விலையை அனைத்துலக விலைக்கு ஏற்றாற்ப்போல் ஏற்றமுடியாது. இது மக்களுக்கு அதிருப்தி கொண்டுவருமே!

இந்த காரணங்களினால் தேர்தல் அறிவிப்பு கூடிய சீக்கிரமாய் வெளியாகும் என எதிப்பார்க்கப்பட்டும் எதிர்க்கட்சி கணித்தபடி நவம்பரில் தேர்தல் நடக்காததும் சில குழப்பங்களை கொண்டு வந்துள்ளது. அடுத்து கணிக்கப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் (ஜனவரி - மார்ச்) நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

என்னைப் பொருத்த வரையில் தேர்தலுக்கு அவசரப்படுத்துவது தேவையில்லாத ஒன்று. அடுத்த தேர்தலின் அவசரத்துக்கு மூலக்காரணம் அன்வார்தான் என்றால், தேர்தலை அவசரப்படுத்துவது சரியா? அன்வாரின் அரசியல் மறுப்பிரவேசத்தில் பலருக்கு இருக்கும் பயம் ஏனென்று எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த வருடம் பங்காலான் பாசிர், கிளாந்தானிலும் ஈஜோக், சிலாங்கூரிலும் நடந்த தேர்தலுக்கு அந்த மக்கள் பிரநிதிக்காக பிரசாரம் செய்தது அன்வார்தனே? கிளாந்தான் மாநிலத்தையே கைக்குள் போட்டு ஆளும் PAS கட்சிக்கூட அந்த தேர்தலில் ஆபார தோல்வியையே சந்தித்தது என்பதுதானே மறைக்கமுடியாத உண்மை!

பாரிசான் நேஷனல் (ஆளும் கட்சி) தங்களுடைய கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்திருக்கிறோம் என நினைத்தால் இப்படி தனி ஒரு நபருக்காக பயப்படத் தேவையில்லையே! 1999-ஆவது வருடத்தில் எதிர்க்கட்சிகள் அன்வாரின் இமேஜை பயன் படுத்தி ஓட்டு வாங்கினார்கள் என்பது நாமெல்லாம் அறிவோம். ஆனால் காலம் இப்போது நிறைய மாறியிருக்கிறது. ஜெயிலிலிருந்து விடுதலையாகி வந்த அன்வாரிடமே பல மாறுதல்கள் இருக்கிறதே!

கெ-அடிலான் கட்சி என்ற பெயரையே மக்கள் கெ-அடிலான் கட்சி என்ற பெயர் மாற்றம் செய்ததே ஒரு வியக்கத்தக்க செயல் ஆச்சே! ஆதலால்; அடுத்த தேர்தலில் போட்டியிட போறேனா இல்லையா என்பதை அன்வாரே முடிவு பண்ணட்டுமே! டெமோக்ராஸியில் வாழும் நாம் யாரையும் நாம் நினைத்தபடி ஆட்டி வைக்காமல், அவர்களுக்கு எது தேவையோ அதை செய்யட்டுமே!

ஒரு தேர்தலுக்கு செலவாகும் பணமும் மிக அதிகம். அதை இப்படி தேர்தலுக்காக செலவு செய்யாமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது இன்னும் செய்யாமல் இருந்திருந்தால் அதில் கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதுதான் சிறந்தது. இப்படி மக்களுக்காகவே செயல்ப்பட்டால் மக்கள் எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பே இல்லையே!
தேர்தல் ஆணைய குழுவும் இருக்கின்ற இந்த நேரங்களை பயன்படுத்தி தேவையான ஆரய்ச்சிகளை செய்து எது தேவை எது தேவையில்லை என்று முடிவு செய்து ஒரு நல்ல நியாயமான தேர்தலை வழங்க வேண்டும்.

இப்போதுள்ள சூழ்நிலையில் எதிர்கட்சிகள் அரசாங்கத்துக்கு ஒரு போட்டியாகவே கருத முடியாது. என் கண்ணோட்டத்தில் எதிர்க்கட்சிகள் இன்னும் ஒன்று சேரவில்லையே. அவர்களுக்குள்ளேயே பல கலப்புகள் நிகழ்ந்த படிதானே இருக்கின்றது.

ஆதலால், இந்த காலக்கட்டத்தை ஆளும் கட்சி சரியாக பயன்படுத்தி மக்க்ளுக்கு தன் சேவையை தொடர்வதுதான் சிறந்தது. மக்கள் பிரநிதிகள் தன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்து முடிக்க விடுங்கள். இதுவே அடுத்த தேர்தலில் சரியான தலைவரை தேர்ந்தெடுக்க மக்கள் யோசிக்கும் காலமாக அமையும்.

Friday, November 02, 2007

அசின், ஐ லவ் யூ....

இப்போதெல்லாம் யூடியூப்பிலிருந்து நல்ல வீடியோக்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு.

நாம் ரசித்த காட்சிகளை மற்றவர்களும் பார்த்து ரசிக்க காட்டுவதில் ஏதும் தப்பில்லைதானே?

அப்படின்னா, இந்த மிமிக்ரியை பாருங்க. ரசிக்கும்படியா இருக்கா? :-)


Wednesday, October 31, 2007

தமிழ் தெரியாதவர்களும் தமிழ் படிக்கலாம்..

நேற்று விளையாட்டாய் போட்ட ஒரு பதிவு.. இன்று இதன் மூலம் இன்னொரு அருமையான தகவல் கிடைத்திருக்கிறது..

தமிழில் எழுத தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் இங்கே டைப் செய்தால் தமிழில் சரியான எழுத்துக்களில் மாறுகிறது. ஆனாலும், தமிழ் படிக்கத்தெரியாதவர்கள் இன்னமும் இந்த தமிழ் பதிவுகளை படிக்க முடியாதே என்ற கவலை இருந்தது. ஏனென்றால் என்னுடைய பல நண்பர்களுக்கு தமிழ் படிக்க தெரியாது.

முன்பு அவர்களுடன் தங்கியிருக்கும்போது தினமும் எனக்கு பிடித்த பதிவுகளை படித்துக்காட்டுவேன். இப்போது நாங்கள் அனைவரும் ஒவ்வொரு திசையிலும் பிரிந்து போயிருந்தாலும் போன் போட்டு, "ஹேய், புதுசா ஏதாவது நல்ல/ நீ ரசிச்ச பதிவுகள் இருந்தால் படித்துக்காட்டேன்?" என்று அன்புக்கட்டளைகள் செல்பேசியின் மூலம் வந்த படியேதான் இருக்கின்றன.

நண்பர்களே, இனி உங்களுக்கு தமிழ் படிக்க தெரியலையே என்ற கவலையே வேண்டாம். உங்கள் தமிழ் வலைப்பூவை அப்படியே லத்தின் எழுத்தாக மொழிமாற்றம் செய்தால், நீங்கள் படிக்கலாமே!

இந்த சுட்டியை உங்கள் ப்ரௌஸரில் டைப் செய்யுங்கள்:
http://eemaata.com/indic2latin.php

"Convert a website" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை எழுதுங்கள்.
உதாரணத்துக்கு: engineer2207.blogspot.com

அது உடனடியாக http://eemaata.com/indic2latin.php?link=engineer2207.blogspot.com -ஆக மாறிடும். இந்த சுட்டியை தட்டிப்பாருங்க.. :-)

அதுமட்டுமல்ல. நீங்கள் நேரடியாக "Transform Text" என்ற பெட்டியில் தமிழில் டைப் செய்து "Transform to Latin" என்ற பட்டனை க்ளிக்கினாலுல் லத்தின் பெட்டியினுள்ளே அந்த எழுத்துக்கள் வந்துவிடும்..

INTERESTING....

இனி, தமிழ் தெரியாதவர்களும் தமிழில் படிக்கலாம்... :-)

IndicUnicode என்ற எழுத்து இதற்கு வேண்டுமாம். அதை தர இறக்கம் செய்ய http://scripts.sil.org/cms/scripts/page.php?site_id=nrsi&item_id=Gentium_download

இந்த அருமையான தகவலை பகிர்ந்துக்கொண்ட நண்பர் நா.கணேசன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

Tuesday, October 30, 2007

மொழியோடு விளையாடி.. மொழியோடு உறவாடி..

नानुम हिन्दी एज्हुथा आराम्बिक्कुद्दें अप्पदिन्नु थाप्पू कनाक्कू पोद्दीराथिन्ग्का. आहा, एज़ुथ्ठेल्लाम नूडल्स कनाक्का नीद्दु नीद्दा इरुक्कू. अप्पदिये साप्पिदालाम्न्नु ग३क्कु थोनुम. आनाल, मक्कले, इथुथान हिन्दी!!!!

తెలుంగు ఎజుత ఆరంబిచ్చాచు. ఇని సిద్ధర్తుక్కు తెలున్గ్కులేయే కదితం ఎజుతలాం. ఇతిప్పార్త్తు యారుం వయిరు ఏరియా కుదాతు... నల్లతిల్లై.. సరియా? రామన్నే, నాన్ తెలున్గ్కిల్ ఎజ్హుతురేనే! నాన్ తెలున్గ్కిల్ ఎజ్హుతురేనే!

ಕನ್ನದಾಳೆ ಯಾರುಂ ಥೆರಿಯಾತು. ಅದ, ದ್ರೆಂಜ್ಜ್ ನೀನ್ಗ್ಗ ಕನ್ನದಾಥಾನೆ! ಇ ಮೀನ್ ಕಾನದಳಥಾನೆ ಇರುಕ್ಕೀನ್ಗ್ಗ! ಪಾರುಂಗ್ ಪಾರುನ್ಗ್ಗ.. ಇಂಥ ಮೊಜ್ಹಿಯಿಲುಂ ನಾನ್ ಪೋಸ್ಟ್ ಪೋದ್ದಾ ನೀನ್ಗ್ಗ ವೆನಾಮ್ನ್ನಾ ಸೊಲ್ಲ ಪೋರೀನ್ಗ್ಗ?

തമിഴ് മാതിരിന്നു സോന്നാന്ഗ്ഗ.. ആനാല്‍, എഴുത്ത് ഇടിയപ്പ മാതിരി വയുതെ? ഒന്നുമേ പുരിയലി. മത്ത മൊഴി മട്ടും ഉണക്ക്‌ പുരിയുതാന്നു കേട്കപ്പടാത്. ആനാല്‍. ഇതുവും സാപ്പാട് കണക്കാവേ വര്രതുനാലെ ഗ൩ക്കിദ്ദെ ഇരുവ്ത് ഇന്ത എഴുത്ത്തുക്കലി കാപ്പാത്ത്തനും കുകള്‍ ആണ്ടവാ...

என்னடா, என்ன என்னமோ எழுதியிருக்கேனேன்னு பார்க்குறீங்களா? ஒன்னும் புரியலையா? உங்களுக்காக Professor வேதா மேலே நான் என்ன எழுதியிருக்கேன்னு மொழி பெயர்த்து தர்றாங்க.

ஓவர் டூ Prof. வேதா:

**********

வணக்கம் மக்களே, .:: மை ஃபிரண்ட் ::. பல மொழியில கிறுக்கி வச்சிட்டு இதை ட்ரான்ஸ்லேட் பண்ணி தாங்கன்னு நிக்குறாங்க. முடியாதுன்னு சொன்னால், உங்க படத்தை தாங்க, கொஞ்சம் க்ராஃபிக் பண்றேன்னு சொல்றாங்க.. அவ்வ்வ்.. என் நேரம்.. விதி இப்படி சிரிப்பா சிரிக்குதே! வேற வழி இல்லை. இந்த தொல்லையை நீங்களும் கேளுங்க..

ஃபர்ஸ்டா பேசுறது ஹிந்தி.. அவங்க என்ன சொல்றாங்கன்னா:

நானும் ஹிந்தி எழுத ஆரம்பிச்சுட்டேன் அப்படின்னு தப்பு கணக்கு போட்றாதீங்க. ஆஹா, எழுத்தெல்லாம் நூடுல்ஸ் கணக்கா நீட்டு நீட்டா இருக்கு. அப்படியே சாப்பிடலாம்ன்னு உங்களுக்கு தோணும். ஆனால், மக்களே இதுதான் ஹிந்தி..

ஐயோ கொடுமை!!!

செகண்ட் தெலுங்கு. எங்கே போனாலும் இதை மட்டும் விட மாட்றா இவ. தெலுங்குல என்ன சொல்றான்னா:

தெலுங்கு எழுத ஆரம்பிச்சாச்சு. இனி சித்தார்த்துக்கு தெலுங்குலேயே கடிதம் எழுதலாம். இதைப்பார்த்து யாரும் பயிறு எறிய கூடாது.. நல்லதில்லை.. சரியா? ராமண்ணே, நான் தெலுங்கில் எழுதுறேனே! நான் தெலுங்கில் எழுதுறேனே!

இப்போ எதுக்கு ராமை இங்கே இழுக்குற?


பேங்கலூர் மக்களே, மூனாவது கன்னடாவாம்..

கன்னடால யாரும் தெரியாது. அட, ட்ரீம்ஸ் நீங்க கன்னடாதானே! ஐ மீன் கனடாலதானே இருக்கீங்க! பாருங்க பாருங்க.. இந்த மொழியிலும் நான் போஸ்ட் போட்டா நீங்க வேணாம்ன்னா சொல்ல போறீங்க?

கடைசியா மலையாளம்...

தமிழ் மாதிரின்னு சொன்னாங்க... ஆனால், எழுத்து எல்லாம் இடியப்பம் மாதிரி வருதே? ஒன்னுமே புரியல.. மற்ற மொழ்ஹி மட்டும் உனக்கு புரியுதான்னு கேட்கப்படாது. ஆனால், இதுவும் சாப்பாடு கணக்காவே வர்றதுனால G3க்கிட்டே இருந்து இந்த எழுத்துக்களை காப்பாத்தணும் கூகல் ஆண்டவா...

**********************

நன்றிங்க professor.. நன்றி சொல்றதுக்கு தனியா உங்களுக்கு ஒரு போஸ்ட் போட்றலாம். சரியா? மக்கள்ஸ், இன்னைக்குதான் இந்த சுட்டி பொன்ஸ் அக்கா கொடுத்தாங்க.. நான் மொழியோடு விளையாடி மொழியோடு உறவாடி ஒரு பதிவு போட்டுட்டேன்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் தெரியணும்ன்னு அவசியமே இல்ல.. எழுத எழுத அதுவே சரியான சொல்லுக்கு மாற்றி அமைச்சிடுது. வாங்க விளையாடலாம். நம்முடைய இன்றைய விளையாட்டு மைதானம் இதுதான்......

இப்போதான் அம்பி அண்ணாத்தேவும் இதைப்பற்றி ஒரு போஸ்ட் போட்டிருக்காருன்னு சிட்டுக்குருவி தகவல் சொல்லிட்டு போச்சு. அவர் என்ன சொல்றாருன்னு இங்கே போய் பாருங்க...

நன்றி: பொன்ஸ் அக்கா, Professor வேதா

Saturday, October 27, 2007

CVR-இன் மறைக்கப்பட்ட உண்மைகள்..

என்னடா காலையிலேயே விஞ்ஞானி போட்டோக்ராபர் சி.வி.ஆரின் வலைப்பூவில் காதல் கவிதைன்னு யோசிச்சேன்.. இப்போதானே தெரியுது அந்த கவிதையின் உள் அர்த்தம்!!!!



பி.கு 1: படத்தை பெரிதாக பார்த்து ரசிக்க சி.வி.ஆரை க்ளிக்கவும்.

பி.கு 2: மற்ற 5 பேரின் மேலே க்ளிக்கினாலும் படம் பெரிதாகும். ஆனால் சி.வி.ஆரின் கோபத்துக்கும் நீங்கள் ஆளாவீர்கள்!

பி.கு 3: பி.கு 2 கட்டளை இல்லை.. எச்சரிக்கை..

பி.கு 4: பி.கு 3 சி.வி.ஆர் சொன்னது..

பி.கு 5: இது முன் குறிப்பாய் போட்டிருக்கணும். எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை சி.வி.ஆர்.. :-P

காதல் ஒன்று அல்லவா?

ரஹ்மான் ரஹ்மான்தான்.. அழகிய தமிழ் மகன் பாடலைப்பற்றி நான் எழுதப்போவதாக நினைத்தால்.. சாரி,, நான் அதைப்பற்றி பேசப்போவதில்லை என்று முன்கூட்டியே எச்சரித்து விடுகிறேன். :-)))

ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதல் ஒன்றுதான்..
-என்றொலிக்கும் பாடலை கேட்டதுண்டா?

ஒரு சில மாதங்களுக்கு முன்பு உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்கு ஓட்டு நடைப்பெற்றபோது தாஜ்மஹாலின் பெருமையை எடுத்துக்காட்ட அமைக்கப்பட்ட பாடல்தான் One Love.

ரஹ்மானின் பொருத்தவரை உலகில் மூன்று அதிசயங்கள். அவை: தாஜ் மஹால், காதல், இசை..
மூன்றையும் ஒன்றினைத்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்:



இந்த பாடல் 6 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது:
1- காதல் ஒன்று அல்லவா (தமிழ்)
2- Ek Mohabbat (ஹிந்தி)
3- ப்ரணயம் ஒன்னு அல்லோ (மலையாளம்)
4- ப்ரேமா ஒக்கதேகா (கன்னடா)
5- பாலோபாஷா ஏக் ஹொயே (பெங்காலி)

எந்த மொழியில் இருந்தால் என்ன? கருத்தும் காதலும் ஒன்றுதானே!

இதமான இசை, கேட்க கேட்க இனிமை தரும் குரல், அருமையான பாடல் வரிகள், அதற்கேற்ற காட்சியமைப்பு. தாராளமாக இன்னொரு சபாஷ் போடலாம் ரஹ்மானுக்கு..

பருவத் தென்றல் இல்லாது
யுகங்கள்தான் வழி சொல்லாது
காலத்தை வென்றிடுமே சில ஞாபகமே
அரியணைகள் அரசர்கள் எங்கே
வாள் வரைந்த எல்லைகள் எங்கே
எஞ்சுவதோ தென்றல் நீந்தும் பாடலே..
சிலர் பார்வைக்கு வாழ்வின் ஓர் அன்பே என்றால் இன்றானதே
சிலர் பார்வைக்கு வாழ்வின் உயில் செல்வம்தான் என்றானதே
காதல் கரைந்து நீ பார்த்தால்
தேகங்கள் சோகங்கள் தீர்க்கும் மேகம்தான் மேகம்தான்
காதல் அன்றோ

ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இதயம் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இறைவன் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
ஹேய் காதல் ஒன்றல்லவா

ராதா கிருஷ்ணாவின் காதல்
ஆடாம் ஏவாளின் காதல்
ஹீரா ரஞ்சாவின் காதல்
ஒன்றுதான்
ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதன் ஒன்றுதான்
உன் காதலும் எந்தன் காதலும் ஒன்றுதான்

காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
(ஜூம்ஜூம்..)


காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்..
யமுணைக்கும் உயிர் வாழ்த்தும் காதலே
உனை தாங்கும் தாயின் சலாம்..

Thursday, October 18, 2007

சித்தார்த்துக்கும் போலியா??

ஒருத்தர் கொஞ்சம் அழகாய், கியூட்டாய், பிரபலமாய் இருக்க கூடாதே? அதுக்குள்ள ஒரு போலி உருவாகிடுறாங்க। :-((((

Sunday, October 14, 2007

கைப்புள்ள டூயட் பாடுவாரா?

இந்த 1000 டாலர் கேள்விக்கு பதில் இதோ:

உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானே...

என்னுடைய கைவண்ணத்தில் மற்றுமொரு படைப்பு: :-)

Thursday, October 11, 2007

விண்வெளிக்கு ஒரு பயணம்


நேற்றிரவு மலேசியாவின் சரித்திரத்தில் இன்னுமொரு மகத்தான சாதனை பொறிக்கப்பட்டது. வளர்ந்து வரும் நாடுகளின் பொன்னான கனவுகளில் ஒன்று விண்வெளியில் காலடி பதிப்பது. ஆனால், அதற்கான தகவல் மற்றும் அறிவியல் சாதனங்களை வாங்குவதற்கும் அதற்கேற்ற கல்வியை மக்களுக்கு தருவதற்கும் வசதி பல இரண்டாம் உலக நாடுகளுக்கு இல்லை என்று நாமெல்லாம் அறிவோம்.

இல்லை என்பதற்காக கைக்கட்டி வாய்பொத்தியா இருக்க முடியும்? முயற்சி! அதற்கான தேவையான முயற்சிகள் எடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த சாதனை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இன்று வரை விண்வெளி ஆராய்ச்சி மையம் மலேசியாவில் இல்லாவிட்டாலும், மலேசியா ரஷ்ய நாடுடன் இணைந்து செயல்ப்பட அமைந்த சந்தர்ப்பம்தான் மலேசிய விண்வெளி திட்டம் 2003 (Malaysia Space Programme 2003).

நடத்தப்பட்ட ஒவ்வொரு தேர்வும், அதன் கஷ்டங்களையும், கடைசி 8 பேர் கடந்து வந்த சோதனைகளையும், தமிழ் பெண்மணி வனஜா அவர்களின் தன்னம்பிக்கையும் ஏற்கனவே இங்கே எழுதியுள்ளேன். எட்டிலிருந்து நான்கு பேரை தேர்ந்தெடுத்த போது வனஜாவும் தேர்வுப்பெற்று ரஷ்யாவில் சில பயிற்சிகளை மேற்கொண்டார்.அதில் இரண்டு பேர் மட்டுமே விண்வெளி வீரர்களாக தேர்வெடுக்கப்பட்டபோது தேர்வானவர்கள் டாக்டர் ஷேய்க் முஜாப்பார் (Dr. Sheikh Muzaffar) மற்றும் டாக்டர் ஃபாயிஸ் காலீட் (Dr. Faiz Khaleed).

அதில் ஒருவரே TMA-11 ரக விண்கலத்தில் பயணிப்பார் என்று நாமெல்லாம் அறிந்ததே. இவர்கள் இருவரும் தகுதியானவர்களாக இருந்ததால் மேலும் பல தேர்வுகள் வைக்கப்பட்டு தேர்வானவர் டாக்டராக பணிப்புரிந்த ஷேய்க் முஜாப்பார்தான்.

நேற்று இரவு மலேசிய நேரம் 9.21க்கு கசாக்ஸ்தானில் இருந்து தன் பயணத்தை தொடங்கிய Soyuz TMA-11-இல் அமேரிக்காவை சேர்ந்த பெக்கி வித்சன் (Commander Peggy Withson) மற்றும் ரஷ்யாவை சேர்ந்த யூரி மலேன்செங்கோவும் (Yuri Malenchengko) சேர்ந்து பயணிக்கிறார்கள்.

TMA-11 மூலமாக ஒவ்வொரு மலேசியனின் கனவும் டாக்டர் ஷேய்க் முஜாப்பார் மூலமாக நினைவாகியது. இவரின் இந்த வெற்றி மலேசியாவின் வருங்கால தலைமுறையினருக்கு ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனலாம். விண்வெளி வீரனாக வேண்டும் என்ற இவரது சிறு வயது லட்சியத்தை "இது சாத்தியமற்ற கனவு. நடக்காது" என்று பல பேர் சொன்னதுக்கு அவர் இப்போது பதில் சொல்கிறார்.

"நான் கண்ட கனவு பேராசை, பகல் கனவு என்று மற்றவர்கள் சொன்ன அந்த வார்த்தைகள்தான் நான் இந்தளவு வளர காரணமாய் அமைந்தது. ஆகவே இப்போதே கனவு காணுங்கள். சாதிக்கலாம்." என்கிறார் orthopaedic எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் மருத்துவராக பணி புரிந்த இவர்.
இவருடைய 12 நாட்கள் விண்வெளி பயணத்தில் இவர் பெரும் அனுபவம் கூடிய சீக்கிரத்திலேயே மலேசிய விண்வெளி ஆரய்ச்சி மையமும் மலேசியாவின் சொந்த விண்கலம் உருவாகுவதுக்கும், இன்னும் நிறைய விண்வெளிவீரர்களும் உருவாகுவதற்கு உதவும் என்று நம்புவோமாக.

நன்றி: அறிவுஜீவி கப்பி

மலேசிய முதல் விண்வெளிவீரர்

Wednesday, October 10, 2007

திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன்...


இன்று ஒரு புள்ளியில் நின்று கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன். எங்கெங்கோ நடந்து/ கடந்து வந்திருக்கிறேன். மை ஃபிரண்டின் உலகின் 200வது பதிவையும் தொட்டாச்சு. மார்ச் மாதம் 2006-இல் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டது இந்த வலைப்பூ.

மார்ச் 11-இல் ப்ளாக்கர்ன்னா என்னன்னு தெரிந்துக்கொள்வதுக்காகத்தான் ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். 4 மாதம்.. சரியாக நாலே நாலு மாதம்தான்.. மூடும் விழாவையும் நடத்தாமலேயே போய்விட்டேன். ப்ளாக்கர்ல ஒரு அக்கவுண்ட் இருக்கிறது என்பதையே மறந்துட்டேன். தமிழ் கிறுக்கு எனக்கும் பிடித்திருந்ததால் இரண்டாவது திறப்புவிழாவும் கண்டேன் நான்.

அக்டோபர் 10-இல் தமிழில் எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது. 200 பதிவுகளில் அனேகமாக தமிழில் எழுதியது மட்டும் 100 இருக்கும்.

நான் எழுத ஆரம்பிச்சது தமிழில் எனக்கிருந்த தாகம்தான். எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க. தமிழ்ல எதை பார்த்தாலும் அதை படிப்பேன். ஒருத்தடவை நான் பேருந்துக்கு காத்திருந்தபோது ஒரு பேருந்து கண்ணாடி உள்ளே ஒரு போஸ்டர்… தமிழில்.. அதை நான் பார்க்கும்போது அந்த பேருந்து புரப்பட தயாராகிடுச்சு. அதை படித்தே தீரணும்ன்னு அந்த பேருந்துல ஏறி டிக்கெட் எடுத்து அந்த போஸ்டரை படித்துட்டுதான் இறங்கினேன்.

உங்க ஊரில் தமிழ் புத்தகம் கிடைக்காதான்னு கேட்டா, என்னோட பதில் இல்லைன்னுதான் சொல்வேன். நான் இருந்த இடத்தில் தமிழ் நாளிதழே கிடைக்காத போது புத்தகத்துக்கு எங்கே போவேன் நான்? அதுக்குதான் இப்படி பஸ்ல, ரோட்டுல, கீழே கிடக்குற எதுல தமிழை பார்த்தாலும் படிச்சுட்டு இருப்பேன்.

Basic தமிழ் மட்டுமே கற்றிருந்த எனக்கு ஒரு பதிவெழுதவே குதிரை கொம்பாக இருந்தது. இதை வச்சிக்கிட்டே இத்தனை பதிவெழுதியிருப்பது எனக்கே ஒரு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுல ஏதாவது ஒரு பதிவாவது உங்களை கவர்ந்திருக்குமா இல்லையான்னு எனக்கே ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது எதுன்னு நீங்கதான் சொல்ல வேண்டும்.

நான் இவ்வலையுலகில் கற்றதை விட பெற்றது அதிகம். கற்றது தமிழ்.. பெற்றது நண்பர்கள். ஈயடிச்சான் காப்பியிலிருந்து நண்பனான சூனியன் வரை கார்த்தியிலிருந்து லேட்டஸ்ட் ஃபிரண்ட் நிலா வரை எத்தனை எத்தனை நண்பர்கள்! என் நண்பர்களின் உலகத்தை அப்படியே வலது பக்கத்தில் பாருங்க.

உங்கள் ஒவ்வொருத்தரின் பற்றியும் இங்கே பேசவேண்டும் என்று ஆசைதான்.. ஆனால், அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால் அதுக்கே ஒரு தொடர் எழுத வேண்டும். இது கூடிய சீக்கிரமே வெளி வரும் என்று நினைக்கிறேன்.

இங்கே யார் யார் என்று சொல்லாமல் நான் அறிந்த சில நண்பர்களைப்பற்றி சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். எத்தனையோ நண்பர்கள்!

சங்கம், யூனியன், கும்மி என்று பல வகை க்ரூப். அதையும் மீறீ சில நட்பு. அவர்களில் சிலர் இணையத்திலிருந்து ஒரு படி மேலே போய் போனிலும் தொடர்பு வைத்துக்கொள்ளும் அளவு வளர்ந்துள்ளது. அதிலும் ஒரு சிலர் இன்னொரு படி மேலே இதயத்தின் பக்கத்திலும் இடம் பிடித்திருக்கீங்க.

என்னுடைய பதிவுகளில் உங்களுக்கு ஏதாவது வளர்ச்சி தெரிந்தால் அதுக்கு காரணம் நான் அல்ல. என்னுடைய பதிவுகளை இடைவிடாது படித்து இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று ஐடியா கொடுக்கும் என் நண்பர்கள்தான் காரனம். காமெடி எழுது கதை எழுது என்று சொல்லி அதுக்கும் இப்படி எழுதலாமே அப்படி எழுதலாமே என்று கற்று கொடுப்பதிலிருந்து எழுதி முடித்ததும் இந்த வார்த்தை தவறு, 'ன'க்கு பதிலா 'ண' என்று எழுத வேண்டும், இப்படி எழுதினால் இந்த வார்த்தையில் அர்த்தம் இப்படி ஆகிடும், இந்த மாதிரி ஸ்டைய்லில் எழுதலாமே என்று அவர்கள் கொடுத்த அறிவுரைதான் காரணம். இவ்வேளையில் அவர்கள் அனைவருக்கும் எனது கோடி நன்றிகள். இனியும் அப்படியே எனக்கு வழிக்காட்டணும். சரியா? ;-)

இது வரை எந்த ஒரு பதிவரையும் நேரில் நான் பார்த்ததில்லை. கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்குமளவு வளர்ந்திருக்கும் சில நட்பு. என் நலனிலும் சந்தோஷத்திலும் மிகவும் அக்கறை வைத்திருக்கும் அந்த சிலருக்கு நான் என்ன செய்ய போகிறேன்?

தமிழில் பெரிசாக எதுவும் சாதிக்கும் அளவு எனக்கு திறமை இல்லாவிட்டாலும், இதுவரை எழுதியதை விட இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று ஆசைகள் இருக்கு. நடக்குமா?? அதையும் பார்ப்போம். J



பி.கு 1: Double celebration என்னன்னு நான் சொல்லிட்டேன்

பி.கு 2: அதுல ஒரு குட் நியூஸ் G3 கலாய்த்தல் சங்கம் ஆரம்பிக்கறதுன்னு சிலர் தப்பா நெனச்சிட்டு இருந்திருப்பீங்க. அஸ்கு புஸ்கு.. எங்க அக்காவை நான் கலாய்க்கலாம். மத்தவங்க கலாய்க்கிறதுக்கு நானே சங்கம் ஆரம்பிப்பேனா?

பி.கு 3: ஆனால், மத்தவங்க அந்த சங்கம் ஆரம்பித்தால் கண்டிப்பாக எனக்கு லைஃப் டைம் அட்மிஷன் கொடுக்கணும். சரியா?

பி.கு 4: நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சு. அடுத்து என்ன? விருந்துதான். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு G3 விருந்து வழங்குவார். ஷார்ஜா, துபாய் பக்கம் உள்ளவங்களுக்கு கோபி்யும் பேங்கலூரில் ராம் மற்றும் இம்சை அரசியும், அமெரிக்காவில் ஜி அண்ணணத்தேயும் விருந்து வழங்குவார்கள். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு இந்த சின்ன குழந்தையை வாழ்த்திட்டு போங்க. :-)

Tuesday, October 09, 2007

பொண்ணுங்க எல்லாரும் கோவிலுக்கு போகணும்.. பையனுங்க எல்லாரும் ஷாப்பிங் போகணும்..

நேற்று காலையில் ஒரு நண்பன் ஒருவன் கால் பண்ணினான்.

நான்: ஹலோ! வாவ்.. என்ன ஒரு ஆச்சர்யம்! ஐயா காலங்காத்தாலேயே எழுந்திரிச்சிட்டாரு? என்ன விசேஷம்?

அவன்: ஏய்! இப்போ நீ எங்கே இருக்கே?

நான்: என்ன கேள்வி இது? ஆபிஸ்லதான்..

அவன்: லீவு போடுவியா இன்னைக்கு?

நான்: எதுக்கு?

அவன்: கோவிலுக்கு போகலாம் வா..

நான்: ஆஹா.. என் நண்பனுக்கு ஞானமெல்லாம் வந்துடுச்சு! காலையிலேயே கோவிலுக்கு போகணும்ன்னு கூப்பிடுறானே! பெருமையா இருக்கு!

அவன்: வா போகலாம்.. வா போகலாம்..

நான்: என்ன சூப்பர் ஸ்டார் வாங்க பழகலாம் வாங்க பழகலாம்ன்னு கூப்பிடுற மாதிரி கூப்பிடுற?

அவன்: அவர் பெரிய தல. இவரு சின்ன தல..

நான்: சின்ன தலயா? யாரை பத்தி பேசுற? அப்போ நீ சாமி கும்பிட போகல! அதானே?

அவன்: கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னேன். சாமி கும்பிடத்தான் போறோம்ன்னு சொன்னேனா? பில்லா ஷூட்டிங் நடக்குது பத்துகேவ்ஸ் கோவில்ல. இன்னையோடு மூன்றாவது நாள் ஷூட்டிங். தல சூப்பரா நடிக்கிறாராம். அவரை பார்க்க போலாம் வான்னுதானே கூப்பிடுறேன்.

நான்: ஏண்டா! இது உனக்கே ஓவரா தெரியல? ஷூட்டிங் பார்க்க போறதுக்கு நான் லீவு போட்டுட்டு வரணுமா? ஹீரோவை பார்க்கறதுக்கு பொண்ணுங்கதானடா ஓடுவாங்க? நானே போகலை! உனக்கெதுக்குடா இதெல்லாம்? எனக்கு தெரிஞ்சு உன்னை போல பையனுங்க ஹீரோயினை பார்க்கத்தானே ஓடுவீங்க? நயந்தராதான் பத்துகேவ்ஸ்க்கு போகலையே! எதுக்கு உனக்கு இந்த ஆர்ப்பாட்டம்?

அவன்: நயந்தாராவும் ஷூட்டிங் பார்க்க வருவாங்கிற ஒரு நட்பாசைதான்..

நான்: ஒழுங்கா காலேஜுக்கு போகுற வழியை பாரு.. இப்போ போனை கட் பண்ணு!!!

அவ்வளவுதான்.. பையன் போனை கட் பண்ணிட்டான். காலேஜுக்கு போயிருப்பான்.. ஆனா...







இரவு 8 மணிக்கு திரும்ப அவனிடமிருந்து ஒரு கால்..

அவன்: ஹலோ...

நான்: என்னடா.. காலேஜ் போனியா?

அவன்: போகுற வழியில வண்டி பங்ச்சர். பத்துகேவ்ஸ்க்கு முன்னாடித்தான்.. வண்டியை மெக்கானிக் ஷாப்ல போட்டுட்டு ரிப்பேர் பண்ணி முடிக்கிற வரைக்கும் ஷூட்டிங் பார்த்தேன். அஜித் சூப்பரா ஆடுறார். பாட்டுக்கூட கேட்க ரொம்ப நல்லா இருக்கு.

நான்: அடப்பாவி! நான் அவ்வளவு சொல்லியும் நீ போயிருக்கே அங்கே!! :@@@@

அவன்: சரி அதை விடு.. நாளைக்கு லீவு போடுவியா நீ?

நான்: நாளைக்கு எதுக்கு நான் லீவு போடணும்?

அவன்: எனக்கு கம்பெனி கொடுக்கத்தான்.. நாளைக்கு நான் KLCCக்கு போகணும்.

நான்: ஏதாவது ப்ராஜெக்ட் ப்ரெசெண்டேஷனா? ப்ரிபேர் பண்ணிட்டியா?

அவன்: ப்ராஜெக்ட் ப்ரெசெண்டேஷனா? யாரு சொன்னா? நாளைக்கு ஷூட்டிங் KLCCலன்னு விஷ்ணூவர்த்தன் சொன்னாரு. நயந்தாரா ஷூட்டிங். அவளை பார்க்கத்தான் கூப்பிடுறேன்.

நான்: ஏண்டா! என்னை பார்க்க உனக்கு என்னவா தெரியுது? நான் காலையில அவ்வளவு சொல்லியும் நீ ஷூட்டிங் போனதும் இல்லாமல் திரும்ப என்னையே கூப்பிடுறீயா நீ?

அவன்: நீதானே ஒரு அருமையான தத்துவம் சொன்னே! அதைத்தான் ஃபாலோ பண்றேன்.

நான்: நானா? என்ன சொன்னேன்?

அவன்: பொண்ணுங்க எல்லாரும் கோவிலுக்கு போகணும் (அஜித்தை பார்க்க).. பையனுங்க எல்லாரும் ஷாப்பிங் போகணும் (நயந்தராவை பார்க்க)..ன்னு..

நான்: அடப்பாவி! நான் சொன்னதுக்கு இப்படி ஒரு மீனிங் டிரைவ் பண்ணி வச்சிருக்கியா நீ? :@@@@.. போன்ல அடிக்க முடியாதுன்னு தைரியமா உனக்கு? இப்பவே உன் அக்காவுக்கு கால் பண்றேன். கூட ரெண்டு அடி சேர்த்து தருவாங்க!!!!

அவன்: ஐயோ வேணாம்.. டாட்டா.. பை பை..

வச்சிட்டான் போனை.. அனேகமா இன்னைக்கு KLCC வளாகத்துலத்தான் சுத்திட்டு இருப்பான். யாராவது பார்த்தீங்கன்னா எனக்கு பதிலா ரெண்டு அடி சேர்த்து கொடுங்க அவனுக்கு!!!

பி.கு. 1: என்னை டென்ஷனாக்கி இந்த பதிவை எழுத காரணமாய் இருந்த அந்த நண்பன் பிரசாத்துக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

பி.கு. 2: நாளைக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட். Double celebration. எல்லாரும் விருந்துக்கு வந்துடுங்க. :-)

Monday, October 08, 2007

இன்பம் கொட்டிக்கிடக்கிறதே..

சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக்கிடக்கிறது. ஆனால், நாம் அந்த இன்பத்தை அள்ளாமல் துன்பங்களையும் சோகங்களையும் தேடி செல்கிறோம். ஏன் என்று கேட்டால், "துன்பத்தை தேடி அதனை என் வாழ்வினில் இருந்த அகற்றப்போகிறேன்" என்றூதான் பதில் வரும். ஆனால், அதை அகற்றுவதுக்கு தேடி கூடவே வைத்துக்கொள்கிறோம். துன்பங்கள் குட்டி போட்டு வட்டி போட்டு பெரியதாக வளர்ந்து நிக்கும். அப்போது, "அய்யோ.. எனக்கு மட்டும் எல்லாம் கஷ்டங்களாகவே வருகிறதே" என்று கவலை படுவது நியாயமா?

இனபத்தை தேடி பிடித்து அதனை அள்ளுவதுதான் புத்திசாலித்தனம். இதனை படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் கிட்ட என் பிரார்த்தனைகள். :-)




பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்..
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக்கிடக்கிறது
நம்மை அழைக்கிறது
(பூவெல்லாம்..)

வானகம் தூரம் இல்லை
வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டமிட்டு தன்னைத்தானே சுற்றும் பூமி
நம்மை சுற்றி வருமே அந்த வானிலே
புது சந்தோஷம் எங்கே
புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில்தானடா
(செவ்வானம்..)
(பூவெல்லாம்..)

Sunday, October 07, 2007

எனக்கு நடிக்க தெரியாதுய்யா..

இங்கு தவறு யாருடையது??





என்ன ஒரே சின்னபுள்ளத்தனமா இருக்கு? இந்த ஊரு இன்னுமா இவங்கள நம்பிட்டு இருக்கு??

தொட்டா சிணுங்கி

உறவு, பகை, நட்பு, பந்தம், பாசம்.. எது எப்போது தோன்றும் எப்போது முறியும் என்று தெரியாத ஒரு சூழலில் வாழ்கிறோம் மனிதர்கள் ஆகிய நாம். தாய் மேல் மகன் கொண்ட பகை, மகன் மேல் தந்தை கொண்ட வெறுப்பு, அண்ணன்-தம்பி சண்டை, மாமியார்-மருமகள் யுத்தம், கணவன்-மனைவி ஊடல்.. இப்படி எத்தனை வகை வேண்டும்? அடுக்கிக்கொண்டே போகலாம்.

தொட்டதுக்கும் கோபம் நமக்கு பொத்துக்கொண்டு வருகிறது. மனம் ஒரு தொட்டா சிணுங்கிதானே நமக்கு? ஒருத்தடவை உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தாலும் உடைந்த கோடுகள் கண்டிப்பாக தெரியும். அதுபோலவே உறவும் பகையும். சண்டை போட்டு சமாதானம் ஆனாலும் மனதில் கீறிய தழும்புகள் நம் மனதை விட்டு நீங்குகிறதா?

மறப்போம் மன்னிப்போம் என்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? மனதை தொட்டு கேளுங்கள். உண்மை பல சமயங்களில் கசத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது நாம்தான்.

அவ்வகைய பிரிவில் சேர்ந்த நான் ரசிக்கும் பாடல் ஒன்று:



மனமே தொட்டால் சிணுங்கிதானே
அதுவே தன்னால் மலரும் மானே
உறவோ என்னாலும் தீராது
பகையோ என்னாலும் வாராது
மனமே தொட்டால் சிணுங்கிதானே

தாய்பாலே விஷமாய் மாறுமா
தமிழ் தாயே நீ அதை கூறம்மா
பெற்ற தந்தை மீதே கோபமா
பிள்ளை கோபம் இங்கே ஞாயமா
தினந்தோறும் காலம் மாறுமே
தினந்தோறும் காலம் மாறுமே
இது பாவமோ இல்லை சாபமோ
சில காலம் தோன்றும் சோகமோ
(மனமே..)

நிழலே உன் பின்னால் நிலையில்லை
நிலவே இங்கு யாருக்கும் உறவு இல்லை
காற்றே தன் வழியது அறிந்ததில்லை
கட்லே தன் அலைகளை புரிந்ததில்லை
இதுதானே உலகின் நியதிய்டி
இதுதானே உலகின் நியதிய்டி
இது போலவே உந்த வாழ்விலே வந்த சோகம் நாலை மாறுமே
(மனமே..

Saturday, October 06, 2007

நட்பெனும் பெயரிலே

நேற்று..
நட்பெனும் பெயரிலே
கலந்தாய்
என்னுள்ளே..

இன்று..
நீ ஒரு மூலையில்
நான் ஒரு மூலையில்
அழுகையும் நினைவுகளும்
அதிகரித்தது நட்பின் ஆழத்தை…

நாளை
தொடருமா?
கேள்விக்குறி வளைந்து நிற்க,
உன் இறுகப் பற்றுதலில்
ஓடி மறைந்தன
ஒவ்வொரு வினாக்களும்…



Send this eCard !



என்னுடைய முதல் கவிதை (ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.. :-P)
Specially dedicating this to Asa, Usha & Printha. Miss you girls. :-((

நன்றி: ஜி

உலகமே புதியதாய்..

ரொம்ப நாள் ஆச்சு எனக்கு பிடித்த பாடல்களை இங்கே எழுதி. அதான் திரும்பி வந்துட்டேன்ல. :-)

போன வருடம் வெளியாகிய படம் காதலே என் காதலே. இசையமைப்பாளர் ப்ரயோக் தமிழுக்கு புதியவர். ஆனால், இசைக்கு எதுக்கு மொழின்னு நிரூபித்திருக்கிறார். இந்த பாட்டில் முக்கிய தூண் அதில் வரும் வரிகள்.

முதல் தடவை கேட்டபொழுதே இந்த வரிகள் 100% எனக்கே எனக்காக எழுதியதுபோல ஒரு உணர்வு. அன்றிலிருந்து இன்று வரை எப்போதும் என் mp3 playerல என்னுடன் கூடவே இருக்கும் பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்துவிட்டது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். கூடவே பாட:



உலகமே புதியதாய் இன்று நானும் உணர்ந்தேனே
கதவினை திறந்து நான் புதிய வெளிச்சத்தை கண்டேன்
பனிக்குடம் உடைந்து நான் மீண்டும் மண்ணுக்குள் பிறந்தேன்
தோள்களில் வாழ்க்கையை சுமக்கவே துணிச்சல் தோண்றும்

காட்டிலே உள்ள மரத்துக்கு நீரை ஊற்றிட ஆளில்லை
உன்னையே நீ பார்த்துக்கொள் வாழ்க்கை என்பது வேறில்லை
உன் நிழல் உன்னை தொடருமே அது இருட்டிலே விட்டு விலகுமே
உண்மையில் நீ ஒருத்தன் தான் உன் துணையென்ற உண்மை விளங்குமே
பனிமூட்டமான பாதை நீ பயணிக்கும் வேளை
கண்ணோடு மறைந்த இடங்கள்
அருகில் சென்றால் தெரிந்துவிடும்
(உலகமே..)

தீயினை தொட்டு தெரிந்துக்கொள் மீண்டும் பயங்கள் தொடருமா
மலையிலே உள்ள அருவிகள் மண்ணில் விழுவதால் உடையுமா
இலைகளை கிளை உதிர்க்குமே அது மறுபடி மெல்ல துளிர்க்குமே
காயங்கள் கொஞ்சம் வலிக்குமே அதன் பாடங்கள் வெற்றி கொடுக்குமே
இந்த நாளும் உனது என்று நீ நினைத்திடும் பொழுது
கடிகார நேரம் எல்லாம் நீ சொன்னதை கேட்டுவிடும்..
(உலகமே..)

Friday, October 05, 2007

வாழ்க்கைப்பயணம் -2

"ஹோன்க் ஹோன்க்"

முன்னே வேகமாய் வந்துக்கொண்டிருந்தது ஒரு டாங்கர் லாரி.

"சந்தியா.. லாஆஆஆஆர்ர்ரீஈஈஈ" அஞ்சலி கத்தினாள்.


*********************************

இனி....

அஞ்சலியின் அலரலினால் மீண்ட சந்தியா சீக்கிரமாக அந்த நிலையை ஜீரணித்துக்கொண்டதுனால் இடது பக்கம் தன் காரை சட்டென திருப்பினாள்.

வினாடியில் நடக்கவிருந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தன்ர் இருவரும்..

"என்னடா இப்படி ஓட்டுற காரை? என்ன யோசிச்சுட்டு இருக்க? இது சரிப்பட்டு வராது.. சாவியை கொடு. நான் ஓட்டுறேன்". அஞ்சலி கார் சாவியை வாங்கிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தாள்.

கார் இவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் வந்து சேர, சந்தியா தன் துணிகள் சிலவற்றை தன் பையில் எடுத்து வைத்துவிட்டு தன் ஊருக்கு புரப்பட்டாள்.

4 மணி நேர பிரயாணத்தில் அவள் குவாந்தானில் உள்ள தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். இரவு பத்து மணிக்கு மேல் தன் வீட்டு முன்னே ஒரு கார் சத்தம் கேட்டதும் வெளியே வந்து எட்டிப்பார்த்தார் ராஜகோபால்.

"என்னம்மா? திடீர்ன்னு வந்திருக்கே?"
அப்பா ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் கேட்டுக்கொண்டே கார் வரை வந்து அவளின் பையை தூக்கினார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பாக்கியம் அம்மாள் தன் மகளை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் மகளை கட்டி அணைத்துக்கொண்டார்.

"உனக்கு கால் பண்ணி ஊருக்கு வர சொல்லணும்ன்னு நெனச்சிட்டே இருந்தேன். நீயே வந்துட்டே. எல்லாம் கடவுளின் செயல்தான்"

"என்னம்மா விஷயம்?" சந்தியா புதிருடன் கேட்டாள்.

"இரும்மா.. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்"
அம்மா சொல்லிக்கொண்டே சமயலறையை நோக்கி நடந்தாள்.

"என்னப்பா? அம்மா என்னமோ புதிருடன் பேசுறாங்க? நீங்களாவது சொல்லுங்களேன்".

"சாப்பிட்டுவிட்டு பேசலாம்மா" அப்பா சமாதானம் படுத்தினார்.

"என்னங்க, அவ கிட்ட விஷயத்தை பட்டுன்னு போட்டு உடைக்க வேண்டியதுதானே?" அம்மா சமயல்க்கட்டிலிருந்து மூன்று தட்டுகளை எடுத்து வந்து மேஜையில் அடுக்கிக்கொண்டே சொன்னார்.

"இன்னைக்கு ஒருத்தவங்க உன்னை பெண் கேட்க வந்தாங்க. நாங்கள் விசாரிச்சிட்டோம். நல்ல குடும்பம். பையனையும் எங்களுக்கு புடிச்சிருக்கு. உனக்கு சம்மதம்ன்னா மேற்கொண்டு பேசலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்" அம்மா மூச்சு விடாமல் பேசினார்.

"இதுக்குதான்... நான் ஊர் பக்கமே வர்றதில்லை. வந்தாலே கல்யாணம் பேச்சை எடுக்காமல் இருக்கமாட்டீங்களே?"
தன் அறைக்குள் செல்ல முற்ப்பட்ட சந்தியாவை அப்பா நிறுத்தினார்.

"சந்தியா குட்டி, நீ இந்த வீட்டுல ஒரே பிள்ளைம்மா. உனக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணி வைத்து பேரக்குழந்தைகளை நெஞ்சுல போட்டு விளையாடுற ஆசை எங்களுக்கு இருக்காதாம்மா?" அப்பா மனவருத்ததுட்டன் பேசியது சந்தியாவுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"மூனாவது வீட்டு கனகா மகள் செல்விக்கு இப்போதான் 23 வயசு. அவளே திருமணம் செய்து 2 பிள்ளைங்க இருக்காங்க.. உன்னோடு படிச்ச பிள்ளைங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டாங்க. உன்னோட கல்யாணம் பார்க்கத்தானே நாங்க இன்னும் உயிரை கையில புடிச்சிட்டு இருக்கோம்?"

சந்தியாவால் மௌனத்தை தவிர வேறெதுவும் பதிலாக தர முடியவில்லை.

"அம்மா, எனக்கு யோசிக்கிறதுக்கு கொஞ்சம் டைம் வேணும் ப்ளீஸ்.." சொல்லிக்கொண்டே தன் அறையை நோக்கி நடந்தாள்.

"என்னவோம்மா.. இப்படி யோசிக்கிறேன்னு சொல்லி ஒரு நாள் கூட நீ உன் பதிலை சொன்னதில்லை. இந்த தடவையும் நாங்க டைம் தருகிறோம். யோசிச்சுட்டு சரின்னு சொன்னீன்னா அதுவே போதும்மா" அம்மா தன் மகள் இந்த தடவை சரின்னு சொல்வாள் என்றூ மிகவும் உறுதியோடு சொன்னார்.

அறை கதவை சாத்திவிட்டு மின்விசிறியை தட்டிவிட்டு கட்டிலில் படுத்தவள் சந்தியாவின் எண்ண ஓட்டத்தில் தியாகுதான் நின்றான். அப்படியே தூங்கிவிட்டாள் அவள். கனவில் அந்த நெடுஞ்சாலை தோன்றியது. அவன் இன்னமும் தன் காரில் ஏறாமல்தான் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சந்தியாவின் கார் அருகில் ஒரு நீல நிற வாஜா கார் வந்து நின்று ஹார்ன் அடித்தது. காரின் கதவும் திறக்கப்பட்டது. இனியும் தியாகுவின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்பது அர்த்தமில்லாத ஒன்று என்று அவளுக்கு தோணவே காரிலிருந்து இறங்கினாள்.. யாரோ கதவு தட்டியதில் அவள் கனவிலிருந்து முழித்தாள்.

எழுந்து கதவை திறந்தாள்.

"சாப்பிடாமலேயே படுத்திட்டியேம்மா. இந்தா.. இந்த பாலையாவது குடி." அம்மா பாசத்தோடு ஒரு க்ளாஸ் பாலோடு நின்றார்.

பாலை வாங்கிக்கொண்டு "அம்மா, என் மனசு மாறுவதுக்குள்ள நீங்க சொன்ன பையனையே பேசி முடிச்சிடுங்க" என்று சொல்லிவிட்டு திரும்ப அவள் அறை கதவை தாளிட்டுக்கொண்டாள்.

தியாகுவும் அந்த முகம் தெரியாத வாஜா ஓட்டுனரும் அவள் சிந்தனையில் தோன்றினார்கள். யோசிக்க யோசிக்க கொஞ்சம் கண் கலங்கி அப்படியே உறங்கிபோனாள். காலை ஒன்பது மணிக்கு குளிச்சிட்டு வெளியே வந்தவள் வீட்டில் இருக்கும் பரப்பரப்பை பார்த்து கொஞ்சம் ஆச்சர்யப்பட்டு தன் தாயிடம் கேட்டாள்..

"நீதானம்மா சீக்கிரமே பேசி முடிக்க சொன்னே! அதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை இன்னைக்கே பொண்ணு பார்க்க வரசொல்லிட்டேன். மதியம் 2 மணிக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்க" அம்மா மும்முரமாக வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.

சந்தியா அஞ்சலிக்கு கால் பண்ணினாள்.

"The number you are calling is currently busy." என்று ஒரு இயந்திர பெண்ணின் குரல் கேட்கவே தன் செல்பேசியை கீழே வைத்தாள்.

நண்பகல் 12 மணிக்கெல்லாம் அம்மா ஒரு ஊதா கலர் சாரியை கொடுத்து "இதை கட்டும்மா. உனக்கு எடுப்பா இருக்கும்" என்றார்.

அவளும் அலங்காரம் பண்ணிக்கொண்டு கண்ணாடியின் முன் வந்து நின்றாள். கண்ணாடியில் தியாகுவின் முகம் தெரிய, தன் கண்களை கசக்கி மீண்டும் பார்த்தாள். மெது மெதுவாக தியாகுவின் உருவம் கண்ணாடியிலிருந்து மறைய ஆரம்பித்தது. வெகு விரைவில் இன்னொருத்ததுக்கு சொந்தமாகப்போகும் தன் மனதிலிருந்தும் தியாகுவின் நினைவுகள் மறைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டினாள்.

"பெண்ணை அழைத்துவாம்மா" என்ற அப்பாவின் குரலை கேட்டு பக்கத்து வீட்டு செல்வி இவள் அறைக்கு வந்ததும் கண்ணில் தேங்கியிருந்த கண்ணீரை துடைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் சந்தியா. எல்லாருக்கும் வணக்கம் சொன்னாள்.

"இங்கே வாம்மா. இப்படி உட்காரு" என்று தன் பக்கத்தில் உட்கார அழைத்தாள் ஒரு 55-60 வயது நிரம்பிய பெண்மணி.

ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு, "சந்தியா உள்ளே போம்மா. பெரியவங்க பேச வேண்டியது எல்லாம் பேசணும்" என்று சொன்னதும் அவளும் தன் அறைக்கு போனாள். 'இதில் மாப்பிள்ளை யார்? எனக்கு அறிமுகமே படுத்தவில்லையே' என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

15 நிமிடங்கள் இருக்கும். அந்த பெண்மணி அறைக்கு வந்து, "உன்னை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கும்மா. சீக்கிரமே நீதான் எங்க வீட்டு மருமகள்" என்று சொல்லி நெத்தியில் முத்தமிட்டு கையில் ஒரு கவரை கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

'நான் இப்போது கண்டிப்பாக என் காரை விட்டு இறங்கி அப்பா பார்த்த மாப்பிள்ளையோட அந்த காரில் ஏறியே ஆகணும். ஆனால், என் மனதில் எந்த ஒரு சந்தோஷமும் இல்லையே? அஞ்சலி, அரவிந்த், ஸ்வாதி, சுமதி முகத்தில் இருந்த அந்த கல்யாண கலையும் என் முகத்தில் தென்படவில்லையே! பேசாமல் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லி இன்னைக்கே கே.எல்க்கு கிளம்பி போயிடலாமா?' என்று எழுந்தாள்.

கையில் இருந்த அந்த கவர் அவள் உள்ளங்கையை குத்தியபோதுதான் அந்த கவரின் ஞாபகம் வந்து அதை பிரித்தாள். உள்ளே ஒரு கடிதம்.

அன்புள்ள சந்தியாவுக்கு,

என் மேல் வைத்திருந்த காதலால்தானே இன்னும் திருமணம் பண்ணாமலேயே இருந்தாய்? 6 மாதத்துக்கு முன்பு நான் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியபோதுதான் அதை தெரிந்துக்கொண்டேன். நானே உன் முன் வந்து என் காதலை சொல்வதைவிட பெற்றோர்களால் நிச்சயிக்கப்படட்டுமே என்றுதான் என் பெற்றோர்களை பேச சொன்னேன். இத்தனை நாள் உன்னை காக்க வைத்ததுக்கு மன்னிக்கவும். உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் என்றால் நானே உனக்கு கால் பண்ணுகிறேன்.

உன்னுடைய சம்மதத்துக்காக காத்திருக்கும்,
தியாகு

அந்த கடிதம் அவளுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்க அறையை விட்டு வெளியே வந்தாள்.

"அப்பா, வந்தவங்க எல்லாம் எங்கே?"

"அவங்க இப்போதான் கிளம்பிபோனாங்க. ஏன்ம்மா?"

"மாப்பிள்ளை பெயர்.. பெயர் என்ன?"

"ம்ம்.. தியாகராஜன். என்ன பொண்ணும்மா நீ? இன்னும் அவ்ர் பெயர் கூட கேட்டு தெரிஞ்சிக்காமல் இருக்கிற. உன்னோட போன் நம்பர் கொடுத்திருக்கிறேன். அனேகமா இன்னும் சில நேரத்துல உனக்கு கால் வரும்"

ராஜகோபால் சொல்லிமுடிக்கிறதுக்கும் சந்தியாவின் செல்பேசி அதிறவும் சரியாக இருந்தது.

"ஹலோ"

"ஹலோ சந்தியா. தியாகு ஹியர்.. ஒரு லிஃப்ட் கிடைக்குமா?"

அதே தியாகு. 6 வருடத்துக்கு முன்னே எனக்கு அறிமுகமான, என் நினைவில் இன்னமும் இருக்கிற தியாகுவேதான் என்று சந்தியாவின் மனம் சொல்ல சந்தோஷமாக செல்பேசியை திரும்ப காதில் வைத்தாள். பேச்சு பல மணி நேரம் வளர்ந்துக்கொண்டே போனது.
முற்றும்...

Thursday, October 04, 2007

வாழ்க்கைப்பயணம் -1

'இன்னேரம் ஸ்வாதி, அரவிந்த், சுமதி எல்லாருமே சந்தோஷமா இருப்பாங்க..'

அரவிந்த் weds ஸ்வாதி என்ற திருமண அழைப்பை தடவிக்கொண்டே யோசனையில் ஆழ்ந்தாள் சந்தியா.

'சரியாக 11 வருடம். 11 வருடம் காதலித்து இப்போது திருமண பந்தத்தில் இணைகிறார்கள். சுமதி மட்டும் என்னவாம்? அவளும் தனக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை அடுத்த வாரம் மணந்துக்கொள்ள போகிறாள்' என்று நினைத்துக்கொண்டே தன் புத்தகத்தின் நடுவில் மறைத்து வைத்திருந்த சுமதியின் திருமண அழைப்பை எடுத்தாள்.

'நண்பர்கள் அனைவரும் திருமணம், குடும்பம், பிள்ளைகள் என்று பல திசைகளை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் அதே புள்ளியில் நகராமல் இருக்கிறேனே. ஏன் சந்தியா?'.. அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

"சந்தியா, வீட்டுக்கு கிளம்பலையா நீ?"

அஞ்சலியின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்துப்பார்த்தாள் சந்தியா.

"சாரி, ரூம் கதவு தட்டினேன். உன்னிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. அறை கதவு திறந்து இருந்ததால் அப்படியே நுழைய வேண்டியதா போச்சு."

சந்தியா அவளின் கைக்கடிகாரத்தை பார்த்தாள். மணி ஆறாக பத்து நிமிடமே இருந்தது.

"நீ இப்போ கிளம்புறியா இல்லையா?"

"இதோ கிளம்பிட்டே இருக்கேன்." சட்டென்று இரண்டு அழைப்பிதழ்களையும் அவளின் மேஜை ட்ராவரில் போட்டு பூட்டிவிட்டு அவளின் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

சந்தியாவின் சிகப்பு நிற வீரா பார்க்கிங்கிலிருந்து வெளியாகி வேகமாக சென்றது. ஒரு சிக்னலில் கார் நின்றபோது,

"அஞ்சலி, இன்றைக்கு நான் ஊருக்கு கிளம்புறேன்"

சந்தியாவின் வார்த்தைகள் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சந்தியா ஒரு பிரபலமான கான்ஸ்ட்ராக்ஷன் கம்பெனியில் டிசைக்னராக பணி புரிகிறாள். சனி ஞாயிறுகளில் கூட அலுவலகத்துக்கு செல்வதும் புதிதாக ஏதாவது வடிவமைப்பதுமாக இருப்பவள். ஊருக்கு 2-3 மாதங்களுக்கு ஒரு முறைதான் செல்வாள். அதுவும் அஞ்சலியின் வற்புருத்தலின் பேரில்.

"ஏன் திடீர்ன்னு?" அஞ்சலி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.

"என்னுடைய பள்ளி தோழர்கள் அரவிந்த் ஸ்வாதி திருமணம் இந்த வீக் எண்ட்."

"ஆஹா. கல்யாண சாப்பாடா? இங்கே கே.எல்-ல இருந்திருந்தால் நானும் உன் கூட ஒட்டிக்கிட்டு வந்திருப்பேன். ரொம்ப நாள் ஆச்சு கல்யாண சாப்பாடு சாப்பிட்டு" பரவசத்துடன் சொன்னாள் அஞ்சலி.

"கல்யாணம் இங்கேதான். பங்சாரில். இதுக்கு போகக்கூடாதென்பதுனாலத்தான் நான் ஊருக்கு போகிறேன் என்று சொல்லிட்டு இருக்கேன் அஞ்சலி"

"ஏண்டி? முன்னெல்லாம் எப்போ பார்த்தாலும் உன்னோட பால்ய சினேகிதர்களை பற்றிதானே பேசிட்டு இருப்பே? இப்போ என்ன வந்தது? எதுக்கு போக மாட்டேன்னு அடம் புடிக்கிற?"

"உனக்கு புரியாது. என்னோட படித்த, பழகிய எல்லா நண்பர்களுக்கும் திருமணம் ஆகி குடும்பம், பிள்ளைகள்னு இருக்காங்க. நான் மட்டும்தான் தனியா இருக்கேன். இப்போ நான் அங்கே போனா, ஏன் எதுக்கு இன்னும் கல்யாணம் பண்ணிக்கவில்லைன்னு கேட்ப்பாங்க.. இதுக்கெல்லம் நான் தனி தனியா விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது!"

அஞ்சலி சற்று நேரம் மௌனம் காத்தப்பின், "சரி பரவாயில்லை. விடு.. இந்த கல்யாண சாப்பாடு கிடைக்கலைன்னா என்ன. கூடிய சீக்கிரத்திலேயே நான் என்னோட சொந்த கல்யாண சாப்பாடுதான் சாப்பிடபோறேனே!" என்று ஒரு வித வெட்கத்துடன் சொன்னாள்.

சந்தியாவின் கவனம் ரோட்டிலிருந்து அஞ்சலி மேலே திரும்பியது.

"is It?"

"ம். காலையில்தான் டேட் கண்ஃபார்ம் பண்ணாங்க. நவம்பர் 30. உனக்கு சொல்லலாம்ன்னு காலையிலே கால் பண்ணேன். அம்மணிதான் என் கால் பிக்கப் பண்ணவே இல்லையே" என்று செல்லமாக கடிந்துக்கொண்டாள்.

"Congrats" என்ற ஒற்ற பதிலோடு சந்தியா திரும்ப அவளது கவனத்தை சாலையின் மேல் திருப்பினாள்.

"உனக்கு எப்போ கல்யாணம்?" திரும்ப அமைதியை கலைத்தாள் அஞ்சலி.

"கார்த்திக் ஓகேன்னு சொன்னா, இப்பவே என் கழுத்தை நீட்ட நான் தயார்"

"ஹேய்.. You naughty".. தன் வருங்கால கணவர் கார்த்திக்கை பற்றிதான் சந்தியா சொல்வதை அறிந்த அஞ்சலி சந்தியாவின் கையில் கிள்ளினாள்..

இருவரின் சிரிப்பிலும் அந்த காரே அதிரும் அளவு இருந்தது.

"ஹேய் சந்தியா.. Now I'm serious. நீ எப்போதுதான் உன்னுடைய இந்த தனிமையான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கபோறே? உனக்கு 30 வயது ஆச்சு. உன் அம்மா கால் பண்ணும்போதெல்லாம் இதையே சொல்லி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்"

".........."

"ஓ.. தியாகுதான் காரணமா?"

"இ.. இல்ல.."
அவள் மனம் ஆமாம் என்று சொல்வதுக்குள் வாய் இல்லை என்றது.

'தியாகு.. 6 வருடம் ஆச்சே! ஆனாலும் உன்னை என்னால் மறக்கமுடியவில்லையே. இந்த 6 வருடத்தில் ஒரு நாள் கூட உன்னை நினைக்காமல் இருந்ததில்லையே நான்! '

மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடி விளையாடின.

"பச்சை சிக்னல் விழுந்தாச்சுடா" என்று அஞ்சலி அவள் தோள் மீது கைவைத்தபோது மீண்டும் தன் கவனத்தை சாலையின் மேல் செலுத்தினாள் சந்தியா. நான்கு சக்கரங்களும் திரும்ப சுழல ஆரம்பித்தன.

ஒரு சிறு அமைதிக்கு பிறகு,

"தியாகு இல்லைன்னா, வேற என்ன காரணம்? தியாகு உன் வாழ்க்கையை விட்டு போய் 6 வருடங்கள் ஆச்சு. ஆறே மாதம்தான்! அதுவே உனக்குள் இப்படி ஒரு பாதிப்பா?"

"நான் எப்போதும் போலத்தானே இருக்கிறேன்?" வார்த்தைகளை தேடி தேடி பேசினாள் சந்தியா.

"உன்னோட நான் 8 வருடமா தங்குறேன். என் சந்தியா எப்படி இருந்தா, எப்படி இருக்கானு தெரியாதா எனக்கு? உன் முகத்தில் இருந்த பழைய சந்தோஷம் இப்போ இல்லையே!

அஞ்சலி சொல்வது உண்மைதான் என்று அறிந்து அமைதி காத்தாள் சந்தியா.

"ரேகா கூடத்தான் ஒரு பையனை காதலித்தாள்.. 3 வருடங்கள் சின்சியராக. அவள் காதல் தோல்வியடைந்த பிறகு அவள் உன்னை மாதிரியா இருந்தாள்? ஒரு வருடம் கழித்து சிவாவை மணக்கலையா? இப்போ 2 ஜூனியர் சிவாக்களோடு சந்தோஷமாதானே இருக்கா? அவளோட உன்னை கம்பேர் பண்ணா உன்னோடது சப்பை மேட்டர்தானே? உன்னோடது just one side love. உன்னுடைய காதலைக்கூட தியாகுவிடம் நீ சொல்லலை. அப்புறம் எப்படி அவர் திரும்பி வருவார் என்று காத்துக்கொண்டிருக்கிறாய்?"

சந்தியாவின் கார் நெடுஞ்சாலையில் நுழைந்தது.

"அஞ்சலி, என்னுடைய வாழ்க்கை இதோ இந்த நெடுஞ்சாலையில் நான் என் காரில் தனியாக செய்யும் பிரயாணம் போல.."

"புரியவில்லை சந்தியா"

"என் காரில் நான் ஒரு நீண்ட நெடுஞாலையில் வேகமாக பிரயாணம் செய்துக்கொண்டிருக்கிறேன். வழியில் பல ஆண்கள் லிஃப்ட் கேட்டபோது ஒரு தடவையும் நான் நிறுத்தவே இல்லை. ஆனால், அதே சாலையில் ஒரு புள்ளியில் தியாகு நிற்பதை பார்த்தபோது என்னையும் அறியாமல் என் கால்கள் ப்ரேக்கை அழுத்தியது. என் கார் அவர் முன் நின்னபோது அவர் என் வண்டியில் ஏறவில்லை. நானே அவருக்கு முன் சீட்டு கதவு திறந்துவிட்டபோதும் அவர் ஏறவே இல்லை"

"அப்படின்னா உன்னுடன் தன் பயணத்தை தொடர அவருக்கு விருப்பமில்லை என்றுதானே அர்த்தம்? நீ ஏன் உன்னுடைய அந்த காலியான சீட்டை லிஃப்ட் கேட்கும் மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது?"

"நானும் அப்படித்தான் நினைத்து என் காரை ஸ்டார்ட் பண்ணேன். எண்ணையை அழுத்த வேண்டிய என் கால் இன்னும் ப்ரேக்லேயேதான் இருக்கின்றது. தியாகுவின் முன் நிற்கும் என்னுடைய கார் அங்கிருந்து ஒரு இன்ச் கூட நகரவே இல்லை"

"நான் ஒன்னு சொன்னால் கேட்ப்பாயா சந்தியா?"

"சொல். முடிந்தால் முயற்ச்சிக்கிறேன்."

"உன்னுடைய கார்தான் அந்த இடத்தை விட்டு நகர மாட்டேங்குது என்று சொல்கிறாயே! நீ ஏன் அந்த காரை விட்டு இறங்கி வேறொரு காரில் லிஃப்ட் கேட்க கூடாது? உன்னுடன் பயணம் செய்ய வேறொருவர் விருப்பம் கொள்ளலாம் இல்லையா?"

"இப்போதைக்கு இந்த காரை விட்டு இறங்குவதாய் எந்த எண்ணமும் எனக்கில்லை அஞ்சலி"

இருவருமே அமைதியானார்கள். அஞ்சலி இடதுபக்க கண்ணாடியின் வெளியே தன் பார்வையை திருப்பினாள். சந்தியாவோ திரும்ப தியாகுவின் நினைவலைகளில் கலந்தாள்.

"சந்தியா, அடுத்த வாரம் நான் ஆஸ்த்ரேலியாவுக்கு போறேன். அங்கே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கு. இந்த சந்தர்ப்பம் கண்டிப்பாக நான் நழுவ விடமாட்டேன். இந்த கம்பெனியில நீதான் என் பெஸ்ட் ஃபிரண்ட். உன்கிட்ட மட்டும்தான் இதை பத்தி சொல்றேன்". தியாகு அவளிடம் பேசிய இந்த கடைசி வார்த்தைகள் இன்னும் அவள் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.

'நான் அவரை காதலிக்கிறேன்னு அவர் கடைசி வரை அறியவே இல்லையே!'

"ஹோன்க் ஹோன்க்"

முன்னே வேகமாய் வந்துக்கொண்டிருந்தது ஒரு டாங்கர் லாரி.

"சந்தியா.. லாஆஆஆஆர்ர்ரீஈஈஈ" அஞ்சலி கண்ணை இருக்க மூடி காதை பொத்தி கத்தினாள்.

**இங்கே நாங்க தொடரும்ன்னு போடுவோம்ல... :-))**

(பயணம் ரும்..)

சித்தப்பா

உறவுகள்...

இந்த காலத்து தலைமுறையினர் அதிகம் அக்கரை எடுத்துக்கொள்ளாத ஒரு விஷயம். இங்கே எத்தனை பேர் தன்னுடைய அனைத்து உறவுகளையும் தெரிந்து வைத்திருக்கிறோம்?

"வாடா.. இப்படி நாலு விசேஷத்துக்கு போனாதான் உன் சொந்தங்கள் யார் யாருன்னு தெரிந்துக்கொள்ள முடியும். வா போயிட்டு வரலாம்"ன்னு அம்மா எவ்வளவு கெஞ்சியும், "எனக்கு வேலை இருக்கும்மா. அடுத்த தடவை பார்த்துக்கலாம்" என்று சாக்கு போக்கு சொல்லி தட்டிகழிக்கிறோம்.

இப்படியே போனால் அடுத்த தலைமுறையினர் அவ்ர்களது உறவுகளை அறிவார்களா?

உறவைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறும்படம் உங்கள் பார்வைக்காக..

பாகம் 1


பாகம் 2

Wednesday, October 03, 2007

ஒரு சிறிய காதல் கதை (The Shortest Love Story Ever)

"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


நானா நீயா? - 2

"பாட்டுதான் இது பாட்டுதான்.. சூப்பர் பாட்டுதான்!"

இப்படி பாடுனவரு யாரும் இல்லைங்க.. சாட்சாட் அந்த இயக்குனரேதான்!

நேத்து நைட் என்ன நடந்துச்சு தெரியுமா?? "நீங்க" யாரும் வர்றாததுனால யாரோ ஒரு இசையமைப்பாளரை கூப்பிட்டு கம்போஸிங் செய்ய சொன்னார் இயக்குனர். அந்த இசையமைப்பாளர் இசை கம்போஸ் பண்றேன்னு சொல்லி ஆர்மோனியப்பெட்டியை ஒரு வழி பண்ணிட்டார்.. அப்போதுதான் தெரிஞ்சது அவர் இசையமைப்பாளர் இல்ல.. தஞ்சோங் ரம்பூத்தான்ல இருந்து (இந்தியாக்கு ஒரு கீழ்பாக்கம்ன்னா மலேசியாவுக்கு இது ஒரு தஞ்சோங் ரம்புத்தான்) தப்பி ஓடி வந்த பேஷண்ட்..

இயக்குனர் வேற வழியில்லாமல் கம்போஸ் பண்றேன்னு ஒரு பியானோவை தூக்கி வச்சு உட்கார்ந்தார்.. அப்போ ஒரு பாட்டு காற்றுல கலந்து வருது...

நானா இல்லை நீயா.. நானா இல்லை நீயா..
நானா நீயா நானா நீயா X 4

இவன் இவனும் எதையும் அறியாதவன்
நல்லவன் அப்பளசாமி பாவம் இவன்
என்ன இது பூமி யாரவன் குண்டோதரன்
ஆணவம் கூடாது சாமி
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
அதை அறியாமல் காலை விட்டு விட்டு
கொஞ்சம் திரும்பி பார்த்து
சிரித்து நீயும் கைகளால் தட்டு தட்டு
தட்டு தட்டு போடு ஆட்டம் போடு
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்
கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்
ஏன் இந்த போட்டி சொல்வதுக்கெல்லாம் தலை ஆட்டி
வெளியே வஞ்சக பார்வை உள்ளெ விஷமாய் இருப்பது
இது பழகியது மருபடியும் முடிவாகும்..
ஏன் இது..

சொல் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
சொல் வேண்டாம் வேண்டாம்
வம்பு வேண்டாம் சண்டை வேண்டாம்
சொல் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் கோபம் வேண்டாம்

Don't Want It.. Don't Need It
வேண்டும் வேண்டும்
அன்பு வேண்டும் பண்பு வேண்டும்
சொல் வேண்டும்
வேண்டும் வேண்டும் பாசம் வேண்டும்

We Want It... We Need It..

சதி மேல் சதி இதுதான் கதி
வாழ்வினில் பாதி புரிந்தால் சரி
ஏன் ஏன் எதர்கிந்த போட்டி
பார் பார் ஆசை பேராசை
முடிந்ததை மறந்துவிடு
நல்ல வழி நீ உனக்கு தேடு
ஒரு மாட்டுக்கு ஒரு சூடு
நீ செய்வது தப்பு
இனி தேவை பாதுக்காப்பு
உனவில் உண்ட உப்பு
மீண்டும் மீண்டும் தப்பு
இனும் என்ன பண்ண
தப்பு மேலே தப்பு பண்ண
இல்லற வாழ்க்கை அல்ல சில்லறை வாழ்க்கை

சின்ன குழந்தை அல்ல
நான் இன்னும் எடுத்து சொல்ல
அரசன் அன்று கொல்வான்
இறைவன் நின்று கொல்வான்
இதை புரிந்தவன்
பிழைத்து கொல்வான் விழித்து கொல்வான்..

வெற்றியா இல்லை தோல்வியா..
நம் கைகளில் Forever
(வெற்றியா..) X 2

நானா இல்லை நீயா புயலா இடி மழையா
சரி தப்பு எது என்று அறியாமல்
காலை விட்டு முழிப்பது யார் என்று
(நானா...)

(வேண்டாம்..)

யோ யோ MC லோகா Together Vizz Da Blizz
அஹா Check It Out
Hyp Hyp.. Hyperkinetix
செல்வாக்கை விட சொல்வாக்கு முக்கியம்
Check Check Check Check It Out

நானா நீயா. நானா நீயா..
நானா நீயா. நானா நீயா..
நானா நீயா. நானா நீயா..

இயக்குனர் அசந்துட்டார் போங்க.. அவர் கேட்ட வரியில் அருமையா கம்போஸிங் ஆகியிருக்கு பாட்டு.. "யாரு.. இது யாரு.. அசத்திட்டு இருப்பவர் யாரு?"ன்னு அவர் வெளியே வந்து பார்த்தார்..

தலையில் திருப்பி போட்ட தொப்பி, கூலிங் க்லாஸ், கழுத்துல பட்டையா ஒரு சங்கிலி, பெரிய சட்டை. அதுக்கு மேலே ஒரு வெஸ்ட்.. ரெண்டு பேர் நுழையிற அளவுக்கு ஒரு ஜீன்ஸ் பேண்ட்னு அப்படியே ஹிப் ஹோப் ஸ்டைல்ல ரெண்டு பேர்...

இயக்குனர்: யாரய்யா நீங்க?

MC லோகா: MC லோகா from Hyp yp.. HYPERKINETIX..

கையை ஆட்டி ஆட்டி ஹிப் ஹோப் ஸ்டைல்ல ஒரு வணக்கத்தை சொல்ல..

இயக்குனர்: இந்த சின்ன பையன் யாரு?

Vizz: Vizz Da Blizz

இயக்குனர்: ஆஹா.. வெள்ளைகாரன் கணக்கா இங்கிலீசு பேசுறாரு துரை. இந்த பாட்டு பாடுனது நீங்கதானா?

பேசும்போதுதான் தெரிய வந்தது.. Vizzக்கு இப்போதுதான் 12 வயது. இப்பவே Rap நல்லா பண்றான். நன்றாகவே பாடும் திறனும் இருக்கு. cute-ஆவும் இருக்கான். உடனே அவருடைய "நானா நீயா?" என்கிற தெலிமூவீயில் இடம் பெறும் 8 பாடலுக்கு 4 பாடல் பாடும் வாய்ப்பை வழங்கிவிட்டார்.. MC லோகாவும் இந்த படத்துல பாடுறார்..

வேயிட் வேயிட்.. கதை இன்னும் முடியலை..அதுக்குள்ள கிளம்பினா எப்படி? இந்த படம் ஒரு காமெடி படம். 2 மணி நேரம் முழுக்க முழுக்க காமெடி வெலி வெலிக்க போகும்படம்.. மிஸ் பண்ணாமல் எல்லாரும் வந்து பார்க்கணும்ன்னு இயக்குனர் ஆசைப்படுறார்.. படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள் நீங்க MC லோகாவும் Vizz-உம் பாடும் நானா நீயாவை பார்த்து ரசியுங்கள். :-)


பி.கு: இன்று மாலை ஒரு அழகான காதல் காவியம் உங்கள் அபிமான ப்ரௌஸரில்... காணதவறாதீர்கள். :-P