Tuesday, April 22, 2008

காப்பி வித் ஹர்ரிஸ் ஜெயராஜ்

போன பதிவில் சந்தோஷ் சுப்ரமணியம் பாடல் விமர்சனம் எழுதலாம்ன்னுதாங்க பதிவெழுத தொடங்கினேன். அது என்னமோ தெரியல வேற ஒரு ட்ராக் தேடி ஓடிடுச்சு. நோ ப்ராப்ளம். it's all in the game.

இன்னைக்கு நான் எழுத போற மேட்டர் நீங்க படிக்கும் முன்னே, இந்த இரண்டு க்ளிப்பிங்ஸும் பாருங்க.




இப்போ தெரிஞ்சிருக்கும் இன்று எதை பற்றி எழுத போறேன்னு. எப்பவும் தேவாதானுங்க கிங்! கிங் ஆஃப் காப்பி. காப்பி வித் அனுக்கே காப்பி கலக்கி தரும் அளவுக்கு இந்த மேட்டர்ல பி.எச்.டி எடுத்தவர். எல்லார் கண்ணும் தேவாவின் மேலே இருக்கும்போது மற்ற இசையமைப்பாளர்களின் காப்பியின் மேல் அவ்வளவு பிரியம் இருக்காது. அதனால், அவங்க அடிக்கிற காப்பியும் நம்ம கண்ணுக்கு தெரியாது. எங்கேயோ கேட்ட பாடல்ன்னு பாடிட்டு அடுத்த வேலை பார்க்க போயிடுவோம்.

ஹர்ரிஸ் - இசைப்புயலின் உருவாக்கத்தில் வந்தவர். அவரிடம் கீபோர்ட் வாசிப்பவராக இருந்து பின்னால்
இசையமைப்பாளராக மாறியவர். இவருடைய ஆரம்ப கால இசை வாழ்க்கையிலிருந்தே ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டேதான் இருக்கு. "ரஹ்மான்'ஸ் காப்பி"!!!! இவருடைய பல பாடல்களில் ரஹ்மானின் பாணியும் அவரிடமிருந்து திருடப்பட்ட இசைகளையும் புதையல் போல கண்டுபிடிக்கலாம். நெட்ல கொஞ்சம் அலசினால் ரஹ்மான்'ஸ் ரசிகர்களின் ஆதங்கம் வெள்ளம் போல புரண்டோடுவதை காணலாம்.

அவருடைய முதல் ப்ராஜெக்ட் மின்னலே மின்னல் வேகத்தில் வெளியாகததால் முதலில் மக்களை எட்டி பிடித்தது 12B பஸ்தான். "ச்சும்மா அருமையா பிண்ணியிருக்காரு மனுஷன்"ன்னு பலரும் பாராட்டும் விதத்தில் போட்டிருந்தார் டியூன். ஆடியோ சிடி/ கேசட்டுகள் அதுவரை எந்த படமும் சாதிக்காத வசூலையெல்லாம் தாண்டி சாதனை படைத்தது. நானே மிகவும் ரசித்து கேட்ட, இப்போதும் ரசிக்கும் பாடல்களில் 12Bயும் அடங்கும்.

ஆனால், ஒரு சில படங்கள் வெளியாகிய பிறகு அவருடைய இசை பேட்டர்ன் திரும்ப திரும்ப அதே இடத்துலேயே சுத்த ஆரம்பித்துவிட்டது. குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுறது போல அவருடைய இசையில் வெற்றிபெற்ற அதே பாடல் தோரணையில் புது படத்திலும் ஒரு பாடல் அமைந்துவிடும். எந்த பாடல்ன்னு பல பேருக்கு தெரியும். ஆனாலும் இங்கே நாங்க சொல்லுவோம்ல.

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?

-என்ற தத்துவ(!?!?) பாடல் மிகப் பெரிய வெற்றியடைந்த்தனால்

கொக்கு மீனை திங்குமா?
இல்ல மீனு கொக்கை முழுங்குமா?

-என்று மேக்கப் போடப்பட்டு திரும்ப நமக்கே வந்து சேர்ந்திருக்கு. மக்களே, இங்கத்தான் நீங்க நல்லா கவனிக்கனும். ஒரு பாடல் வெற்றி பெருவதுக்கு காரணமே நாம்தான். நமக்கு அந்த பாடல் பிடித்ததானால் ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்ன்னு பல முறை கேட்டு வெற்றியடைய செய்தால் அதையே திரும்ப ஆடை மாற்றி மேக்கப் போட்டு நமக்கே அனுப்புறாங்க.. என்ன கொடுமை சரவணா இது!!!

இப்படி கேட்கும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கும் தெரியுமா?

மத்தவங்க இசையை காப்பி அடித்து வெற்றி அடைந்தாயிற்று..
சொந்த இசையையே திருப்பி போட்டு அதுலேயும் ஓரளவு வெற்றி அடைந்தாயிற்று...
அடுத்து என்ன?
இங்கேயும் ஒரு மேட்டர் இருக்கு.. அதுக்கு முன்னே இதோ இந்த இரண்டு காட்சிகளை பாருங்க:




அடப்பாவிகளா! அடப்பாவிகளா! (விவேக் ஸ்டைலில்..)
எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே!
காப்பியடிக்க கூட ஐடியா கிடைக்காமல் அப்படியே போட்டுட்டாரே!!!!

சிலர் தன் வழி தனி வழின்னு போகும்போது சிலர் என் வழி திருட்டு வழின்னு போகிறார்களே! அவர்கள் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்கள்! இவர்கள் இருக்கும்வரை திருட்டு இசைகளும் சாகா வரம் பெற்று வாழும் என்பதில் ஐயமில்லை. :-P

Tuesday, April 01, 2008

சீனா: யூ டியூப் நோ! நோ!

நீங்கள் சீனாவில் வசிக்கிறீரா?

உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு கிடைப்பது:

யூ டியூப் நோ! நோ!
யாஹூ நோ! நோ!
கூகில் நியூஸ் நோ! நோ!
பிபிசி வோர்ல்ட் நோ! நோ!
சி.என்.என் நோ! நோ!
குவார்டியன் நோ! நோ!

திரும்ப பாட்டு பாட ஆரம்பிச்சுட்டாடான்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே மேட்டர் என்னன்னு சொல்லிடுறேனுங்க.

இந்த சீனா நாட்டுல இப்போதுள்ள நிலமை என்னன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். திபேத்திய மக்களின் போராட்டமும், சீன அரசாங்கத்தின் அராஜகமும் (அடடே, டைட்டல் நல்லா இருக்கே!) இப்போ அங்கே கட்டுக்கடங்காமல் நடந்துட்டு இருக்கு. பல நாடுகள் சீன அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டேதான் இருக்காங்க.. டலாய் லாமாவும் இந்த அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூடிய விரைவில் பெய்ஜிங்கில் நடக்கப்போகும் ஒலிம்பிக்கை புறக்கணியுங்கள் என்று உலக மக்களை வேண்டிக்கொண்டிருக்கிறார்.

இந்த மாதிரி போராட்டம் நடக்குமிடத்தில் உண்மையான விபரங்கள் பத்திரிக்கைகளில் வராது. இது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும், உண்மையில் என்ன நடந்தது என்று மக்களுக்கு சொல்லுவதற்கு ஏதாவது ஒரு மீடியம் தேவைப்படும். அதிலும் எல்லா தரப்பு மக்களுக்கும், உலகத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் மக்களுக்கும் போய் சேர வேண்டுமென்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கு. இண்டெர்நெட்! அதுவும் எழுத்து வடிவத்தை விட வீடியோ நிரல்களாய் மக்களிடம் போய் சேரும்போது அதனுடைய பாதிப்பும் அதிகம்!

இந்த வகையில் யூ டியூப் ஒரு மிகப் பெரிய சாதனை! எந்த போராட்டத்தையும், மக்களின் கருத்துக்களையும் ஒரே இடத்தில் வீடியோவாய் பார்க்கலாம். சீனா-திபேத் பிரச்சனை பற்றியும் பல வீடியோக்கள் வெளியாக ஆரம்ப்பித்துவிட்டது. நாமெல்லாம் இதை பார்த்து திபேத் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்திடுவோம் என்று பயந்து சீனா என்ன செய்தது! யூ டியூப்பை சீனாவில் ப்லோக் பண்ணிடுச்சு. அதனால், இனி இந்த பிரச்சனையை பற்றி புது வீடியோக்களை இனி யூ டியூப்பில் காண முடியாது. கூகல், யாஹோ, பிபிசி போன்ற நியூஸ் சான்ற தளங்களிலும் உள்நாட்டு RSS-ஐ தடுத்துவிட்டது.

இதெல்லாம் செய்தால் செய்திகள் வெளியே கசியாது என்று தப்பு கணக்கு போட்டுவிட்டது சீனா! எம்.எம்.எஸ், ஈமெயில் மூலமாக வெளிநாட்டவருக்கு அனுப்பி அவரை அப்லோட் பண்ண சொல்லலாமே! நான் சொல்றது சரிதானே! ;-)