Monday, October 13, 2008

சினிமா சினிமா - கேள்வி பதில்

இந்த மாசக் கணக்கு எதுல இருந்து ஆரம்பிக்கிறதுன்னு நெனச்சிட்டே இருந்தேன். பரிசல் காரரு பரிசல் கொடுத்து காப்பாத்திட்டாரு. ;-)

சினிமா என் உயிரு..
சினிமா என் உயிர் மூச்சு..
சினிமா என் ரத்ததுல்ல ஓடுது..
சினிமா தான் நானு..
நாந்தான் சினிமா!

இப்படியெல்லாம் சொல்லுவேன்னு நெனச்சீங்களா?
அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க..

சினிமா..
சின்ன பிள்ளையா இருக்கிறப்போ அப்பா என்ன படம் டேப் வாடகை வாங்கிட்டு வந்தாலும் கூட உட்கார்ந்து பார்ப்போம்.. (குடும்பத்தோட..)
அதுவும் 9 மணி ஆச்சுன்னா “டைம் ஆச்சு.. போதும்.. பாத்ரூம் போயிட்டு படுக்க போங்க”ன்னு அப்பாவோட சவுண்ட் வரும். படத்துல என்ன ஆயிருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே ரூம்க்கு போயிட்டு அப்பா சொன்னது போல படுத்துப்போம். ஆனா தூங்க மாட்டோம். மெல்ல,

என் அண்ணாட்ட கேட்பேன். “அடுத்து என்ன ஆயிருக்கும்?”
உடனே என் அண்ணா முழு படத்தையும் ஏற்கனவே பார்த்துட்ட மாதிரி கதை சொல்வார். நானும் “ஆ”ன்னு வாயா திறந்துட்டு கதை கேட்பேன். கடைசியில் என் அண்ணன் “கதையும் முடிஞ்சிடுச்சு.. கத்திரிக்காயும் காய்ச்சிருச்சு”ன்னு சொல்வார். அப்பத்தான் தெரியும் இவ்வளவு நேரம் விட்டது எல்லாம் ரீலுன்னு.

கொஞ்சம் வளர்ந்ததும் (நம்புங்கப்பா கொஞ்சம் வளர்ந்துட்டேன் அப்போ)
அப்போ டேப் வாடகை வாங்கும் காலம் போய் நாங்க டேப் வாங்கும் காலம் வந்தது. அப்போ சின்ன வயசுல மிஸ் பண்ண படமெல்லாம் அண்ணாதான் ஞாபகம் வச்சி எடுப்பார்.
இந்த காலக் கட்டத்துல ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுசா தியேட்டர்ல வந்த படத்தை பார்க்க குடும்பத்தோட போவோம். தீபாவளின்னா பட்டாசுங்கிற காலம் போய் தீபாவளின்னா புதுப் படம் தியேட்டர்லன்ற காலம் வந்துச்சு. அதுவும் அப்போதெல்லாம் ஒவ்வொரு தீபாவளிக்கும் ரஜினி அல்லது கமல் படம் கட்டாயம் வரும். சில நேரங்கள்ல அம்மாதான் வரலைன்னு அடம் பிடிப்பாங்க. அவங்களை கன்வீன்ஸ் பண்ணி தியேட்டர்க்கு போறதுக்குள்ள சில நேரம் நள்ளிரவு காட்சிக்குதான் டிக்கேட் கிடைக்கும். அப்போதெல்லாம் தியேட்டர்ல (அந்த சத்தத்துல) தூங்கின தூக்கம் இருக்கே.. ஆஹா.. என்ன சுகம்!

கல்லூரி காலம்.. முதன் முதலில் நண்பர்களுடன் சினிமா பார்க்கப் போன காலம். வருஷத்த்துக்கு ஒன்னுன்னு ஆரம்பிச்சு, டெமெஸ்டருக்கு ஒன்னுன்னு வளர்ந்து, அப்புறம் நல்ல படம்ன்னு நம்பிக்கை உள்ள எல்லா படங்களுக்கு முதல் ஷோவுக்கே டிக்கேட் பூக் பண்ணி போக ஆரம்பிச்சோம்.
அது மட்டுமா? என்ன படம் வந்தாலும் (மொக்க படங்களையும் சேர்த்து) டவுன்லோட் பண்ணி விடிய விடிய தூங்காமல் படம் பார்த்து, அதையும் external hardiskல போட்டு அல்லது internal torrentல அப்லோட் பண்ணி நண்பர்களுக்கும் கொடுத்துன்னு 24 மணி நேரம் பத்தவே பத்தாது படம் பார்க்க. ஒரு மொழி படம் பார்த்தாலே பத்தாத இந்த சமயத்துல தமிழ், மலாய், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, ஜப்பான், சீனா, ஹாங் காங், கொரீயா, இந்தோனிசியான்னு பாராபட்சம் பார்க்காமல் எல்லா மொழி படங்கள், நாடகங்கள், டாக்குமெண்ட்ரீஸ், நகைச்சுவை தொகுப்புகள்ன்னு கலந்து கட்டி ஆடுன சமயம்..

சரி.. ரொம்ப பேசிட்டேன்.. பரிசல்காரரோட கேள்விக்கு என்ன பதில்?

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

என்ன வயசுன்னு சுத்தமா ஞாபகம் இல்ல. அப்படியே பார்த்திருந்தாலும் முழுப்படம் பார்த்தேனா இல்லையாங்கிறது இன்னொரு கேள்வி. ஆனா, நினைவு தெரிந்து நான் பார்க்கணும்ன்னு நினைச்ச ஒரு படம் இருக்கு. படத்தோட தலைப்பு என்னன்னு அப்போதும் (இப்போதும்) ஞாபகம் இல்ல. அதுல பாண்டியன், ஆனந்த பாபு மற்றும் ஒருத்தர் (அவரும் ஞாபகம் இல்ல) நடிப்பாங்க. இவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு நாள் யாரோ குழந்தைய விட்டுட்டு போயிருப்பாங்க. பாண்டியன் அந்த சமயம் ஊருக்கு போயிருப்பாரு. அவரு ப்லேபாய் என்பதால் இது பாண்டியனோட குழந்தையா இருக்கும்ன்னு நண்பர்கள் எடுத்து பார்த்துப்பாங்க. அப்புறம் பாண்டியன் வந்து இல்லன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. குழந்தையின் உண்மையான தந்தை யாருன்னு தெரியும்போது அந்த குழந்தையை பிரிய மனசிருக்காது. கடைசி வரை அந்த குழந்தைக்கு பேரு கூட வைக்காம தாயம்மான்னு கூப்பிடுவாங்க.. அப்போ எனக்கு ரொஉ 4-5 வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறேன். அந்த மூனு ஹீரோக்களும் ஒரு வித மோட்டர்சைக்கிள் உபயோகிப்பாங்க. அந்த மோட்டரை அப்போதெல்லாம் எங்க பார்த்தாலும் தாயம்மா மோட்டார் தாயம்மா மோட்டார்ன்னு நான் கத்துனது இப்போ நெனச்சாலும் சிரிப்பா வருது. அந்த படம் பிற்காலத்துல ஹிந்தில கூட பார்த்திருக்கேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

பரிசல், Give me Five.. :-)
நானும் கடைசியாக பார்த்தது சரோஜாதான். படம் முழுக்க சிரிச்சு சிரிச்சு படம் முடிஞ்சதும் அடுத்த ஷோ இருந்தா திரும்ப போகலாம்ன்னு சொல்ல கவுண்டரில் கேட்டா, டிக்கேட் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லி கெளம்ப வச்சிட்டாங்க..

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

நேற்று ஆஸ்ட்ரோ வெள்ளித்திரையில் வைதீஸ்வரன் படம் பார்த்தேன். மறுபிறவி இருக்கா இல்லையா என்பதை இயக்குனர் நல்லா குழப்பி சொல்லியிருக்கார்.
அதனால ரிலாக்ஸ் பண்றதுக்காக பொம்மரில்லு படம் பார்த்தேன். எத்தனை தடவை பார்த்தாலும் புதுசா இருக்கு. சித்தார்த் கலக்கிட்டார். படம் பார்த்து முடிந்ததும் சந்தோஷ் சுப்ரமணியத்தில் ரவியின் சொதப்பலை நினைத்து கோபம் கோபமாக வந்தது..

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய இருக்கு.
குறிப்பா சொல்லணும்ன்னா உள்ளம் கேட்குமே. நான் ரசித்து, சிரித்து, அழுது பார்த்த படம். பல முறை பார்த்திருப்பேன் (தனியாக, நண்பர்களுடன்). ஆனால், எப்போது பார்த்தாலும் புதுசாக பார்ப்பதுப்போல் தோன்றும். கல்லூரி வாழ்க்கை மட்டுமல்ல. என் பள்ளி வாழ்க்கை, பழைய நண்பர்கள் என அனைவரையும் நினைவு கூற வைக்கும் படம். பல முறை ஓ மனமே பாடலை கேட்கும்போதே என்னை அறியாமலேயே கண்களில் நீர் கோர்க்கும் சமயங்களில் படத்தை திரும்ப நினைத்துப்பார்ப்பேன்.. உள்ளம் கேட்குமே.. எப்போதும் இந்த நட்பை என் உள்ளம் கேட்குமே!

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்னும் இல்லை. ;-)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்ப சம்பந்தம் என்றவுடன் எனக்கு தோன்றுவது safetiness in shooting placeதான். சில வருடங்களுக்கு முன் ஒரு லைட்பாய் ஆறடி உயரத்திலிருந்து விழுந்து மரணமடைந்தது. படங்களில் நாம் அறுவருப்பாய் நினைக்கும் வில்லன்கள் aka ஸ்டண்ட்மேன்கள். இவர்கள் ஒவ்வொரு படத்திலும் எடுக்கும் ரிஸ்க்ஸ்தான் எத்தனை எத்தனை! பலருக்கு பல காயங்களும், சில நேரங்களில் தன் உறுப்புக்கள் இழக்க நேரிடலும், அதையும் தாண்டி உயிரும் போகும்வரை அவர்கள் எடுக்கும் ரிஸ்க் நினைத்தாலே இப்படிப்பட்ட படங்கள் தேவையான்னு சில நேரம் என்னை நானே கேட்டுப்பேன். இவர்களின் வாழ்க்கையையும் படமாக எடுத்து நமக்கு இவர்களின் கஷ்டத்தை திரையிட்டு காட்டிய சசிக்கு இவ்வேளையில் நன்றிகள்.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இது இல்லாமலா? தினமும் தினசரி படிக்கிறேனோ இல்லையோ.. கண்டிப்பாக இணையத்தில் சினிமா நியூஸ் படிக்கிறது வழக்கமாயிடுச்சு.
வலைப்பூக்களில்:
கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் வரும் குவீஸ்களும் தகவலும் & முரளிக்கண்ணனின் சினிமா பற்றிய ஆராய்ச்சிகளும் விரும்பி படிக்கிறேன்

7.தமிழ்ச்சினிமா இசை?

என்ன கேள்வி இது?
காலையில் எழுந்ததும் பாடும் என் கணிணி
பயணத்தில் கைக்கொடுக்கும் என் காரின் ரேடியோ + ஐபோட் + FM Transmitter
மீண்டும் ஆபிஸில் என் கணிணி
வீடு வந்ததும் டீவியில் பாடல் மற்றும் ஒளிப்பரப்பாகிற சேனல்
இப்படி தினசரி இசையில் லயித்துக்கொண்டே இருக்கிறேன்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஹிந்தி:
கடைசியா பார்த்த தாரே ஜமீன் பர் என்னை மிகவும் பாதித்தது

ஜப்பான்:
One Little of Tears
என்னை மிகவும் பாதித்த ஒரு கதை. உண்மையில் நடந்த கதையின் தொகுப்பு இது. ஒரே ஒரு சொட்டுன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க அழவைத்த படம். குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை கதையை அவள் 25 வயதில் இறக்கும் வரை முழுக்க காட்டிய காவியம். தன் நோயை அறிந்தப்பின் ஒரு மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவள் எழுதிய டைரியின் தொகுப்பே இக்கதை. அவளிடைய டைரி பிற்காலத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டு 1.1 மில்லியன் புத்தகங்கள் விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

ஹாங்காங்:
The Flying Fox of The Snowy Mountain
20 வருடங்களுக்கு முன் மர்மமாக இறந்த தன் தாய்தந்தையை பற்றிய விவரங்கள் தேடி அலையும் ஒரு இளைஞனின் கதை. இது ஜின்யோங் என்ற எழுத்தாளரின் சிறுகதைகளின் தொகுப்பு. கடைசியில் வரும் சண்டை காட்சி பிரமாதமாக இருக்கும்

மலாய்:
Jalinan Kasih
ஒரு ஏழை இளைஞனுக்கும் பணக்கார பெண்ணுக்கும் நடுவில் ஏற்படும் காதல். நம்ம தமிழ் படம் கதை போலவே. ஆனாலும் இது எங்கே மாறுப்படுதுன்னா அந்த பெண் தன் தந்தை (அவர் நல்லவர்ப்பா) பேச்சை மதித்து அவர் காட்டும் ஒருத்தரையே (இவரும் நல்லவர்ப்பா) மணம் புரிவார். காதல் தோல்வியடைந்த ஹீரோ ஒரு கம்பேனியில் வேலைக்கு சேர்றார். அங்க அவரோட முதலாலியின் மகள் அவரை ஒருதலையாக விரும்பிகிறார். அப்புறம் எப்படியோ ரெண்டு பேரும் திருமணம் பண்ணதால நம்ம ஹீரோ பணக்காரராயிடுறார். பணக்கார ஹீரோவும், முன்னாள் காதலியின் கணவரும் நண்பர்களாகிடுறாங்க. ஒரு கட்டத்துல ஹீரோவை ஒரு விபத்துல இருந்து முன்னால் காதலியின் கணவர் காப்பாற்றும்போது உயிர் இழக்கிறார். அதுக்கப்புறம் என்ன நடக்குது? இதுதான் கதை அன்பின் பினைப்பு aka ஜாலினான் காசே..

ஆங்கிலம்:
Passion of The Christ
Mel Gibson தயாரித்து இயக்கிய படம். யேசுவின் கடைசி 12 மணித்துளிகள். ஒன்னும் சொல்ல முடியல. அந்த அளவுக்கு பாதித்த படம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆரம்பக் கல்வி பயிலும்போது என் பள்ளி பத்துமலை வளாகத்தின் உள்ளேதான் இருந்தது. அப்போதெல்லாம் தமிழ் சினிமா பாடல்கள், காட்சிகள் பத்துமலை முருகன் தளத்தில் படம் பிடிக்க கும்பல் கும்பலாக வருவார்கள். அப்போ வகுப்பறை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தது ஞாபகம் இருக்கு

கொஞ்சம் வளர்ந்தப்போ Dr. Bombay டாக்ஸி டாக்ஸி என்ற பாடலுக்கு படம் பிடிக்கிறார் என்றும் அது என் வீட்டுக்கு அருகில்தான் என்றதான் பார்க்க போகலாம் என நண்பர்கள் கூப்பிட்டார்கள். ஏனோ போய் பார்க்கணும்ன்னு தோணல.

அதுக்கப்புறம் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேகாவில் சரத்குமாரும், தேவயானியும் ஆடிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக நான் ஏறியிருந்த பேருந்த கடந்தது.

போன வருடம் பில்லா படத்து சேவல் கொடி பறக்குதடா பாடல் காட்சி பத்துமலையில் படமாக்குக்கிறார்கள் என என் தோழன் கூப்பிட்டிருந்தான். வேறு நல்ல வேலை (ப்ளாக் எழுதுறதுதான்!) இருக்குன்னு சொல்லிட்டேன்.

இந்த அளவுதான் எனக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

போன வாரம் இதே தலைப்பில் என் சில நண்பர்களுடன் விவாதித்திருந்தோம். இப்போது ரீமேக் என்பது மிகப் பிரபளம் ஆகிவிட்டது. தெலுங்கிலிருந்து தமிழ், மலையாளத்திலிருந்து தமிழ், ஹிந்தியிலிருந்து தமிழ், ஆங்க்லத்திலிருந்து தமிழ்ன்னு இருந்த தமிழ் சினிமா இப்போ சீனாவிலிருந்து தமிழ், ஜப்பானிலிருந்து தமிழ், ஜெர்மனிலிருந்து தமிழ், அரபுலிருந்து தமிழ்ன்னு வருது. நல்ல கதை கொடுக்கிறவங்க ஒன்னு ஒரு படம் எடுக்க 5-7 வருடம் எடுக்குது (உதாரணம் பாலா) , இல்லண்ணா நானும் ஒரு ரீமெக் படம் எடுக்கிறேன்னு அன்னிய மொழியிலிருந்து கதை சுடுறாங்க (உதாரணம் மிஷ்கின்). நல்ல கதைக்களம் கொண்ட தமிழ்சினிமா எழுத்தாளர்கள், இயக்குனர்கள் எத்தனை பேர் இருக்காங்க. இருக்கிறவங்க ஒழுங்கா வருஷத்துக்கு ஒன்னு கொடுத்தாலே போதும்.. தமிழ் சினிமா எங்கேயோ போயிடும்.

ஆனா, நம்ம இயக்குனர்களுக்கு இப்போது கதாநாயகர்கள் ஆசை வேற வளர்ந்துட்டே போகுது. நல்ல படங்கள் கொடுக்கிற இயக்குனர்களும் மத்த இயக்குனர்கள் படத்துல ஹீரோவா நடிக்க போயிட்டா எப்போ நாம் ரசிச்சு பார்க்கிற படம் இயக்கப்போறாங்க? அப்புறம் ரீமேக் ராஜா போன்ற ஆளுங்கத்தான் தமிழ் சினிமாவை ஆழ்வாங்க.

இது நடந்துச்சுன்னா ஒரு 10 வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமா சொல்லும்: “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!!” :-(

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நல்லது..
இருக்கவே இருக்கு மத்த மொழி படங்கள்.
இன்னும் பார்க்காத மொழிப்படங்கள் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டு அந்த படங்களையெல்லாம் தேடி தேடிப் பார்க்கலாம்.
மேலே சொன்னது எனக்கு.

கீழே சொல்ல போறது நம்ம தமிழ் சினிமா பத்தி:
டீவியில சித்தி, அண்ணாமலை, அரசி போன்ற மெகா சீரியல் அதிகரிக்கும், ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாரும் அதில் நடிக்கலாம்

டீவி இண்டர்வியூ போன்ற சமாச்சாரங்கள் காந்தி ஜெயந்தி, விநாயகர் சதூர்த்தி போன்ற நாட்களில் போட மாட்டாங்க என்பதால் வீடு வீடாக போய் ரசிகர்களுக்கு பேட்டி கொடுக்கலாம்

திரும்ப பழைய வேலைக்கே (ஊருல விவசாயம் பார்க்கிறது) திரும்பலாம்.

ஜே கே ரித்திஷ் போன்ற ஆட்கள் திரும்ப அரசியலுக்கு திரும்பி முதலமைச்சருக்கே சவாலாக இருக்கலாம்.

நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன்ன்னு எல்லா நடிகர்களும் எழுத்தாளர் ஆகி புத்தகம் வெளியிடலாம்.

இப்படி நிறைய விஷயங்கள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கு. ஆனால் இதெல்லாம் நடந்தால் உட்கலவரம் நடகும் என்பதால் இப்படிப்பட்ட தடைகள் வராதுன்னு நம்பறேன். :-P
------------------------------------------------------------------
பரிசல்காரரே, 5 பேரையா கூப்பிடணும்? கூப்பிட்றலாம்:

1- சிங்கப்பூர் விஷால் ரசிகர் மன்ற தலைவி தமிழ்மாங்கணி
2- கத்தார் ஷ்ரேயா கோஷல் ரசிகர் மன்ற தலைவர் ஆயில்யன்
3- அகில உலக வீக்-எண்ட் ஜொல்லுஸ் முன்னேற்ற கழகம் முன்னாள் தலைவர் மங்களூர் சிவா
4- அகில உலக வீக்-எண்ட் ஜொல்லுஸ் முன்னேற்ற கழகம் புதுத் தலைவர் சஞ்சய் காந்தி
5- உலக .:: மை ஃபிரண்ட் ::. ரசிக மன்ற தலைவி கயல்விழி முத்துலெட்சுமி ;-)

Thursday, July 10, 2008

காத்திருந்த காதலி - பாகம் 8


இதுவரை காத்திருந்த காதலி:

வடகரை வேலன் பாகம் 1
பரிசல் காரன் பாகம் 2
வெயிலான் பாகம் 3
கிரி பாகம் 4
ஜெகதீசன் பாகம் 5
டிபிசிடி பாகம் 6
கயல்விழி முத்துலெட்சுமி பாகம் 7

....மருத்துவமனை ஒன்றாம் எண் வாசலில் கௌரியின் அப்பா கார்நுழைந்த அதே நேரம் கார்த்திக் கார் இரண்டாம் எண் வாசல் வழியாக நுழைந்தது. இருவரும் வேறு வேறு படிக்கட்டுகளில் சங்கர் அறையை நோக்கி ஏறிக்கொண்டிருந்தார்கள்.

**********************************************************
இது முத்துக்கா எழுதியது.. நான் பாட்டுக்கு தேன்கிண்ணத்துல பாட்டு போட்டுக்கிட்டு, 24/7 ஃப்ரேம்ஸ்ல வீடியோ போட்டுக்கிட்டு, அப்பப்போ யாராவது பதிவு எழுதி கொடுத்தா அதை என் வலைப்பதிவுல போட்டுக்கிட்டு, அப்பப்போ கொஞ்சம் கும்மியும் ஆடிட்டு இருந்தேன். கதை எழுது நீன்னு ஆர்டர் போட்டுட்டு போயிட்டாங்க முத்துக்கா. என்ன கொடும சார் இது! கதையா? நானா?ன்னு எனக்கே ஒரு நிமிடம் ஒன்னும் புரியல. தயவு செய்து விளக்கவும் நிலமைதான். சரி, என்னை நம்பி வாக்கு கொடுத்துட்டாங்களே. எழுதி கொடுத்துடுவோம்ன்னு இறங்கிட்டோம்ல. ;-)
முத்துக்கா வலுக்கட்டாயமா டில்லியை சேர்த்துக்கிட்டதால நான் கேரக்டர் அனைவரையும் மலேசியா கூட்டிட்டு வரணும்ன்னு பார்த்தேன். ஃப்ளைட் டிக்கேட்ஸ் கட்டுப்படியாகாததுனால ஒருத்தரை மட்டும் மலேசியாவிலிருந்து இந்தியா கொண்டு வந்திருக்கேன். ஹீஹீஹீ.. இப்போ நம்ம கதை. படிச்சுட்டு நீங்க அடிக்க வர்றதுக்குள்ள நான் அப்பீட்டு..

**********************************************************

சங்கரின் பெற்றோர்கள் பின் தொடர கார்த்திக் வெகு வேகமாக படிக்கட்டுகளில் ஏறி சங்கரின் அறையை அடைந்தான். மற்றவர்கள் அறைக்கு வந்து சேறுவதற்கு முன்பே சில காரியங்கள் செய்ய வேண்டும் என முன்பே குறித்துவைத்திருந்தான்.
உள்ளே சீருடையில் நர்ஸ் மட்டுமே இருந்தாள்.

கார்த்திக்கை பார்த்ததும் நர்ஸ் எழுந்து அவன் அருகில் வந்தாள்.

"சிறிது நேரம் பேஷண்டை பார்த்துக்குறீங்களா? நான் சில மருந்துகளை எடுத்துட்டு வந்துடுறேன்"

"சரி சிஸ்டர்"

நர்ஸ் ஒரு துண்டு சீட்டை எடுத்துட்டு வெளியாவதை நின்ற இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். நர்ஸ் தன் பார்வையிலிருந்து மறைந்ததும் சங்கர் கட்டிலின் அருகே போனான்.

சங்கர் தூக்க மாத்திரையின் தாக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஆனாலும் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்போது பக்கத்தில் யாராவாது பேசினால் நோயாளிகளுக்கு கேட்குமாமே! கார்த்திக் கொஞ்சம் குனிந்து சங்கரின் காதில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தான்.

சடாறென்று யாரோ கண்ணத்தில் ஓங்கி அறைந்த வேகத்தில் அப்படியே விழுந்து கட்டிலின் இரும்பில் மோதி தலைக்கு மேல் நட்சத்திரங்கள் சுற்றுவது போல் இருந்தது. தன்னை சுதாகரித்துக்கொள்வதுக்குள் மேலும் மேலும் அடிகள் விழ ஆரம்பித்தன.

"ஐயா!!!! எம்பையனை எதுக்குயாஅடிக்கிறீங்க??" என்று தன் சேலையின் முந்தானையை பிடித்துக்கொண்டு ஓடி வந்தார் சங்கரின் அம்மா. அப்பாவோ தன் பங்குக்கு தன் மகனை கௌரியின் தந்தையிடமிருந்து காப்பாற்ற பாடுப்பட்டார்.

"ம்ம்.. நீங்கதான் இவன பெத்தவங்களோ?? %@*#&(%" இளக்காரமாய் கேட்டார் ராமச்சந்திரன்.

"சார்.. வார்த்தையை அளந்து பேசுங்க"

"ஓ பண்றதையும் பண்ணிட்டு மரியாதையா வேற பேசணுமோ?"

"சார். என்ன விஷயம்ன்னு சொல்ல்லுங்க"

"உம் மையனையே கேளுய்யா.. சொல்லுவான் அவன் வண்டவாளத்தை"

"டேய்.. என்னடா பண்ணே? எதுக்கு இந்த ஐயா என்னென்னமோ சொல்லுராரேடா.. என்னப்பா நடந்துச்சு. சங்கர் வேற இப்படி கெடக்குறான். இந்த நிலமையில..." துக்கம் தொண்டையை அடைத்தது சங்கரின் அம்மாவுக்கு.

" அம்மா... அது ஒன்னும் இல்லம்மா. இவர்தான் கௌரியோட அப்பா. சங்கர் காதலிக்கிறான்னு அன்னைக்கு போன்ல சொன்னானே. அந்த பொண்ணோட அப்பா"

"அவர் ஏண்டா உன்னை அடிக்கணும்?" இது அப்பா..

"அப்பா.. அது வந்து.. வந்து.. அதுதான் எனக்கும் தெரியல.."

"பண்றதெல்லாம் பண்ணிட்டு தெரியலைன்னா சொல்றே!!!" மிகவும் ஆக்ரோஷத்துடன் சீறி பாய்ந்தார் ராமச்சந்திரன்.

அதற்க்குள் சங்கர் முனுமுனுக்க எல்லாரும் சங்கரின் பக்கத்தில் வந்து நின்றார்கள்.

"மாப்பிள்ள.. இப்போ எப்படி இருக்கு?"

சங்கர் அவரை பார்த்து மீண்டும் முனுமுனுத்தான். "சரியா விளங்கல. என்ன சொன்னே?"

அவர் காதை சங்கரின் வாய் அருகே வைத்தார். சங்கர் திரும்ப முனுமுனுத்தான்.

ஷாக் அடித்தது போல ஒரு ரியாக்ஷனுடன் ராமச்சந்திரன் நிமிர்ந்தார். அதற்குள் மருந்து எடுக்க சென்ற நர்ஸ் ஓடி வந்தாள்.
"கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா. கொஞ்சம் காத்து வரட்டும்"

"மிஸ்டர் சங்கர், இப்போ பரவால்லையா.. இன்னும் வலி இருக்கா?"

"ம்ம்.."

"இன்னும் ஒரே ஒரு ஊசி. இன்னும் 15 நிமிடத்துல உங்களுக்கு ஆப்பரேஷன். எல்லாம் சரியாகிடும்" என சொல்லிகொண்டே மயக்க ஊசியை குத்தினாள். சங்கர் திரும்ப மயக்க நிலைக்கே திரும்பினான்.

"சார், என் பையன் என்ன சொன்னான்?"

சத்தம் இல்லை. திரும்பி பார்த்தால் ராமசந்திரனும் அங்கே இல்லை. "எங்கே போயிட்டாரு இந்த மனுஷன்?" என சிந்தித்துக்கொண்டே அறைக்கு வெளியே எட்டிப்பார்த்தார். காரிடோர் வெறிச்சோடி கிடந்தது.
--------------------------------------------------------------
"ட்ரிங் ட்ரிங்.." சங்கரின் மொபைல் அலறியது.

"ஹேல்லோ"

"ஹெல்லோ கேட்டரிங் சங்கர்?"

"இல்ல. ஐ எம் கௌரி. சங்கர் வெளியே போயிருக்கார். என்ன விஷயம்?"

"ஒரு கேட்டரிங் ஆர்டர் கொடுக்கணும். ஏற்கனவே சாருடன் பேசிட்டேன். இன்னைக்கு ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வர சொன்னார். வந்துட்டேன். வீடு பூட்டியிருக்கு."

"சாரிங்க. நீங்க எங்க ஆபிஸ்க்கு வர முடியுமா?"

"ஆபிஸா? எனக்கு எப்படி வர்றதுன்னு தெரியாதுங்க. நான் மலேசியாவில் இருந்து வந்திருக்கேன். இந்த அட்ரஸையே 3 மணி நேரமா தேடிதான் கண்டு பிடிச்சிருக்கேன். புதுசா இன்னொரு அட்ரெஸ்ஸெல்லாம் தேடுறது ரொம்ப ரொம்ப சுசா (கஷ்டம்).."

"ம்ம்.. சரிங்க. நீங்க அங்கேயே இருங்க. ஒரு 45 நிமிடத்துல ஒருத்தர் உங்களை அங்கே சந்திப்பார்"

சங்கரின் போனில் கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்தாள்.

"You have no suffient balance for outgoing calls" என ஒரு பீட்டரக்கா குரல் ஒலித்தது.

ஹேண்ட்பேக்கில் தன்னுடைய போனை தேடினாள். "ஓ மை காட். போன் அப்பா ஆபிஸ்லேயே விட்டுட்டேன் போலிருக்கு."
'ம்ம்.. நானேதான் சங்கரோட க்ளையேண்டை மீட் பண்ணனும் போல..' என்று எண்ணிக்கொண்டு தன் ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு தன் காரை நோக்கி நடந்தாள்..

40 நிமிடங்களிலேயே சங்கரின் வீட்டை அடைந்ததும், ஏற்கனவே சங்கரின் பொருட்களை கார்த்திக் தன்னிடம் ஒப்படைத்ததில் சங்கர் வீட்டு சாவிக் கொத்தும் இருந்ததனால் வீட்டை திறந்து உள்ளே போனால். மலேசிய க்ளையேண்டிடம் ஒரு 20 நிமிடங்கள் வியாபர பேச்சு நடத்தியதில் நல்ல முடிவில் முடிந்தது. மலேசியா க்ளையேண்ட் "தெரிமா காசே" என்று நன்றியுரைத்து உற்சாகமாக திரும்பினார்.

கௌரி காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததனால் பசி வயிற்றை கிள்ளியது. சமையல் அறையில் ஏதாவது இருக்குமா என்று தேடிச் சென்றாள். பேச்சலர்ஸ் வீடு மட்டும்தான் அலங்கோலமாக இருந்ததே தவிர சமையல் அறை சுத்தமாக இருந்தது. பசங்க வீட்டில் சமைக்கிறதே இல்ல போல என்று எண்ணி ஃப்ரிஜ்ஜை திறந்து ஐஸ் வாட்டர் மட்டுமே குடித்தாள்.

திரும்ப ஹாலுக்கு வந்த போது ஒரு அறையின் கதவு லேசாக திறந்திருந்தது. இது சங்கரோட அறையாக இருக்குமோ என்றெண்ணிக்கொண்டே 'என்னைப் பற்றி ஏதாவது கவிதை எழுதி வைத்திருக்கிறானா என் அருமை காதலன்' என அந்த அறையினுள் நுழைந்தாள்.

துவைக்காத துணிகள், அடுக்கி வைக்கப்படாத புத்தகங்கள், கலந்து கிடக்கும் மெத்தை, ஒரு மூளையில் 1 மாதத்துக்கும் மேலாக துவைக்கப்படாத ஜீன்ஸ் எல்லாம் கிடந்தது. பேச்சுலர் அறை என்றாலே இப்படித்தானோ என்று மேஜை அருகே வந்தாள். மேஜை மேலே ஒரு டைரி. டைரியை எடுத்து முதல் பக்கம் திறந்தாள். கார்த்திக்கின் படத்தை அந்த முதல் பக்கத்தில் பார்த்ததும் இது கார்த்திக்க்கின் அறையோ.. நாம்தான் தப்பா வந்துட்டோம் என்று வெளியாக முற்ப்பட்டாள். கதவருகே வந்ததும், கார்த்திக் ஏற்கனவே அவளிடம் ஒரு விஷயத்தை பற்றி சொன்னது ஞாபகம் வந்தது

@@@@@@@@@@@@
சின்ன ஃப்ளாஷ்பேக்:

கௌரி: கார்த்திக், நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போறே?
கார்த்திக்: கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல
கௌரி: ஏன்? காதல் மேலே வெறுப்பா?
கார்த்திக்: இல்ல. ஒருத்தருக்கு ஒரு தடவைதான் காதல். நான் ஏற்கனவே காதலிச்சிட்டு இருக்கேன்
கௌரி: அட்ரா சக்க.. யாரந்த பொண்ணு?
கார்த்திக்: இது ஒரு தலை காதல். நான் அவ கிட்ட சொல்றதுக்கு முன்னவே செத்து போச்சு. யாரென்று கேட்காதே ப்ளீஸ்..
@@@@@@@@@@@@@@

கார்த்திக் யாரை காதலிக்கிறான் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் திரும்ப அறையினுள் நுழைந்தாள்.

**********************************************************
நான் முடிச்சுட்டேன். அடுத்த ஆப்பு பாசக்கார அண்ணன் கோபிநாத்.
அண்ணா, இந்த மாதம் கோட்டா இன்னும் காலியா இருக்கு. எழுதி ஜமாய்ங்க. ;-)


Monday, January 28, 2008

நூரின், ஷர்லினி, அன்பரசி போன்ற குழந்தைகள் கடத்தலும் வீரத் தமிழ்ப்பெண்ணும்


நூரினின் மரணம். யாரருடைய தவறு? - இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அக்டோபர் 2007-இல் நான் எழுதிய பதிவு.

இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. கடத்தல்காரனை / கொலைகாரனை கண்டுபிடித்தாயிற்று என்று சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனால், இல்லை இல்லை.. இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை! என்றே சொல்லவேண்டிய கட்டாயம் இப்பொழுது!


நூரினின் கேஸையே தீர்க்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு இன்னொரு சவால் விடப்பட்டுள்ளது. ஷர்லினி என்ற 5 வயது குட்டி பாப்பாவும் கடந்த ஜனுவரி ஒன்பதாம் தேதி கடத்தப்பட்டாள். பெட்டாலிங் ஜெயாவில் தன் வீட்டின் அருகாமையிலுள்ள விளையாட்டு மைதானத்தில் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 18 நாட்கள் ஆகின்றது.

காவல்துறை, மீடியாக்கள், மக்கள் என்று நாலாபுறமும் தேடிக்கொண்டேதான் இருக்கின்றனர்.. ஆனால்...... இன்றுவரை கிடைக்கும் ஒரே பதில்: காணவில்லை! மட்டுமே!


இதே மாதிரி ஒரு சம்பவம் தைப்பூசத்துக்கு இரண்டு நாள் முன்பு பாசிர் கூடாங்கிலும் நாட்ந்திருக்கிறது. திருமதி சரஸ்வதி என்பவர் தன் 4 வயது மகள் அன்பரசியை அழைத்துக்கொண்டு அவர் வேலை செய்யும் இடத்துக்கு நடந்து செல்லும்பொழுது, திடீரென பின்புறமாக மோட்டார் சைக்கிளில் கவச தொப்பி அணிந்திருந்த இருவரில் ஒருவன் இவரை உதைத்து இடது காது புறம் குத்தி கீழே தள்ளியிருக்கான்.

இவர் கீழே விழுந்ததும் அவன் அன்பரசியை தூக்கி பின்னால் வந்த நீல நிற பழைய காரின் உள்ளே தள்ளி கதவை மூட முயன்றான். நல்ல வேளையாக திருமதி சரஸ்வதி சீக்கிரமாக சுதாகரித்துக்கொண்டு உடனே எழுந்து ஓடி ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முகத்தில் குத்தி தனது மகளை காரிலிருந்து மீட்டிருக்கிறார். ஆனாலும், மோட்டார் சைக்கிளில் வந்தவன் அவரை தாக்கி அன்பரசியை கடத்த முயன்ற போது அவனை எத்தி, உதைத்து தன் மகளை காரிலிருந்து இழுத்து வெளியே தள்ளியதாகவும் இந்த சம்பவத்தில் தன் மகளுக்கு சில சீராய்ப்பு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது என்றும் சொல்லியிருந்தார்.


"கடத்தல்காரர்களிடமிருந்து எப்படித் தான் என் மகளை காப்பாற்றினேன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் என் உயிரை ஒரு பொருட்டாக நான் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இருந்தது" என்று அவர் பத்திரிக்கைகளிடம் தெரிவித்தார்.

இதைச் சொல்லும்பொழுது, கடந்த பொங்கலன்று நானும் என் சகோதரர்களும் ஒரு சீன ஒட்டுக்கடையில் இரவு உணவு உண்ண சென்றபொழுது பார்த்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. இரவு ஒரு 10-11 மணி இருக்கும். நாங்கள் போனது ரோட்டரத்தில் அமைந்த ஒரு ஒட்டுக்கடை. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென்று அலறும் ஒரு சத்தம். அதையடுத்து ஒரு கார் வேகமாக போவதும் பின்னால் சிலர் ஓடுவதுமாக இருந்தது. என்ன நடக்குதுன்னு போய் பார்த்தால், அங்கே ஒரு 3 வயது குட்டிபெண் கத்தி அழுதுக்கொண்டிந்தாள்.

என்ன நடந்து என்று விசாரிக்கையில் கார் அந்த பெண்ணின் கால் மீது ஏறிவிட்டது என்று சொன்னார்கள். உடனே ஒருவர், "சின்ன பிள்ளையை ஏன் தனியா விட்டீங்க? தூக்கிட்டோ, இல்ல கை பிடித்தோ கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?" என்று கேட்டார். அது நியாயமான கேள்விதான். ஒரு க்ரூப்பா 7-8 பேர் ஒன்னா வந்தாங்க. அதில் ஒருவர் கூடவா கைப்பிடித்து கூட்டிட்டு வர மறந்திருப்பாங்க?

அந்த பெண்னை தூக்கும்போது அவள் பாதம் உள்ள எழும்பு காலில் தொங்கிக்கொண்டு இருந்தது. குண படுத்துவது ரொம்ப கஷ்டம் போல் இருந்தது அவளுடைய நிலை. உடனே மருத்துவமனைக்கு தூக்கிட்டு ஓடுனாங்க. என் கேள்வி: இதை குண படுத்த முடியவில்லையென்றால், இந்த ஒரு சம்பவத்தால் வாழ்க்கை முழுக்க ஊனமாக திரிய வேண்டுமா இந்த பெண் பிள்ளை?

பி.கு: இம்சை அங்கிளின் ஜில்லுனு ஒரு Tag என்ற சீரியஸ் பதிவுக்காக...

Saturday, January 26, 2008

மொக்கை 2008

அடடடடடடடா......

2008 ஆரம்பமே டேக்கோ டேக் ஃபோபியாங்கிற நோய் இங்கே எல்லாருக்கும் பரவிடுச்சாமே? என்னையும் மதிச்சு சிலர் டேக் பண்ணியிருக்கீங்க. ஆனால், இப்போ எனக்கு இருக்கிற ஒரே பிரச்சனை யாரு என்ன டேக்குக்காக என்னை கூப்பிட்டதுன்னு மறந்துபோச்சு.. (பின்னே எப்படி ஞாபகம் இருக்கும்? எப்போதும் தேன்கிண்ணதுலேயே கதின்னு கெடக்கிறன்னு சொல்றீங்களா? ம்ம்.. அதுவும் சரிதான்!). எந்த டேக், யாருன்னு தெரியாமல்தான் இன்று வரை ஒரு டேக்கும் நான் எழுதவில்லை.

இப்போ இதை படிக்கிறவங்க என்ன பண்ணனும்ன்னா என் பெயர் எந்த பதிவுல எந்த டேக் எழுத சொல்லி மாட்டியிருக்கோ, அதெல்லாம் இன்ந்த பதிவின் பின்னூட்டதுல தெரிவிச்சிட்டீங்கன்னா ஒன்னொன்னா போட்டு முடிச்சிடுறேன். டீல் ஓகே?

சரி.. இந்த பதிவு ஒரு டேக் பதிவுதான். பொடியன் @ சஞ்சய் ஒரு நாள் ஈமெயில் பண்ணி உங்களை டேக் பண்ணிட்டேன். மறக்காமல் பதிவு போடுங்கன்னு ஈமெயில் ரிமைண்டரா அனுப்பிட்டே இருந்தார். இப்போ அவரும் மறந்துட்டார் போல.. ஆனால், ரசிகன் என்ன பண்ணார் தெரியுமா? அவரும் அதே டேக் எழுதி என்னையும் மாட்டி விட்டு தினமும் பதிவு எங்கே பதிவு எங்கேன்னு ஒரு unofficial ரிமைண்டராவே மாறிட்டார்.. (ஹீஹீஹீ).

உடனே நான் அவர்கிட்ட கேட்ட கேள்வி: "சார், என்ன டேக்? என்ன எழுதணும்?"

அவரோட பதில்: "மொக்கை மட்டுமே போடணும்"

நீங்களே சொல்லுங்க.. நான் யாரோட பேச்சாவது மீறீயிருக்கேனா? அவர் மொக்கை மட்டுமே போடணும்ன்னு சொன்னதுனால நானும் மொக்கை மட்டுமே போடுறேன். ரசிகன் & சஞ்சய்.. என்னுடைய மொக்கை கீழே:

Saturday, July 07, 2007

182. இதுவும் ஒரு காதல் (இல்லா) கதை

காதல் கதை காதல் இல்லாமல் காமெடியா ஆரம்பமானது பரணியில், ப்ரியமான கதையாக மாறியது ப்ரியாவின் கையில்.. காதல் இருக்கு ஆனா இல்லைன்னு கொடி அருணுக்கு நெருக்கடி கொடுத்தாங்க. அருண் பௌயமா அதை அம்பி கையில கொடுத்ததும், டாப் கியர் போட்டு தூக்கி சைலண்டா என் தலையில இறக்கி வச்சிட்டு ஓடிப் போயிட்டாரு!

இது அம்பி வீசின குண்டு:

சரி! அரை மனசாக தலையசைத்து விட்டு, அப்பா (இந்த தடவை சொதப்பாமல்) காவேரி!னு சவுண்டு விட,
மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும் (ஸ்ஸ்ஸ்ப்பா, இருங்க நான் முதல்ல கொஞ்சம் தண்ணிய குடிச்சுகறேன்) சூர்யா, கார்த்தி இரண்டு இதயங்களும் டமால்னு வெடித்தன.

அட இது என்ன? சந்தியாவின் ஜெராக்ஸ் உருவமாய் இன்னோரு சந்தியா.
இல்லை! இல்லை! அது தான் சந்தியாவா?

கார்த்தியின் கண்கள் சொருகின....

******************************************************************
மு.கு: இது செம்ம காமெடியா இருக்கும்ன்னு நினைக்கிறவங்களுக்கு இங்க ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க அப்படியே கீழே வரைக்கும் ஸ்க்ரோல் பண்ணி பின்னூட்ட பேஜுக்கு போயிடுங்க. இங்க உங்களுக்கு வேலை இல்லவே இல்ல.. இதுல காமெடி இருக்காது.. இது முழுக்க முழுக்க காதல் (இல்லாத) கதை மட்டுமே!


இப்போ கதைக்கு போலாம்:


சூர்யா மெல்ல நிமிர்ந்து பார்த்தான். கண்ணை கசக்கி கசக்கி பார்த்தான்; பாக்கெட்ல இருந்த கண்ணாடியை போட்டு பார்த்தான்; சைட்ல பார்த்தான்; நேரா பார்த்தான்..

எப்படி பார்த்தாலும் இவ சந்தியா மாதிரியே இருக்காளே?
இவ.. இவ.. சந்தியா.. சந்தியாதான்.. கண்ஃபார்ம்!!!! சந்தியாவேதான்!!!

டமால்...

கார்த்திக்கின் இதயம் அப்பளமாய் நொருங்கியது.

மனதில் வடியும் கண்ணீர் ரத்தத்தில் கலக்கும் சோகத்தை தனக்குள் அடக்கிக்கொண்டான்.

"எங்க குடும்பத்துக்கு ஏத்த மருமகளா இருக்கா. சூர்யா, உனக்கு புடிச்சிருக்கா?"

கார்த்திக்கின் அம்மா சந்தோசத்துடன் சூர்யாவிடம் கேள்வி கேட்டுட்டு ஒரு முறுக்கை உடைச்சு அவங்க வாயில போட்டாங்க. ஆனால்..

ஆனால்.. சூர்யாவின் கண்களோ கலங்கியிருந்தன..

"கல்யாணத்துக்கு பிறகு பொண்ணு கண் கலங்க கூடாதுன்னு மாப்பிள்ளை இப்பவே கண் கலங்க ஆரம்பிச்சிட்டார்ப்பா" என்று சொல்லிக் கொண்டே சந்தியாவின் அப்பா தன் கையை மெதுவா கேசரியில் வைக்க, அடுப்பறையிலிருந்து அவர் மனைவி புரிக்கட்டையை தூக்க, தனக்கு கொடுத்து வச்சது அந்த நெய் மட்டும்தான்னு நக்கி பெரு மூச்சு விட்டார்.

சூர்யா எழுந்து நின்றான்.

"சார்.. நான் கொஞ்சம் பேசணும்."

"ஆமா ஆமா.. கல்யாணத்துக்கு பிறகு பேச முடியாம அடங்கிதானே இருப்ப. எல்லாத்தையும் இப்பவே பேசு" என்று சூர்யாவின் சித்தப்பா (கார்த்திக்கின் அப்பா) நக்கலடிக்க..

"சித்தப்பா.. ப்ளீஸ்.. என்னை கொஞ்சம் பேச விடுங்க"

"சார், இங்க பாருங்க. அஞ்சு ஆறு வருசத்துக்கு முன்ன வரைக்கும் எல்லாத்தையும் மனசுல வச்சி அடக்கிட்டுதான் இருந்தேன். இப்போ நான் ரொம்ப ஓபன் டைப். எதுவா இருந்தாலும் உடனே சொல்லி உடைச்சுடுவேன். என்க்கு புடிச்சிருக்கு..."

"டேய், புடிச்சிருக்குன்னு சொல்றதுக்குதான் இவ்வளோ நேரம் டயலோக் பேசின? இதுனால நான் ரெண்டு பக்கோடா மிஸ் பண்ணிட்டேன்"ன்னு சொலிக்கிட்டே பக்கோடாவை வாயில போட்டார் கார்த்திக்கின் அப்பா.

"சித்தப்பா ப்ளீஸ்... சார், எனக்கு புடிச்சிருக்கு.. ப்ரியாவை புடிச்சிருக்கு!"

"அடேய் சூர்யா.. பொண்ணு பேரு சந்தியாடா!"

"இல்லம்மா.. நான் புடிச்சிருக்குன்னு சொன்னது பொண்ணு தோழியா இதோ நிக்குறாளே!! ப்ரியா!! இவளைத்தான்!!!"

சொல்லிக்கொண்டே கூர்மையான பார்வையுடன் தன் விரலால் ப்ரியாவை நோக்கினான்..

கண்ணும் கண்ணும் நோக்கியா..
சந்தியாவின் கையில் இருந்த காப்பியா..
கீழே விழுந்தது பார்த்தியா??
நீ பார்த்தியா....

சந்தியாவின் கையில் இருந்த தாம்பளத்தட்டு கீழே விழ, கார்த்திக்கின் அப்பா தொண்டையில பக்கோடா மாட்டிக்க, ப்ரியா பேயறைந்ததுபோல் நின்னாள்.

சந்தியாவின் அப்பாவின் வாயில் இதுவரை மூனு ஈ புகுந்தாகிவிட்டது! அந்த அளவுக்கு ஷாக்ல இருந்தார்.

கார்த்திக் மனதில் ஒரு டன் அளவுக்கு சந்தோசமா இருந்தாலும், சந்தியா வருத்தப்படுறாளேன்னு ஒரு டின் அளவுக்கு கவலைப்பட்டான்..

"டேய் சூர்யா! என்னடா ஆச்சு உனக்கு?? ஏண்டா??"ன்னு அவனை குலுக்கினான்.

"கார்த்தி.. என்னை விடு! இன்னைக்கு நான் சொல்லலைன்னா எப்போதும் என் காதலை சொல்ல முடியாது! சார், அமேரிக்க மாப்பிளைன்னா பன்னு திங்கிறதுக்கு மட்டும்தான் லாயக்குன்னு சொல்ற அளவுக்கு "விஞ்ஞானம்" வளர்ந்திருக்கு! இதெல்லாம் ஒத்த ராத்திரியில அழிக்க முடியாத ஒன்னுன்னாலும், நானே ஃபர்ஸ்ட்டா இருந்து இதை நடத்தி வைக்கிறேன். சந்தியாவை எனக்கு புடிக்கலை.. நான் காதலித்தவள், காதலிக்கிறவள், காதலிப்பவள் ப்ரியா ப்ரியா ப்ரியா மட்டுமே! "

ப்ரியா, சந்தியாவின் அக்கா.. ஒரே வருடம்தான் மூத்தவள். ஆனால், சந்தியாவை விட டோட்டல் ஆப்போஸிட்டான கேரக்டர். அதிகமா பேச மாட்டாள். தான் உண்டு தன் வேலைகள் இல்லைன்னு சொல்ற அளவுக்கு முன்கூட்டியே செய்து முடித்துவிடுவாள் அவள் வேலைகளை. அவள் என்ன நினைக்கிறான்னு அவள் பெற்றோர்களால் கூட யூகிக்க முடியாத இவள் ஒரு புதிர் (ரடான் டிவிக்கு அனுப்பிடலாமா?)! கொஞ்ச நாளாகவே பேசுற அந்த ஒரு சில வார்த்தைகளும் கட். அமேரிக்க மாப்பிள்ளை சூர்யாவை ப்ரியாவுக்கு மணம் முடிக்கத்தான் வீட்டில் பார்த்தார்கள். ப்ரியாதான் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று போர் கொடி (நான் ஒன்னும் தப்பா சொல்லல கொடி) தூக்கியதால், அந்த பன்னு துன்ற பையனை சந்தியாவுக்கு தெரியாமலேயே அவசர அவசரமாக நிச்சயம் பண்ண வேண்டிய நிர்ப்பந்தம்.

(வண்டி கொஞ்ச நேரம் இந்த ஸ்ட்டாப்புல நிக்கும்.. தம் அடிக்கிறவங்க, பாத்ரூம் போறவங்க, டீ காப்பி குடிக்கிறவங்க எல்லாரும் சீக்கிரமா போயிட்டு வந்துடுங்கப்பா...)

(எல்லாரும் வந்தாச்சா? சரி.. ஸ்டார்ட் எஞ்சின்...)

"ஏண்டி ப்ரியா! என்னை எதுக்கு நீ ஏமாத்தின? கல்யாணம் ஆச்சுன்னு எதுக்கு என் கிட்ட பொய் சொன்னே? உன்னை நான் பார்க்கணும்ன்னா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டுதான் உன் முன்னாடி வந்து நிக்கணும்ன்னு எதுக்கு கண்டிஷன் போட்டே? சொல்லு! சொல்லு!"

"சூர்யா! ப்ளீஸ்! நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது!"

"அதான் ஏன்னு கேட்கறேன்! ஏன்???"

"முடியாதுன்னு சொன்னா புரிஞ்சிக்கோ!"

"இல்ல.. நான் மண்டு! எனக்கு புரியல! நீயே சொல்லு!"

"....."

"சொல்லு... நீ இன்னைக்கு பதில் சொல்லாம நான் உன்னை விட மாட்டேன்!"

"அப்பா அம்மா, என்னை மன்னிச்சிடுங்க.. நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்."

"என்ன ப்ரியா? என்ன தப்பு? என்ன நடந்துச்சு?" சந்தியா பதற்றத்துடன் கேட்க..

"நான்.. நான்.. ஏற்கனவே வேறொரு மதத்துக்கு மாறிட்டேன்..."

"ப்ரீய்ய்ய்யாஆஆஆ....." (இது அவங்க அப்பாவோட சவுண்டு...)

******************************************************************
அம்பிண்ணே கதை எழுதிட்டு எனக்கொரு நோட்டிஸும் தராம ஓடிப்போயிட்டதால, நாந்தான் தாக்கப்பட்டிருக்கேன்னு எனக்கு தெரியாமல் போயிட்டது.. அதனால், 2-3 நாள்ல அடுத்த தொடரை போடனும்ங்கிற ரூல்ஸ் நான் மீறிட்டேன்.. இதுக்கு பில்லு பரணி ஏதாவது பனிஷ்த்மண்ட் தர்றதா இருந்தா, அம்பிக்கு பாஸ் பண்ணிடுங்க.. ஹீஹீ..

என் தலையில இருந்த சுமையை இறக்கி வைக்கிற நேரம் வந்தாச்சு.. ஹாஹாஹா.. ஹோஹோஹோ!! இப்போ இந்த கதையை முழுக்க முழுக்க காமெடியா கொண்டு போறதுக்கு ஒருத்தர் இருக்கார்.. அவருதான் ஒரு கையில காப்பியும் இன்னொரு கையில வ்ரிஸ்ட் வாட்சுமா ப்ளாக் உலகத்தை வலம் வந்து 13 அடிப்பவர்:

எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும் என்று அழைக்கப்படுபவர்:

பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
(ச்சும்மா.. ஒரு எக்கோ!) :-P

Saturday, June 23, 2007

181. ஆத்தா நான் பாஸாயிட்டேன்!

நானும் எட்டு போட்டுட்டேன். பாஸாயிடுவேனா? லைசன்ஸ் கிடைக்குமா? ஆத்தா! நான் பாஸாயிட்டேன்னு வயல் வரப்புல ஓடலாமான்னு நீங்கதான் பார்த்து சொல்லணும்ங்க..

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

காயத்ரிக்கா, நீங்க கொடுத்த வீட்டுப்பாடத்தை எவ்வளவு அழகா செஞ்சு முடிச்சிருக்கேன் பாருங்க. :-)

--------------------------------------------------------------------------------------------விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------
8 போட நான் கூப்பிடும் 8 பேர்:

1- குட்டி பிசாசு

2- சூடான் புலி

3- விவாசாயி இளா

4- இலவச கொத்தனார்

5- கப்பி பய

6- குசும்புக்கார குசும்பன்

7- சிறில் அலெக்ஸ்

8- என்னையே 8 போட வச்ச காயத்ரி

பி.கு: இதுல ஒன்னு கவனிச்சீங்கன்னா, இந்த 8 பேரும் ஏற்கனவே 8ன்னு பதிவு போட்டுட்டாங்க.. ஆனால், யாரும் சரியா 8 போடலை. அதனால பாடத்தை திரும்ப செய்யுங்கன்னு சொல்ல வேண்டியதா போச்சு. :-P

Saturday, May 05, 2007

177. அழகே அழகல்லோ.. என் நண்பர்கள் அழகே அழகல்லோ..

கண்ணுக்கு மை அழகு..
கவிதைக்கு பொய் அழகு..
கண்ணத்தில் குழி அழகு..
கார் கூந்தல் பெண் அழகு..

ம்ம்.. நானும் அழகு பதிவைத்தான் எழுத போகிறேன் என்று தெரிந்திருக்கும் உங்களுக்கு! கிடேசன் பார்க்கிலிருந்து கோபி நீங்க எழுதியே ஆகணும்ன்னு வற்ப்புறுத்தினார். ஆன் ஆர்பரில் இருந்து சி.வி.ஆர் உங்கள் பெயரையும் விளையாட்டில் சேர்த்துக்கவா என்று அனுமதி கேட்டார். Dr.டிடியின் பக்கத்து ஆத்து அம்பி அவர்கள் நீ எழுதுற... மறுபேச்சு அதுக்கு இல்லைன்னு சொல்லிட்டு கிளம்பிட்ட்டார்.

நான் இப்போது எழுதும்போது அனேகமா எல்லாரும் ஆடியே முடிச்சிருப்பீங்க. நான் சொல்ல வந்த குறும்பு, குழந்தை, தமிழ், தனிமை, நட்புன்னு ஒன்னு விடாமல் எல்லாருமே சொல்லிட்டீங்க. எனக்கும் இந்த ஆறு மட்டும்தான் அழகு என்று சொல்வதில் உடன் பாடு இல்லைங்க. அதனால், அந்த ஆறில் ஒன்னே ஒன்னு பற்றியதை மட்டும் எழுதலாம்ன்னு நினைக்கிறேன்.

எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வருவதே நட்பு. அந்த நட்பில் இந்த குறுகிய காலத்தில் எனக்கு கிடைத்த நட்பு வட்டாரங்களில் சிலரின் நான் ரசிக்கும் சில அழகுகள்:


கார்த்தியின் கிராமத்தின் ஏக்கம் அழகு..
கடல் கணேசனின் கடல் பயணம் அழகு..
சி.வி.ஆரின் சிந்தனைகள் அழகு..

ஜியின் நையாண்டிகள் அழகு..
அம்பியின் காமெடி சென்ஸ் அழகு..
அருணின் நக்கல் அழகு..

ஜி3யின் G3 (சுடுவது) அழகு..
ஸ்யாமின் தீர்ப்புகள் அழகு..
சந்தோஷின் விமர்சன ரசனை அழகு..

ராமின் குழந்தைத்தனம் அழகு..
புலியின் உதவி மனப்பான்மை அழகு..
அபி அப்பாவின் அபி பாப்பா அழகு..

தேவின் கதைகள் அழகு..
இம்சை அரசியின் எழுத்துத்திறன் அழகு..
கண்மணியின் டைமிங் காமெடி அழகு..

கோபியின் கிடேசன் பார்க் அழகு..
வெட்டியின் தெலுங்கு ரசணை அழகு..
இளாவின் விவசாய கலை அழகு..

துர்காவின் குறும்புகள் அழகு..
பொற்கொடியின் சமையல் டெஸ்டிங் அழகு..
ரம்யாவின் அன்பு அழகு..

பரணியின் பில்லு கட்டும் கடமை அழகு..
தம்பியின் கும்மியடிக்கும் திறன் அழகு..
ப்ரியாவின் கதை சொல்லும் திறன் அழகு..

டிடியின் காதல் திருமணம் அழகு..
கோப்ஸின் வணக்கங்கள் அழகு..

இன்னும் நிறைய பேரின் அழகை இங்கே மறக்க காரணமான
என் ஞாபக மறதியும் அழகு. :-D (ராம், நீங்க சொல்றதுக்குள்ள நானே சொல்லிட்டேன்..:-P)

இங்கே பல பேரோட பெயர்கள் விட்டு போயிருக்கு.. அதற்க்காக நோ ஃபீலிங்ஸ் ப்லீஸ்.. :-D (அதுவும் ஒரு அழகுன்னு சொல்லி சமாளிச்சுக்கிறேன்.. )

சரி.. அப்படியே முடிச்சிட்டா நல்லா இருக்காது.. அதனால இன்னும் ரெண்டு போனஸ் அழகை இங்கே சேர்த்துக்கிறேனுங்கோ..

1- எப்பவும் போல நம்ம ப்ரின்ஸ்தானுங்கோ.. பாருங்கோ!!!



2- என்னைக் கவர்ந்த ஒரு குரல்.. எல்லா நேரமும் என்னுடன் துணையாய் இருக்கும் ஒரு குரல்.. எந்த ஒரு மூட்டிலும் எனக்கே எனக்காய் ஆதரவாக ஒரு குரல்.. அது என் சுஜாதாவின் குரல்தானுங்கோ.. அந்த அழகிய குரல் இப்போதும் என் காதில் ரீங்காரம்மிட்டுக்கொண்டிருக்கிறது..

இவ்வளவு லேட்டா பதிவை போட்டு டேக் பண்ண ஆள் தேடுவது கொடுமையிலும் கொடுமைங்க.. என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!
அதனால இந்த போஸ்ட்டை படிக்கும் பதினெட்டு பட்டி மக்களுக்கும் என்ன சொல்ல வர்றேன்னா, யார் இன்னும் அழகு போஸ்ட் எழுதலையோ.. எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க.. நானே உங்களை டேக் பண்ணிடுறேன்..

டாட்டா...

Sunday, March 25, 2007

173. என் ஞாபக சக்தியை டெஸ்ட் பண்றாங்கப்பா

எல்லாரும் கோழியா மாறுங்கய்யான்னு அபி அப்பா அழைக்கிறார் அழைக்கிறார் அழைக்கிறார்..

நம்மோட மூக்கை தீட்டி யோசிக்க சொல்றார். (எல்லாரும் மூளையைதானே தீட்டுவாங்க???)

அவர் ஒரு சவால் விடுறார். என்னனு?

"நாம படிச்ச பள்ளி, செக்ஷன், வாத்தியார் பெயர்.. எதெல்லாம் கரெக்ட்டா சொல்லனுமாம்"

நல்லா கேக்குறாய்ய்ங்க பாருய்யா டீடேய்ல்லு....

கரெக்ட்டா எழுதினா பரிசு எதுனாச்சும் தருவீங்களா அபி அப்பா?

நோட் மை பாய்ண்ட்டு:

LKG
4 வயது - "5 வயது க்லாஸ்" - டீச்சரோட கையெழுத்து அழகா முட்டை - முட்டையா இருக்கும் - தடிகா பேரு ஞாபகமில்லை
5 வயது - "6 வயது க்லாஸ்" - அதே டீச்சர் - "
6 வயது - "6 வயது க்லாஸ்" - அட, அதே டீச்சர்தாம்ப்பா - "

ஆரம்ப கல்வி
வகுப்பு 1 - Biru (நீலம்) - டீச்சர் குண்டா இருப்பாங்க. க்லாஸ்ல பென்சில், பேனா எல்லாம் விற்ப்பாங்க. ரொம்ப நல்ல டீச்சர். நாங்கெல்லாம் அவங்களை அம்மான்னுதான் கூப்பிடுவோம். - காராக் ஆரம்ப தமிழ்பள்ளி
வகுப்பு 2 - செண்பகம் (Cempaka) - டீச்சர் பெரிய கண்ணாடி ஒன்னு போட்டிருப்பாங்க.அதுக்கு மேலே உன்னும் ஞாபகம் இல்லை - பத்துமலை ஆரம்ப தமிழ்ப்பள்ளி
வகுப்பு 3 - செண்பகம் (Cempaka) - இவங்களை சுத்தமா ஞாபகம் இல்லை. எங்க பக்கத்து க்லாஸ் டீச்சர் பேரு ஞாபகம் இருக்கு. பேரு தெய்வானை டீச்சர் - "
வகுப்பு 4 - செண்பகம் (Cempaka) - இவங்க பேரு ஏதோ சாமி பேரு. என்னனு மறந்துபோச்சு. இவங்க அந்த வருஷம்தான் திருமணம் செய்தாங்க. அந்த வருட இறுதியில் பள்ளி மாற்றலாகி போயிட்டாங்க - "
வகுப்பு 5 - செண்பகம் (Cempaka) - இவங்க பேரும் நான்காம் வகுப்பு டீச்சர் பேரும் ஒன்னுதான். மேலே உள்ளதே ஞாபகம் இல்லை. இது மட்டும் எப்படி தெரியும்? நல்லா கேக்குறீங்கய்யா!!! - "
வகுப்பு 6 - ரோஜா (Ros) - இவங்க பெயர் கலாவதி டீச்சர். ரொம்ப கோபம் வரும் இவங்களுக்கு. - "

(ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே!!!)

இடைநிலைக் கல்வி
படிவம் 1 - கெம்பாஸ் (Kempas) - இவங்க பேரு ஃபாட்ஜிலின் (Fadzlin) டீச்சர். இவங்க பேரு மறக்காதுப்பா. ஏன்னா இவங்க என் பின் வீட்டுலத்தான் குடியிருக்காங்க.. ஹீஹீ.. - செலாயாங் பாரு 2 இடைநிலைப் பள்ளி
படிவம் 2 - ஜாத்தி (Jati) - இவங்க ஒரு அறிவியல் டீச்சர். அவங்க மகனும் என் க்லாஸ்மேட்தான். எனக்கு பிடிக்காத பாடத்தை சொல்லிக் கொடுத்தனாலே அவங்க பேரும் ஞாபகம் இல்லை. - டாருல் ஏசான் இடைநிலைப் பள்ளி
படிவம் 3 - ஜாத்தி (jati) - இவங்க பேரு சுஸ்லினா (Suzlina) டீச்சர். Oxford Universityலே படிச்சிட்டு வந்து எங்களை இங்கிலீஸ்ல பேச சொல்லி உயிரை வாங்கிட்டாங்க.. ஹ்ம்ம்.. - "
படிவம் 4 - அறிவியல் 1 (Science 1) - இந்த வருடத்துல நிறைய டீச்சருங்க வந்தாங்க.. எல்லாரையும் ஓட ஓட விரட்டிடோம்ல.. ;-) - "
படிவம் 5 - அறிவியல் 1 (Science 1) - இவங்க ஒரு மலாய் டீச்சர். சின்னதா இருப்பாங்க. அந்த வருடம் அவங்க pregnant. (அப்போதும் க்லாஸ்ல நாங்க அராஜகம் பண்ணூவோம்ல.. ) எங்க ரிசால்ட் வந்த ஒரு வாரத்துக்கு முன்தான் அவங்களுக்கு குழந்தை பிறந்தது. - "

அப்புறம் எப்படியோ எனக்கு univeristyலே ஒரு சீட்டு கொடுத்துட்டாங்க. நாமளும் அப்படியே இங்கே வந்து செட்டல் ஆயாச்சு! :-P

இந்த கேள்வி ரொம்ப நல்லாவே இருக்கு அபி அப்பா. இதுவே Tag பண்ணலாமா? வியர்ட் கேம் முடிஞ்சாச்சு! புதுசா இது ஸ்டார்ட் பண்ணிடுவோமா?

நான் Tag பன்ற அந்த அஞ்சு பேரு:
1- போன தடவை மிஸ் ஆகி போன கார்த்திக்
2- காதலை ஆராய்ச்சி செய்யும் CVR
3- சின்ன பையன் ராம்
4- புது மாப்பிள்ளை அம்பி
5- முதல்வர் @ நாட்டாமை ஷாம்

Thursday, March 15, 2007

169. போர் கொடி தூக்கிட்டாங்கய்யா!!!!

சுத்தி வளைக்காமல் நான் நேரா மேட்டருக்கே வந்துடுறேன் மக்கா!! தல எப்போ சுகாதார துறை அமைச்சர் பதவியை பொற்கொடிக்கு வழங்கினாரோ, அப்பவே நானும் ஒரு மனு போட்டாச்சு! வந்து என் கீ போர்ட்டை கொஞ்சம் சுத்தம் செஞ்சுட்டு போங்கக்கான்னு...


ஆனால், இவங்களுக்கு என் மேலே என்ன கடுப்போ தெரியலை! போர் கொடியை தூக்கிட்டு நிக்குறாங்க..


நான் பச்சை கொடியை தூக்கினா, இவங்க ஸ்ட்ரைக்கிங் பச்சையை தூக்கிட்டு நிக்குறாங்க..
சிவப்பை தூக்கினா, ஸ்ட்ரைக்கிங் சிவப்பை தூக்கிட்டு லுக்கு விடுறாங்க..
காய்ச்சலப்போ வீட்டுல இருக்கும்போது பாக்யராஜ், டி. ஆர் படங்கள் ரொம்ப பார்த்திருப்பாங்க போல..
(எப்படித்தான் அந்த கலர கையில தூக்கிட்டு நிக்குறாரோ! இங்க மலேசியாவிலிருந்து பார்க்கும்போதே எனக்கு கண்ணெல்லாம் கூசுது. உங்களுக்கு கூசலையா?)


சரி மேட்டருக்கு வரேன் மேட்டருக்கு வரேன்னு சொல்லிக்கிட்டே என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் பாருங்க.. இவங்க கோபத்தை தணிக்கனும்ன்னா ஒரு தேக் எழுதணும்ன்னு வீட்டுப்பாடம் வேற கொடுத்துறுக்காங்க..


தலைப்பு: என்னைப் பற்றி 5 வியர்ட்டான விஷயங்கள்
(யாருடா இப்படிப்பட்ட தலைப்புகளையெல்லாம் கொண்டு வர்றது?)


முதல்ல ஒரு வெள்ளை கொடி காட்டிடுறேன்:


இப்போ தேக்:

1. ஞாபக மறதி
இது எனக்கு பலமா பலவீனமான்னு தெரியலை. சின்ன வயசுல ஓரளவுக்குதான் இந்த வியாதி இருந்தது. என் அப்பா, பாப்பா (நாந்தானுங்கோ!) பெரிய படிப்பெல்லாம் படிச்சு டாக்டரா, கலேக்டரா, தொழிலதிபரா, வக்கிலா (4 இன் 1) ஆகனும்ன்னு ஆசைப்பட்டு மேமோரி ப்லஸ் (Memori Plus) வாங்கி கொடுத்தார்.. மூனு நாலு போட்டல்களை காலி பண்ணிட்டேன். அப்பா வந்து கேட்டார்.

அப்பா: இப்போ படிக்கிறது எல்லாம் ஒன்னும் மறக்கலையே?
நான்: படிப்பா? நான் படிக்கிறேனா?

அம்மா இதை பார்த்துட்டு, எனக்கு மூலிகை மருத்துவம்தான் சரி வரும்ன்னு சொல்லி வீட்டுல வல்லாறை செடியை வளர்த்து, ஒரு நாளைக்கு மூனு வேளையும்:

தண்ணீருக்கு பதிலா - வல்லாறை ஜூஸ்
சமையலில் கருவேப்பிலைக்கு பதிலா - வல்லாறை கீரை
சாக்லேட் மிட்டாய் சாப்பிடனும்னா கூட அதில் வல்லாறையையும் சேர்த்து வச்சு கொடுத்தார்..

ஏன்னா, இந்த பாப்பா(!) பெருசா ஆனதும் டீச்சரா, விஞ்ஞானியா, கணித மேதையா, பெரிய கம்பெனியில மேனேஜரா வரனும்ன்னு இவங்களுக்கு ஆசை.. ஒரு மூனு மாசத்துக்கு வல்லாறையை சாப்பிட்ட பிறகு, என் அம்மா டெஸ்ட் வச்சாங்க..

அம்மா: இன்னைக்கு ஸ்கூல்ல நீ என்ன படிச்ச?
நான்: நான் என்ன படிச்சன்னு கேட்குறதுக்கு நீங்க யாரு?

அவ்வளவுதான்! அம்மாவும் அப்பாவும் தலையில் துண்டு போட்டுட்டு போயிட்டாங்க.

(கடைசியில் அவங்க ஆசைப்பட்ட எதுவும் நான் ஆகாமல், இஞ்சினியரிங் படிச்சு முடிக்க போறேன்.)

அதுக்கப்புறம்தான் தெரியுதே, என் ஞாபக சக்தி எப்படி வேலை செய்யுதுன்னு! யாரிடமாவது ஏதாவது முக்கியமா பேசிக்கிட்டே இருப்பேன். சில நிமிடங்களில் யாரிடமோ ஏதோ பேசினோம் என்று தெரியும். ஆனால், யார், என்ன மேட்டர்ன்னு சுத்தமா ஞாபகமே வராது!

போன்ல, கணிணில ரிமைண்டர் வச்சிருப்பேன். ஆனால், பல சமயங்களில் ரிமைண்டர் ஒன்னு இருக்குன்னே மறந்துடுவேன். இதை பத்தி சொல்லனும்ன்னா ஒரு பெரிய பதிவே போடலாம்ங்க.. அதை பிறகு பார்ப்போம். இப்போ Next போலாம் வாங்க..

2. கோபம்
அப்பன் எட்டடி பாய்ஞா பிள்ளை பதினாரடி பாயும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.. சின்ன வயசிலிருந்தே என் அப்பாவின் கோபங்களை கண்டு (அடியும் வாங்கி!) வளர்ந்ததால், அப்பாவின் கோபத்துக்கு நானும் சளைத்தவள் இல்லை என்று ஆகிவிட்டது. எனக்கும் சரமாறியா கோபம் வரும்.. ஆனால், நான் அதை முடிந்த வரை அடக்கிக்கொள்வேன். நானே எனக்கு கேட்டுக் கொள்வேன் "எதற்கு கோபம்? இதனால் பிரச்சனைகள்தான் கூடுமே தவிர, ஏதும் குறைய போவதில்லை!"

என்னுடைய பல நண்பர்களிடம் எனக்கு கோபம் வரும்ன்னு நீங்க போய் சொன்னா, அவங்க நம்பவே மாட்டாங்க. (நிஜமா!!)

ஆனாலும் சில சமயங்களில் என்னால் என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்போது எரிமலை வெடித்துவிடும்! அது ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே (சில நிமிடங்கள் or சில மணி நேரம்)..

என்னுடைய கேரக்டர் நம்பர் 1 (ஞாபக மறதி) என்னை முழுவதுமாய் ஆட்கொண்டதால் கோபத்தையும் கோபப்பட காரணமான அந்த காரணங்களையும் மறந்துவிடுவேன். (இதனால், ஞாபக மறதி இருப்பது பலமே!!)

இதுனால் நான் என்ன சொல்ல வர்றேன் என்றால், நான் கோபம் கொண்டாலும், சீக்கிரமே தனிந்துவிடுவேன், இதை மனதில் வைத்து பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாம். நன்றி.. ;-)

3. இயந்திர வாழ்க்கை
வாழ்க்கையில் நான் கால அட்டவணை போட்டு அதன் படி நடக்கிறேன் என்று நினைக்கிறீங்களா? அதுதான் கிடையாது!

நான் சொல்லும் இயந்திர வாழ்க்கை: இயந்திரங்களை நம்பி வாழும் வாழ்க்கை.

இப்போழுது நான் உபயோகிக்கும் 5 இயந்திரங்கள்:
1- பர்சனல் கம்பியூட்டர் (Personal Computer)
2- லாப்டாப் (Laptop)
3- நோகியா 6680 (Nokia 6680)
4- ஆக்ஸியா ஏ108 பி.டி.ஏ போன் (AXIA A108 PDA Phone)
5- கைக்கடிகாரம்

இதில் முக்கியமாய், எப்போதுமே கணிணி என் கூடவே இருக்கவேண்டும். குளிக்கும் நேரமும், க்லாஸ் போகும் நேரமும் தவிர்த்து மற்ற எல்லா நேரமும் நான் இருப்பது - என் கணிணியின் முன்தான். அப்படியொரு பைத்தியம் எனக்கு. வேலை, ப்ராஜக்ட், அசைக்ன்மேண்ட், பாடம், படம், மியூசிக், விளையாட்டுன்னு சொல்லிட்டே போலாம். எல்லாமே இந்த கணிணியில்தான். இதோ! இந்த போஸ்ட் நான் எழுதுவதும் இதே கணிணியில்தான்.

என்னை தேட வேண்டும் என நினைப்பவர்கள் எத்தனை மணியாக இருந்தாலும், நேராய் என் ரூமுக்கு வந்துவிடுவார்கள். ஏனென்றால், இங்கேதானே என் கணிணி இருக்கு!!!!

நண்பர்கள் சொல்லுவாங்க: "நீ இந்த கம்பியூட்டர் கட்டிட்டே அழு"ன்னு.. அதுக்கு நன் சொல்வேன்: "நான் ஏன் அழனும்? கம்பியூட்டர் கட்டிக்கிட்டா நான் சந்தோஷமாய்தானே இருப்பேன்.. இப்போ இருப்பது போல!" ;-)
(Actually இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு! நான்தான் மறதியாச்சே!!! கணிணியின் முன் உட்கார்ந்திருந்தால் எது எது எப்போது செய்ய வேண்டும் என ரிமைண்டர் கொடுத்து எனக்கு நினைவூட்டிக்கிட்டே இருக்கும். மற்றவர்கள் டைம் பிரகாரம் நம் முன் வந்து மியூசிக்குடன் நாம் என்ன செய்ய வேண்டும் என சொல்வார்களா?)

[யப்பா!!! என்ன மூளை!!! உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது, .::மை ஃபிரண்ட்::.!!!!] ;-)

4. செய்வதை திருந்தச் செய்தல்
எனக்கு ஒரு பழக்கம் இருக்குங்க.. எதையும் நினைச்சதும் செய்ய மாட்டேன். அப்படி செய்ய ஆரம்பித்தால், என்னால் முடிந்த "The best from me"யைதான் தருவேன். என்னை விட எத்தனையோ பேர் நன்றாக செய்பவர்கள் இருந்தாலும், என்னை தேடி வந்துவிட்டார்களே! அவர்களை வருத்தப் பட வைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக என்னால் முடிந்த வரை செய்துக் கொடுப்பேன். அது வேலை ஆகட்டும், உதவியாகட்டும், பாடமாகட்டும்.. அதுபோலத்தான், இந்த ப்ளாக்கும். ;-)

அதற்காக, எனக்கு தெரியாமல் புரியாமல் இருக்கும் விஷயங்களை கேட்டு படித்து முயற்சிப்பேன். என் எழுத்துக்களில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்குன்னு உங்களில் சிலர் சொல்லியிருக்கீங்க. அதுக்கு காரணம் நீங்கதான்! உங்கள்ல எத்தனை பேரை நான் தொல்லை பண்ணியிருக்கிறேன்னு எனக்குதான் தெரியும். எனக்கு தெரியாத வார்த்தைகளை சொல்லி தர கேட்டிருக்கிறேன். சில நண்பர்கள் ஒரு படி மேலே போய் என் எழுத்துக்களில் உள்ள பிழைகளை சுட்டி காட்டி எனக்கு உதவியிருக்கிறீர்கள். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு நீங்கதான் காரணம்! நன்றி..

5. நான்காவது படிக்கும்போதே என் ஐந்தாவது குணம் தெரிஞ்சிருக்குமே? (நன்றி மறக்காதவள் நான்)
யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்க! வலது கை செய்யும் தானங்களையும் உதவிகளையும் இடது கைகூட அறியக்கூடாது. செய்த உதவியை அப்போதே மறந்துவிட வேண்டும். பிறர் நமக்கு செய்த உதவியை என்றென்றும் மறக்க கூடாதுன்னு!

அதனாலே நான் வெகு சுலபமாய் மற்றவர்களிடம் உதவி கேட்க மாட்டேன். அப்படி எனக்கு மிகவும் தேவைப்பட்டாலோ, (ஒரு சில நல்லவங்க) நாம் உதவி கேட்காமலேயே வந்து உதவி செய்யுறவங்களை நான் எப்போதும் மறக்க மாட்ட்டேன். (என் ஞாபக மறதி இந்த விஷயத்தில் ஒன்னும் செய்ய இயலாது என்று நினைக்கிறேன்.)

நான் நாலாவது படிக்கும்போது பஸ் ஏறிதான் வீட்டுக்கு வருவேன். அப்போ நான் ஒல்லி குச்சியாய், சின்னதாய் இருந்தேன். தோளில் புத்தகப்பை மூட்டையை சுமந்துக்கொண்டு கூட்டமாய் இருந்த பஸ்ஸில் ஏறினேன். பஸ் ஒவ்வொரு இடத்தில் ப்ரேக் போடும் போதும், நானும் முன்னாடி போய் விழுந்து எழுந்திருச்சி வந்தேன். அப்போது ஒரு அக்கா (24-25 வயசு இருக்கும்) எழுந்திருச்சி என்னை உட்கார சொல்லி இடம் கொடுத்தாங்க. போன வருடம் (ஒரு பத்து வருடத்துக்கு மேல ஆயிடுச்சு) நான் வேலை முடிந்து வரும்போது Putra LRT-யில் ஏறி வந்தேன். இடுப்பில் ஒரு கைக்குழந்தையையும், கையில் ஒரு 3 வயது குழந்தையையும் பிடித்துக்கொண்டு நிக்க முடியாமல் நின்றக்கொண்டிருந்தார். பத்து வருடத்துக்கு முன்பு இருந்ததுக்கும் இப்போதுக்கும் அதிக மாற்றம் இல்லை அவரிடம். ஆதலால் என்னால் சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது. நானும் அங்கே நின்னுக்கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்தால், நான் எழுந்து அவருக்கு என் இடம் கொடுத்திருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டேன். அதனால், என்னால் முடிந்த அளவு அவருடைய மூனு வயது மகளை (என்னைபோல் ஒவ்வொரு முறையும் பிரேக் போடும்போது முன்னே விழுந்து எழுந்திருச்சி வந்தாள்) பிடித்துக்கொண்டேன். என்னால், அதை தவிர்த்து வேறெதுவும் உதவ முடியவில்லை. அவரை திரும்பவும் பார்ப்பேன், உதவுவேண் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கு!!!

அதே போல், யாருக்கு உதவி தேவைப் பட்டாலும் நான் முதல் ஆளாய் போய் நிற்பேன். அப்படி என்னால் அவருக்கு உதவ முடியும் என்றால் கண்டிப்பாய் உதவுவேன்.. வந்துவிடுவேன் (மறந்துவிடுவேன்)...

பொற்கொடி டீச்சர், உங்க வீட்டுப்பாடம் நான் சரியா செஞ்சிருக்கேனா? எனக்கு பாஸ் மார்க்கா? ஃபெயில் மார்க்கா? வந்து மார்க் போட்டு போகவும் டீச்சர்.. ;-)

மத்தவங்க ஏதாவது துப்பிறதுக்கு இருந்தா, கீழே துப்பிட்டு போலாம். :-)

அட.. ஒரு விஷயம் மறந்துட்டேனே!!! நான் யாராவது தேக்(Tag) பண்ணணும்ல??? எத்தனை பேரு டீச்சர்? ஓ! அஞ்சா?

ஓகே!!! இதோ நோட் பண்ணிக்கோங்க:
1- சிங்கபூரு வாலு துர்கா
2- சூடான் புலிகேசி.. ச்சீ புலி சிவா
3- பி.மு.க தல கார்த்திக்
4- செதுக்கல் மன்னன் தேவ்
5- நடைராஜா கோபிநாத்

ஃப்ரீயா இருக்கும்போது எழுதுங்க மக்கா!! வர்ட்டா!!!!

Friday, December 08, 2006

126. வாங்க.. நாமளும் மரம் வளர்க்கலாம்!

ஒரு வீட்டுக்கு ஒரு கணிணி வேண்டும்ன்னு சொன்னங்க. அப்புறம், ஒரு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்ன்னு சொன்னாங்க.

இப்பு ஒவ்வொரு ப்ளாக்லேயும் மரம் வளர்க்க ஆரம்பிச்சுடாங்க..

நான் இப்பதான் விதையை போட ஆரம்பிச்சிருக்கேன். ஆனால், மரம் வளர்கிறேன் பேர்வழின்னு நம்ம தலைவரு கார்த்திக் அவரோட மரத்தை என்னை வளர்க்க சொல்லிட்டார்..

மறுநாள் நான் வளர்க்கலன்னு தெரிஞ்சதும் மொஹனை (மோஹினுக்கு ஆண்பால்) அனுப்பிடாருங்க என் வீட்டுக்கு.

அதான் ஆபிஸுக்கு வந்தவுடனேயே மரத்துக்கு தண்ணீர் ஊத்த ஆரம்பிச்சுட்டேன்.

இது எழுதுறதுக்கு முன் ரூல்ஸ் இருக்காமே! ஒன்னு இல்ல பத்து. ஒரு கடைபிடிக்கிறதே கஷ்டம். இதுல பத்தா!!! பரவாயில்லை.. நான் என்னால் முடிஞ்ச வறை நீங்க கொடுத்திருக்கிற 10 ரூல்ஸ்யையும் ஃபாலோ பண்ணி எழுதியிருக்கேன்.

------------------------------------
முதல்ல இது உஷா எழுதுனது:

The Unusual Endings"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...

அப்புறம் வேதா தொடர்ந்தது:

மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...ட்ரிங்,ட்ரிங்'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'ட்ரிங்,ட்ரிங்'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'ட்ரிங்,ட்ரிங்'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.'ஹலோ யாரு?''நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்'அட யாருன்னு சொல்லித்தொலைங்க''மீரா பேசுறேன்''எந்த மீரா?''என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?''என்னது? யாருங்க இது?''உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

நழுவ விட்ட போனை கையிலெடுத்து என்னை தாக்கியவர் (ஹீ ஹீ ஹீ) கார்த்திக்:

ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..யா..யார் போன் பண்ணி இருப்பா..அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..


இப்ப இந்த கதையை தொடர்கிறேன்னு சொல்லி நான் எழுதும் சொதப்பல்.. ஹீ ஹீ ஹீ:
-----------------------------------------------------------------------------------
அந்த கரும் இருட்டில் அந்த குரலை கேட்டு அதிர்ந்தான் சூர்யா. இருட்டில் தன் சட்டை பையில் தட்டு தடுமாறி எதையோ எடுத்தான்.

அதை உரசியதும் ஒரு சின்ன ஒளி அந்த அறையை சூழ, மெல்ல மெல்ல ஒரு அழகான பெண்னின் முகம் அவனுக்கு தெரிந்தது.

"ம.. ம.. மலர்.. நீ.. நீ எப்படி இ.. இங்.. இங்கே? நீதான் போன வருடம் அந்த மலை உச்சியிலிருந்து விழுந்துட்டியே?"

அதை கேட்டு அவள் சத்தமாக சிரிக்க, பட்டென நின்று போன மின்சாரம் திரும்பி வர.. அறையே பிரகாசம் ஆனது.

அவன் தன் கண்களை கசக்கிகொண்டு மீண்டும் நிமிர்ந்து பார்த்தான்.

'இவள் உண்மையிலேயே நான் காதலித்த மலர்தான். இங்கே எப்படி? உயிரோடுதான் இருக்கிறாளா? பக்கத்தில் நிற்பவன் யார்?'ன்னு பல கேள்விகள் சூர்யாவின் மனதில் அலை மோதின.

மலருடன் வந்தவன் ஆறடி உயரத்தில் அபிஷேக் பச்சனைபோல் இருந்தான். கையிலிருந்த பூங்கொத்தை சூர்யாவிடம் கொடுத்து "You lost something precious"ன்னு சொல்லி கண்ணடித்தான்.
---------------------------------------------------------------------------

அப்பப்பா.. கதை எழுதுறது கூட கஷ்டம் இல்லைங்க.. எழுதி முடிச்சதும், 5 பேரை தாக்கனும்ன்னு சொல்லியிருகாங்கலே (அதாங்க அந்த ஆறாவது ரூல்ல), அதுதாங்க கஷ்டம்..

ப்ளாக்குக்கு நான் ஒரு குழந்தை.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சிலர் அறிமுகம் ஆகியிருக்காங்க.. எனக்கு அறிமுகம் ஆனவங்க எல்லாரையும்ம் யாரவது ஒருத்தவங்க தாக்கிட்டீங்களே!! நான் யாரை தாக்குறது?

லெட் மீ தின்க்...

ஓகே.

நான் டேக் செய்யும் நண்பர்கள்:
1- எப்போதும் கடலை பற்றி அருமையாக கதை எழுதும் கடல் கணேசனுக்கும் இந்த கதையை கொடுத்தால், அருமையா எழுதுவார். ஸொ, இவர்தான் லிஸ்ட்ல ஃப்ர்ஸ்ட்.

2- நாலு நாளுக்கு முன்பு கொஞ்சம் வருத்ததுல இருந்த தீனக்க்ஷாதான்.. ப்ளாக் எழுதுறது ஒரு சந்தோஷம்தான்..

மரம் வளர்வதற்க்கு என்னால் கொடுக்க முடிந்த இரண்டு கிளைகள் இவர்கள்தான். ;-)

வெகு வெகு விரைவில் உங்கள் கதையை படிக்கும் ஆசயில் உள்ளேன். ;-)

ஆஹா.. ரூல்ஸ் இருக்காமே! அதையும் போஸ்ட் செய்யனும்ல்ல!!! இதோ அந்த ரூல்ஸ்:

1. A blogger can add only 90-100 words (not more or less) at a time
2. All previous snippets of 90-100 words need to be copied before the new set of 90-100 words are appended.
3. Each entire snippet should be linked to the respective author (and not just the first sentence or so)
4. Characters, scenes, etc. can be introduced by an author
5. Bizarre twists, sci-fi, fantasy sequences are best avoided.
6. After appending 90-100, the Story Tree can be passed on to at most 5 bloggers.
7. If more than 1 branch leads to a blogger, s/he is free to choose any one of them but cannot mix the snippets of the individual branches.
8. The Story Tree is best left to grow than concluded
9. Please attach the image of the Story Tree above with each accepted tag (the link address can be copied and used).
10. Please comment back your story’s link to post from where you were initially tagged so that people can follow.