Sunday, July 22, 2007

183. இது நான் நன்றி சொல்லும் நேரம்

பாசமழை பொழிகிறது..
ஒவ்வொரு துளியிலும் உங்கள் முகம் தெரிகிறது..
ப்ளாக்கர் தோட்டத்து நண்பர்களே
.:: மை ஃபிரண்ட் ::.க்கே "மை ஃபிரண்டுகளே"
பாசமழை பொழிகிறது..
ஒவ்வொரு துளியிலும் உங்கள் முகம் தெரிகிறது..


இந்த பதிவு ஏன்? எதுக்கு என்று நான் சொல்லவே தேவையில்லை.. You all made it complete. :-)


எதை சொல்ல..


அன்பு தங்கச்சியின் கவுண் டவுனை சொல்லவா?

G3-யின் ப்ராவகம் ஸ்பெஷல் விருது 2007-ஐ சொல்லவா?

தல கார்த்தியின் 500-ஆவது பதிவை எனக்கு பரிசளித்ததை சொல்லவா?

கவிதாயினி காயத்ரியின் என் நெஞ்சை நெகிழ வைத்த அந்த டெஸ்டிமோனியலை சொல்லவா?

பாசக்கார குடும்பத்தின் சார்பா குசும்பன் சொன்ன வாழ்த்தை சொல்லவா?

சித்துவையும் பாசக்கார குடும்பத்தில் சேர்க்க அனுமதிச்ச பாசக்கார குடும்பத்தை பற்றி சொல்லவா?

சித்து எனக்காக எழுதிய கவிதையை சொல்லவா? அனுப்பிய ஈ-கார்டை சொல்லவா?

இதையெல்லாம் செய்துட்டு மீண்டும் அவங்க பெயரில் மனமார வாழ்த்திய கண்மணியக்காவை பற்றி சொல்லவா?

எனக்கு எத்தனை வயசுன்னு போட்டி வச்சாங்களே, அதை சொல்லவா?

சரியாக பதிலளித்த கோபி எனக்காக அனுப்பிய அந்த அழகான வாழ்த்து அட்டையை சொல்லவா?

அனுசுயா கொடுத்த மலேசிய புயல் என்ற பட்டத்தை பற்றி சொல்லவா?

சிபி அண்ணாத்தே டெடிக்கேட் பண்ணிய பாடலை சொல்லவா?

இம்சையக்கா, ஜீ, ராம் அனுப்பிய அந்த அழகான பரிசை பற்றி சொல்லவா?

இரவு 12 மணியிலுருந்து கால் பண்ணி வாழ்த்து சொன்ன கோப்ஸ், புலி, அருண், கப்பியை பற்றி சொல்லவா?

காலையில் நடந்த கான்ஃபரன்ஸில் இணைந்து கலாய்த்த கே.ஆர்.எஸ், ட்ரீம்ஸ், சந்தோஷ் பற்றி சொல்லவா?

கலாய்க்கப்பட்ட சி.வீ.ஆரை பற்றி சொல்லவா?

ப்ளாக் யூனியன் மக்கள்ஸின் பாச மழைகளை சொல்லவா?

12 மணிக்கு எதிர்ப்பாராமல் வந்த மதி அக்காவின் மின்னஞ்சல் வாழ்த்தை சொல்லவா?

கடலில் இருந்தாலும் மறக்காமல் என்னை நினைத்து அழகிய ஈ-கார்டுடன் கூடிய அந்த அருமையான வாழ்த்து சொல்லிய கடல் கணேசனை சொல்லவா?

எங்கே எனக்கு பதிவு போட்டாலும் எல்லா இடத்திலும் வந்து பின்னூட்டமிட்ட அபி அப்பா, கானா பிரபா, மின்னுது மின்னல், தம்பி, கார்த்திக் BS, அய்யனார், பரணி அவர்களின் கைவரிசைகளை சொல்லவா?

ஆர்குட்டிலும் தேவ் அண்ணா, சவுண்ட் பார்ட்டி, பாலா, ஜொல்லு பாண்டி வாழ்த்திய ஸ்க்ராப்களை சொல்லவா?

மற்றும் வாழ்த்து சொன்ன இளா, வெட்டியண்ணே, கிட்டு M&M, சுமதியக்கா, பொற்கொடி, பத்மப்ரியா, நிலவன், வேதா, செந்தழல் ரவி, தம்பி, மனசு, குட்டி பிசாசு, முத்து லெட்சுமி அக்கா, மலைநாடான், நெல்லல காந்த், UP தர்சன், காட்டாறு அக்கக, துளசி டீச்சர், மணி பிரகாஷ் மற்றும் பெயர்கள் விட்டுப்போன அனைத்து நல் உள்ளங்களையெல்லாம் (இங்கேதான் என் ஞாபக சக்தி கொடி [இங்கேயும் கொடிதான்.. என்ன கொடுமை கொடி இது!] கட்டி பறக்குது. உங்க பெயர்கள் விட்டுப்போயிருந்தால் புதிதாய் பிறந்த இந்த குழந்தையை மன்னிக்கனும்.)

You all made my day COMPLETE buddies!

நன்றிகள் பல கோடி உரித்தாகுக. :-)

கேக் எல்லாம் door delivery செஞ்சாச்சு! வந்து சேரலைன்னா, நீங்க தொடர்பு கொ(ல்ல)ள்ள வேண்டிய நபர்:

மிஸ்டர் அபி அப்பா,
கிடேசன் பார்க்,
துபார் குறுக்கு சந்து,
துபாய் மேயின் ரோடு,
துபாய்..

இவரை தொடர்பு கொ(ல்ல)ள்ள முடியலைன்னா, கிடேசன் பார்க்ல கவுந்து கிடக்கும் பாறைகள் (எல்லாம் நம்ம மக்கள்ஸ்தான்.. அலேய்ன் பார்க்ல இருந்து வந்து இங்கே ஒரே குத்தாட்டம் போட்டு மயங்கி விழுதிருக்காங்க..) யாரையாவது எழுப்பி கேட்கவும். ;-)
உங்கள் அனைவருக்காகவும்:

Saturday, July 07, 2007

182. இதுவும் ஒரு காதல் (இல்லா) கதை

காதல் கதை காதல் இல்லாமல் காமெடியா ஆரம்பமானது பரணியில், ப்ரியமான கதையாக மாறியது ப்ரியாவின் கையில்.. காதல் இருக்கு ஆனா இல்லைன்னு கொடி அருணுக்கு நெருக்கடி கொடுத்தாங்க. அருண் பௌயமா அதை அம்பி கையில கொடுத்ததும், டாப் கியர் போட்டு தூக்கி சைலண்டா என் தலையில இறக்கி வச்சிட்டு ஓடிப் போயிட்டாரு!

இது அம்பி வீசின குண்டு:

சரி! அரை மனசாக தலையசைத்து விட்டு, அப்பா (இந்த தடவை சொதப்பாமல்) காவேரி!னு சவுண்டு விட,
மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும் (ஸ்ஸ்ஸ்ப்பா, இருங்க நான் முதல்ல கொஞ்சம் தண்ணிய குடிச்சுகறேன்) சூர்யா, கார்த்தி இரண்டு இதயங்களும் டமால்னு வெடித்தன.

அட இது என்ன? சந்தியாவின் ஜெராக்ஸ் உருவமாய் இன்னோரு சந்தியா.
இல்லை! இல்லை! அது தான் சந்தியாவா?

கார்த்தியின் கண்கள் சொருகின....

******************************************************************
மு.கு: இது செம்ம காமெடியா இருக்கும்ன்னு நினைக்கிறவங்களுக்கு இங்க ஒன்னு சொல்லிக்கிறேன். நீங்க அப்படியே கீழே வரைக்கும் ஸ்க்ரோல் பண்ணி பின்னூட்ட பேஜுக்கு போயிடுங்க. இங்க உங்களுக்கு வேலை இல்லவே இல்ல.. இதுல காமெடி இருக்காது.. இது முழுக்க முழுக்க காதல் (இல்லாத) கதை மட்டுமே!


இப்போ கதைக்கு போலாம்:


சூர்யா மெல்ல நிமிர்ந்து பார்த்தான். கண்ணை கசக்கி கசக்கி பார்த்தான்; பாக்கெட்ல இருந்த கண்ணாடியை போட்டு பார்த்தான்; சைட்ல பார்த்தான்; நேரா பார்த்தான்..

எப்படி பார்த்தாலும் இவ சந்தியா மாதிரியே இருக்காளே?
இவ.. இவ.. சந்தியா.. சந்தியாதான்.. கண்ஃபார்ம்!!!! சந்தியாவேதான்!!!

டமால்...

கார்த்திக்கின் இதயம் அப்பளமாய் நொருங்கியது.

மனதில் வடியும் கண்ணீர் ரத்தத்தில் கலக்கும் சோகத்தை தனக்குள் அடக்கிக்கொண்டான்.

"எங்க குடும்பத்துக்கு ஏத்த மருமகளா இருக்கா. சூர்யா, உனக்கு புடிச்சிருக்கா?"

கார்த்திக்கின் அம்மா சந்தோசத்துடன் சூர்யாவிடம் கேள்வி கேட்டுட்டு ஒரு முறுக்கை உடைச்சு அவங்க வாயில போட்டாங்க. ஆனால்..

ஆனால்.. சூர்யாவின் கண்களோ கலங்கியிருந்தன..

"கல்யாணத்துக்கு பிறகு பொண்ணு கண் கலங்க கூடாதுன்னு மாப்பிள்ளை இப்பவே கண் கலங்க ஆரம்பிச்சிட்டார்ப்பா" என்று சொல்லிக் கொண்டே சந்தியாவின் அப்பா தன் கையை மெதுவா கேசரியில் வைக்க, அடுப்பறையிலிருந்து அவர் மனைவி புரிக்கட்டையை தூக்க, தனக்கு கொடுத்து வச்சது அந்த நெய் மட்டும்தான்னு நக்கி பெரு மூச்சு விட்டார்.

சூர்யா எழுந்து நின்றான்.

"சார்.. நான் கொஞ்சம் பேசணும்."

"ஆமா ஆமா.. கல்யாணத்துக்கு பிறகு பேச முடியாம அடங்கிதானே இருப்ப. எல்லாத்தையும் இப்பவே பேசு" என்று சூர்யாவின் சித்தப்பா (கார்த்திக்கின் அப்பா) நக்கலடிக்க..

"சித்தப்பா.. ப்ளீஸ்.. என்னை கொஞ்சம் பேச விடுங்க"

"சார், இங்க பாருங்க. அஞ்சு ஆறு வருசத்துக்கு முன்ன வரைக்கும் எல்லாத்தையும் மனசுல வச்சி அடக்கிட்டுதான் இருந்தேன். இப்போ நான் ரொம்ப ஓபன் டைப். எதுவா இருந்தாலும் உடனே சொல்லி உடைச்சுடுவேன். என்க்கு புடிச்சிருக்கு..."

"டேய், புடிச்சிருக்குன்னு சொல்றதுக்குதான் இவ்வளோ நேரம் டயலோக் பேசின? இதுனால நான் ரெண்டு பக்கோடா மிஸ் பண்ணிட்டேன்"ன்னு சொலிக்கிட்டே பக்கோடாவை வாயில போட்டார் கார்த்திக்கின் அப்பா.

"சித்தப்பா ப்ளீஸ்... சார், எனக்கு புடிச்சிருக்கு.. ப்ரியாவை புடிச்சிருக்கு!"

"அடேய் சூர்யா.. பொண்ணு பேரு சந்தியாடா!"

"இல்லம்மா.. நான் புடிச்சிருக்குன்னு சொன்னது பொண்ணு தோழியா இதோ நிக்குறாளே!! ப்ரியா!! இவளைத்தான்!!!"

சொல்லிக்கொண்டே கூர்மையான பார்வையுடன் தன் விரலால் ப்ரியாவை நோக்கினான்..

கண்ணும் கண்ணும் நோக்கியா..
சந்தியாவின் கையில் இருந்த காப்பியா..
கீழே விழுந்தது பார்த்தியா??
நீ பார்த்தியா....

சந்தியாவின் கையில் இருந்த தாம்பளத்தட்டு கீழே விழ, கார்த்திக்கின் அப்பா தொண்டையில பக்கோடா மாட்டிக்க, ப்ரியா பேயறைந்ததுபோல் நின்னாள்.

சந்தியாவின் அப்பாவின் வாயில் இதுவரை மூனு ஈ புகுந்தாகிவிட்டது! அந்த அளவுக்கு ஷாக்ல இருந்தார்.

கார்த்திக் மனதில் ஒரு டன் அளவுக்கு சந்தோசமா இருந்தாலும், சந்தியா வருத்தப்படுறாளேன்னு ஒரு டின் அளவுக்கு கவலைப்பட்டான்..

"டேய் சூர்யா! என்னடா ஆச்சு உனக்கு?? ஏண்டா??"ன்னு அவனை குலுக்கினான்.

"கார்த்தி.. என்னை விடு! இன்னைக்கு நான் சொல்லலைன்னா எப்போதும் என் காதலை சொல்ல முடியாது! சார், அமேரிக்க மாப்பிளைன்னா பன்னு திங்கிறதுக்கு மட்டும்தான் லாயக்குன்னு சொல்ற அளவுக்கு "விஞ்ஞானம்" வளர்ந்திருக்கு! இதெல்லாம் ஒத்த ராத்திரியில அழிக்க முடியாத ஒன்னுன்னாலும், நானே ஃபர்ஸ்ட்டா இருந்து இதை நடத்தி வைக்கிறேன். சந்தியாவை எனக்கு புடிக்கலை.. நான் காதலித்தவள், காதலிக்கிறவள், காதலிப்பவள் ப்ரியா ப்ரியா ப்ரியா மட்டுமே! "

ப்ரியா, சந்தியாவின் அக்கா.. ஒரே வருடம்தான் மூத்தவள். ஆனால், சந்தியாவை விட டோட்டல் ஆப்போஸிட்டான கேரக்டர். அதிகமா பேச மாட்டாள். தான் உண்டு தன் வேலைகள் இல்லைன்னு சொல்ற அளவுக்கு முன்கூட்டியே செய்து முடித்துவிடுவாள் அவள் வேலைகளை. அவள் என்ன நினைக்கிறான்னு அவள் பெற்றோர்களால் கூட யூகிக்க முடியாத இவள் ஒரு புதிர் (ரடான் டிவிக்கு அனுப்பிடலாமா?)! கொஞ்ச நாளாகவே பேசுற அந்த ஒரு சில வார்த்தைகளும் கட். அமேரிக்க மாப்பிள்ளை சூர்யாவை ப்ரியாவுக்கு மணம் முடிக்கத்தான் வீட்டில் பார்த்தார்கள். ப்ரியாதான் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று போர் கொடி (நான் ஒன்னும் தப்பா சொல்லல கொடி) தூக்கியதால், அந்த பன்னு துன்ற பையனை சந்தியாவுக்கு தெரியாமலேயே அவசர அவசரமாக நிச்சயம் பண்ண வேண்டிய நிர்ப்பந்தம்.

(வண்டி கொஞ்ச நேரம் இந்த ஸ்ட்டாப்புல நிக்கும்.. தம் அடிக்கிறவங்க, பாத்ரூம் போறவங்க, டீ காப்பி குடிக்கிறவங்க எல்லாரும் சீக்கிரமா போயிட்டு வந்துடுங்கப்பா...)

(எல்லாரும் வந்தாச்சா? சரி.. ஸ்டார்ட் எஞ்சின்...)

"ஏண்டி ப்ரியா! என்னை எதுக்கு நீ ஏமாத்தின? கல்யாணம் ஆச்சுன்னு எதுக்கு என் கிட்ட பொய் சொன்னே? உன்னை நான் பார்க்கணும்ன்னா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டுதான் உன் முன்னாடி வந்து நிக்கணும்ன்னு எதுக்கு கண்டிஷன் போட்டே? சொல்லு! சொல்லு!"

"சூர்யா! ப்ளீஸ்! நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது!"

"அதான் ஏன்னு கேட்கறேன்! ஏன்???"

"முடியாதுன்னு சொன்னா புரிஞ்சிக்கோ!"

"இல்ல.. நான் மண்டு! எனக்கு புரியல! நீயே சொல்லு!"

"....."

"சொல்லு... நீ இன்னைக்கு பதில் சொல்லாம நான் உன்னை விட மாட்டேன்!"

"அப்பா அம்மா, என்னை மன்னிச்சிடுங்க.. நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்."

"என்ன ப்ரியா? என்ன தப்பு? என்ன நடந்துச்சு?" சந்தியா பதற்றத்துடன் கேட்க..

"நான்.. நான்.. ஏற்கனவே வேறொரு மதத்துக்கு மாறிட்டேன்..."

"ப்ரீய்ய்ய்யாஆஆஆ....." (இது அவங்க அப்பாவோட சவுண்டு...)

******************************************************************
அம்பிண்ணே கதை எழுதிட்டு எனக்கொரு நோட்டிஸும் தராம ஓடிப்போயிட்டதால, நாந்தான் தாக்கப்பட்டிருக்கேன்னு எனக்கு தெரியாமல் போயிட்டது.. அதனால், 2-3 நாள்ல அடுத்த தொடரை போடனும்ங்கிற ரூல்ஸ் நான் மீறிட்டேன்.. இதுக்கு பில்லு பரணி ஏதாவது பனிஷ்த்மண்ட் தர்றதா இருந்தா, அம்பிக்கு பாஸ் பண்ணிடுங்க.. ஹீஹீ..

என் தலையில இருந்த சுமையை இறக்கி வைக்கிற நேரம் வந்தாச்சு.. ஹாஹாஹா.. ஹோஹோஹோ!! இப்போ இந்த கதையை முழுக்க முழுக்க காமெடியா கொண்டு போறதுக்கு ஒருத்தர் இருக்கார்.. அவருதான் ஒரு கையில காப்பியும் இன்னொரு கையில வ்ரிஸ்ட் வாட்சுமா ப்ளாக் உலகத்தை வலம் வந்து 13 அடிப்பவர்:

எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும் என்று அழைக்கப்படுபவர்:

பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
பக்கா தமிழன் கோப்ஸ்
(ச்சும்மா.. ஒரு எக்கோ!) :-P