Thursday, November 30, 2006

112. இது கதை இல்லை.. நிஜம்!!!

சேரன் ஆட்டோகிராப் மூலமா அவரோட காதல்களை நினைவு கூர்ந்தார்.. இப்போ தங்கர் பச்சன் தன்னோட பள்ளி கூடம் மூலமா என்னத்தை நினைவு கூர போகிறார்ன்னு தெரியலை.

ஆனால், எனக்கு என் பள்ளி கூட வாழ்க்கையை பின்னோக்கி யோசிச்சப்ப நான் ஒன்றை கண்டுப்பிடித்திருக்கிறேன். ஒரே அனுபவத்தை மூன்று முறை வேறு வேறு கால கட்டத்தில் நான் அனுபவித்ததுதான்..

என் பள்ளி வாழ்க்கையை மூன்றாக பிரிக்கலாம்..
1- ஆரம்ப பள்ளி காலம்: தமிழ் மீடியம் (6 வருடம்)
2- இடை நிலை பள்ளி காலம்: மலாய் மீடியம் (5 வருடம்)
3- உயர் கல்வி காலம்: ஆங்கில மீடியம் (5 வருடம்) --> இதை இன்னும் தாண்டவில்லை

மூன்று வெவ்வேறு காலத்தில் மூன்று வெவ்வேறு மீடியத்தில் படிக்க ஆரம்பித்த போதுதான் அந்த சம்பவங்கள் நடந்தன..

1- ஆரம்ப பள்ளி காலம்

மலேசியாவில் ஆரம்ப பள்ளி 7 வயதில் ஆரம்பமாகும். தமிழ், மலாய், ஆங்கிலம் என்று மூன்று மீடியத்தில் இது உள்ளது. நாம் எந்த இனத்தை சார்ந்திருந்தாலும், மூன்றில் ஏதாவது ஒன்றில் நாம் சேரலாம். இதில் நம் இனத்தவருக்குதான் advantage.. மலாய்காரர்கள் மலாய் பள்ளியில்தான் சேர்வார்கள். சீனர் மலாய் அல்லது சீன பள்ளியில் சேர்வார்கள். ஆனால், நம் இனத்தவர் தமிழ், அல்லது மலாய் அல்லது சீன மீடியத்திலும் சேர்வார்கள். இது நாம் பெருமை படும் ஒரு விஷயம்.

நான் தமிழ் பள்ளியில்தான் சேர்ந்தேன். தாய் மொழியை காக்க, நம் மொழியை நாம்தானே கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி தற்பெருமை அடிக்கிறார்களே அதற்காக இல்லை. அப்படி நான் சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க. ஏன்னென்றால், அப்போ எனக்கு 7 வயதுதான். நான் அரட்டை அரங்கத்தில் அருமையாக பேசும் சின்ன பிள்ளைகள் போல் பேசும் வல்லமை படத்தவள் அல்ல.

வீட்டில் தமிழிலேயே பேசி பழகின எனக்கு அந்த முதல் வகுப்பு(காராக் ஆரம்ப தமிழ் பள்ளி) எனக்கு ஒரு அன்னியத்தை தர வில்லை. எல்லாருடனும் சகஜமாக பழகினேன். வகுப்பின் தலைவியும் நானே!! ஒரு வருடம் நன்றாக ஓடியது. ஒவ்வொரு நாளும் எப்போ காலையாகும்.. பள்ளிகூடம் போகனும்ன்னு ஆர்வமாய் இருந்தேன்.

நான் இரண்டாம் வகுப்பின் நுழைவதற்க்கு ஒரு மாதத்திற்க்கு முன் என் பெற்றோர் சிலாங்கூருக்கு மாற்றலாகி வந்தனர். நானும் அவர்களோடு வந்து பத்துமலை தமிழ் பள்ளியில் சேர்ந்தேன். (பத்துமலைன்னதும் உங்களுக்கு தொணுகிற விஷயம் தைபூசம்தானே! ஆமாம், இது முருகனின் தலம். அந்த மலையின் கீழே, கோவில் காம்பவுன்ட் உள்ளேதான் அந்த பள்ளி அமைந்திருந்தது).

என் பின்னால் ஒரு கூட்டமே நின்று தோல் கொடுத்த நண்பர்கள் அங்கே இல்லை. நான் ஒரு தனி மரம் அப்போது. என்னை என் தந்தை அந்த வகுப்புக்கு அழைத்து சென்றார். எல்லாருமே அனியம் எனக்கு!! என்னை ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். ஏனெனில், அவர்கள் அப்போது பகாங் என்ற ஊரை கேள்விப் பட்டதில்லை போலும். வகுப்பு மாணவர்கள் 6 க்ரூப்-ஆக பிரிக்கப் பட்டிருந்தனர். அந்த 6 க்ரூப்பும் தனி தனி க்ரூப்ன்னு அப்போ எனக்கு தெரியலை. ஒரு மேஜை காலியாக இருப்பதை பார்த்துட்டு என் அப்பா என்னை அங்கே உட்கார சொல்லிவிட்டு போய்விட்டார்.

கொஞ்ச நேரத்தில் ஒருவன் வந்தான்.

"ஏய்.. எந்திரி!!!" என்று சத்தம் போட்டான். நான் ஏன் என்று அமைதியாக கேட்டேன்.

"இது என் இடம். உன்னை போன்றவர்கள் அதோ அங்கேதான் உட்காரவேண்டும்" என்று சொல்லி ஒரு இடத்தை காட்டினான். என் புத்தகப்பையை கீழே போட்டான்.

அப்போது அவன் என்ன சொல்ல வந்தான்.. ஏன் நான் அங்கு போய் உட்கார வேண்டும்ன்னு சொன்னான்? என்னகு ஒன்றும் புரியவில்லை. ஏண்டா இந்த பள்ளிக்கு வந்தோம்! என் அப்பா அம்மா இங்கு மாறி வந்தார்கள்ன்னு அவங்க மேல் கொஞ்சம் கோபம் வந்தது.

நானும் அவன் சுட்டி காட்டிய இடத்தில் போய் அமர்ந்தேன். அங்கே ஏர்கனவே இரண்டு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால், அங்கே இருந்ததோ 6 மேஜைகள். நானும் இங்கே உட்காரலாமா?"ன்னு கேட்டு அந்த இரண்டு பேர் உட்கார்ந்து இடத்தில் உட்காராமல் கொஞ்சம் தள்ளீயே உட்கார்ந்தேன். ஏன் வம்பு?

நான் உட்கார்ந்ததும் அந்த இரண்டு பேரும் (ஒரு பருமனான பையன்; ஒரு குள்ளமான மாணவி) குசுகுசுன்னு பேசினாங்க.. என்னை பற்றிதான் பேசுறாங்கன்னு எனக்கு நல்லா தெரிஞ்சது..
ஒரு முறை அந்த வகுப்பை உட்கார்ந்த இடத்திலிருந்தே சுற்றும் முற்றும் பார்த்தேன். சிலர் என்னை பார்த்துட்டு அவங்களுக்குளேயே பேசிக்கிட்டாங்க. சிலர் அவர்களோட நண்பர்களுடன் பேசி சிரிசுட்டு இருந்தாங்க. வகுப்பாசிரியர் மாணவர்களின் பெற்றோர்களிடம் ரெஜிஸ்திரேஷன் செய்து பணம் வாங்கி கொண்டிருந்தார்..

கொஞ்ச நேரத்தில் அந்த குண்டு பையனும் குட்டை பெண்ணும் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துட்டு என்னை பற்றி விசாரிச்சார்கள். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொன்னேன். ஆனால், அவர்கள் என் அப்பா அம்மா பேரைக் கேட்டுவிட்டு என் முன்னாடியே கிண்டல் செய்தார்கள். எனக்கு மூக்கின் மேலே கோபம் வந்தது. அதுவரை நான் யாரையும் அடித்தைல்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட நிலையில் நான் என்னாலும் இருந்ததில்லை. அன்று வந்தது. பக்கத்தில் கல் இருந்தால், அதை தூக்கி அந்த குண்டன் தலையில் போடனும் போல இருந்தது. பளார்ன்னு அந்த குட்டச்சிய அறையனும் போல இருந்தது.

இடத்தை விட்டு எழுந்தேன். இரண்டு பேரும் என்னை பார்த்து திகைத்தனர். நான் அடுத்த செயல் செய்யும் முன் என் பேரை யாரோ கூப்பிட்டு திகைத்தேன்.

பதிவு ரொம்ப நீளமாக ஆயிடுச்சு. சோ, இந்த பதிவை தொடரும்ன்னு போட்டு முடிச்சுடுறேன்.. இன்னொறு பதிவுல தொடருகிறேன். :-D

111. Brain Teaser 18

Yesterday's teaser was a bit difficult. But Johnson D.S., Mr. Bond & C.M.Haniff managed to answered correctly with the right reasons. Congrats..


The answer was THREE. why? Check the reason here.

Teaser today is a short one with a logical question:

A man wants to go home, but he knows he can't. Another man is standing at home holding an blunt object that is not a gun. Why can't the man go home?

Wednesday, November 29, 2006

110. மௌனமே வார்த்தையாய்....

சிலருக்கு எப்போதுமே தனிமை பிடித்த விஷயம். மணிக்கணக்கில் தனிமையில் இருக்க விரும்புவார்கள்.

எதற்கு டஹ்னிமை? தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்கிற மாதிரி எதற்காக தீவு மாதிரி மற்றவர்களிடம் இருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும்?

கேள்விகளை இது மாத்ரியான தனிமை விரும்பிகளிடம் கேட்டால் இவைகளிடம் இருந்து உடனடியாக பதில் வராது. அமைதி காப்பார்கள். அந்த அமதிக்குப் பின்னால் ஓர் ஆழமான சோகம் இருக்கும். அது என்னவென்று அத்தனை சீக்கிரம் வெளிப்படுத்திவிட மாட்டார்கள்.

மற்றவர்களிடம் தங்களின் விஷயங்களை சொல்லும் போது அது வெளியரங்கமாகி இன்னும் விபரீதத்தை ஏற்ப்படுத்தும். அதன்பிறகு நாம் தவறாக விமர்சிக்கபடுவோம் என்கிற அவமானத்தை தவிர்க்கிற போக்கே பயத்துக்கு காரணம்.

சரி, மனம் விட்டுப்பேச ஒருவர் கூடவா இல்லாமல் போய்விட்டார்கள்? ருப்பார்கள். ஆனால், மனம் விட்டுப் பேகினால் தானே! பொதுவான விஷயம் பேசுவார்கள். நாட்டு நடப்பு பற்றிக் கூட அவ்வப்போது விசாரிப்பார்கள். அதே நேரம் தங்கள் விஷயம் என்று வரும்போது மட்டும் வாயை இறுக மூடிக் கொண்டு விடுவார்கள்.

ஒரு விஷயத்தை சரியா, தவறா என்று கணிப்பதில் ஏற்படுகிற குழப்பமே இவைகளின் விஷயங்களை இருட்டுக்குள் தள்ளி வைக்கின்றன. விடை வராத கணக்கை போட்டுப் போட்டுப் பார்த்து கால நேரத்தை வீணடிக்கிற மாதிரி தீர்க்கமுடியாத விஷயங்களை தங்களுக்குள்ளாக போட்டுப்போட்டு குழம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் தங்கள் மனைவி, பிள்ளைகளிடம் கூட இது விஷயமாய் கலந்து பேச மாட்டார்கள்.

சிலர் இருக்கின்றனர். பேசினாலே வம்பு என்று நினைத்துக்கொள்கிற ரகம் இவர்கள். பல நேரங்களில் அமைதி விரும்பிகளாகவே இருந்து விடுவார்கள். ஆனால், இவைகளிடம் விஷயம் இருக்கும் எப்போது எங்கே பேச வேண்டுமோ அங்கே கட்டாயம் இவர்கள் குரல் நேரத்துக்கு ஒலிக்கும்.

இது நிச்சயமாக ஆபத்தில்லாத அமைதி. தேவயில்லாத நேரங்களில் எல்லாம் எதற்கு வீணாகப் பேசி பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற ரகமாக இவர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொள்வார்கள். அதில் தங்கள் கருத்தை சொல்லாவிட்டாலும் அதில் உள்ள சாரம்சத்தை கிரகித்துக்கொண்டு விடுவார்கள். அது மட்டுமின்றி ஒருவர் அதிகம் பேசுவதால் எந்த மாதிரியான புதுபுது பிரச்சனைகளில் சிக்குகிறார்கள் என்பதையும் அவைகளால் சட்டென கிரகித்துக் கொண்டுவிட முடிகிறது.

சிலருக்கு நண்பர்கள் அமைய மாட்டார்கள். தவறிப்போய் அப்படி அமைந்தாலும் அதை ஸ்டெடி பண்ணிக்கொள்ளத் தவறி விடுவார்கள். இவர்கள் டேஸ்ட்டுக்கும் நண்பர்கள் டேஸ்ட்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதனாலும் தனிமைப்படுத்தப்படும் இவர்கள் அதையும் நல்லதுக்குன்றே அடுத்துக் கொள்வார்கள். வீட்டில் இருந்து ஆபிஸ். ஆபிஸ் விட்டால் வீடு என்கிற உணர்வைக் கொண்டிருக்கிற பலரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். கலகலப்பாக பேசுவது என்பது சிலருக்கு கைவந்த கலை. ஒரு வீட்டுக்குள் இப்படி கநவன் மனைவி இருவரில் ஒருவர் கலகலப்புப் பேர்வழியாகவும் அடுத்தவர் அமைதி விரும்பியாகவும் இருந்தால், வீட்டில் ஒரு வித அசாதாரணமைதி கிடு கொண்டிருக்கும். கலகலப்புக்கு மௌனம் ஆட்சி செய்கிற இடத்தில் பெரும்பாலும் வேலை இருக்காது.

109. Brain Teaser 17

The man in Brain Teaser 16 was short. On Rainy days he carries an umbrella with him. He uses it to press '50'. :-D

Mr. Bond & C.M. Haniff had answered correctly.

Today's teaser is:

A man wanted to get into a members only club but because he couldn't become a member.

The man hid and watched as the guard at the door of the club house said a number to each member as they approached, the member would respond with a number of their own, if the member responded with the correct number they were let in, if they responed incorrectly they were thrown out.

One member come up to the guard, the guard said twelve and the member responded with six and was let in. Another member came to the door, the guard said six and the member responded with three and was let in.

Believing he had heard enough, the reject went up to the guard, the guard said ten, and the reject said five, but was not let in, what should the reject have said?

Monday, November 27, 2006

108. சினிமா நியூஸ் 3

தசவதாரம் கதைபொப்படி இரண்டு அவதாரம் இறந்து விடுகிறது. மீதம் உள்ள எட்டு மட்டும்தான் கடைசி வரை வருமாம்.

பி. வாசு தன் மகன் ஷக்தியை நாயகனாக வைத்து இயக்கும் படம் தொட்டால் பூ மலரும். தவமாய் தவமிருந்து பட்ஸத்தில் தாத்தா வேடம் வரை நடித்த ராஜ் கிரண் இதில் தாத்தா வேடம் போடுகிறார்.

கூடல் நகர் படத்துக்காக சுமார் இருபது லட்சம் ரூபாய் செலவில் திண்டுக்கல்லில் கிராமம் போன்று தத்ரூபமாக செட் போட்டிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன். பரத், பாவனா நடிக்கும் இப்படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார்.

பொய் நாயகி விபலா ராமனுக்கு ஷூக்கள் மீது தனி பிரியம் அதிகமாம். இவர் ஷாப்பிங் போனால் முதலில் வாங்குவது ஷூதானாம். இவரிடம் சுமார் 200 ஷூக்கள் இருக்கிறதாம்.

இசைஞானி இளையராஜா தன்னுடைய அண்ணன் பாவலர் வரதராஜன் பெயரில் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வருடா வருடம் விருது கொடுக்கப் போகிறார். தமிழுக்காக 'இசைஞானி இளையராஜா இலக்கியப் பெருமன்றம்' என்ற அமைப்பை ஆரம்பிக்கிறார்.

சிவப்பதிகாரம் நாயகி மம்தா நல்ல குரல் வளம் கொண்டவர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மலையாளத்தில் இரண்டு ஆல்பம் மற்றும் படத்தின் பிண்ணனி பேச ஆசைப்படுகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரி வித்யா பெயரில் சினிமா கலைஞர்களுக்கு விருது கொடுக்கலாம் என உத்தேசித்து வருகிறது தமிழக அரசு.

மன உலைச்சலால் அவதிப்படும் சினிமாக் கலைஞர்களுக்கு மன நல கவுன்சலிங் கொடுக்க போவதாக கூறி அடஹ்ற்கான பயிற்ச்சியும் எடுத்து வருகிறார் நடிகை ஸ்ரி பிரியா.

கட்சி வேலைகளுக்கு கொஞ்ச காலம் லீவு விட்டுருக்கிறார் கார்த்திக். தன் மகனை கதாநாயகனாக்கும் முயற்சியில் சொந்தப் படம் தயாரிக்கும் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் இவர்.

கை வந்த கலை படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் பாண்டியராஜனின் மகன் பிரிதி. தற்சமயம் மச்சான் என்ற படத்தில் புதுக் கதாநாயகி மதுசந்தாவுடன் நடிக்கிறார்.

சகலகலாவல்லவன் என பெயர் எடுத்த விஜய டி. ராஜேந்தர், அவரின் படங்களில் மட்டுமே பாடி வந்தார். தற்போது பிற படங்களுக்கும் பாடுகிறார். இவரின் பாட்டுக்கு மக்களிடத்தில் கிரேஸ் இருப்பதால் சம்பளம் 30 ஆயிரம் வரை தருவதாகக் கூறி கோலிவுட் வாசிகள் அழக்கிறார்களாம். ஓரம்போ படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

தமிழ் - தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கவுள்ளார் விக்ரமன். இந்த படங்களுக்கு A.R. ரஹ்மான் இசையமைகிறார்.


சென்னை காதல் படத்துக்கு முதலில் விக்ரமன் வைத்த தலைப்பு சென்னை. வேறு ஒருவர் இந்தத் தலைப்பை முன்னதாகவே பதிவு செய்திருந்ததால் சென்னையோடு காதலை சேர்த்துவிட்டார்.

107. Brain Teaser 16

2 friends answered correctly for Brain Teaser 15.

1- Johnson D.S
2- C.M. Haniff

Today's teaser:
There once was a man who lived on the 50th floor in an apartment building. Every day he would take the elevator to the first floor and go to work. On sunny days when he came back from work, he would take the elevator to the 25th floor and walk the rest of the way. On rainy days, he would take the elevator to the 50th floor. Why is this?

Friday, November 24, 2006

106. Scholarship - Mechatronics - December 2006 Intake

AUTO PRiMA Technology Training Sdn Bhd, a Skill/Technical Training Center located at Shah Alam is offering scholarship for SPM school leavers who are interested in pursuing a Mechatronics course (a combination of Mechanical, Electronics & Electrical subjects):-

Entry Qualification: SPM with minimum pass in English,Maths & Science
Duration: 18 months
Course Fee: RM6,200 (Scholarship provided by Ministry of Human>Resources)
Allowance: RM300/mth given by sponsor company

Selection of the Student for the course:
-The sponsor company selects the candidates prior to the commencement of the course.
-Upon successful completion of the course, the trainee is given a job as junior technican on contractual basis by the Sponsor Company.

For those who are interested please contact Ms Minnal Navavinoba at 03-51217153/4200 or email at min@autoprima.edu.my

105. Brain Teaser 15

First of all, I would like to tell sorry. I was too busy with my project and couldn't moderate the comments yesterday. Also I couldnt post tamil message.

Today also, no tamil post. Only brain teaser. I am not sure whether I can post on Saturday & Sunday too because I might not be in to do it. If I can't, then, the next post will be on next Monday. sorry for that!!!

Let's see Brain Teaser 14's answer:
1. errers (should be errors)
2. They (should be There)
3. there are only two errors

But I like to mention here about Johnson D.S's answer. His first & second answer was same but the third one was:
Anonymous said...
On second thought, If the part, " - what are they?" is to be included, then the third error is that the hyphen "-" should have been a comma ",".
Johnson D.S.


I like this kind of thinking who thinks about something very deeply. :-)

Only 2 friends answered it correctly. (Johnson D.S. & C.M. Haniff)

Today's teaser is:
What word can you form from the word ICE AND OUT?

clue: This question is actually very famous. You may got it in any of your forward e-mails. It is very important for us especially when getting a good job.

Thursday, November 23, 2006

104. Brain Teaser 14

Yeterday's teaser were answered by 4 friends.
1- Johnson D.S.
2- Mr.Bond
3- C.M. Haniff
4- Wonderboy

The answer is:
The base word is:

startling
starting
staring
string
sting
sing
sin
in
I

Today's teaser is also an English grammer question..

They are three errers in this puzzle - what are they?

You need point out all 3 error in order to get one point. ;-)

Wednesday, November 22, 2006

103. கனா கண்டேனடா!!!!

நேற்று ஒரு சந்தோஷம் கலந்த கவலை கனவு..

சந்தோஷம் : உன்னி கிருஷ்ணன் என் கனவில் வந்து இசை விருந்து படைத்தது.

கவலை: சுஜாதாவுக்காக என்ன பாட்டு இதுன்னு ஒரு பதிவு எழுதி, அவருக்கு எழுதாமல் விட்டது.

ஏன் வம்பு? உன்னி மீண்டும் என் அடுத்த கனவில் வந்து வருத்தப்படுவதற்க்கு முன்பாகவே அவருக்காக என்ன பாட்டு இதுன்னு ஒரு பதிவு போட்டுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். சுஜுக்கு 5 பாடல் போட்ட நான் உன்னிக்கு 7 பாடல் போட்டு அவரை கூல் பண்ண் போறேன். ஹிஹிஹீ..

பாடல் 1
என் கனவுகளின் உருவங்களை..
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்..


பாடல் 2
பெண்களின் கனவுகள் ரகசியமானது..
ஆண்களின் கனவுகள் லட்சியமானது..


பாடல் 3
சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒன்றும் கிடையாது..
நான் கொண்ட னேசத்தின் நிறம் என்ன தெறியாது..


பாடல் 4
போதும் உந்தன் கால் சுவடு..
வாழும் அதில் எந்தன் மனது..


பாடல் 5
பூங்கிளி கைவரும் நாள் வருமா?
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா?


பாடல் 6
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்..
நீ வந்து தான் நீராடி போ..


பாடல் 7
பெண்னே நீ..
பாதி ஹிட்லரா?
மீதி பாதிதான் தெரசாவா?


படிக்கிற நீங்க இது எந்த பாடல்/படம்ன்னு கண்டுபிடிக்க முடியுமா?


pst: கார்த்திக், முந்தைய பதிவுல தைம் கிடைகாம பதில் எழுத முடியலன்னு சொன்னீங்க.. இப்ப முயற்ச்சி செய்ங்க..

இனிமேல், வாரம் ஒரு முறை இதுபோல் ஒரு குவீஸ் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க??

102. Brain Teaser 13

Yesterday's teaser is also an easy one, right?

The asnwer is:
West Indies.. How? [WEST IN D's].

Those who answered correctly:
1- Johnson D.S. --> 1 hour
2- Mr.Bond --> 2 hours
3- C.M. Haniff --> 7 hours

Mr.Bond has asked for the latest rankings...
5- Naagai Siva - 1 correct
4- Wonderboy - 2 correct answers
3- Mr. Bond - 3 correct answers
2- C.M. Haniff - 5 correct answers
1- Johnson D.S. - 7 correct answers

Today's teaser will test your English vocabulary. ;)

There is a common English word that is nine letters long. Each time you remove a letter from it, it still remains an English word - from nine letters right down to a single letter. What is the original word, and what are the words that it becomes after removing one letter at a time?

Tuesday, November 21, 2006

101. கிழக்கு கடற்கரை சாலை--> யாரும் போகாத சாலை!!!!

ஸ்ரி காந்த், S.S. ஸ்டான்லி மூன்றாவது முறையாக இணையும் கிழக்கு கடற்கரை சாலை.. என்ன ஒரு அழகான தலைப்பு. இதுதான் இந்த வார இறுதியில் நான் பார்க்கும் தமிழ் படம்ன்னு முடிவு பன்னி பார்த்தேன். ஆனால், படம் !!!!!!!!!

நான் இங்கே சொல்ல போவதை மூன்றாக பிரிக்கிறேன்..

1- விமர்சனம் (படம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த பாகத்தை படிக்காதீர்!)

2- படத்தின் சொதப்பல் காட்சிகள்

3- வேறு படத்தின் தழுவல்கள்

1- விமர்சனம்


தான் என்ன வேலை பார்த்தாலும் பரவாயில்லை, ஆனால், அந்த வேலை கிழக்கு கடற்கரை சாலையில்தான் இருக்க வேண்டுமென்று அங்கே புதிதாக வரும் ஹீரோ, சந்தோஷ் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை சேர்கிறார். பெட்ரோல் போட வரும் பணக்கார ஹீரோயினை (பிரியா), நாம் காதலிக்க முடியாது என கூறும் நண்பர்களிடம் (முத்துக்காளை, கஞ்சா கருப்பு) தான் காதலித்து காட்டுவதாக சவால் விடுகிறார் சந்தோஷ்.

சவாலில் வெற்றி பெற சந்தோஷ் எடுக்கும் முயற்ச்சிகளை பார்க்கவே வெறுப்பாகவே இருக்கிறது. பிரியாவுக்கும் சந்தோஷின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் தன் அண்ணன்/லீடிங் லாயர்/ வில்லன் (GTR)-இடம் புகார் செய்கிறார். அண்ண்ன் மிறட்ட, சந்தோஷ் பிரியாவிடம் வந்து நிற்க்க "நான் உன்னை காதலிக்கதானே சொன்னேன். தப்பு பன்ன சொல்லலியே?"ன்னு கேட்க்க, பிரியா அவனின் நிலமையை பார்க்க.... "சரி, தினமும் நான் உன்னை வந்து பார்க்கிறேன். நீ என்னை தேடி வராதே!"ன்னு சொல்ல.. இவர்கள் காதல் நாளொரு மேனியும் பொழுதொறு வண்ணமுமாக வளர்கிறது..

அண்ணனுக்கு காதல் தெரியவர, தங்கையை அவரே கடத்த, பழியை சந்தோஷ் மேலே போடுகிறார். ஹீரோ ஹீரோயினை கண்டுபிடிக்க.. ஹீரோயின் தன் அண்ணனை பற்றி அறிய.. அண்ணன் இரண்டு பேரயும் கொல்ல துணிகிறார். அதுவும் எப்படி? இரண்டு பேரையும் கட்டி கடலில் வீசுகிறார்.

கடைசியில் படம் சுபம். அதாவது காதலர்கள் ஆழ் கடலில் இருந்து தப்பித்து ஒன்னு சேர்கிறார்கள்! (???)

இடை இடையே ஹீரோ தனக்கு நடக்கும் அனுபவங்களை கடல் நீருடன் பேசுகிறார். ஃப்லாஷ்பேக் காட்சிகளாக வராமல் ஒரு சில வரிகளாகவே முடிந்தது. சுனாமின்னு சொன்னா மக்கள் (பரிதாபப்பட்டு) படத்தை பார்க்க வருவார்கள் என்று இயக்குனர் தப்பு கணக்கு போட்டுவிட்டார் போல.

2- படத்தின் சொதப்பல் காட்சிகள்

1- யாருன்னே தெரியத ஹீரோ பெட்ரோல் பங்கில் படுக்க இடம் கேட்டு வருகிறார். (கி.க. சாலையில் படுக்க வேற இடமே இல்லையா?)

2- இடம் கொடுக்காத வேலையாள்கள் ஹீரோவுக்கு 2 பழம் கொடுத்து பஸ் ஸ்டாப்-ல படுக்க சொல்கின்றனர். (எதுக்கு இந்த 2 பழம்? டின்னரா?)

3- பங்க்கில் கலாட்டா செய்யும் சிலரை அடித்து நொறுக்குகிறார் ஹீரோ. அதுக்க்கு பெட்ரோல் பங்கின் மேனேஜர் "இங்கே நிறைய பேர் வந்து கலாட்டா செய்கிறார்கள். நீ இங்கேயே தங்கி இதை பார்த்துக்கொள்"ன்னு சொல்லுறாரு. (அப்ப, கி.க.சாலயிலே நிறைய ரௌடிகள் தானா?)

4- பெட்ரோல் போட வரும் பிரியாவின் பேக்கை களவாடும் முத்துக்காளை (இனிமேல், பெட்ரோல் போடும் போது உங்கள் பேக்கை காணும்ன்னா பங்கில் வேலை செய்கிறவர்களின் மீது புகார் கொடுங்கள். உங்கள் பை கிடைத்துவிடும்.)

5- பணக்கார பெண். பெட்ரோல் போடும் நாம் காதலிக்க முடியாதுன்னு நண்பர்கள் சொல்ல நான் காதலிக்கிறேன் அன்று சவால் விடும் ஹீரோ. (அப்ப, காலேஜ் படிக்கும்/ பணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்கள் யாரவது பார்த்தால், நீங்கள் சவால் விட்டதால்தான் காதலிப்பீர்களா? இதுதான் உண்மையான காதலா?)

6- ஹீரோவின் வற்புறுத்தல் தாங்காமல், தானே அவரை தினம் தேடி வந்து பார்ப்பேன் என சொல்லும் ஹீரோயின். (பிடிக்கவில்லை என்றால், பார்க்கவே அறுவருப்பாக இருக்கும் பட்சத்தில், ஏன் நீங்கள் அவரை தினம் தேடி செல்ல வேண்டும்? ஹீரோவின் தொல்லைகளை குறைக்க வேற வழிகளே இல்லையா?)

7- சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட தன் சொந்தகாரர்களிடம் பேசுவதாக நினைத்து தினம் கடல் நீரிடம் பேசும் ஹீரோ (ஆனால், அந்த கவலயும் பாசமும் உங்கள் முகத்தில் பார்க்க முடியவில்லையே ஹீரோ?)

8- ஹீரோயின் காதலிப்பதாக சொனதும், ஹீரோ தான் காதலிக்கவில்லைன்னு சொல்கிறார். கேட்டால் "நீ என்னை காதலிப்பதாக சொல். நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்னுதானே சொன்னேன். உன்னை காதலிப்பதாக சொல்லவில்லையே?"ன்னு பதில் கூறுகிறார். (என்ன இது?)

9- ஹீரோயின் அண்ணன் ஒரு பிரபலமான வக்கீல்ன்னு சொல்லுராங்க. (ஆனால், ஒரு தடவை கூட கோர்ட்டுக்கோ இல்லை வக்கீல் உடை அணிந்தோ பார்க்க முடியவில்லை)

10- இரண்டு பேரையும் கடலில் வீசப்பட்டதும், ஒரு சுறா மீன் வருகிறது. ஆனால், இவர்கள் தாக்கப்படவில்லை (இவர்கள் invisible-ஆ இல்லை சுறா மீன் குருடா?)

11- இருக்கி கட்டப்பட்ட கயிற்றை கடலில் மூழ்கியிருக்கும் ஹீரோ அவிழ்த்து, ஹீரோயினையும் (கடலில் ரொம்ப ஆழமான் இடத்துக்கு தள்ளப்பட்ட இடத்திலிருந்து) காப்பாற்றுகிறார் (என்ன கொடுமை இது சரவணா?)

3- வேறு படத்தின் தழுவல்கள்


1- படத்தின் நாயகன் அறிமுகம் ஆகும் காட்சி

-மனசெல்லாம் படத்தில் ரயிலில் இருந்து முகத்தை வெளிக்காட்டி எட்டிப்பார்த்து விட்டு பிறகு இறங்குவடு

- கி.க.சாவில் லாரியிலிருந்து முகத்தை வெளிக்காட்டி எட்டிப்பார்த்து விட்டு பிறகு இறங்குவடு


2- படத்தின் நாயகிக்கு பிடிக்காத வகையில் அவரை காதலிக்க முயல்வது

- திருமலையில் விஜய் செய்யும் சகிக்காத கோமாளிதனங்கள்

- கி.க. சாவில் ஸ்ரிகாந்த் செய்யும் கோமாளித்தனத்தையும் பொறுக்கமுடியவில்லை


3- ஏதாவது ஒரு பொருளை, அம்மா அப்பான்னு நினைக்கிறது

- கடல் நீர்தான் இவருக்கு(ஸ்ரி காந்த்) அம்மா, அப்பா எல்லாமே

- ஒரே இடத்தில் பல வருடங்களாக நிருத்தப்பட்ட தேர்தான் அவருக்கு (அஜித்) அம்மா

- இதே போல் நிறைய படத்தில் உள்ளது. இவர் எதை பார்த்து காப்பி அடிச்சாரோ!


உங்களுக்கு (இந்த படம் பார்த்தவர்/ பார்க்காதவர்) ஏதாவது சொல்வதுக்கு இருந்தால், பின்னூட்டம் இடுங்கள்.

Post Number 100

Yeay!!!! at Last....

I reached 100th post by this... :D

Let's see some history of my blog..

I started my blog on March 11, 2006.. my first post was just a welcome message. This is because I dont know what to write.

Then I started to post some useful information like Motorola scholarships and England Optical scholarships for Diploma.. I also posted some news like SPM results, Astronaut's selection..

Most interestingly, I also posted some posts regarding numbers..
1-succession
2- What's Special About These Numbers?
3- Interesting Facts about Pi
4- Difference in two squares using Quadratic Formula
5- Another multiplication
6- 2=3 It's True? Here is the Derivation...

I done all these when I were in trimester break. When I were in Gamma third trimester, I posted 1 post for 2 days.. But when I entered my final year first trimester in June, my blogging activity completely stopped. Just becasue I dont have time for it. I was terribly busy with my Final Year Project (Part 1).. until at one point, I forgot that I had a blog.

I finished my final exams on 7th of October. Then, I was doing preparation for my industrial training. When I surf through Internet, I found out that now blogs are booming!!!!!
I recalled my blog..hehehe

I continued my 1st post of my 2nd phase on 10th of October. Thanks to Karthik, who thought me how to write blog in Tamil. My first blog on Tamil is a dialogue session between Osama & 23rd Pulikesi.

After a few days, I turned on my comments. C.M. Haniff was the 1st one to post a comments in Brain Teaser 1.

But my blog begin to get attention after I wrote இளம் நாயர்கள் - ஓர் அலசல்.. I felt this was my first victory in my blog. This encouraged me to do more in my blog.

My longest chain-post is of course Brain Teaser. where it reached 12 today.
I also planned to start some other chain-posts for Cinema News, Naaddu Nadappu, Enna Paaddu Ithu.

My current blog template is a version 3.1
(0.1 upgraded for using beta blogger)..

Now, Let's look on statistics!!!
Total number of visitors to my site from 3rd May 2006 is 1215..
Busiest day so far is 17th November 2006 (Friday)
Number of views on Busiet Day is 118

3 highest number of views by country:
Malaysia 903
U.S. 107
France 54

what I can say from here is until 10th of October, Total visitor from outside Malaysia was only around 10. but now it reached 300+

Thanks for all my friends who visited my blog. ;-)

Brain Teaser 12

Brain Teaser 11 also an easy one. right?
3 of them answered correctly.
1- Mr. Bond
2- Johnson D.S.
3- C.M. Haniff

Congrats to Wonderboy too because he had tried a good guess..

The answer for previous teaser is:
A year that reads the same rightside up and upside down, 1961. this will not happen again until the year 6009.

Let's go to today's teaser(A really evry easy one today):
What is represented by this BrainBat?

DDDDDDDDDDDDDD
DDDDDWESTDDDDD
DDDDDDDDDDDDDD

answer?

Monday, November 20, 2006

Sri Kanth

இன்னைக்கு ஒரு நடிகரை பற்றி எழுதப்போறேன். இவர் இளங்கோவா அறிமுகமாகி மனோன்னு ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால், மனோ தன் நண்பரை காதலிப்பதை அறிந்ததுமே, காதலனாய் இருந்த இளங்கோ காவலனாய் மாறிட்டாரு..

அனேகமா எல்லாருமே கண்டுபிடிச்சிருப்பீங்க. முதல் படத்திலேயே நல்ல நடிகன்னு பேரெடுத்திருந்தார், Sri காந்த்...

கிழக்கு கடற்கரை சாலையையும் சேர்த்து 14 படங்கள் நடித்திருந்தார்.. ஆனால், வெற்றியை தொட்ட படங்கள் எத்தனை?

வெற்றி பெற்ற படங்கள்:
1- ரோஜா கூட்டம்
2- ஏப்ரல் மாதத்தில்
3- கனா கண்டேன்

மீதி 11?

காலேஜ் படித்துக்கொண்டிருந்த அக்காலத்திலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார் இவர். "டிஷூம்" சசி இவரை பார்த்து, "என் படத்தில் நீ நடிக்கிறீயா?ன்னு கேட்டதும், சரின்னு சொல்லிட்டாரு.

பிறகு படிப்பை பாதியில் விட்டுட்டு இயக்குனரின் அலுவலகத்தில், நடிப்பை கற்றுக்கொண்டார். எப்போதும் "clean shave"வுடன் இருந்தவரை, சசிதான் "கொஞ்சம் தாடி வச்சுக்கோ! உனக்கு நல்லா இருக்கும்"ன்னு சொன்னார். ரோஜா கூட்டம் நன்றாக ஓடியது.

S.S. ஸ்டான்லி ஏப்ரல் மாதத்தில் நடிக்க அழைத்தார். தன் படிப்பு பாதியிலேயே நின்றதை நினைத்து, மீண்டும் காலேஜ் லைஃப் அனுபவிக்கனும்ன்னு இந்த படத்தை ஒப்பு கொண்டவர், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பிலேயே விபத்து ஏற்ப்பட்டது. ஒரு சில இடைவேளைக்கு பிறகு படம் தொடங்கும்போது, படத்து நாயகி சினேகாவின் கால் இன்னும் குணம் அடையவில்லை. அதனால், நாயகி படம் முழுதும் (ஏ நெஞ்சே பாடலை தவிர்த்து), உட்கார்ந்து கொண்டோ, நின்னு கொண்டோதான் இருந்தார். இந்த படம் முடிவதற்க்குள், Sri kanth சினேகாவுடன் காதல்ன்னு கிசுகிசுக்கப்பட்டார்..

படம் நன்றாக ஓடியதும், நிறைய இவக்குனர்கள் இவரை தேடி வந்தவண்ணமே இருந்தனர். 2003-இல் 3 படங்கள் நடித்தார். மனசெல்லாம், பார்த்தீபன் கனவு, ஜூத்.. மனசெல்லாம் படத்தில் இவர் சொல்லிக்கொல்லும்படி நன்றாகதான் நடித்தார் (ஃப்லாஷ்பேக் முடியும்வரை).. ஃப்லாஷ்பேக் முடிந்ததும் இவர் ஓவரா நடிச்சாரு. அப்படிப்பட்ட அந்த ரியாக்ஷன் அங்கே பொருந்தவில்லை. படமும் எடுப்படாமல், தோல்வி கண்டது.

பார்த்தீபன் கனவு வெற்றி படம். இதில், Sri Kanth கதாநாயகனுக்கு தரும் முன்னுரிமையை விட கதைகளமே முக்கியம்ன்னு நினைத்து, ஹீரோயின் பேஸ்ட் படத்தில் நடித்தார். பிறகு தான் அக்க்ஷன் ஹீரோ ஆகனும்ன்னு நடித்தது ஜூத். கதை எடுபடவில்லை.

யாரோ இவருக்கு அக்க்ஷன் பொருந்தவில்லை, இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவைன்னு சொன்னதால், போஸ் படத்துக்கு கடுமயான கொமாண்டோ பயிற்சி எடுத்துக்கொண்டார். சிலர் பாரட்டினார்கள். ஆனால், படம் தோல்வியைதான் சந்தித்தது. அதன் பிறகு வெளியான வர்ணஜாலமும் எந்த ஜாலத்தையும் காட்ட வில்லை.

கனா கண்டேன் இந்தியர்களின் குடிநீர் பிரச்சனை மையமாக வைத்து எடுத்த படம். இது வெற்றி பெற்றதும், இவருக்கு திரும்பவும் நம்பிக்கை வந்தது. வரிசையாக ஒரு நாள் ஒரு கனவு, பம்பர கண்ணாலே, மெர்கூரி பூக்கள், உயிர்னு நடித்தார். இப்போது வந்துள்ள படம் கிழக்கு கடற்கரை சாலை.

இதில், எது வெற்றி பெற்றது, எது இல்லைன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

சரி, நான் ஏன் Sri Kanth-இ பற்றி இன்னைக்கு எழுதியிருக்கேன்னு நீங்கள் நினைக்கலாம். இதற்க்கு நான் நேற்று பார்த்த கிழக்கு கடற்கரை சாலைதான் காரணம். நான் இவ்வளவு எழுதியிருக்கேனென்றால், படம் எப்படியிருக்கும்ன்னு உங்க்ளால் யூகிக்க முடிகிறதா?
நாளை கி.க.சா-வின் விமர்சனம்.

அதுவரை உங்களிடமிருந்து விடை பெருவது,
உங்கள் .::MyFriend ::.

Brain Teaser 11

As I mentioned earlier, Brain Teaser 10 is an easy one. 3 answered it correctly.
1- Wonderboy in 52 minutes
2- C.M. Haniff in 8:31 hours
3- Johnson D.S. after a day

The answer is as they mentioned in comments...

Today's teaser is an logical plus number question.. If you think logically, you can guess it easiely..

What happened in the middle of the twentieth century that will not happen again for 4,000 years?

Hint: Dont think complex. A simple thinking can give you an answer.

Sunday, November 19, 2006

காட்டு தீ போல..

நேற்று பதிவுக்கும் சேர்த்து இன்னைக்கு ரெண்டு விஷயம் பதிவாய் போடுகிறேன். கீழே உள்ள படத்தை பெரிதாய் பார்க்க அதன் மேல் க்ளிக் செய்யவும்.இது சைவமா அசைவமா?அது மட்டும் இல்லை. ஒரு தேரை உள்ளே இருக்குன்னு தெரியாமல் பேக்கிங் செய்த இந்த கம்பெனியில், மற்ற பேக்கெட்டில் என்ன என்ன இருக்குமோ???நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சரி, இன்னைக்கு உள்ள இன்னொரு பதிவு என்னை பற்றி. ஞாபகம் வருதே!! ஞாபகம் வருதே!!!

என் பள்ளியில எனக்கு கொஞ்சம் power & popularity கூடதான். எனக்கு போதிக்காத, எனக்கு தெரியாத ஆசிரியர்களுக்கும் என்னை தெரியும்ன்னா பாருங்களேன்!

எனக்கே ஆச்சர்யமான ஒரு விஷயம்ன்னா, அப்போ நான் ஐந்தாம் படிவம் படிச்சுகிட்டு இருந்தேன். என்னோட additional mathematics ஆசிரியை பிரசவத்துக்காக இரண்டு மாத லீவு போட்டுட்டாங்க.
அவங்க இல்லாதபோது, நாங்க அந்த பாட பீரியட்டில் (period) ஆடாத ஆட்டம் ஒன்னா ரெண்டா?

எங்க அட்டகாசத்த தாங்காம, எங்க வகுப்புக்கு புதுசா ஒரு டீச்சரை நியமிச்சாங்க.. அவங்க தற்காலிக ஆசிரியர். அதுவும் அன்னைக்குதான் அவங்க அந்த பள்ளிக்கே வரும் முதல் நாள். எங்க Physics
டீச்சர் (ரொம்ப நல்ல டீச்சர்), முதல் நாள் எங்கள் சேட்டையை குறைச்சுக்க சொன்னதால், அவங்க வேண்டுகோளுக்கு கட்டுபட்டு அவங்களை ரேக்கிங் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணினோம்..

அந்த டீச்சரும் புன்னகைத்தவாரே வகுப்புக்குள்ளே வந்தார். ரொம்ப இளமையாகவும் அழகாகவும் இருந்தார். 23-24 வயதுதான் ஒருக்கும் அவருக்கு.

சரி.. என்ன அந்த வியப்பான விஷயம்? சொல்லவே இல்லைன்னு நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது..

ஒரு புது ஆசிரியர் வகுப்புக்குள்ளே வந்தால் அவங்க செய்யும் முதல் விஷயம், அவங்க புத்தகத்தை மேஜை மேலே வைத்துவிட்டு அவரை அறிமுகபடுத்துவார், இல்லையா?

இவர் அதை செய்யவில்லை.. அப்படி என்ன செய்தார்?

என்னோட வகுப்புல சீனர், மலாய், தமிழ்ன்னு மூனு இனத்தை சார்ந்தவர்களும் இருந்தார்கள். என்னுடைய வகுப்பு அறிவியல் பிரிவைக்கொண்ட அதுவும் முதல் வகுப்பாக இருந்ததாலேயும், என்னுடைய வகுப்புல சீனர்கள்தான் ஜாஸ்தி. இங்கு சீனர்கள்ன்னு சொன்னாலே நல்ல படிப்பவர்கள்ன்னுதான் பொருள். ஏன்னா ஒவ்வொரு வருஷமும் அவங்கதான் முதல்ல வருவாங்க.

எங்க batchலதான், தமிழ் மாணவர்கள் அறிவியல் பிரிவுல அதிகம்ன்னு சொல்லலாம். அப்போ, 6 தமிழ் மாணவிகளும் 2 தமிழ் மாணவர்களும் இருந்தோம். நான் பொதுவாவே வகுப்புல முன்னாடிதான் உட்காருவேன். எதுக்குன்னா, அப்பதானே வர்ர போர ஆசிரியர்களை நல்ல கலாய்க்க வசதியா இருக்கும்!! மற்ற என் தோழிகள் 5 பேரும் ஒன்னா உக்காருவாங்க..

இந்த புது டீச்சர் வந்ததும் வராததுமாக என் தோழிகள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு போய், என் பெயரை சொல்லி.. உங்களில் யார்ன்னு கேட்டாங்க..

என் தோழிகள் என்னை திரும்பி பார்க்க.. நான் அவர்கள் இடத்துக்கு போக.. என்னன்ன்னு கேட்க்க.. அவங்களும் அதை சொல்ல.. எனக்கு ஆச்சர்யாம இருந்தது.

நான் முன்ன பின்ன அவங்களை பார்த்தது கிடையாது. பிறகு எப்படி என்னை தெரியும்? சரி என்ன விஷயம்ன்னு தெரிவதற்க்கு முன், நிலமையை சரி செய்வோம்ன்னு,

நான் "டீச்சர், அந்த பொண்ணு இனனிக்கு லீவு"ன்னு சொன்னேன்.
அவங்க பதிலுக்கு "அந்த பொண்ணு பள்ளிக்கு லீவு போட்டதே இல்லையே!"ன்னு திரும்பி சொன்னாங்க..

எனக்கு என் நண்பர்களுக்கும் ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. எப்படியோ சமாளிச்சு "நான்" அங்கே இல்லைன்னு நம்பிட்டாங்க..

பிறகு பாடம் போதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. நல்லதான் போதிச்சாங்க.. ஆனால், நானும் சில நண்பர்களும் சேர்ந்து எங்க சுட்டி தனத்தை ஆரம்பிச்சிட்டோம்.. அவங்க சொல்லி தரும் ஒவ்வொன்னுக்கும் எடக்கு மடக்கா கேள்வியை கேட்டோம். அவங்களுக்கு பதில் சொல்ல தெரியாமல் முளிக்க.. "டீச்சர், வீட்டுல போய் home work செய்துட்டு, நாளைக்கு பதில் சொல்லுங்க"ன்னு சொன்னோம்.

அவங்களும் சரின்னு சொன்னாங்க.. பிறகு அன்னைகே நான்தான் அவங்க தேடின ஆள்ன்னு மற்ற டீச்சர்கள் மூலமாக தெரிஞ்சுகிட்டாங்க.

வந்து என்னிடம் கேட்டாங்க.. நான் "தெரியாத ஒருத்தங்க கிட்ட பேசகூடாது! எதுவும் வாங்க கூடதுன்னு அம்மா சொல்லியிருகாங்க"ன்னு சொன்னேன். அவங்க அதுக்கு சிரிச்சாங்க..

என்னை எதுக்கு தேடுனீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க சொன்ன பதில் அனக்கு சிரிப்பத்தான் கொடுத்துச்சு. அவங்க சொன்னது:
"நீ கணித மேதையாமே! Additional Mathematicsல 100% வாங்கினியாமே! சில நேரம் டீச்சருக்கே தெரியாத கணக்கை நீ செய்வாயாமே! நீ வகுப்புல இருக்கும்போது, நான் ஏதாவது பிழையாய் போதிச்சால், என்னை தனியாக வந்து பார்த்து என்ன தப்புன்னு சொல்லு. எல்லார் முன்னுக்கும் சொல்லிடாதே! எனக்கு அவமானமாக போயிடும்".

பிறகுதான் தெரிஞ்சது.. ஏன் எல்லா ஆசிரியருக்கும் என்னை பற்றி தெரிஞ்சிருக்குன்னு! உண்மயில் ஆசிரியர்க்கு செய்ய தெரியாத கணக்கை நான் செய்யவில்லை.. எப்போதும் மாணவர்கள் பரிட்ச்சையில் பதிலளிக்காத சில chapter-களை டீச்சர் வகுப்புல சொல்லி கொடுத்தாலும் யாரும் கேட்க்க மாட்டாங்க. அதுனால, அவங்க அதை படிச்சு கொடுக்க மாட்டாங்க. அது நாளடைவில அவ்ங்க மறந்துடுவாங்க..

நான் அதைதான் செய்வேன். எனக்கு சொல்லி கொடுங்கன்னு அடம் பிடித்தேன்! அவங்க வீட்டுல போய் படித்துட்டு வந்து சொல்லி கொடுக்குறேன்னு சொன்னாங்க. என் நண்பர் ஒருவர் அந்த chapter சம்பந்தப்பட்ட கேள்வியய் அவரிடம் போய் கேட்டபோது, அவருக்கு பதிலளிக்க இயலவில்லை. நான் ஏர்கனவே அதை படித்திருந்ததால், அவர் என்னை செய்ய சொன்னார்.

விஷயம் வேரு விதமாக காட்டு தீயய் போல் பறவிடுச்சு. ஒரே தமாஸு!! ஹீ ஹீ ஹீ

Brain Teaser 10

Sorry friends,

Yesterday I couldn't post anything due to some problems. Now everything fixed.
Ok, Let's see the answer for Brain Teaser 9.

The message was "loose bricks in left wall." The message was put backward with words related to time in between.

This is how the message looks when separated:
ll watch awtfe clock lnisk sundial cirbe timer sool

If you take out watch, clock, sundial, and timer, this is what is left:
llawtfelniskcirbesool

Look at this backwards and this is what you have:
loose bricks in left wall

Jack took out the bricks and escaped in the night. Then, he put the bricks back where they were.


Ok. Now we see who answered it correctly:
1- Johnson D.S. who answered in just 48 minutes. He also gave a good explanation for his answer. check out here.
2- Mr. Bond took 7:36 hour to answer.

Congrats to both of them.
Let's look at the cumulative points of those who answered.

3rd Place: Wonderboy , Nagai Siva, Mr. Bond --> answered one teaser correctly
2nd Place: C.M. Haniff --> answered two teaser correctly
1st Place: Johnson D.S. --> answered three teaser correctly

Anonymous is not included here since I don't know his name. Congrats to all above.

Ok. This is today's teaser:

A man is trapped in a room. The room has only two possible exits: two doors. Through the first door there is a room constructed from magnifying glass. The blazing hot sun instantly fries anything or anyone that enters. Through the second door there is a fire-breathing dragon. How does the man escape?

Hint: Just think logically. very easy to guess. ;)
answer.. answer.. answer..

Saturday, November 18, 2006

Problems.. Problems.. Problems..

Hello Friends,

Sorry I couldn't post the answer for yesterday's teaser as well as post a new teaser.
Also couldnt post a tamil post today!!!

I'm having some problems in my pc. Haih!!!!

Couldnt fix it.. So, I'm gonna format pc in a while. I will be back on tomorrow with a new.. opps!!! 2 new posts.. ;-)

Friends, See you all tomorrow...

Friday, November 17, 2006

Brain Teaser 9

Johnson D.S answered yesterday's teaser correctly with a good explanation. Congrats.
He also gave some other answers for brain teaser 7.. Plz have a look on the answers. Thanks Johnson.

Plz refer here for yesterdays answer.

Starting today I'm enabling comments moderation. This can make others to still guess even though anyone gave a right answers. :-) but from time-to-time I will announce if there is anyone who guess it correctly. ;-)

Today's teaser will make you as a detective to think:

Peter and Jack are fellow con artists who deliver coded messages to each other to communicate.

Recently Jack was put in jail for stealing a rare and expensive diamond. Only a few days after this, Peter sent him a friendly letter asking him how he was.

On the inside of the envelope of the letter, he hid a code. Yesterday, Jack escaped and left the envelope and the letter inside the jail cell. The police did some research and found the code on the inside of the envelope, but they haven't been able to crack it.

You as a detective, could you help the police find out what the message is?

This is the code:

llwatchawtfeclocklnisksundialcirbetimersool

If no one couldnt guess it until 2pm Malaysian Time today, I will give you hint. ;-)

கூடி கும்மியடிக்க..

நேற்று எழுதிய என்ன பாட்டு இது பதிவுல கேட்ட கேள்விக்கு "Mr. Anonymous 1" 3 கேள்விக்கு கரெக்ட்டா பதில் சொல்லிட்டார். மற்ற ரெண்டுக்கும் 5 மணிக்கு க்ளு தருகிறேன்னு சொல்லி பிறகு கொடுத்தேன். ஆனால், அதன் பிறகு யாரும் முயற்ச்சி செய்யவில்லை.
இதுதான் பதில்கள்:
1- என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா (உன்னை நினைத்து)
2- எங்கே அந்த வெண்ணிலா ( வருஷமெல்லாம் வசந்தம்)
3- பாடவா பாடவா (லிட்டில் ஜான்)
4- ரா ரா ரா ராஜகுமாரா (என்னவளே)
5- தில்லானா தில்லானா (முத்து)

3 பதிலை சரியாக சொன்ன Mr. Anonymous 1-க்கு வாழ்த்துக்கள்!!
-----------------------------------------------------------------------------
சினிமா நியூஸ் 2

சினிமா நியூஸ் ஒன்னுக்கும் ரெண்டுக்கும் பத்து நாலு கேப் விட்டாச்சு. இனிமேல், நீண்ட கேப் விடாமல் எழுதிடுறேன்..

இன்னைக்கு சினிமா நியூஸ் ஆரம்பிக்கும் முன்னே ஒரு குட் நியூஸ். சித்தார்த், ஜெனிலியா நடித்த பொம்மரிலு படம் நேற்றோடு 100 நாட்கள் ஓடிவிட்டது. இன்னமும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்ப்பு இருக்குது. இந்த படக்குழுவினர் இப்போது துபாய், ஆஸ்திரேலியாவில் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிகொண்டிருக்கின்றனர். வாழ்த்துக்கள்!

நம்ம ஹரிஸ் ஜெயராஜ் தெலுங்குல ஒரு கலக்கு கலக்கிகிட்டு இருக்காரு. மகேஷ் பாபு, திரிஷா நடிச்ச சைனிகுடு படத்துல உள்ள ரெண்டு பாடல்கள் தான் தாப் தென் வரிஸையில முதல் ரெண்டு இடத்துல இருக்கு. இதுதான் இவரது நேரடி முதல் தெலுங்கு படம்.

மகேஷ் பாபுன்னதும் எனக்கு ஞாபகம் வருவது விஜய்தான். தெலுங்குல மகேஷ் நடிக்கிற அத்தனை வெற்றி படங்களையும் தமிழில் உரிமை வாங்கி, ரீமேக் செய்யிரவர் விஜய். சேம்பிலுக்கு ரெண்டு சொல்லனும்ன்னா கில்லி, ஆதி. இப்போ விஜய் நடிச்சிகிட்டு இருக்கும் போக்கிரியும் ம்கேஷ்யுடைய படம்தான். கூடிய சீக்கிரதுல சைனிகுடு படத்தின் உரிமையையும் வாங்கிடுவாரு போல. (கொசுறு: தரணி இயக்குதுல வந்த பங்காரம் டெலுங்கு படம் தமிழில் அவர் ரீமேக் செய்கிறார். விஜயும் திரிஷாவும் ஜோடி சேர்ராங்க..)

அப்படி இப்படின்னு ஏதோ ஒரு வழியா தங்கர் பச்சனுடைய பிரச்சனைகள் தெளிவாகி, தன்னுடைய பள்ளிகூடம் ஆரம்பிக்க போகிறர். அட, எப்ப இவர் ஸ்கூல் கட்டுனார்ன்னு கேட்காதிங்க. இவர் அடுத்து இயக்கும் படத்தின் பெயர்தான் இது. ஹீரொ நரேன். ஹீரோயின் சினேகா. கூடவே இவரும் இயக்குனர் சீமானும் நடிக்கிறாங்க.

படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காத ஹீரோக்கள் சொந்த நிறுவனம் ஆரம்பிச்சு அதில் நடிப்பது வழக்கம். இப்போ இந்த லிஸ்ட்ல புதுசா சேர்ந்திருப்பவர் தனுஷ். A.D பிச்சர்ஸ்ன்னு ஆரம்பிச்சு தில்லாலங்கடின்னு படத்துக்கு பேர் வச்சு தயாரித்து நடிக்க போறாரு.

மாமனார் சூப்பர் ஸ்டாரு அனிமேஷன்னுல வந்து சின்ன பிள்ளைங்கல கவர போறாரு. பெரிய பட்ஜட்டுல எடுக்கபோர இந்த படத்துக்கு அனிமேஷன் செய்யப்போறது ரஜினியின் கடைக்குட்டி சௌந்தர்யாதான்.. சௌந்தர்யா, மாமாவையே தயாரிக்க சொல்லுங்களேன்!!

கடைசியா இங்க SJ சூர்யாவை கொஞ்சம் பார்ப்போம். வாலி, குஷின்னு இயக்குனவரு, எப்போ தமிழ் சினிமாவில் நடிகனா ஆனாரோ, அப்போதிருந்து அவர் செய்யுற சில்மிஷங்கள் இன்னொம் கொஞ்சம் ஓவரா ஆகிடுச்சு. நியூ, அ ஆ, கள்வனின் காதலி.. மூன்றிலுமே இசை சூப்பர். ஆனால், படத்தில் வரும் சில காட்சிகளையும், வசனங்களையும் பார்த்தால், சென்சார் போர்ட் ஒழுங்கா வேலை செய்யவில்லையோன்னு சந்தேகமா இருக்கு. திருமகன் படத்திம் ஸ்டில்களை பார்த்தால், இது அந்த வகையை சேராத படம் மாதிரி தெரியுது. ஆனல், இப்போ பூஜை போட்டிருக்கும் வியாபாரியை பார்த்தல், இரண்டு படத்துக்கும் சேர்த்து கவர்ச்சியையும் ஆபாசத்தையும் இங்கே வழங்கிடுவார் போலிருக்கு. சும்மாவா!! வாழ மீனு, இடுப்பாட்டும் பொன்னு, கேடி பொன்னுன்னு மூனு பேரு இருக்காங்களே.. கூடி கும்மியடிகிறதுக்கு!!!!

Thursday, November 16, 2006

Brain Teaser 8

Brain Teaser 7 was an easy one.

Alot of you answered correctly. Friends who answered correctly:
1- Mr. Anonymous who still havent reveal his identity
2- Naagai Siva
3- C.M. Haniff

As I told earlier, friends who answered correctly in my Y! messenger will not be included in this list. Congrats for those guessed correctly & those who couldnt, please keep trying.. :-)

As far as I know and tried, there is only one answer which is 194. If you know any other number, please post it also. Thank you!

Ok. Today's teaser is:

What row of numbers comes next?

1
11
21
1211
111221
312211
13112221

Since this is also an mathematical question, I hope alot of you can guess the right answer.. :-)

என்ன பாட்டு இது?

நாம் தினமும் பாடல்கள் கேட்கிறோம்..

அதிலே சில மனதில் அச்சடித்தது போல் மனதிலே பதிவாகிவிடும்;
சில எத்தனை தடவை கேட்டாலும் நினைவில் இருக்காது;
சில திரும்பவும் கேட்கவே கூடாதுன்னு நினைப்போம்;
சில பாடல்களின் வரி நமக்கே எழுதினது போல அனுபவிப்போம்;

இப்படி பல பல காரணங்கள் இருந்தும் நாம் கண்டிப்பா, அதுவும் தமிழ் பாட்டை கேட்போம்.. அதுனாலேதான் இன்னைக்கு இசை சம்பந்தப்பட்ட ஒரு பதிவுடன் வந்திருக்கிறேன்..

இங்கு கீழே நான் 5 பாடல்களின் வரிகளை எழுதியுள்ளேன். இந்த பாடல் வரிகள் எந்த பாடல்/படம் என்று உங்களால் கண்டுபிடிக்க இயலுமா?

பாடல் 1
உன்னை மழை என்பதா?
இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?

பாடல் 2
எனக்கென இருந்தது ஒரு மனசு..
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு..


பாடல் 3
சின்ன சின்ன கிண்ணம்..
ஊற்றி வைத்த வண்ணம்..
தூறிகையில் சேர்ந்தால்..
ஓவியங்கள் ஆகும்..


பாடல் 4
ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு..
கண்டுப்பிடிப்பது ஆண்களின் பொறுப்பு..


பாடல் 5
கடல் வண்ணம் வானின் வண்ணம் கரு வண்ணம்தானே..
கடல் வண்ணம் காணும்போது உனைக் கண்டேன் நானே..


ஐந்தே கேள்விகள்தான்..உங்களுக்கு ஒரு சின்ன க்ளு தருகிறேன்.. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் பாடியவர் நம்ம சுஜாதாதான்!!! இந்த க்ளு உங்களுக்கு ரொம்பவே உதவியாய் இருக்கும்ன்னு நம்புகிறேன்..

Wednesday, November 15, 2006

இன்னைக்கு நான் லீவு!!

இன்னைக்கு தமிழில் போஸ்ட் இல்லைன்னு சொல்லுவதற்க்கு ஒரு போஸ்ட்.

அடடே!! இதுவே இன்னைக்கு தமிழில் ஒரு போஸ்ட்-ஆ ஆச்சே!!!
இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு. மிச்சம் இருக்கும் நேரத்தில் உங்களோட ப்லோக்கை விசிட் அடிக்கனும். அதனால் இன்னைக்கு என் ப்லோக்கு லீவு. ஹீ ஹீ ஹீ...

லீவுன்னா ஃபுல் லீவு இல்லை. Half day லீவுதான். ஏன்னா, இன்னைக்கு புது தீஸர் இருக்கு. முயற்ச்சி செய்து பாருங்கள். உங்களுக்கு விடை தெரியுமா?

Brain Teaser 7

Brain Teaser 6 correctly answered by Mr. Anonymous

The answer for Teaser 6 is:
It was the Maid. She said she was getting the mail. There is no mail on Sunday!

Ok. Today's teaser is a mathematical question. You need to be good in addition and substraction in order to asnwer this question. hmm.. You can use calculator also! No limit in using any calculating tools. hehe. The question is:

I am a three digit number.
My tens digit is five more than my ones digit.
My hundreds digit is eight less than my tens digit.

What number am I?

Tuesday, November 14, 2006

A True Love Story...

This is not my own work. I got this from my email. I'm posting here for you all to read..

This is a true story of a young college gurl who past away last month, at shah alam. Her name is Priya. She was hitten by a lorry. i dont wanna mention the name of the college. She have a boy friend named Shankar. he stays at Johor. Both of them are true lovers. They always hang around with their handphone. You can never see her without her handphone. She spends 3/4 of a day talking with shankar.
Both of them using Maxis. He only registered Priya's in his frends & familylist. she only registered Shankar's in her frens & family list. Priya's family know bout their relationship. Shankar is very close with Priya's family.
**just imagine their love**>>
Before she passed away she always tell to her frens, "If I passed away please burn me with my handphone". she oso said the same thing to her parents. after her death, ppl cant take her coffin. i was there. a lot of them tried to do so but still cannot. all men including me, had tried to take the coffin, the result is we cant even managed to move it.
They called their neighbour, a "bomoh"> from thailand (pak Darin), who is a fren of her father. he take a seat and start whispering lonely, after a few minutes, he said "this gurl misses something here". then her frens tells Darin bout her intentions to burn her with her phone. then he open the coffin and place her phone and SIM card inside & nails the casket. after that they tried to take coffin. it was moved to the van easily. all of us were shocked.
**can u feel the fear. i'm shaking at this moment**>>
Priya's parents didnt inform this to Shankar. **how pity is Shankar** Aafter 2 weeks Shankar called Priya's mom. Shankar:...."Atte, I'm coming home 2day. cook something nice for me. dont tell Priya that i'm coming home 2day. i wanna suprise Priya." her mother replied....."u come home first, iwanna tell u something very important."
After he came to shah alam, they tell the whole story to him. Shankar thinks that they are playing fool with him. he was laughing and tell "dont try to make fool. call Priya to come out. i got a gift 4 her. stop this nonsense". then they show him the original death certificate to him. all of them said the truth to him. they give every proof they have to make him believe it.
**Shankar started to sweat**>>
He said... "its not true. v were talking each other and no lose contacts. she keep calling me till now" Shankar was shaking. at the moment Shankar gets a phone call. "see this is from Priya. see this..." he shows the phone to others. all of them askhim to attend the phone. he talks to her in loudspeaker mode. all of them hears the conversation loud and clear. no cross lines, no humming. it is the actual voice of Priya & the way she talks ia absolutely match her style. the is no chance for others to use her SIM card, coz it is nailed inside her coffin & nobody opens it afterthat.
**can u believe it. what will u do if u r Shankar**>>
Then he hang up. they ask 4 the help of PakDarin. he brings his master (Tok Chen) to solve this matter. he & Darin worked for 5 hours. than they discovered one thing. finally he tells Shankar and her parents that..............>>
**tok Chen was sweating. his face was red.(jz> imagine)** **jz imagine that he is telling this to u**
I jz cant believe it. this is something new. i cant find how it could happen. this is really unbelieveable. i will be crazy if i keep analizing it. Oh My God. maxis is the best line, i ever seen. v can call each other even we r death. wow! i would like to use it. where can i get the SIMpack

--------------> The story is very funny.. LOL!!!! For those non-Malaysian, MAXIS is one of the Telecomunication company which provides mobile line service.

Brain Teaser 6

There is no one answered teaser 5 correctly in comments. One of my friend answered correctly in my yahoo messenger. but that vote will not be included since he did not post in the comment.

The answer for teaser 5:
It's an electric train. No smoke from electric train, right? hehehe...

Teaser for today:

A man was found murdered on Sunday morning. His wife immediately called the police. The police questioned the wife and staff and got these alibis:

1- The Wife said she was sleeping.
2- The Cook was cooking breakfast.
3- The Gardener was picking vegetables.
4- The Maid was getting the mail.
5- The Butler was cleaning the closet.

The police instantly arrested the murderer. Who did it and how did they know?

Who can be a good detective? Answer.. Answer.. Answer..

நாட்டு நடப்பு 1

சரி, இன்னைக்காவது சினிமா செய்தி இருக்கான்னு பார்க்க வந்தவர்களுக்கு ஏமற்றத்தை தருவதற்க்கு மன்னிக்கவும்.. இன்னைக்கு சினிமா செய்தி இல்லை. ஒன்லி நாட்டு நடப்புதான்!!!

மேலே உள்ள படத்தை பார்த்தீங்களா? இதுதான் MP9-இன் மூலமாக பினாங்கு தீவை இணைக்கும் இரண்டாவது பாலத்திம் மோடல். இது பத்து காவானையும் பாயான் லெபாஸையும் இணக்கும். ஏற்க்கனவே உள்ள பாலத்தை விட நீளமானது. நடு கடலில் இரண்டு வட்டம் தெறிகிறதா? அது ஓய்வெடுக்கும் இடமாம். இரண்டு மாடி கொண்ட இதில் கீழே வாகனம் நிறுத்தும் இடமும் மேலே காற்று வாங்கும் இடமாக இருக்குமாம். இரண்டு வட்டங்களையும் இணைக்க ஒரு பாலமும் (JEJANTAS) இருக்குமாம். இந்த பாலம் கட்டின பிறகு, பினாங்கு இப்போதைவிட போபுலர் ஆகுமோ இல்லையோ.. கண்டிபாக இது ஒரு டூரிஸ்ட் அத்ரக்க்ஷனாக இருக்கும்.

இதுதான் பினாங்கில் RM 3 மில்லியன் செலவில் கட்டியிருக்கும் சீன கோவில். இதன் பெயர் (SUN QIANG) மூன்று ஆறு கோவில். 3000 அடி பரப்பளவை கொண்ட இந்த கோவிலை கட்ட 4 ஆண்டுகள் எடுக்கப்பட்டது. கட்டிடத்திற்க்கு தேவை பட்ட ஒவ்வொரு பாகமும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இன்று இதனின் திறப்பு விழா. திறப்பு விழாவை முன்னிட்டு 500 வயோதிகர்களுக்கு 'அங் பாவ்' (ANG PAO) மற்றும் உணவுகள் வழங்கப்படும்.

RM400 மில்லியன் செலவில் புதிய நாட்டின் அரண்மனை ஜாலான் டூதா (JALAN DUTA)வில் கட்ட படவிருக்கிறது. 1928-இல் கட்டப்பட்ட பழைய அரண்மனை இப்போதைய வசதிக்கு பொருத்தமாக இல்லாததால் இது கட்டப்படுகிறதாம். அடுத்த ஜூன் மாதம் வேலையை தொடங்கி, 2009-இல் முடிவடையுமாம். சரி, அப்போ பழய அரண்மனை என்ன செய்யபோகிறார்கள்?

Monday, November 13, 2006

உனக்காகத்தானே உயிர்வாழ்கிறேனே!!!

இன்னைக்கு சினிமா நியூஸ் எழுதப்போவதில்லை. மாறாக உங்களுக்காக ஒரு குறும்படம்.. ஹஹஹா..

என்னுடைய முந்தைய பதிவில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் உன்னிகிருஷ்ணன் என்றும், மிக மிக பிடித்த பாடகி சுஜாதா என்றும் குறிப்பிட்டுள்ளேன்.இவர்கள் இரண்டு பேரும் இணைந்து பாடும் எல்லா பாடலும் மிக மிக பெரிய வெற்றியைதான் தரும். தனியாக பாடினாலே நூற்றுக்கு நூறை விட அதிகமாகவே புள்ளிகள் தர தயாராக இருக்கும் நாம், இவர்கள் சேர்ந்து பாடினால் பேனாவில் மை தீரும் அளவுக்கு புள்ளிகளை வாரி வாரி வளங்கினாலும், அது பத்தாது.

ஒரு சில இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் இணந்து பாடிய பாடல்தான் "உனக்காத்தானே உயிர்வாழ்கிறேனே".. படம்: நெஞ்சில் ஜில் ஜில். இந்த பாட்டு எனக்காகவே இவர்கள் பாடின மாதிரி ஒரே ஃபீலிங்.. ஹி ஹி ஹீ.

படத்தை எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து எனக்கே தாடி மீசையெல்லாம் வளர்ந்திடும் போலிருக்கு. அதான் நானே படத்துக்கு காட்சி செய்யலாம்ன்னு முடிவுபன்னிட்டேன்.

என்ன காட்சி போடலாம்ன்னு யோசிச்சப்ப பேரழகி அசினும் பேரழகன் சூர்யாவும்தான் பொருத்தம்ன்னு முடிவெடுத்தேன். கஜினியில் கலக்கிடாங்கல்ல.. (கொசுறு தகவல்: சூர்யாவும் அசினும் கௌதம் இயக்கும் உடல் பொருள் ஆவியில் இணைகின்றனர்)

அதுமட்டுமில்லை. என்னுடைய சீன, மலாய் நண்பர்களையும் இந்த படத்தை பார்க்க வைத்தேன். எல்லாரும் enjoy பன்னினாங்க. அந்த கதையை சுருக்கமாக சொல்ல சொல்லியும் சிலர் வற்புருத்தினாங்க. சோ, இதோ வந்துவிட்டது.. நீங்கள் கேட்ட படம், நான் தினமும் கேட்டு ரசிக்கும் பாடல்...

என்னுடைய முந்தைய கைவரிசைகளை பார்த்து ரசிக்க, கீழே க்ளிக் செய்யவும்:
1- பார்த்த முதல் நாளே (சூர்யா & திரிஷா)
2- ஒரு நொடி இரு நொடி (சூர்யா & அசின்)
3- கவிதையே தெரியுமா (சித்தார்த் & திரிஷா)

பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யவும். நன்றி!!!

Brain Teaser 5

Congrats to Wonderboy who answered Brain Teaser 4 correctly.

The answer for Teaser 4 is:
It was the 2nd person. The first and last person cannot see other people at all, therefore it is either the third or second. The second person realised that if he and the person in front were wearing the same colored hat, the third person would be able to answer the color of his hat right away. However, since there was a long silence, then the color of the his hat and the person in front must be different.

Teaser for today:
An electric train is traveling at 90 kilometers per hour due south. A wind from the north is blowing at 95 kilometers per hour. Which way will the smoke go?

Answer.. Answer.. Answer..

Sunday, November 12, 2006

பிரசாந்தின் பிரச்சனை என்ன?

1990-இல் தனது 17வது வயதிலேயே வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமாகி கலைமாமணி பட்டத்ஹ்தை பெற்றவர் பிரஷாந்த். தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று காதல் இளவரசன், Top Starன்னு அழக்கப்படுகிறார். இவரின் சினிமா வாழ்க்கையை மூன்றாக பிரிக்கலாம்.


1- கல்லூரி வாசலுக்கு முன்
2- கல்லூரி வாசலுக்கு பின்
3- கல்யாணத்துக்கு பின்

---------------------------------------------------------------------------------
1- கல்லூரி வாசலுக்கு முன்
சின்ன பையனாக அரும்பு மீசையுடன் அறிமுகமாகி பாலு மகேந்திரா, RK செல்வமணி, மணிரத்னம், மணிவண்ணன்னு பெயர்போன இயக்குனர்களின் படத்தில் நடித்தார். அதில் இவருக்கு மைல்கல்ன்னு சொன்னா வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா மற்றும் ஆணழகன்தான்.வைகாசி பொறந்தாச்சில் அறிமுகமாகி வண்ண வண்ண பூக்களில் தனக்கென்று ஒரு பாணியை காட்டி, செம்பருத்தியில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்து, திருடா திருடாவில் மேலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து, ஆணழகனில் ஒரு பெண்ணாக மாறினார் இவர்.

மன்னவாக்கு பிறகு, அவரே தனக்கு சில மாறுதல்கள் தேவைன்னு முடிவுப்பன்னி இரண்டு வருடம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். டான்ஸ், கராத்தே, ஜிம், குதிரை சவாரி, பியானோன்னு எல்லா வித வித்தையும் கற்றுக்கொண்டார்.

2- கல்லூரி வாசலுக்கு பின்
அந்த இரண்டு வருட இடைவேளிக்கு பிறகு கிடைத்த வெற்றிதான் சங்கரின் ஜீன்ஸ். அதர்க்கு முன் கல்லூரி வாஸலை பற்றி பேச வேண்டும். யாருன்னே அடையாளம் தெரியாத அளவுக்கு உடம்பையும், முடியயியும், தாடியயியும் வளர்த்துக்கொண்டு அஜித்துடன் கேர்ந்த்து நடித்த படம் கல்லூரி வாசல். அப்போதெல்லாம் இரண்டு ஹீரோ கதையாக இருந்தாலும், கதை நன்றாக இருந்தாலிவர் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெறாவிட்டாலும், பிரஷாந்தின் அப்பியரன்ஸ் நன்றாக பேசப்பட்டது.

பிரஷாந்த் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஜீன்ஸ். பிரஷாந்துக்கு பெரிய செகண்ட் ஒபெனிங் கிடைத்து அப்போது இருந்த முக்கிய ஹீரொக்களில் ஒருவராக கருதப்பட்டார். பிறகு, வரிசையாக கண்ணேதிரே தோன்றினாள், காதல் கவிதை, ஜோடி, அப்புன்னு நிறைய படங்கள் நடித்தார்.இந்த கால கட்டத்தில் ரஜினிக்கு அடுத்து வெளிநாடுகளில் இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை இவருக்குத்தான் அதிகம். அப்போது வெளிநாட்டில் நிறைய கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்.2000-இற்க்கு மேல் வந்த படங்கள் நன்றாக ஓடாவிட்டாலும் கலைநிகழ்ச்சிகள் இவருக்கு புகழ் சேர்த்தன.

3- கல்யாணத்துக்கு பின்


இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்துக்கொண்டார். திருமணம் செய்துக்கொண்ட அந்த நேரத்தில் நிறைய படங்கில் நடிப்பதில் ஒப்புக்கொண்டார். ஆனால், கூட்டி கழித்து பார்த்தால், ஜாம்பவான் மட்டும்தான் ஒப்புக்கொண்ட படத்தில் வெளியான் ஒரே படம். கிரஹலக்ஷ்மியை மணம்புரிந்த இவர் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று நினைத்தவர், இப்போது தனக்கு ஓர் ஆண் குழந்தை இருந்தும், இவர் தனது மனைவியுடன் இல்லை.

அண்மையில் இவரது படங்கள் பல வெளிவராமலேயே இருக்கின்றன. அப்பலெ மீறி வந்த ஜாம்பவான் நன்றாக ஓடவில்லை. நடித்து வெளிவராமலும் பூசை மட்டும் போட்ட படங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் அடைக்களம், தகப்பன் சாமி, புலன் விசாரணை 2 நடித்து முடிந்தும் வெளிவராமல் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன. ரன்வே, போலிஸ் போன்ற பூசை போட்டவுடன் கிடப்பில் கிடக்கின்றன.


இதற்க்கு காரணம் என்ன? பிரசாந்துக்கு இன்றுவரை தயாரிப்பாளர்களிடம் பிரச்சனை கிடையாது. எந்த இயக்குனரிடமும் என் காட்சி இப்படி வரவேண்டும் அப்படி வரவேண்டும் என்று வற்புருத்தியதும் கிடையாது. எந்த நடிகைகளிடமும் கிசு கிசு கிடைஆஹு. ஹான் உண்டு தன் வேளையுண்டு என்று இருந்த பிரசாந்தின் பிரச்சனை என்ன? இவரை விட கிறமை குறைந்த பல நடிகர்கள் பலர் இன்று தமிழ் திரைக்கு வந்துவிட்டனர்.இவரது பிரச்சனையய் கண்டுபிடித்து இவரே மீண்டு வருவதுதான் சிறந்தது!!!!

Saturday, November 11, 2006

Brain Teaser 4

Congrats to Johnson D.S. for answering Brain Teaser 3 correctly.

The answer for Teaser 3 is:

1- 1 min Person & 2 min Person cross the bridge = 2 min
2- 1 min Person returns = 1 min
3- 5 min Person & 10 min Person cross the bridge = 10min
4- 2 min Person returns = 2 min
5- 1 min Person & 2 min Person cross the bridge = 2 min

Total minutes = 2 + 1 + 10 + 2 + 2 = 17 minutes..

Teaser for Today:

There were 4 people sitting in a row, trying to win $50 from a riddle.

The one in front was wearing a red hat. The second from the front was wearing a blue hat. The third from the front was wearing a red hat. The last was wearing a blue hat and is blind-folded.
Each of them were informed that they are all wearing a hat, the last person is blind-folded and that there are 2 red and 2 blue hats. if they can guess the color of their hat, then they win the prize.

There was a long silence, then one of them guessed the color of his hat correctly. Who was it & how he can guess correctly?

(note that they can only see the person in front of them and are not allowed to turn around and see behind them.)

See who can answer today's teaser.... hehehe

Maths By Genius

These are maths solution worked out by Genius. Have fun!!!!





Friday, November 10, 2006

You have Two Cows

நேற்று எழுதின இளம் நாயகர்கள் ஓர் அலசல் என்ற பதிவுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இன்னும் எழுதுங்கன்னு நிரைய பேர் சொல்லறீங்க. நீங்க எதை பற்றி எழுதுனும்னு சொல்லுங்க. நான் எழுத முயற்ச்சிக்கிறேன். இன்னைக்குள்ள பதிவுல தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதிருக்கேன். ஏன்னு கேட்டீங்கன்னா என்னுடைய மலாய், சீன மற்றும் தமிழ் படிக்க இயலாத தமிழ் நண்பர்கள் நான் என்ன எழுதியிருக்கேன்னு தெரியலன்னு சொன்னாங்க. அதுக்கு இனிமேல் தமிழ்ல எழுதமாட்டேன்னு நினச்சுகாதீங்க. தமிழ்ல இன்னும் நியைய எழுதுவேன். சில விஷயங்கள் அவர்களிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டியிருந்தால் இப்படி கலந்து எழுதுவேன்..
--->
You have two cows is a philosophical truth of the entire world. Even, Nostradamus demonstrated in 1972 that the total number of two-cow truths is infinite. A long-standing tradition of mathematics has been the discovery of new truths pertaining to two-cow ownership. Currently, 45,892 two-cow truths are known.

Mathematical proof that you have two cows lies in mooemetric identity:

This mathematical proof can also be written with the second moometric identity:
Where Moo is the universal moometric constant.


(The above information I got it from internet. Not my own words ok?)
Here, I got some translation which I got from net. I also think some by my own and added here.. Hope you all enjoy reading this.. Say You have Two Cows in different ways!!!!


Original Word:
You have Two Cows

Mistranslation:
some own cows of two

American:
You have two hamburgers. Those hamburgers probably originated from McDonald's.

Baby Speak:
Mama and Dada have two moo-moos.

Backwards:
.swoc owt evah uoY

Binary from ASCII :
01001101 01100001 01101001 01101110
01100111 00100000 01101000 01100001
01110011 00100000 01110100 01110111
01101111 00100000 01100011 01101111
01110111 01110011 00101110

Boolean:
You have TRUE cows.

Caveman:
Hrroom! Hrrum! Hrrussh! Hrruup!

Chatspeak:
u hv 2 cws brb lol

Comedian:
Stop me if you've heard this. Two cows walk into a bar. One says to the other, Moo.

Cow:
Moo.

Cryptography:
MQG B7JX EZQ HQZA

DOS :
You have two cows out of a maximum of 4. Only one can produce milk at a time.

Dragonic:
You had two cows....but then you got hungry and ate them.

Duck:
Quack quack quack quack.

Egyptian hieroglyphs:




Grandpa:
"Back in my day, we had to walk 15 miles in the snow to the two cows. And all for a glass of mil...Zzzzzzzzzzzz."

George W. Bush:
"You have two cows. They hate freedom, they hate democracy and they are cowards."

IM:
OMG u hav, lk, 2 cowz!!1!

Indonesian:
Kamu punya dua sapi. Kamu curi satu sapi portugis. Sapi yang portugis lari sama tetangganya kamu.

Java :
you.setCows(2);

Kidnappers:
We have your two cows. Unless you leave two million dollars in a brown paper bag we'll start sending them back to you, steak by bloody steak. You have 24 hours.

Malay:
Anda mempunyai dua lembu.

Manglish:
Where can two cows like that. Aiyah, oklah.

Math nerds:
Add one cow to another cow and you have two cows.

Microsoft Windows:
Error:404. Two cows not found. There could be a number of reasons for this to happen. You most likely meant One cow, because Bill Gates has Two cows, not you.
1- Press any key to continue mooing this screen.
2- Smash your monitor to continue mooing this screen.
3- Attempt to "borrow" a cow from your friend, only to have this particular screen to pop up stating that you cannot have Two cows at once.

Scooby-Dooby-Doo:
Roo rav roo rows.

Simple:
Cows. Two.

Singlish:
You got two cows lor.

Scientific Notation:
You have 2*100 cows

Tamil:
Ungalidam irandu Pasukkal ullana. Pasu paal kodukkum.
உங்களிடம் இரண்டு பசுக்கள் உள்ளன . பசு பால் கொடுக்கும் .

Tamil (Ajith):
iNtha red ellaaththaiyum karekddaa solluvaan. aNtha rendum unnoada maadunGka. athu!!!!!
இந்த ரெட் எல்லாத்தையும் கரெக்ட்டா ஸொல்லுவான். அந்த ரென்டும் உன்னோட மாடுங்க. அது!!!!!

Tamil (Bharathiraja):
En Iniya thamil makkale, unggal paasathukkuriya bharathiraja meendum kiraamathu azhagaiyum kadhalaiyum eduthukaadda rendu maadukalai arimugapaduthukiren.
என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா மீண்டும் கிராமத்து அழகையும் காதலையும் எடுத்துக்காட்ட ரென்டு மாடுகளை அறிமுகபடுத்துகிறேன்.

Tamil (Madras):
Unnaanda redndu maadu keethuba! maadu paal kudukkum, atha kuduchuttu ootaanda nalla kalaaikalaam!
உன்னாண்ட ரண்டு மாடு கீதுப்பா ! மாடு பால் குடுக்கும் , அத்த குட்சுட்டு ஊட்டாண்ட நல்லா கலாய்க்கலாம்

Tamil (Maniratnam):
Nee , Rendu , Maadu !!
நீ , ரெண்டு , மாடு !!

Tamil (Rajini):
kanNnNu, unGkidda irukkiRathu rendae maaduthaanpaa. iNtha paadchaa Ninaichchaa 100.. 100 vaanGkuvaen. en vazhi thani vazhi!!!
கண்ணு, உங்கிட்ட இருக்கிறது ரென்டே மாடுதான்பா. இந்த பாட்சா நினைச்சா 100.. 100 வாங்குவேன். என் வழி தனி வழி!!!

Tamil (Satyaraj):
Enamma Kannu, Unkidde Maadu Irunthuchu? Enkidde than rendu irukku! Unkidde irunthu suddathuthaan. Yen Kaerekdaraiye Purinjukkira matriye!
என்னம்மா கண்ணு, உங்கிட்ட மாடு இருந்துச்சு? எங்கிட்டதான் ரென்டு இருக்கு! உங்கிட்டருந்து சுட்டதுதான். என் கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டுறியே!!

Tamil(TR Rajenthar):
athoa paaru aadu,
pakkaththila Nikkuthu maadu,
kanNakkula moththam rendu,
thaLLikkiddu poadaa manNdu..
அதோ பாரு ஆடு,
பக்கத்தில நிக்குது மாடு,
கணக்குல மொத்தம் ரென்டு,
தள்ளிக்கிட்டு போடா மண்டு..

Tamil (Vadivelu):
Haiyo Haiyo! Vendam... Azhuthuduven... valikkuthu.. Un maadu kuchi muddaaiyum kadalai middaayum vaangga kadaikku poyirukkupaa! Awww......
ஹைய்யோ.. ஹைய்யோ.. வேண்டாம்.. அழுதுடுவேன்.. வழிக்குது... உன் மாடு குச்சி மிட்டாயும் கடலை மிட்டாயும் வாங்க கடைக்கு போயிருக்குபா.. அவ்வ்வ்....

Tamil (Vijayakath):
iNtha Naaddin ellaiyai theeviravaathiyidamiruNthu kaakka, iNtha kaepdanukku unnudaiya rendu maadu thaevaipaduthu.
இந்த நாட்டின் எல்லையை தீவிரவாதியிடமிருந்து காக்க, இந்த கேப்டனுக்கு உன்னுடைய ரென்டு மாடு தேவைபடுது.

Tamil (Vivek):
adapaavinGkaLaa adapaavinGkaLaa.. poo poddulaam vaikkiRiyae! athu un ponNdaaddi illai. innoada rendu maadunGka. unGkaLaa thiruththa 100 periyaaru vaNthaalum paththaathudaa!
அடபாவிங்களா அடபாவிங்களா.. பூ பொட்டுலாம் வைக்கிறியே! அது உன் பொண்டாட்டி இல்லை. இன்னோட ரென்டு மாடுங்க. உங்களா திருத்த 100 பெரியாரு வந்தாலும் பத்தாதுடா!

Zoo Keepers:
Obviously, we have two cows... in the petting zoo.

எழுதுனதை படிச்சிட்டு நானே சிரிச்சுட்டேன். நீங்கள் எப்படி?

Thursday, November 09, 2006

Bush the FOOL


Brain Teaser 3

SOme of my friends were messaging me privately to know the answer of yesterday's brain teaser. Next time, plz post yr message in comment. SO, others can see what you all thought.

The answer for brain teaser 2 is:

"Happy Birthday."
This song can be sung with anyone's name in it.


Teaser for today:

Four members of a band are walking to a night concert. They decide to take a shortcut, but must cross a bridge. Luckily they have one flashlight.

Because of the varying size of their instruments, it takes each member a different amount of time to cross the bridge - it takes:
1st person - 1 minute
2nd person - 2 minutes
3rd person - 5 minutes
4th person - 10 minutes

They must cross the bridge in pairs, travelling at the slower speed so if the one minute person went with the ten minute person, it would take a total of ten minutes.
Since there is only one flashlight, one person must come back across the bridge, then another pair can cross. They only have 17 minutes to cross the bridge and still get to the concert on time.

What order should they cross to get everyone across and get to the concert?

இளம் நாயர்கள் - ஓர் அலசல்

சினிமாவுக்கு நிறைய பேர் வராங்க.. போராங்க..

இன்னைக்கு நாம் பார்க்க போரது சினிமாவில் இப்போது இருக்கும் இளம் கதாநாயகர்கள்..

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களை போல, இன்றைய இளம் நடிகர்கள் நாளைய சினிமாவின் மாஸ்கோட்கள் தானே!!

மொத்தம் 13 பேரை நன்காக இங்கே பிரித்திருக்கிறேன்..
1- பாராட்டுக்கு உரியவர்
2- வளரும் கலைஞர்
3- முயற்சி தேவை
4- தேரவே முடியாது
___________________________________________________________
பாராட்டுக்கு உரியவர்

1- ஜீவா

இப்பொது ஜீவான்னு சொன்னாலே வித்தியாசமான கதை என்று ஒரு நல்ல பெயர் உண்டு. ஆசை ஆசையாய் படத்தில் அறிமுகமாகி வரையிலும் நல்ல கதைகளாய் தேடி தேடி நடித்திருக்கிரார். அமீரின் ராம் ஒரு மைல்கல்லாய் அமைந்தது இவருக்கு. தன் அப்பா ஒரு பெரிய தயாரிப்பாளர் என்ற பந்தா கிடையாது. ஒவ்வொரு படத்துக்கும் கெட்-அப் மாற்றி நடிக்கிறார். அவர் அடுத்த படத்தில்(தமிழ் MA) 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படியே போனால் கூடிய சீக்கிரத்தில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்திடுவார்.

2- சித்தார்த்

5 போய்ஸ்-இல் ஒரு போயாக அறிமுகமான இவர் ஒரு இணை இயக்குனர். தனது இரண்டாவது படத்திலேயே தனது குருவின் படத்தில் மாதவன்-சூர்யா-வோடு நடித்தவர். தெலுங்கில் வாய்ப்பு வர பிரபுதேவா இயக்கத்தில் த்ரிஷாவோடு ஒரு படம் நடித்தார். படம் மெகா ஹிட். தெலுங்கில் இவரது படம் வாய்ப்புக்கள் அதிகரித்தது. அவரது இயக்குனர் ஆசையை விட முடியாமல் தெலுங்கில் இன்னொரு படம் செய்ய அவரே கதை எழுதினார். அவரது நண்பரான, மனிரத்தினத்தின் இன்னொரு இணை இயக்குனரான சிவக்குமாரய் இயக்குனாராக்கினார். சதா சார்மி கூட நடித்த அந்த படமும் ஹிட் ஆனதும், அமீர்கான் தனது ராங் டே பசந்தி ஹிந்தி படத்துக்கு அழைத்தார். அந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்பாற்றலை பார்த்து அமீர்கானே புகழ்ந்தார். மும்பய் மக்கள் இவரை "தெற்கு இந்திய அமீர்கான்" என்று செல்லமாக அழைக்கின்றனர். இப்போது வெளிவந்து 100 நாட்களையும் தான்டி வெற்றிகரமாக ஓடிக்கொன்டிருக்கிறது பொம்மரில்லு. எல்லா மொழியிலும் நல்ல பெயர் எடுத்திருக்கும் இவர் சீக்கிரமே தமிழில் வந்து சாதிக்க வேண்டும். இவர் சாதிப்பார் என்று எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிரறது.

3- ஆர்யா

உள்ளம் கேட்குமே க்ரிக்கெட் வீரர் இமானாக வாழ்ந்து தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தி கொண்டவர். அறிந்தும் அறியாமலும் படத்தின் குட்டியாக வந்து தனது தனிதிறமையை உணர்த்தியவர். ஒரு ஹீரோவுக்கு தேவையான எல்லாமே இருக்கிறது இவருக்கு. குரலில் கொஞ்சம் மாற்றம் தேவை. விஷ்ணுவர்த்தனின் செல்லமாக இருந்தவர், இப்போது பாலாவின் செல்லமாகிவிட்டார்(நான் கடவுள் படத்தின் ஹீரோ மாற்றப்பட்டுவிட்டார் என்பது புது செய்தி). பல இயக்குனர்கள் ஆர்யா தனது படத்தின் கதாநாயகன் ஆக வேண்டும் என ஆவலாய் இருக்கின்றனர். 7 படங்களில் நடித்த இவர் கைவசம் நிறைய படம் வைத்திருக்கிறார்.

4- பரத்

கதாநாயகன் பேஸ்ட் கதையை விட கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைதான் முக்கியம் என்று அறிந்த இளம் நாயகர்களில் ஜீவாவை தவிர்த்து இன்னொருவர் என்றால் பரத்தான் என்று சொல்வது மிகையாகாது. போய்ஸ் தவிர்த்து அவர் நடித்த மற்ற எல்லா படமும் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டது. அதை சரியாக செய்து தான் ஒரு பாரட்டுக்குரியவர் என்று நிருபித்திருக்கிறார். காதல் முதல் எம்டன் மகன் வரை வெற்றி பெற்றதுக்கு இவரின் முயற்சியும் ஒரு காரணம். இதே வழியின் (தனது தனி வழியில்) இவர் போனால் இவருக்கும் வெற்றி நிச்சயம்.

5- விஷால்

செல்லமேயில் ரீமாவின் செல்லமாக அறிமுகமான இவரும் ஒரு இணை இயக்குனர். எதேச்சய்யாக் நடிகரானவர். தனக்கென்று ஒரு தனி பாணியும் தனக்கேற்ற கதாப்பாத்திரத்தையும் மிக கவனமாக தேர்ந்த்தெடுப்பவர். அதனால், இவர் நடித்த ஒவ்வொரு படமும் வெற்றியை முத்தமிட்டது. தனக்கு ஆக்ஸ்ஷன்தான் ஏற்றது என்று முடிவுபன்னி அதிலே கவனம் ஸெலுத்துகிறார். விஷால், உங்க வெற்றிக்கு பாரட்டுக்கள். ஆனால், குடும்பம், காமெடி என்ற வேறு ட்ராக்கிலும் கவனம் செலுத்துங்கள். அப்போதுதான் என்றும் சினிமாவில் நிழச்சி நிக்கலாம்.

வளரும் கலைஞர்

1- பிரித்திவிராஜ்

கனா கண்டேனில் மிரட்டும் ஆனால் அழகான கனவாக அறிமுகமானவர் இவர். படத்தின் ஹீரோ ஹீரோவினை விட அதிகம் ஜொலித்தவர் இவர்தான். இவர் ஒரு மலையாள உலகின் இறக்குமதி. பாக்யராஜ் தனது மகளய் அறிமுகப்படுத்திய படத்தில் ஒரு ஹீரோவாக் அவதாரம் எடுத்தவர். தனக்கு நடிப்பு, டான்ஸ், காமெடி மற்றும் காதலும் செய்ய தெரியும் என்று நிருபித்தார் பாரிஜாதத்தில். இயக்குனர்கள் பார்வை இவர் மேல் வீச ஆரம்பித்தது. அற்புத தீவு தற்போது அவர் நடித்து வெளிவரபோக இருக்கும் படம். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில், ஜோதிகவுடன் இணைந்து நடிக்கும் இன்னொரு படம் மொழி. இந்த இரண்டும் வெற்றி பெற்றால், இவரும் மேலே உள்ள பாராட்டுக்குரியவர் லிஸ்டில் சேர்ந்து விடலாம்.

2- பிரசன்னா

சுசிகணேசன் அறிமுகபடுத்தியவர். ஆரம்ப காலத்தில் சினிமா உலகில் ரொம்பவும் கஷ்டப்பட்டவர். 5 ஸ்டார் பிரகு நடித்த மூன்று படங்களும் படு தோல்வி. பிரகாஷ்ராஜ் டூயட் மூவிஸ் மூலமாக நல்ல நடிகர் என்ற வாய்ப்பை பெற உதவினார். அழகிய தீயே படம் நன்றாக ஓடியது. பிரசன்னாவுக்கும் நடிக்க தெறியும் என்று தமிழ் சினிமா புறிந்துகொண்டது. வாய்ப்புக்கள் இவரை தேடி வருகின்றன. அழகிய தீயே, கண்ட நாள் முதல் போன்ற படத்தில் வழங்கிய நடிப்பையும், அதை விட மேலான நடிப்பையும் அவர் வழங்கினால், இவரும் பாரட்டக்கூடியவர் ஆவார்.

முயற்சி தேவை

1- ரவி

நான் ஏன் இவரை இந்த லிஸ்டில் முதல் இடத்தில் எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் சுலபமாக அறியலாம். ஆம். ரீமேக்.. ரீமேக்.. ரீமேக்.. ரவி = ரீமேக்.
ரவி நடித்த படம் மூன்று அபார வெற்றி பெற்றது. ஜெயம், M குமரன் S/ஓ மஹாலக்ஷ்மி மற்றும் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும். மூன்றுமே ரீமேக். ரவி தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்திருக்க வேண்டும். முதல் படத்தில் நிதினையும், இரண்டாவது படத்தில் ரவி தேஜாவையும், மூன்றாவது படத்தில் சித்தார்தையும் காபியடித்திருக்கிறார். ஒரிஜினல் வெர்ஷன் படத்தை பார்க்காதவர்கள், ரவியின் நடிப்பை புகழ்வர். ஆனால், நிதின், ரவிதேஜா, சித்தார்த்தான் அந்த படத்துக்கு மேலும் பொறுந்துவார்கள். ரவி கொஞ்சம் கூட வித்தியாசமான நடிப்பை வழங்கவில்லை. அவர் நடித்த மற்ற படங்கள் (தாஸ், இதயதிருடன்) தோல்வியை தழுவின. இந்த இரண்டு படங்கலும் னேரடி தமிழ் படங்கள். ரவி மற்றவர்களின் நடிப்பை காபியடித்து நடித்தாலும், அவருக்கென்று திறமை இருக்கிறது. இவர் அந்த திறமையை சீக்கிரமே வெளிகொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இவர் சீக்கிரமே தூக்கியெரியப்படுவார்.

2- தனுஷ்

பரத்தை போலவே இவர் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கப்படும் படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இவருக்கு ஒரு ஹீரோவுக்கு உள்ள உடல்வாகு இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் கதைகள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், அவை வெற்றி கண்டன. தனுஷ்க்கு திற்மை இருக்கு. ஆனால், தான் ஒரு ஹீரோ என்றும், தான் பத்து தடியர்களை ஒரே நேரத்தில் அடித்து துவைக்க முடியும் என்றும், ஹேய் என்று கத்தினால் மற்றவர்கள் அலறியடிது ஓடுவார்கள் என்று தப்பு கணக்கு போட கூடாது. சரியா? சுள்ளான், புதுகோட்டயிலிருந்து சரவணன் போன்ற படங்கள் தோல்வி கண்டதுக்கு இதுவும் ஒரு காரணம். நல்ல படங்களை தேடி நடித்தால், நல்ல பெயரை நிலை நாட்ட முடியும்.

3- சிலம்பரசன்

சிம்புக்கு திறமையிருக்கு. ஆனால், அதை அழகாக வெளிகாட்ட தெறியவில்லை. நன்றாக கதை எழுதுகிறார். ஆனால், திரைகதை மற்றும் இயக்க தெறியவில்லை. நடிப்பை வெளிகாட்டுவதுக்கு பதிலாய், ஸ்டைல் காட்டுகிறார். ரொம்ப பேசுகிறார். பேச்சை குறைத்து, கையை அடக்கி, இயக்குனர் சொல்லுவதை போல நடித்தால் ஒரு நல்ல நடிகனாய் வரலாம். நல்ல இயக்குனரிடம் இருந்து இன்னும் கொஞ்சம் கற்றுக்கொண்டு பிறகு படம் இயக்குவது நலம். சினிமா உலகில் நல்ல பெயர் எடுப்பது அதை விட முக்கியம் சிம்பு.

தேரவே முடியாது

இது லாஸ்ட் லிஸ்ட்.. இந்த பகுதியில் இருப்பவர்கள்.. வேஸ்ட். தயாரிப்பாளருக்கு ந்ஷ்டம் தந்து, இயக்குனருக்கு கஷ்டம் தந்து, ரசிகர்களை அழ வைப்பவர்கள்.

1- ரவி கிருஷ்ணா

இந்த பிரிவின் லிஸ்டில் முந்தி கொண்டு நிப்பவர் சாட்சாட் ரவியேதான். தயாரிப்பளருக்கு நஷ்டம், இயக்குனருக்கு கஷ்டம், ரசிகர்களுக்கு டென்ஷியன் தவிர்த்து வேரெதுவும் தருவதில்லை. அவர் முக பாவனை, நடிப்பு திரண், நடனமாடும் அழகு, குரல்... எதுவுமே சகிக்க முடியவில்லை.. அய்யோ அய்யோ!!! கேப்ட்டன் தொல்லை தாங்க முடியாமல், எப்போ சினிமாவில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தால், இன்னொரு ஜுனியர் விஜயகாந்த் உருவாகிக்கொண்டே இருக்கிறார். ரவி, அப்பா தயரிப்பாளர் அண்ணா இயக்குனராமே? நீங்கள்நடிப்பை விட்டுவிட்டு வேரேதாவது ஒரு தொழிலய் இப்போது இருந்து தேடுவது நல்லது.

2- ரமேஷ்

இன்னொருவர் ரமேஷ். தம்பி ஜீவா முன்னனையில் இருக்கும் இந்த நேரத்தில் தம்பி பெயரை கெடுப்பதுக்கென்று வந்திருக்கும் அண்ணன். நீங்களே பாருங்கள் பக்கத்தில் உள்ள புகைபடத்தில். யாரிடமாவது இவர் படத்தின் ஹீரோ என்று சொன்னால் நம்புவார்களா? முகத்தில் கொஞ்சம் பொலிவு வேண்டும். தாடியய் வெட்டி முகத்தை க்லீனாக வைத்துக்கொண்டாலாவது பரவாயில்லை. இவருடைய குரலும் இவருக்கு பொருதமாகவே இல்லை. இவர் பின்னனி குரல் கொடுக்க யாரையாவது தேடுவது சாலச்சிறந்தது. இவர் நடித்து பொறுந்திய ஒரே படம் ஜித்தன். நடிப்பிலும் கடினமான உழப்பு தேவை. நடனம் தெறிந்தால் மட்டுமே பத்தாது. இல்லை, வேற வேலை தேடுவது மிகமிக ந்ல்லது.

3- சிபிராஜ்

அப்பா சத்யராஜ் மகன் நாடே போற்றும் கலைஞனாக வரவேண்டும் என்று புகழ்ய்பெற்ற ஒருவரின் பெயரை (சிபி) வைத்தார். ஆனால், மகனுக்கு கிடைத்த போபுலாரிட்டிக்கு சொந்தகாரர் சிபி இல்லை.. அப்பா சத்யராஜ்தான். அவர் தனியாக நடிக்கும் அனைத்து படங்களும் தோல்வி கண்டன. அப்பா கூட நடித்த படம் வெற்றி கண்டன. இதற்கு காரணம் அப்பாவின் நடிப்பும், லொல்லும், ஜொல்லும்தானே தவிர மகனுக்கு 1% கூட சேராது. அப்பாவை போலவே காமெடியும், லொல்லும், ஜொல்லும் பண்ணினாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். கடைசியில் அப்பாவே தன் மகனை வைத்து ஒரு படம் தயாரிக்கிரார். இந்த படமும் ஊத்திக்கொண்டால், மகன் அப்பாவின் பணத்தை வைத்து வேரொரு தொழிலை தொடங்குவது நல்லது.
_____________________________________________________________
என்னடா இன்று நான் ரொம்ப எழுதியிருக்கேன் என்று பார்க்கிறீர்களா? ஒன்றும் இல்லை. இன்று 1ப்ம் வரையிலும் வேலை இல்லமால் இருந்ததால், ஏதாவது கொஞ்சம் நீட்டா எழுதுனும்னு எழுதினேன். :-)