Monday, January 28, 2008

நூரின், ஷர்லினி, அன்பரசி போன்ற குழந்தைகள் கடத்தலும் வீரத் தமிழ்ப்பெண்ணும்


நூரினின் மரணம். யாரருடைய தவறு? - இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அக்டோபர் 2007-இல் நான் எழுதிய பதிவு.

இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. கடத்தல்காரனை / கொலைகாரனை கண்டுபிடித்தாயிற்று என்று சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனால், இல்லை இல்லை.. இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை! என்றே சொல்லவேண்டிய கட்டாயம் இப்பொழுது!


நூரினின் கேஸையே தீர்க்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு இன்னொரு சவால் விடப்பட்டுள்ளது. ஷர்லினி என்ற 5 வயது குட்டி பாப்பாவும் கடந்த ஜனுவரி ஒன்பதாம் தேதி கடத்தப்பட்டாள். பெட்டாலிங் ஜெயாவில் தன் வீட்டின் அருகாமையிலுள்ள விளையாட்டு மைதானத்தில் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 18 நாட்கள் ஆகின்றது.

காவல்துறை, மீடியாக்கள், மக்கள் என்று நாலாபுறமும் தேடிக்கொண்டேதான் இருக்கின்றனர்.. ஆனால்...... இன்றுவரை கிடைக்கும் ஒரே பதில்: காணவில்லை! மட்டுமே!


இதே மாதிரி ஒரு சம்பவம் தைப்பூசத்துக்கு இரண்டு நாள் முன்பு பாசிர் கூடாங்கிலும் நாட்ந்திருக்கிறது. திருமதி சரஸ்வதி என்பவர் தன் 4 வயது மகள் அன்பரசியை அழைத்துக்கொண்டு அவர் வேலை செய்யும் இடத்துக்கு நடந்து செல்லும்பொழுது, திடீரென பின்புறமாக மோட்டார் சைக்கிளில் கவச தொப்பி அணிந்திருந்த இருவரில் ஒருவன் இவரை உதைத்து இடது காது புறம் குத்தி கீழே தள்ளியிருக்கான்.

இவர் கீழே விழுந்ததும் அவன் அன்பரசியை தூக்கி பின்னால் வந்த நீல நிற பழைய காரின் உள்ளே தள்ளி கதவை மூட முயன்றான். நல்ல வேளையாக திருமதி சரஸ்வதி சீக்கிரமாக சுதாகரித்துக்கொண்டு உடனே எழுந்து ஓடி ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முகத்தில் குத்தி தனது மகளை காரிலிருந்து மீட்டிருக்கிறார். ஆனாலும், மோட்டார் சைக்கிளில் வந்தவன் அவரை தாக்கி அன்பரசியை கடத்த முயன்ற போது அவனை எத்தி, உதைத்து தன் மகளை காரிலிருந்து இழுத்து வெளியே தள்ளியதாகவும் இந்த சம்பவத்தில் தன் மகளுக்கு சில சீராய்ப்பு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது என்றும் சொல்லியிருந்தார்.


"கடத்தல்காரர்களிடமிருந்து எப்படித் தான் என் மகளை காப்பாற்றினேன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் என் உயிரை ஒரு பொருட்டாக நான் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இருந்தது" என்று அவர் பத்திரிக்கைகளிடம் தெரிவித்தார்.

இதைச் சொல்லும்பொழுது, கடந்த பொங்கலன்று நானும் என் சகோதரர்களும் ஒரு சீன ஒட்டுக்கடையில் இரவு உணவு உண்ண சென்றபொழுது பார்த்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. இரவு ஒரு 10-11 மணி இருக்கும். நாங்கள் போனது ரோட்டரத்தில் அமைந்த ஒரு ஒட்டுக்கடை. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென்று அலறும் ஒரு சத்தம். அதையடுத்து ஒரு கார் வேகமாக போவதும் பின்னால் சிலர் ஓடுவதுமாக இருந்தது. என்ன நடக்குதுன்னு போய் பார்த்தால், அங்கே ஒரு 3 வயது குட்டிபெண் கத்தி அழுதுக்கொண்டிந்தாள்.

என்ன நடந்து என்று விசாரிக்கையில் கார் அந்த பெண்ணின் கால் மீது ஏறிவிட்டது என்று சொன்னார்கள். உடனே ஒருவர், "சின்ன பிள்ளையை ஏன் தனியா விட்டீங்க? தூக்கிட்டோ, இல்ல கை பிடித்தோ கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?" என்று கேட்டார். அது நியாயமான கேள்விதான். ஒரு க்ரூப்பா 7-8 பேர் ஒன்னா வந்தாங்க. அதில் ஒருவர் கூடவா கைப்பிடித்து கூட்டிட்டு வர மறந்திருப்பாங்க?

அந்த பெண்னை தூக்கும்போது அவள் பாதம் உள்ள எழும்பு காலில் தொங்கிக்கொண்டு இருந்தது. குண படுத்துவது ரொம்ப கஷ்டம் போல் இருந்தது அவளுடைய நிலை. உடனே மருத்துவமனைக்கு தூக்கிட்டு ஓடுனாங்க. என் கேள்வி: இதை குண படுத்த முடியவில்லையென்றால், இந்த ஒரு சம்பவத்தால் வாழ்க்கை முழுக்க ஊனமாக திரிய வேண்டுமா இந்த பெண் பிள்ளை?

பி.கு: இம்சை அங்கிளின் ஜில்லுனு ஒரு Tag என்ற சீரியஸ் பதிவுக்காக...

Thursday, October 11, 2007

விண்வெளிக்கு ஒரு பயணம்


நேற்றிரவு மலேசியாவின் சரித்திரத்தில் இன்னுமொரு மகத்தான சாதனை பொறிக்கப்பட்டது. வளர்ந்து வரும் நாடுகளின் பொன்னான கனவுகளில் ஒன்று விண்வெளியில் காலடி பதிப்பது. ஆனால், அதற்கான தகவல் மற்றும் அறிவியல் சாதனங்களை வாங்குவதற்கும் அதற்கேற்ற கல்வியை மக்களுக்கு தருவதற்கும் வசதி பல இரண்டாம் உலக நாடுகளுக்கு இல்லை என்று நாமெல்லாம் அறிவோம்.

இல்லை என்பதற்காக கைக்கட்டி வாய்பொத்தியா இருக்க முடியும்? முயற்சி! அதற்கான தேவையான முயற்சிகள் எடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த சாதனை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இன்று வரை விண்வெளி ஆராய்ச்சி மையம் மலேசியாவில் இல்லாவிட்டாலும், மலேசியா ரஷ்ய நாடுடன் இணைந்து செயல்ப்பட அமைந்த சந்தர்ப்பம்தான் மலேசிய விண்வெளி திட்டம் 2003 (Malaysia Space Programme 2003).

நடத்தப்பட்ட ஒவ்வொரு தேர்வும், அதன் கஷ்டங்களையும், கடைசி 8 பேர் கடந்து வந்த சோதனைகளையும், தமிழ் பெண்மணி வனஜா அவர்களின் தன்னம்பிக்கையும் ஏற்கனவே இங்கே எழுதியுள்ளேன். எட்டிலிருந்து நான்கு பேரை தேர்ந்தெடுத்த போது வனஜாவும் தேர்வுப்பெற்று ரஷ்யாவில் சில பயிற்சிகளை மேற்கொண்டார்.அதில் இரண்டு பேர் மட்டுமே விண்வெளி வீரர்களாக தேர்வெடுக்கப்பட்டபோது தேர்வானவர்கள் டாக்டர் ஷேய்க் முஜாப்பார் (Dr. Sheikh Muzaffar) மற்றும் டாக்டர் ஃபாயிஸ் காலீட் (Dr. Faiz Khaleed).

அதில் ஒருவரே TMA-11 ரக விண்கலத்தில் பயணிப்பார் என்று நாமெல்லாம் அறிந்ததே. இவர்கள் இருவரும் தகுதியானவர்களாக இருந்ததால் மேலும் பல தேர்வுகள் வைக்கப்பட்டு தேர்வானவர் டாக்டராக பணிப்புரிந்த ஷேய்க் முஜாப்பார்தான்.

நேற்று இரவு மலேசிய நேரம் 9.21க்கு கசாக்ஸ்தானில் இருந்து தன் பயணத்தை தொடங்கிய Soyuz TMA-11-இல் அமேரிக்காவை சேர்ந்த பெக்கி வித்சன் (Commander Peggy Withson) மற்றும் ரஷ்யாவை சேர்ந்த யூரி மலேன்செங்கோவும் (Yuri Malenchengko) சேர்ந்து பயணிக்கிறார்கள்.

TMA-11 மூலமாக ஒவ்வொரு மலேசியனின் கனவும் டாக்டர் ஷேய்க் முஜாப்பார் மூலமாக நினைவாகியது. இவரின் இந்த வெற்றி மலேசியாவின் வருங்கால தலைமுறையினருக்கு ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனலாம். விண்வெளி வீரனாக வேண்டும் என்ற இவரது சிறு வயது லட்சியத்தை "இது சாத்தியமற்ற கனவு. நடக்காது" என்று பல பேர் சொன்னதுக்கு அவர் இப்போது பதில் சொல்கிறார்.

"நான் கண்ட கனவு பேராசை, பகல் கனவு என்று மற்றவர்கள் சொன்ன அந்த வார்த்தைகள்தான் நான் இந்தளவு வளர காரணமாய் அமைந்தது. ஆகவே இப்போதே கனவு காணுங்கள். சாதிக்கலாம்." என்கிறார் orthopaedic எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் மருத்துவராக பணி புரிந்த இவர்.
இவருடைய 12 நாட்கள் விண்வெளி பயணத்தில் இவர் பெரும் அனுபவம் கூடிய சீக்கிரத்திலேயே மலேசிய விண்வெளி ஆரய்ச்சி மையமும் மலேசியாவின் சொந்த விண்கலம் உருவாகுவதுக்கும், இன்னும் நிறைய விண்வெளிவீரர்களும் உருவாகுவதற்கு உதவும் என்று நம்புவோமாக.

நன்றி: அறிவுஜீவி கப்பி

மலேசிய முதல் விண்வெளிவீரர்