Tuesday, November 21, 2006

101. கிழக்கு கடற்கரை சாலை--> யாரும் போகாத சாலை!!!!

ஸ்ரி காந்த், S.S. ஸ்டான்லி மூன்றாவது முறையாக இணையும் கிழக்கு கடற்கரை சாலை.. என்ன ஒரு அழகான தலைப்பு. இதுதான் இந்த வார இறுதியில் நான் பார்க்கும் தமிழ் படம்ன்னு முடிவு பன்னி பார்த்தேன். ஆனால், படம் !!!!!!!!!

நான் இங்கே சொல்ல போவதை மூன்றாக பிரிக்கிறேன்..

1- விமர்சனம் (படம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த பாகத்தை படிக்காதீர்!)

2- படத்தின் சொதப்பல் காட்சிகள்

3- வேறு படத்தின் தழுவல்கள்

1- விமர்சனம்


தான் என்ன வேலை பார்த்தாலும் பரவாயில்லை, ஆனால், அந்த வேலை கிழக்கு கடற்கரை சாலையில்தான் இருக்க வேண்டுமென்று அங்கே புதிதாக வரும் ஹீரோ, சந்தோஷ் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை சேர்கிறார். பெட்ரோல் போட வரும் பணக்கார ஹீரோயினை (பிரியா), நாம் காதலிக்க முடியாது என கூறும் நண்பர்களிடம் (முத்துக்காளை, கஞ்சா கருப்பு) தான் காதலித்து காட்டுவதாக சவால் விடுகிறார் சந்தோஷ்.

சவாலில் வெற்றி பெற சந்தோஷ் எடுக்கும் முயற்ச்சிகளை பார்க்கவே வெறுப்பாகவே இருக்கிறது. பிரியாவுக்கும் சந்தோஷின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் தன் அண்ணன்/லீடிங் லாயர்/ வில்லன் (GTR)-இடம் புகார் செய்கிறார். அண்ண்ன் மிறட்ட, சந்தோஷ் பிரியாவிடம் வந்து நிற்க்க "நான் உன்னை காதலிக்கதானே சொன்னேன். தப்பு பன்ன சொல்லலியே?"ன்னு கேட்க்க, பிரியா அவனின் நிலமையை பார்க்க.... "சரி, தினமும் நான் உன்னை வந்து பார்க்கிறேன். நீ என்னை தேடி வராதே!"ன்னு சொல்ல.. இவர்கள் காதல் நாளொரு மேனியும் பொழுதொறு வண்ணமுமாக வளர்கிறது..

அண்ணனுக்கு காதல் தெரியவர, தங்கையை அவரே கடத்த, பழியை சந்தோஷ் மேலே போடுகிறார். ஹீரோ ஹீரோயினை கண்டுபிடிக்க.. ஹீரோயின் தன் அண்ணனை பற்றி அறிய.. அண்ணன் இரண்டு பேரயும் கொல்ல துணிகிறார். அதுவும் எப்படி? இரண்டு பேரையும் கட்டி கடலில் வீசுகிறார்.

கடைசியில் படம் சுபம். அதாவது காதலர்கள் ஆழ் கடலில் இருந்து தப்பித்து ஒன்னு சேர்கிறார்கள்! (???)

இடை இடையே ஹீரோ தனக்கு நடக்கும் அனுபவங்களை கடல் நீருடன் பேசுகிறார். ஃப்லாஷ்பேக் காட்சிகளாக வராமல் ஒரு சில வரிகளாகவே முடிந்தது. சுனாமின்னு சொன்னா மக்கள் (பரிதாபப்பட்டு) படத்தை பார்க்க வருவார்கள் என்று இயக்குனர் தப்பு கணக்கு போட்டுவிட்டார் போல.

2- படத்தின் சொதப்பல் காட்சிகள்

1- யாருன்னே தெரியத ஹீரோ பெட்ரோல் பங்கில் படுக்க இடம் கேட்டு வருகிறார். (கி.க. சாலையில் படுக்க வேற இடமே இல்லையா?)

2- இடம் கொடுக்காத வேலையாள்கள் ஹீரோவுக்கு 2 பழம் கொடுத்து பஸ் ஸ்டாப்-ல படுக்க சொல்கின்றனர். (எதுக்கு இந்த 2 பழம்? டின்னரா?)

3- பங்க்கில் கலாட்டா செய்யும் சிலரை அடித்து நொறுக்குகிறார் ஹீரோ. அதுக்க்கு பெட்ரோல் பங்கின் மேனேஜர் "இங்கே நிறைய பேர் வந்து கலாட்டா செய்கிறார்கள். நீ இங்கேயே தங்கி இதை பார்த்துக்கொள்"ன்னு சொல்லுறாரு. (அப்ப, கி.க.சாலயிலே நிறைய ரௌடிகள் தானா?)

4- பெட்ரோல் போட வரும் பிரியாவின் பேக்கை களவாடும் முத்துக்காளை (இனிமேல், பெட்ரோல் போடும் போது உங்கள் பேக்கை காணும்ன்னா பங்கில் வேலை செய்கிறவர்களின் மீது புகார் கொடுங்கள். உங்கள் பை கிடைத்துவிடும்.)

5- பணக்கார பெண். பெட்ரோல் போடும் நாம் காதலிக்க முடியாதுன்னு நண்பர்கள் சொல்ல நான் காதலிக்கிறேன் அன்று சவால் விடும் ஹீரோ. (அப்ப, காலேஜ் படிக்கும்/ பணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்கள் யாரவது பார்த்தால், நீங்கள் சவால் விட்டதால்தான் காதலிப்பீர்களா? இதுதான் உண்மையான காதலா?)

6- ஹீரோவின் வற்புறுத்தல் தாங்காமல், தானே அவரை தினம் தேடி வந்து பார்ப்பேன் என சொல்லும் ஹீரோயின். (பிடிக்கவில்லை என்றால், பார்க்கவே அறுவருப்பாக இருக்கும் பட்சத்தில், ஏன் நீங்கள் அவரை தினம் தேடி செல்ல வேண்டும்? ஹீரோவின் தொல்லைகளை குறைக்க வேற வழிகளே இல்லையா?)

7- சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட தன் சொந்தகாரர்களிடம் பேசுவதாக நினைத்து தினம் கடல் நீரிடம் பேசும் ஹீரோ (ஆனால், அந்த கவலயும் பாசமும் உங்கள் முகத்தில் பார்க்க முடியவில்லையே ஹீரோ?)

8- ஹீரோயின் காதலிப்பதாக சொனதும், ஹீரோ தான் காதலிக்கவில்லைன்னு சொல்கிறார். கேட்டால் "நீ என்னை காதலிப்பதாக சொல். நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்னுதானே சொன்னேன். உன்னை காதலிப்பதாக சொல்லவில்லையே?"ன்னு பதில் கூறுகிறார். (என்ன இது?)

9- ஹீரோயின் அண்ணன் ஒரு பிரபலமான வக்கீல்ன்னு சொல்லுராங்க. (ஆனால், ஒரு தடவை கூட கோர்ட்டுக்கோ இல்லை வக்கீல் உடை அணிந்தோ பார்க்க முடியவில்லை)

10- இரண்டு பேரையும் கடலில் வீசப்பட்டதும், ஒரு சுறா மீன் வருகிறது. ஆனால், இவர்கள் தாக்கப்படவில்லை (இவர்கள் invisible-ஆ இல்லை சுறா மீன் குருடா?)

11- இருக்கி கட்டப்பட்ட கயிற்றை கடலில் மூழ்கியிருக்கும் ஹீரோ அவிழ்த்து, ஹீரோயினையும் (கடலில் ரொம்ப ஆழமான் இடத்துக்கு தள்ளப்பட்ட இடத்திலிருந்து) காப்பாற்றுகிறார் (என்ன கொடுமை இது சரவணா?)

3- வேறு படத்தின் தழுவல்கள்


1- படத்தின் நாயகன் அறிமுகம் ஆகும் காட்சி

-மனசெல்லாம் படத்தில் ரயிலில் இருந்து முகத்தை வெளிக்காட்டி எட்டிப்பார்த்து விட்டு பிறகு இறங்குவடு

- கி.க.சாவில் லாரியிலிருந்து முகத்தை வெளிக்காட்டி எட்டிப்பார்த்து விட்டு பிறகு இறங்குவடு


2- படத்தின் நாயகிக்கு பிடிக்காத வகையில் அவரை காதலிக்க முயல்வது

- திருமலையில் விஜய் செய்யும் சகிக்காத கோமாளிதனங்கள்

- கி.க. சாவில் ஸ்ரிகாந்த் செய்யும் கோமாளித்தனத்தையும் பொறுக்கமுடியவில்லை


3- ஏதாவது ஒரு பொருளை, அம்மா அப்பான்னு நினைக்கிறது

- கடல் நீர்தான் இவருக்கு(ஸ்ரி காந்த்) அம்மா, அப்பா எல்லாமே

- ஒரே இடத்தில் பல வருடங்களாக நிருத்தப்பட்ட தேர்தான் அவருக்கு (அஜித்) அம்மா

- இதே போல் நிறைய படத்தில் உள்ளது. இவர் எதை பார்த்து காப்பி அடிச்சாரோ!


உங்களுக்கு (இந்த படம் பார்த்தவர்/ பார்க்காதவர்) ஏதாவது சொல்வதுக்கு இருந்தால், பின்னூட்டம் இடுங்கள்.

6 Comments:

Anonymous said...

Padathai nalla vimarsanam seythu irukinreergal, padam paarthen solli kollum padi onnum illai , K K Saalai kundum kushiyumaaga ullathu ;)

said...

;-)

said...

Nalla review my friend..
athuvum maththa padaththai compare panni enna enna copy adichchirunkaangannu sonnathu chinemala unga knowledge kaamikkuthu..

pattaya kilappunga..

keep rocking!!!

said...

பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க...சூப்பர் விமர்சனம் :-)

said...

மு.கார்த்திகேயன் said...
Nalla review my friend..
athuvum maththa padaththai compare panni enna enna copy adichchirunkaangannu sonnathu chinemala unga knowledge kaamikkuthu..

pattaya kilappunga..

keep rocking!!!


yeap. rocking :P

said...

Syam said...
பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க...சூப்பர் விமர்சனம் :-)


என்ன பன்றது ஷாம். படம் பார்த்த கொடுமை...