Saturday, October 06, 2007

உலகமே புதியதாய்..

ரொம்ப நாள் ஆச்சு எனக்கு பிடித்த பாடல்களை இங்கே எழுதி. அதான் திரும்பி வந்துட்டேன்ல. :-)

போன வருடம் வெளியாகிய படம் காதலே என் காதலே. இசையமைப்பாளர் ப்ரயோக் தமிழுக்கு புதியவர். ஆனால், இசைக்கு எதுக்கு மொழின்னு நிரூபித்திருக்கிறார். இந்த பாட்டில் முக்கிய தூண் அதில் வரும் வரிகள்.

முதல் தடவை கேட்டபொழுதே இந்த வரிகள் 100% எனக்கே எனக்காக எழுதியதுபோல ஒரு உணர்வு. அன்றிலிருந்து இன்று வரை எப்போதும் என் mp3 playerல என்னுடன் கூடவே இருக்கும் பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்துவிட்டது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். கூடவே பாட:



உலகமே புதியதாய் இன்று நானும் உணர்ந்தேனே
கதவினை திறந்து நான் புதிய வெளிச்சத்தை கண்டேன்
பனிக்குடம் உடைந்து நான் மீண்டும் மண்ணுக்குள் பிறந்தேன்
தோள்களில் வாழ்க்கையை சுமக்கவே துணிச்சல் தோண்றும்

காட்டிலே உள்ள மரத்துக்கு நீரை ஊற்றிட ஆளில்லை
உன்னையே நீ பார்த்துக்கொள் வாழ்க்கை என்பது வேறில்லை
உன் நிழல் உன்னை தொடருமே அது இருட்டிலே விட்டு விலகுமே
உண்மையில் நீ ஒருத்தன் தான் உன் துணையென்ற உண்மை விளங்குமே
பனிமூட்டமான பாதை நீ பயணிக்கும் வேளை
கண்ணோடு மறைந்த இடங்கள்
அருகில் சென்றால் தெரிந்துவிடும்
(உலகமே..)

தீயினை தொட்டு தெரிந்துக்கொள் மீண்டும் பயங்கள் தொடருமா
மலையிலே உள்ள அருவிகள் மண்ணில் விழுவதால் உடையுமா
இலைகளை கிளை உதிர்க்குமே அது மறுபடி மெல்ல துளிர்க்குமே
காயங்கள் கொஞ்சம் வலிக்குமே அதன் பாடங்கள் வெற்றி கொடுக்குமே
இந்த நாளும் உனது என்று நீ நினைத்திடும் பொழுது
கடிகார நேரம் எல்லாம் நீ சொன்னதை கேட்டுவிடும்..
(உலகமே..)

4 Comments:

ஜே கே | J K said...

me the firstuuuu.....

மங்களூர் சிவா said...

இப்படி ஒரு படம் வந்திச்சா

oh I c

பாட்டு நல்லாதான் இருக்கு. ரிப்பீட் கேக்குற அளவுக்கெல்லாம் இல்ல.

CVR said...

great song!
nice lyrics!!

Thanks for sharing!! :-)

Dreamzz said...

lyrics arumaiya irukku...