Wednesday, December 06, 2006

121. கதையல்ல.. நிஜம்!!! 2

என் பள்ளிக்கூட மலரும் நினைவுகளை ஆட்டோகிராப்பா எழுதுனது நல்ல வரவேற்ப்பு கிடச்சது. இது முதல் பாகத்தின் தொடர்ச்சி.....

நான் அவர்களை தாக்கும்முன், என் பெயரை யாரோ கூப்பிடுவதைக் கேட்டு; திகத்து; குரல் வந்த திசையை நோக்கி பார்த்தேன். வகுப்பு ஆசிரியை வகுப்பின் முன்னே நின்னுக்கொண்டு என்னை பார்த்து கையசைத்தார்..

"போச்சு! முதல் நாளே ஒரு பிரச்ச்னை செய்து விட்டேன். இதுவரை செய்யாத ஒன்னு!!! இன்னைக்கு க்லாஸ்லேயும் வீட்டுலேயும் பிரம்படி நிச்ச்யம்"ன்னு மனசிலே நினைச்சுகிட்டே அவரை நோக்கி நடந்தேன். மனசில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தது.

அவர் முன்னே போய் தலை குனிந்து நின்னேன்.. அவர் என் தோளின் மீது கைபோட்டு.. மற்ற மாணவர்களிடம் பேச தொடங்கினார்..

"மாணவர்களே! இவங்க பெயர் அனுராதா. ரொம்ப தூரத்துல இருந்து வந்து நம்ம பள்ளில சேர்ந்திருக்காங்க. உங்களுக்கு பகாங் எங்க இருக்குன்னு தெரியுமா?"ன்னு இவர் கேட்க.. மற்ற மாண்வர்கள் கேள்விக்குறியுடன் வியப்பாக தெரியாதுன்னு பதில் சொன்னாங்க..

என் மனசில "அட, பகாங் இங்க பக்கத்திலதானே இருக்கு! ஒரு மணி நேரத்தில வந்திடலாமே"ன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

என்னை மறியாதையோடு வாங்க போங்கன்னு டீச்சர் சொல்வது ஆச்சர்யமாக இருந்ததது.

சரி, அறிமுகம் முடிஞ்சாச்சு.. நம்ம இடத்துல போய் உட்காரலாம்ன்னு நகர்ந்த நேரத்துல அவர் என் கையை பிடித்து இழுத்து.. மீண்டும் பேச தொடங்கினார்.

"அனு, அவங்க ஸ்கூல்ல படிக்கும்போது அவங்கதான் first. எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூரு. வகுப்புத் தலைவியும் கூட. மாணவர்களே, உங்களுக்கு ஏதும் தெரியலைன்னா நீங்க இவங்க கிட்ட கேட்டு படிச்சுக்கலாம்"...

யம்மாடியோவ்.. என் தலையில ஐஸ் கட்டி இறக்கி வச்சதுபோல் இருந்துச்சு.. கொஞ்சம் நேரத்துக்கு முன் என்னை கேலி செய்த அந்த ரெண்டு பேரையும் திரும்பி பார்த்தேன். அவங்க என்னை ஆச்சர்யமா பார்த்தாங்க. என் புத்தக பையை கீழே போட்ட பையனை பார்த்தேன். அவன் முகத்துல அதே ஆச்சர்யம் தெரிஞ்சாலும்.. அவன் முகத்துல கொபமும் இருந்ததௌ. எதுக்கு அந்த கோபம்ன்னு தெறியல.. ஆனால், நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.

அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நிலைகாதுன்னும்.. எனக்கு இறக்கி வச்ச அந்த ஐஸ் கட்டி மற்ற சிலருக்கு எறியும் எண்ணைன்னு அப்போ எனக்கு தெரியாது!!!!

டீச்சர் கொஞ்சம் நேரம் யோசிச்சுட்டு.. "நீ அங்கே உட்கார வேண்டிய ஆளே இல்லை"ன்னு சொன்னாங்க..

எனக்கும் அதற்க்கு என்ன காரணம்ன்னு தெரிய ஆவலா இருந்ததுனாலே அவரிடம் கேட்டேன். அவர் ஆறாக பிரிக்க பட்ட க்ரூப்பை காட்டி A+, A-, B+, B-, C+ மற்றும் C-ன்னு சொன்னார்..

ஒவ்வொருவருடைய திறமையை வச்சு இப்படி ஆறு ஆறாக பிரிக்கப்பட்டதாக சொன்னார்.. அந்த வகுப்ப நான் திரும்பி பார்த்தேன். என்னை தள்ளி விட்ட அந்த பையன் B+ க்ரூப்பில் அமர்ந்திருந்தான். என்னை கேலி செய்த மற்ற இருவர் உட்கார்ந்திருந்ததௌ C-யில்..

எனக்கு உடனே A+ போகனும்ன்னு ஆசை வந்தது.. எனக்கு முன் டீச்சர் அங்கே போய் யார் வேற க்ரூப் மாற போறீங்கன்னு கேட்டங்க.. டீச்சரே கட்டளை இடாமல் ஒவ்வொருவரின் சம்மதம் கேட்டார். (டெமோக்ராசி) ஹீ ஹீ ஹீ..

ஆனால், யாரும் அங்கே இருந்து மாற முன் வரவில்லை..

டீச்சரும் நான் உட்கார்ந்திருந்த இடத்திலேயே என்னை போய் உட்கார சொன்னார். ஆசை காட்டி மோசம் செய்துவிட்டரோன்னு எனக்கு தோன்றியது அப்போது.

அவரும் படித்து கொடுக்க ஆரம்பித்தார். அவர் அடிகக்டி கேல்விகள் கேட்டார். மற்றவர்களும் பதில் சொல்லிகொண்டிருந்தனர். நான் தனிமையில் இருந்தேன். எந்த கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியலையோ, அந்த கேல்விகளை என்னிடம் கேட்டார். நான் கடுப்பில் பதில் சொன்னேன். (பதிலை சொன்னாலும் சொல்லாட்டினாலும் என்னுடைய இடம் இதுதானேன்னு ஒரு விரக்த்தி)

அந்த பாடம் முடிந்து அந்த டீச்சர் வகுப்பை விட்டு வெளியாகும்முன் என்னை கூப்பிட்டு A-க்கு மாற சொன்னார்.

எனக்கு ஆச்சர்யம் கலந்த ஒரு வித சந்தோஷம். கூடவே ஒரு சின்ன கவலை (பேராசை)... A+க்கு போக முடியலையேன்னு..

நான் அங்கே போய் உட்கார்ந்தததும் ஒரு 30 பேர்... என்னை சுத்தி வந்து நின்னாங்க.. (டீச்ச்ர் அப்போது வகுப்பில் இல்லைன்னு கவனிக்கவும்)..
எல்லாரும் என்னை முறைச்சு பார்த்தாங்க..

ஒரு பொண்ணு (இவளை எங்கோ பார்த்த ஞாபகம்) வந்து பேச ஆரம்பித்தாள். "டீச்சர் உன்னை பத்தி பெருமையா சொன்னாங்கன்னு நீ பெருமை படாதே! ஒரே மாதத்தில இந்த வகுப்பை விட்டு வெளியே அனுப்புகிறோம் பார்!!!"ன்னு கோபமா பேசினாள்.

என்னடா! இரண்டாம் வகுப்பில் கேங்ஸ்தரிசமான்னு யோசிக்கிறீங்களா? உண்மைங்க!! நான் அனுபவித்தது.

நல்ல வேளை.. அவள் அடுத்த வரி பேசுவதற்க்குள் மலாய் மொழி சொல்லி கொடுக்கும் ஆசிரியை உள்ளே வந்தார். வந்தவுடன் ஒரு பரிட்சை தந்தார்..

அப்போதே மார்க் பண்ணி, அதற்கேத்தவாரு மாண்வர்களை இடம் மாற்றி அமர வத்தார். நானும் நான் ஆசைப்பட்ட அந்த A+க்கு போனேன்..

எனக்கு ஆப்பு நானே தேடிக்கொண்டேன்னுதான் சொல்லனும்!!! அங்கே உட்கார்ந்திருந்த 6 பேரும் ரொம்ப க்லோஸ். நான் அங்கே போனதால், அவர்களில் ஒருவர் அங்கிருந்து வெளியாக வேன்டி இருந்ததது. அங்கே தலைவி என்னை மிரட்டிய அதே பொண்ணுதான்...

அவர்களின் கண்களில் அப்படியொரு கோபம்..

இவர்களின் சேஷ்டைகள் ---> தொடரும்.....

8 Comments:

said...

வாவ்..சூப்பரா போகுது மை பிரண்ட்.. சுவாரஸ்யமான கதையா இருக்கு..

said...

Adada.. Palli paruvam dhaan innocentaana paruvamnu paatha angayae ivlo veruppum poraamaiyuma :(

said...

//மு.கார்த்திகேயன் said...
வாவ்..சூப்பரா போகுது மை பிரண்ட்.. சுவாரஸ்யமான கதையா இருக்கு.. //


நன்றி. இன்னும் தொடரும்.. ;)

said...

//G3 said...
Adada.. Palli paruvam dhaan innocentaana paruvamnu paatha angayae ivlo veruppum poraamaiyuma :( //

athethaan. chinna vayasuleye naan ragging anubavichchaval...

Anonymous said...

romba suvaarasiyamaaga poguthu, continue ;)

said...

nalla gummunnu daan ezudareenga

said...

//c.m.haniff said...
romba suvaarasiyamaaga poguthu, continue ;) //

Nandri Haniff

said...

// Kittu said...
nalla gummunnu daan ezudareenga //

Nandringka Kittu. and welcome to "World of .::MyFriend::."