Wednesday, February 28, 2007

167. எனக்கு தெரிஞ்ச மொழி ஒன்னு உங்க யாருக்குமே தெரியாது!

எது சிறந்தது?


மொழியா வீரமா?


இப்படி என் தோழி கேள்வி கேட்டு, மொழி தான் வென்றது..


ஏன்னா இங்கே மலேசியாவில் மொழி மட்டும்தான் வெளியாகியிருக்கு! பருத்திவீரன் இன்னும் இல்லை..


என்ன இருந்தாலும் மொழி நாங்கள் எதிர்ப்பார்த்த படங்களில் ஒன்றுதான். திடீர் ப்ளான் போட்டோம். கிளம்பினோம்.. அப்போதும் படத்துக்கும் 10 நிமிடம் லேட்டு!!


உள்ளே போகும் போது ஒரு காட்சி.. ஒரு பண்ணையார் வீட்டுப் பெண் கோயிலில் நடந்து போக, அவளிடமிருந்து ஏதோ கீழே விழ, பக்கத்தில் உள்ள பிச்சைக்காரன் அதை எடுத்துக் கொடுக்கிறான். இருவருக்குமிடையே காதல் பூப்பூக்கிறது! உடனே நாம் திரும்பி, நாம் தப்பான தியேட்டரில் புகுந்துவிட்டோம் போல.. எனக்கு தெரிஞ்சு படத்துல இந்த ரெண்டு பேரும் நடிக்கலைன்னு சொல்லி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.. திடீர்ன்னு பிரகாஷ்ராஜின் சிரிப்பு அலைகள். திரும்பி பார்த்தால் பிரகாஷ் ராஜ் - பிரித்திவிராஜ். அந்த படத்துக்கு ரீரெக்கார்டிங் செய்கிறார்கலாம். திரும்பவும் போய் இருக்கையில் அமர்ந்தோம்.


படத்தின் காமெடி அப்போது வெடிக்க தொடங்கியது (எனக்கு தெரிந்து!).. கிளைமேக்ஸின் முதல் காட்சி வரையிலும் வெடித்துக் கொண்டேதான் இருந்தது.


இவர்கள் குடிப்போகும் அபார்ட்மெண்டில் குடும்பஸ்தனுக்கு மட்டும்தான் வீடு என்று சொல்ல, பிரகாஷ் பிருத்திவியை திருமணம் செய்துக்க சொல்றார். அதற்கு நான் ஒரு பெண்ணை பார்க்கும் போது காமிக் புத்தகத்தில் வருமே அதுபோல என் தலைக்கு மேல் பல்ப் எரியணும், மணி அடிக்கணும்ன்னு சொல்றார். அதே போல், அந்த பல்ப்பும் மணி எப்படி அடிக்கிறது என்பதை அழகாக காட்டியிருக்காங்க.. இதை கிண்டல் பண்ணும் பிரகாஷ்க்கு எப்படி அதே பல்பும் மணியும் அடிக்கின்றது என்பதும் ஸ்வாரஸ்யம். :-))


பிருத்திவி சமீபத்தில் மலயாள படத்துக்குகாக சிறந்த நடிகர் பட்டம் வாங்கியதாக கேள்விப் பட்டேன். இவர் தமிழிலும் வாங்குவார் என்ற நம்பிக்கை இருக்கு. இவர் ஜோ மீது காட்டும் அன்பு, பாசம், காதல்.. பிரகாஷ் மீது வைத்திருக்கும் நட்பு.. மற்றவர்களின் மீது வைத்திருக்கும் மரியாதை, அவர்கள் கஷ்டப்படும்போது பரிதாபப்படும் இவர் மனது... சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாத இவரது கோபம்.. என்று இவருடைய ஒவ்வொரு பரிணாமத்தை பற்றியும் சொல்லிட்டே போகலாம்.


ஜோதிகாவின் intro சூப்பர். சூர்யா, இனி நீங்க ஜோதிகாவிடம் பழகும்போது கொஞ்சம் தள்ளியே பழகுங்க.. ஹிஹி.. படத்தை பார்ப்பதற்கு முன்னே இவர் deaf & dumbன்னு எனக்கு தெரிஞ்சதாலே எந்த கட்டத்தில் இவர் திரையில் சொல்வார் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தேன். ஆனாலும், இவர் deaf & dumb என்பதை ஒரு கெத்தா தான் சொன்னார். அவருக்குள் உள்ள தன்னம்பிக்கையை அந்த ஒரு விநாடியிலேயே நமக்கெல்லாம் புரிய வைத்துட்டார். ஒரு கட்டத்தில், பிருத்திவி இவருக்கு ஒரு பிண்ணணி குரல் கொடுக்க முயற்சி செய்ய இவர் கடுப்பாக, அதன் காரணமும் சரியென்றே எனக்கு தோணுது. தன் கண்களை இவர் உருட்டி உருட்டி.. முகத்தை ஆட்டி ஆட்டி பேசும் விதம் உண்மையிலேயே இவர் எவ்வளவு ஹோம்வர்க் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.. எல்லாரும் புகழ்ந்து பேசும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கூட இவர் நன்றாக செய்திருக்கிறார் என்று நான் ஒப்புக் கொள்ளவே இல்லை. மற்றவர்களும் இதை விட நன்றாக செய்திருப்பார்கள் என்று வாதாடினேன். ஆனால், இப்போது சொல்கிறேன்.. இவர் நடிக்காதது, தமிழ் திரையுலகிற்கு ஒரு இழப்புதான். ஒரு அருமையான நடிகையை இழக்கிறோம். :-(


செல்லம் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் காமெடியில் கலக்கியிருக்கார். ஸ்வர்ணமால்யாவிடம் தான் ஒரு CBI எனச் சொல்ல, அவர் நான் எப்படி நம்புறதுன்னு கேட்க.. அதுக்கு இவர் "கூட் குவச்சன்.. நான் இப்படியே நடந்து பொறேன். CBIன்னு கூப்பிடுங்க. நான் திரும்பி பார்ப்பேன்"கிறார். ஒரு கட்டதில் அவர் சீரியஸாக ஒன்னு சொல்ல அது எடுப்படாமல், "எனக்கு காமெடி மட்டும்தான் வருது. சீரியஸா ஒன்னு முயற்சி செய்தா அது வொர்க் அவுட் ஆக மாட்டேங்குது" என்கிறார்.


ஸ்வர்ணமால்யா ஜோதிகாவின் தோழியாக வருகிறார். இவர் பிருத்திவிக்கு sign language கற்றுக் கொடுத்தாரோ இல்லையோ. படம் முடிந்து வெளிவரும்போது ஆடியன்ஸ் கண்டிப்பாக இந்த மொழியை கற்றுக் கொண்டிருப்பார்கள். அவ்வளவு சுலப்மாக கற்றுக் கொடுத்தார். நானே படம் முடிந்து வெளிவரும்போது, அந்த மொழி பெனக்கும் புரிந்தது.


படத்தில் மிக குறைவான கதாபாத்திரங்களை வைத்தே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். குறிப்பாக சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரம் 'பட்டாபி' பாஸ்கர். படம் ஆரம்பத்தில் ஒரு காமெடியனாக தெரிந்தாலும், போக போக அவரின் சோகங்கள் நம்மையும் வாடுகின்றது. அவரது நடிப்பும்.. சாரி.. அவர் அந்த professor-ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவரை தவிர்த்து ஜோவின் பாட்டி மற்றும் ஜோவின் கார்டியன் குடும்பம் மட்டுமே இதர கதாபாத்திரங்கள்.


என்னடா எல்லாமே காமெடி காமெடின்னு சொல்றேனே. செண்டிமெண்ட் இல்லையான்னு கேட்கறீங்களா? இருக்குங்க.. எப்படி இல்லாமல் போகும். படத்தின் இன்னொரு ப்லஸ் இதுதானே! ஆனால் பரணி இவைகளை அழகாய் லிஸ்ட் போட்டு காட்டிட்டாரு பரணி. இவர் சொன்ன அந்தந்த காட்சிகள் என்னையும் மிகவும் பாதித்த காட்சிகள். அதை அவர் அழகாய் இங்கே சொன்ன் பிறகு நான் அதை திரும்பவும் எழுத வேண்டாம்ன்னு நினைக்கிறேன். அதுவும், பிருத்திவி ஜோதிகாவும் இசையை உணர வேண்டும் என்று அவருடைய கைகளை ஸ்பீக்கர்களில் வைக்கும் காட்சி இருக்கே!! அப்பப்பா!! அருமை அருமை!


இசையை பற்றி சொல்லியே ஆகணும் இங்கே! தேவையே இல்லாத இடத்தில், அர்த்தமே இல்லாத பாடல்களை போடும் படங்களுக்கு நடுவே, அர்த்தமுள்ள பாடல்களை தேவை படும் இடத்தில் சரியாக தொகுக்கப்பட்டதுக்கு ஒரு சபாஷ்.. பாடசில இடங்களில் இசையே இல்லாமல் மௌனம் காப்பதும் ஒரு மொழி. அதுக்கு இன்னொரு சபாஷ்!


சம்பாதித்த பணங்களை திரும்பவும் அதிலேயே போட்டு ரிஸ்க் எடுப்பவர் ஒருவர் கமல் என்றால் இன்னொருவர் பிரகாஷ்தான். இவரின் நாம், கண்ட நாள் முதல், அழகிய தீயே மற்றும் மற்றவைகள்.. தமிழ் திரையுலகின் அடுத்த பரிணாமத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எடுக்கப் பட்டு நன்றாக ஓடாமல் இவர் கையை சுட்டுக் கொண்டதே மிச்சம். ஆனாலும், இவர் தைரியமாக மொழியை எடுத்திருக்கிறார். இவர் மென்மேலும் நல்ல படங்களை எடுக்க வேண்டுமானால், நாம்தான் மொழியை போன்ற படங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். சண்டை, ரத்தம் போன்ற படங்களுக்கு நடுவில் ஒரு இதமான ஆனால் கனமான படம் பார்த்த திருப்தி.

ஒரு புது மொழியையும் கற்றுக் கொண்ட திருப்தி!

Sunday, February 18, 2007

166. சீனப் பெருநாளில் நான் வாங்கிக்கிட்ட ஆப்பு!!

சீனப் பெருநாளைப் பற்றி ஒரு போஸ்ட் போட்டிருந்ததை வெட்டி படிச்சிட்டு, இந்த மாதிரி பெருநாளப்போ நீங்க எக்கு தப்பா மாட்டிக்கிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்டார்.. நான் இல்லவே இல்லன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.

பிறகு படுத்துண்டே யோசிக்கறச்சே 8 வருடத்துக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.. இதை வச்சி நீங்க காமெடி கீமடி பண்ண மாட்டீங்களே?? சரி ஃப்ளாஷ்பேக்குக்கு போவோம்.. ப்ளாஷ்பேக் வட்டமெல்லாம் உங்க சொந்த செலவுல போட்டுக்கனும் சொல்லிட்டேன்.... ஆமா!!!


எனக்கு ஒரு பத்து வருஷமா சீன நண்பர்கள் அதிகம்தான். தீபாவளின்னா போதும்.. ஒரு 20 பேர் க்ரூப்பா காலையில் 10 மணிக்கெல்லாம் என் வீட்டு முன்னுக்கு வந்து கூப்பிடுவாங்க. அவர்களை வரவேற்று இடம் பார்த்து உட்கார வைக்கிறது இருக்கே!!! அப்பப்பா.. போதும் போதும்ன்னு ஆயிடும்.. என் வீடே ஒரு சின்ன வீடு!! எல்லாரையும் ஹால் முழுக்க அப்படியே நிரப்பிட்டு...

இட்லி..
தோசை..
வடை..
இடியப்பம்..
கோழிக் கறி...
ஆட்டுக் கறி..
சாம்பார்..ன்னு கொண்டு வந்து ஹாலிலேயே பறிமாறுவேன். இவங்கெல்லாம் கரண்டியிலேயே சாப்பிட்டு பழகிட்டதனாலே கரண்டி கேட்டாங்க.. நான் ஒத்த ஆளா எத்தனை கரண்டிகளைதான் தேடுறது???

திரும்பி வந்து அவர்களிடம், "எங்க கலாச்சாரப்படி இந்த உணவுகளை கையில்தான் சாப்பிடுவோம். கையில சாப்பிட்டா இதோட ருசியே தனி"ன்னு ஒரு பிட்ட போட்டேன்.. அவங்களும் எப்படி சாப்பிடுறதுன்னு கேட்க, நானும் ஒரு இட்லியை என் தட்டில் போட்டு சாப்பிட்டு காட்டினேன்..

காலை பசியாறை சாப்பிட்டுட்டு, மதியம் உணவையும் முடிச்சுட்டுதான் வீட்டுக்கு கிளம்பினாங்க.. போகும்போது என்னிடம் சமயலை பற்றி சூப்பரா பாராட்டினாங்க.. இத்தனைக்கும் இதை எல்லாம் என் அம்மாதான் சமைத்தார்.. ;-) ஆனால், பாராட்டுக்கள் எனக்கே எனக்குதான்.. ;-)

அப்படியே ஒரு மூனு மாதம் பார்வட் (Forward) போங்க.. சீனப் பெருநாள் வந்திருச்சா?

சீனப் பெருநாள் அன்னைக்கு எனக்கு ஒரு கால் (call) வந்தது.
"இன்னைக்கு நாங்கெல்லாம் டின்னருக்கு போறோம்.. நீயும் எங்க கூட வா.. ஜாலியா இருக்கும்"ன்னு என் சீன தோழி சொல்ல.. நமக்குதான் ஓசி சாப்பாடு கிடைச்சா முதல் ஆளா போய் நிப்போம்ல. சரின்னு நானும் ஒத்துக்கிட்டேன். எனக்கு நானே ஆப்பு வச்சிக்க போறேன் எனக்கு அப்ப தெரியாது பாருங்க!!

இரவு ஒரு 7 மணி இருக்கும்.. ஒரு 8 கார்கள் என் வீட்டு முன் வந்து நின்னது. ஏதோ V.I.P. ஏறுவதா ஒரு எஃபெக்ட்டு.. நானும் ஏறி அவங்களோட போனேன். புக்கிட் பிந்தாங்-இல் இருக்கும் ஒரு ரெஸ்ட்ரானுக்கு சென்றார்கள். நான் சீன ஒட்டுக் கடைகளில் சாப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பட்ட ஒரு இடத்துக்கு அதுவரை சென்றதில்லை.

கூட்டாளிகள் இருக்கும் தைரியத்தில் அவங்களோட சேர்ந்துக்கிட்டு உள்ளே சென்றேன். 30 பேர் உட்காருவதற்காக ஏற்கனவே என் தோழி ரிசர்வ் செய்திருந்தாள். நாங்கள் உட்கார்ந்ததும் வேய்டர் போய் (Waiter Boy) ஒவ்வொருவருக்கும் மெனு கார்ட் கொடுத்தான். எல்லாருமே அதை திறந்து பார்க்க தொடங்கினாங்க.. ஆசை யாரை விட்டது.. நானும் திறந்து பார்த்தேன்.

ஆஹா.. ஆப்பு நம்பர் ஒன் வைச்சுட்டான்யா வைச்சுட்டான்.. மெனு கார்ட்டில் எல்லாமே கோடு கோடா எழுதியிருக்கு. எல்லாமே மேண்டரின்ல எழுதியிருக்கு!! ஒரே குழப்பாமாய் இருக்க.. எனக்கு எதுத்தாப்புல உட்கார்ந்திருந்த நண்பனை பார்த்தேன். அவன் சீனனாய் இருந்தாலும் மேண்ட்ரின் படிக்கத் தெரியாது.. ஆனால் அவனும் தீவிரமாய் அந்த மெனுவை முன்னும் பின்னும் திருப்பிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் மெனுவை படிக்கத் தெரிந்தவன் போலத்தான் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் வேய்டர் போய் ஆர்டர் எடுக்க தொடங்கினான்..
ஒவ்வொருத்தராய் அவர்களோட ஆர்டரை கொடுக்க தொடங்கினாங்க.. எல்லாமே மேண்டரின் மொழியில்தான். ஏதோ ஆங்கிலத்தில் ஓர்டர் பன்னாலும் நம் காதில் விழுந்தால் அதுவே கப்புன்னு புடிச்சி நாமும் ஓர்டர் செய்யலாம்ன்னு காதை தீட்டி வச்சுகிட்டு கேட்டேன்.

என்ன சொல்லுராங்கன்னு புரியல.. ஆனால், கடைசியில "சு (shi) சு"ன்னு சொன்னாங்க.. பதிலுக்கு அந்த வேய்டர் போய்யும் "சு"ன்னு சொன்னான்..

எனக்கு தெரிஞ்சதெல்லாம் "இ"(Ee), "ஏ"(Er), "சன்"(San), "சு"(Si) ன்னு 1, 2, 3 மேண்டரினில் சொல்வது.. இப்படியே யோசிச்சுட்டு இருக்க, என்னுடைய தேர்ன் (turn) வந்தது.. வேய்டர் போய் என்னிடம் கேட்க, நான்,

"இ ஏ சன் சு"ன்னு சொல்ல..

அவன் திரும்பி "சு??" முழிக்க..

நானும் "யெஸ், சு"ன்னு சொல்ல, கடையே அதிர என் நண்பர்கள் சிரிச்சாங்க..

என் தோழன், "அனு, அவனுக்கு மேண்டரின் தெரியும்.. நீ அவனுக்கு 1 2 3 சொல்லி தரியா?"ன்னு கேட்டான்.

அடடா.. இப்படி நம்மளை வைச்சு காமெடி பண்ற நிலமை வந்திருச்சேன்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு "What I meant ந்as Set No. 4"ன்னு சொல்லி சமாளிச்சேன்..

வேய்டர் போயிட்டான்.. ஆனால், என் நண்பர்களோட சிரிப்பு மட்டும் அடங்கல..

அப்பத்தான் தெரிஞ்சது.. அவங்க சொன்ன "சு".. ஆமாண்ணு அர்த்தமாம்.. நான் ஏதோ 4-ன்னுதான் சொல்றாங்கன்னு நினைச்சிக்கிட்டேன்.. எல்லாம் ட்ரான்ஸ்மிஷன் (transmission) கோளாரு.. :-P

அது மட்டுமில்லை.. அந்த மெனு 2 மொழியில இருக்கு.. முதல் 6 பக்கம் மேண்டரினிலும், கடைசி 6 பக்கம் ஆங்கிலத்திலும் இருந்திருக்கு.. யாருமே என் கிட்டே சொல்லவே இல்லை.. இப்படி எததனை கடையிலடா கிளம்பியிருக்கீங்க????

திடீன்னு, என் பக்கத்துல உட்கார்ந்திருந்த தோழி "ஏய், நீ என்ன செட் ஓர்டர் பண்ணுன?"ன்னு கேட்டாள்..

நான் சிரிச்சிக்கிட்டே "Set No.4"ன்னு சொல்ல..

ஆச்சர்யமாய், "ஏய், நீ தவளை சாப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே!! அன்னைக்கு BBQ நைட்ல அதை தொடவே இல்லையே????"ன்னு கேட்டாள்..

எனக்கு தூக்கி வாறி போட்டது.. என்னது?? நான் ஓர்டர் பண்ணது தவளை பிரட்டலா??? தலையே சுற்றியது..

"பரவாயில்லை.. நான் போய் கேன்சல் பண்ணிட்டு வேறு ஏதாவது ஓர்டர் பண்ணூறேன்.. என்ன வேணூம்?"ன்னு என் மேல் அக்கரை உள்ள தோழன் எழுந்திருச்சிக்கிட்டே கேட்டான்..

இன்னொரு ரிஸ்க் எடுக்க விரும்பாமல், ஏதாவது சாப்பிடும் மாதிரி ஓர்டர் பண்ணுப்பான்னு சொல்லிட்டேன்..

சாப்பாடும் வந்தது.. ஏதோ ஒரு வித மீதான் வந்தது. தவளையோட இது எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைச்சிக்கிட்டே கரண்டியை தேடினேன். ரெண்டு குச்சிதான் வந்தது.

நானும் அதில் சாப்பிட முயற்சி செய்தேன். எவ்வளவு நேரம்தான் நானும் சாப்பிடுவது போலவே நடிக்கிறது??

"எனக்கு இதுல சப்பிட தெரியாது, எனக்கு கரண்டி வேணும்"ன்னு பக்கதுல உட்கார்ந்திருந்த தோழியிடம் முணுமுணுத்தேன். அவளோ, இன்னைக்கு நீதான் எங்களுக்கு காமெடி ட்ராக்ங்குற மாதிரியே இன்னொரு முறை வேகமாய் சிரிக்க, மற்றவர்களும் என்னனு கேட்டு திரும்ப சிரிக்க.. அய்யோ பாவம்ங்கிற நிலமைதான் எனக்கு.. :-(

பிறகு இவங்களே சொப் ஸ்டிக் (Chop Stick) எனப்படும் அந்த குச்சியை பயன்படுத்துவது எப்படின்னு சொல்லிக் கொடுத்தாங்க.. நானும் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்ய, அந்த மீ என் வாயுள்ளே போறதுக்கு பதிலா என் சட்டை மேலே விழ.. அது இன்னொரு காமெடியாய் போச்சு.. ஒவ்வொருத்தவங்களா என் பக்கதுல வந்து குச்சியை பிடிச்சு பிடிச்சு சொல்லிக் கொடுத்தாங்க.. இந்த மரமண்டைக்குதான் ஏறவே இல்லையே!!!!

பிறகு அவங்களே போய் கடைக்காரணிடம் கரண்டியை கேட்க, அந்த கடையில் கரண்டியே இல்லையாம்.. என் நண்பன் என் மேல் பரிதாபப் பட்டு, பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கேட்க்கு போய் பிளாஸ்டிக் கரண்டி வாங்கிட்டு வர்ர நிலைமை ஆயிடுச்சு.. கரண்டி வந்தப்புறம்தான் ஒழுங்காய் சாப்பிட ஆரம்பித்தேன்..

சாப்பிட்டுட்டு அரட்டை அடிக்கும்போது, ஒரு நண்பன் "வாங்க.. அப்படியே வால்கிங் (walking) போயிட்டு.. சப்பருக்கு (supper) இன்னொரு கடைக்கு போவோம்"ன்னு ஐடியா கொடுத்தான்..

நான் "அய்யோ! ஆளை விடுங்கடா சாமி.. இப்படியே நான் ரோட்டுல நடந்தேனா 2-3 வயசு குழந்தைங்க கூட என்னை பார்த்து கிண்டல் பண்ண ஆரம்பித்திடும்.. சட்டை அவ்வளவு அழகாய் இருக்கு!!!! இதுல உங்களுக்கு வாக்கிங் போயிட்டு இன்னொரு கடை வேறையா???? என்னை வீட்டுல விட்டுட்டு நீங்க எங்க வேணூம்ன்னாலும் போங்கடா சாமிங்களா!!!"ன்னு சொல்ல..

ஒரு நண்பன் என்னை வீட்டில் விட சம்மதித்து, நாங்கள் இருவரும் மட்டும் கலண்டுக்கிட்டோம்.. மத்தவங்க அப்படியே வால்கிங் போயிட்டு சப்பர் முடிச்சிட்டுதான் வீடு திரும்பினாங்க..

வீடு வந்ததும் வீட்டுல உள்ளவங்க என் சட்டையை பார்த்துட்டு நான் சாப்பிடத்தான் போனேன்னா, இல்லை அங்கே போய் மாவாட்டி சமைச்சிட்டு வந்தேன்னான்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. அந்த இன்சிடனை இப்போது நினைச்சாலும் சிரிப்புதான் வருது..

அதுக்கப்புறம் என்னுடைய இரண்டு தோழிகள் சொப் ஸ்டிக் வாங்கி கொடுத்து வகுப்பில் டீச்சர் இல்லாத சமயங்களில் அதை எப்படி உபயோகிப்பதுன்னு சொல்லி கொடுத்தாங்க.. ஆனால், இப்போது வரைக்கும் அந்த சொப் ஸ்டிக் நமக்கு எட்டாத தூரத்தில்தான் இருக்கு!!! கையில் சாப்பிடுவதுதான் பெஸ்ட்டுன்னு தோணுது!!!

165. இன்று சீன வருடப் பிறப்பு..

இன்று (18/02/07) சீனர்களுக்கு வருடப் பிறப்பு. மலேசியாவில் கொண்டாடப்ப்டும் பெரிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று.


சீனப் பெருநாள் என்றால் என்ன?

கமாரி (Qamari) சீனக் காலெண்டரின் முதல் நாளில்தான் இந்த பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த கமாரி காலேண்டர் 12 வருடங்களுக்கு ரிபீட் ஆகும். இந்த 12 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு மிருகங்களை சிம்போலாக (Symbol) பயன் படுத்துகின்றனர். அவை:

1- பறக்கும் நாகம் (Dragon)
2- பாம்பு
3- குதிரை
4- ஆடு
5- குரங்கு
6- சேவல்
7- நாய்
8- பன்றி
9- எலி
10- நரி
11- புலி
12- முயல்
இந்த 12 மிருகங்களும் இவர்களது ஆரம்பக் காலத்தில் அன்றாட வாழ்க்கை முறையில் இன்றியமையாதவைகளாகும். அதுவே நாளைடைவில் அவர்களின் சோதிடங்களிலும் அமல் படுத்தப் பட்டது. இப்போது நீங்கள் எந்த வருடம் பிறந்தவர் என்று சொன்னீர்களானால் உங்களுடைய கேரக்டர்களை அந்த வருடத்தின் அதிபதியாய் கருதப்படும் பிருகத்தின் குணத்தை உங்களோடு ஒப்பிட்டு சோதிடம் சொல்வார்கள்.


சீனப் பெருநாளில் போபுலர் ஐதங்கள்:

1- சிங்க நடனம் (Lion Dance)
இரண்டு பேர் ஒரே சிங்க உடையில் இணைந்து ஆடுவார்கள். இவர்களது நடனம் சிங்கத்தின் அசைவுகளைப்போல் இருக்கும். கோங் மற்றும் ட்ரம் இசையை பிண்ணனியை வைத்து இனர்ஜெதிக்-ஆக (energetic) ஆடுவர். இது அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதை குறிக்கின்றது.

2- மண்டரின் ஆரஞ்சு பழம்

சீனப் பெருநாள் என்றால் இந்த பழம் இல்லாமல் ஒரு விழா இல்லை என்று சொல்லலாம். எனக்கே பெட்டி பெட்டியாக என் நண்பர்கள் கொடுப்பார்கள் என்றால் பார்த்துக்குங்களேன்.

3- அங்-பாவ் (Ang Pow)


இது ஒரு சிவப்பு வர்ண என்வெலோப் (envelope). இதில் பணம் இருக்கும். இதை திருமணமானவர்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு சீனப் பெருநாளன்று கொடுப்பார்கள். மற்ற இனத்தவர் இவர்களது வீட்டுக்கு போனாலும் அங் பாவ் கிடைக்கும். அவர்கள் வீட்டில் அலங்காரமாகவும் இவை தொங்கப்ப்ட்டிருக்கும்.

4- பட்டாசு

நீளமான வெடி (பெயர் என்ன என்று தெரியவில்லை).. இதுவும் சிவப்பு வர்ணத்தில்தான் இருக்கும். சத்தமும் பலமாக இருக்கும். சீனப் பெருநாள் முதல் நாளும், சீனப்பெருநாள் அன்றும் இதை கொளுத்தி தள்ளுவார்கள். (ஆனால், மலேசியாவில் இந்த வெடி பேன்(ban) பண்ணிவிட்டார்கள்.)


சீனப் பெருநாள் 15 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது:

சீனப் பெருநாளுக்கு முதல் நாள் (Eve)

இந்த நாள் நாம் கொண்டாடும் போகிப் பெருநாள் போல் கொண்டாடப்படுகிறது. பழையது கழிதல்.. புதியது புகுதல். வீட்டை சுத்தம் படுத்துவதால், கெட்டதை அகற்றி நல்லதை பெற்று அதிர்ஷ்டத்தை வர வைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். சில வீடுகளில் இந்த நாளில் துடைப்பங்களையும் வீசிடுவார்கள். வீட்டை சிவப்பு வர்ணங்களில் ஜோடிப்பார்கள்.

அன்றைய இரவில் இவர்களும் இவர்களது சொந்தங்களும் ஒன்று கூடுவார்கள். கோழி, மீன், பன்றி, காய்கரிகள் போன்றிய உணவுகள் அன்றைய இரவு உணவாக சமைக்கப்பட்டிருக்கும். இதுல என்ன ஆச்சர்யப் பட வேண்டிய விஷயம்ன்னா, அவங்க அதை சாப்பிட்டு முடிக்க மாட்டாங்க.. மிச்சம் மீதியை ஃப்ரீசரில் எடுத்து வைப்பாங்க. இப்போது போல எப்போதும் உணவுக்கு பஞ்சம் இருக்கக் கூடாது என்பதே இதற்க்கு காரணம்.

சீனப் பெருநாள் (Day 1)

காலையில் இவர்கள் தங்களது முன்னோர்களை வழிப்படுவார்கள். பிறகு இவர்களை விட முதியவர்களை சந்தித்து ஆசி பெருவார்கள். முதியவர்கள் அங்-பாவ் (Angpau) என்று அழைக்கப்படும் சிவப்பு நிற என்வெலப் தருவர்.
சிலர் Lion dance என்றழைக்கப்படும் டான்ஸ் ஆடுபவர்களை அழைப்பார்கள்.

(Day 2)

இது திருமணம் ஆன பெண்களுக்கு முக்கிய நாள். இன்றுதான் திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அவர்களது பெற்றோர்களின் வீடுகளுக்கு செல்வார்கள். முதல் நாள் எப்படி சிறப்பாக கொண்டாடினார்களோ, அதேபோல் இன்றும் கொண்டாடுவார்கள்.

(Day 3)

இன்று அவர்கள் குடும்பம் இறந்தவர்களுக்கு மரியாதை செய்ய அவர்களின் சமாதிக்கு சென்று வழிப்படுவார்கள். அந்த குடும்பத்தில் யாராவது இறந்து 3 வருடங்கள் ஆகாமல் இருந்திருந்தல், அன்று உறவினர் வீடுகளுக்கு இவர்கள் செல்லக் கூடாது. இது அந்த இறந்தவருக்கு மரியாதை செய்வதில் ஒன்றாக கருதப் படுகிறது.

(Day 7)

இன்றுதான் ஒவ்வொரு சீனர்களுக்கும் ஒரு வயது official-ஆக கூடப்படுகின்றது என்று நம்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு சீனர்களுக்கும் இன்று பிறந்த நாள். இந்த நாளில் இவர்களும் பெரும்பாலும் அசைவ உணவுகளை உன்பதில்லை. ஆனாலும் இவர்கள் வீடுகளில் இன்று தடபுடலாக விருந்துகள் நடைப்பெறும்.

(Day 15)

சீனப் பெருநாளின் கடைசி நாள். "சாப் கோ மே" (Lantern Festival) என்று அழைக்கப்படும். இதை சீனர் காதலர் தினம் என்று என் நண்பர்கள் சொல்வார்கள். இன்றைய நாள் இரவில் சிறுவர்கள்/ இளைஞர்கள் கண்ணாடி கூண்டு பொருத்தப்பட்ட மண்ணெண்ணய் விளக்குகளை (Lantern) ஏந்தி வீதிகளில் வளம் வருவார்கள். இன்னாளில் சீன கியூபிட் (Chinese Cupid) இரண்டு மனங்களை ஒன்று சேர்க்கும் வேலையை தீவிரமாக செய்யும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

ஏதோ எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்கிட்டேன். இங்கு மலேசியாவில் எந்த பெருநாள் கொண்டாடினாலும், எல்லாருமே சேர்ந்து கொண்டாடுவோம்..



Happy Chinese New Year!

Gong Xi Fa Chai!!!

Friday, February 16, 2007

164. உயிரை தொலைத்தவர் யார்? - பதில்

உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..


என்ற ஒரு பாடலை நேற்றைய இடுகையில் சேர்த்திருந்தேன்.

கேட்டவர்கள் எல்லாரும் பாடல் நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க..

துர்காதான் இது உள்ளூர் பாடல்ன்னு கண்டுப் பிடிச்சாங்க. அவங்களுக்கு தெரியாம இருக்குமா! அவரும் நம்மூர்வாசிதானே!

ஜி இருக்காரே! அவர் கூகல் கூகினாரோ இல்லை துர்கா கிட்ட கேட்டாரோன்னு தெரியலை.. ஆனால் பாடியவரை பற்றி சரியான தகவலை சொல்லியிருக்கார். அவருக்கு ஒரு பலத்த கைத்தட்டு! (1000 பொற்காசுகள் western union மூலமாக அனுப்பி வைக்கப் பட்டுவிட்டது.. கிடைச்சிருச்சா?)

தல வீட்டுக்கு போய் கேட்டுட்டு சொல்றேன்னாரு.. ஆனா, ஆளையே காணோம்..

சரி, இப்ப யார் இந்த பாடலை பாடினார்ன்னு பார்ப்போம்.. இவர் பெயர் திலீப் வர்மன்.

சசி, சுரேஸ், நெல்சன்.. இவங்க மூன்று பேர் சேர்ந்த குழு Rogkwave.. இவர்கள் 3 ஆல்பங்கள் வெளியிட்டனர்.

1- சுரேஸ் கிஃப்ட் (Suresh's Gift)
2- சங்கீத் (Sangeeth)
3- சங்கே முழங்கு (Sange Muzhangu)

நாலாவது ஆல்பத்தில் சுரேஷும் நெல்சனும் கலந்துக்கவில்லை.. மாறாக சசி தேடிய Replacement-தான் திலீப்..

ஆல்பத்தின் பெயர் நவீனம்.. ஆல்பம் ஹிட்டானது.. காரணம்? வேறு என்ன.. திலீப்பின் குரல்தான் காரணம்.. இந்த ஆல்பத்தில் இவர் பாடிய பாடல்களின் இரண்டையும் இங்கே இணைத்துள்ளேன்.

1- என்னில்
2- இரு கண்கள் (முழு பாடல் என்னிடம் இல்லை)
3- உயிரை

Powered by eSnips.com

ஆனால், இந்த உயிரை தொலைத்தேன் பாடல் இந்த ஆல்பங்களில் வெளியானதல்ல.. இது மலேசிய தெலி மூவி (Tele Movie) காதல் வேண்டும் என்ற படத்தில் இடம் பெற்றது. திலீப் பாடியதே இதில் ப்லஸ் பொய்ண்ட் (Plus Point)..

இவருக்கு எனக்கு பிடித்த உன்னி கிருஷ்னன் குரல்.. அது இன்னொரு ப்லஸ்.. :-P

சரி.. இந்த பாடலின் வரி உங்களுக்கு வேண்டுமா? இதோ பிடிச்சிக்கோங்க:

உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..
மீண்டும் உன்னை காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை..
எண்ணம் முழுதும் நீதானே
என் கண்ணே..
(உயிரை..)


அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..
தாலாட்டுதே பார்வைகள்..
(அன்பே..)
உனை சேரும் நாளை..
தினம் ஏங்கினேனே..
நானிங்கு தனியாக அழுதேன்..
விடியும் வரை..
கனவின் நிலை..
உனதாய் இங்கு..
தினம் ஏங்குது..
மனம் உருகிடும்..
நிலை இது..
எந்தன் முதல் முதல் வரும்..
உயிர் காதலில்..
(உயிரை..)


நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..
உன்னோடு நான் மூழ்கினேன்..
(நினைத்தால்..)
தேடாத நிலையில்..
நோகாத வழியில்..
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..
(விடியும்...)
(உயிரை..)
ஓஓஓஓஓ....


தல யோகி பி & நட்சதிராவின் வல்லவன் பாடல்களை கேட்டிருந்தாரு.. அந்த முழு ஆல்பம் mp3 வடிவில் இங்கே upload செய்துள்ளேன்.. நீங்களும் அந்த பாடல்களை கேட்க விரும்பினால் இங்கே டவுன்லோட் செய்துக்கலாம்.. :-)

163. உயிரை தொலைத்தேன்.

எப்போதுமே நான் ஒரு பாடலை பற்றி சொல்லும் முன், அதனை பாடியது யார், பாடல் வரி மற்றும் மற்ற சில குறிப்புகளை கொடுப்பேன்..

இன்றைக்கு இவைகள் இல்லை..
இது ஒரு அருமையான பாடல். ரொம்ப நாள் கழித்து எனக்கு இது mp3 வடிவத்தில் கிடைத்தது. கிடைத்ததிலிருந்து ஒரு 5 மணி நேரமாய் இந்த பாடலை மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் பாருங்களேன்.

பாடலை கேட்டுவிட்டு, இந்த பாடலை பற்றி உங்களுடைய கருத்துக்களையும், பாடிய குரலைப் பற்றியும் சொல்லுங்களேன். முடிந்தால் பாடியவர் யாரென்றும் கண்டுபிடியுங்களேன்.



உங்கள் பின்னூட்டங்களுக்கு பிறகு, என்னுடைய கருத்துக்களை அடுத்த இடுகையில் எழுதுகிறேன்.

Wednesday, February 14, 2007

162. பிப்ரவரி 14 தேதியா!!!

பிப்வரி 14 இன்னைக்கு..

எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது!!! (போச்சா? இதுதான் முடிவா? ஏற்கனவே 4 கண்ணு எனக்கு (specky).. இப்ப என்ன எட்டா?)

கேம்பஸே ர் ரா தெரியுது!!! (அப்பாடா.. atleast இன்னும் நான் கலர் ப்லைண்ட் (colour blind) ஆகலை..)

என்ன கதைன்னு கேட்குறேங்களா? (ஆமா.. நீங்க கேட்காட்டினாலும் நான் சொல்வேனே! இல்லைனா இன்னைக்கு எழுத ஒன்னும் இருக்காதே! :-P)

ப்ளாக்லேயிருந்து ஆரம்பிக்கலாமே:

ஒரு வாரமா நம்ம ப்ளாக் தோழர்கள் "ஏன் ஃபிரண்ட், காதலர் தினம் வருது.. ப்ளாக்கை எடிட் செய்யலையா?"ன்னு கேட்டாங்க..

நான் வேற இப்பத்தான் ஒரு 4 மாசம்மா இங்கு வந்து குப்பை கொட்டுறதுனாலே, எப்போதெல்லாம் சுத்தம் செய்யனும், என்ன செய்யனும்ன்னு ரூல்சஸ் தெரியலை..

உடனே நம்ம தோழர்கள் சொன்னாங்க:

"அது ரொம்ப ஈசி.. முதல்ல உங்க வலையை சிவப்பு அல்லது பிங்குக்கு மாத்துங்க!"

"என் ப்ளாக் சிவப்பாத்தானே இருக்கு?" இது நான்.

"அட.. அப்பன்னா பிங்குக்கு மாறுங்க"

"பிங்க்கா?? அதெல்லாம் ஒரு ரா??.... க்ர்ர்ர்ர்... த்த்தூ...."

"அப்படியெல்லாம் சொல்லப்படாது! நல்லா கேட்டுக்கோ! பிங்க் உனக்கு பிடிக்கலைன்னா உன்னை பெண்கள் லிசஸ்டிலேயே சேர்த்துக்க மாட்டாங்க.. ஆமா!!"

"அட.. இது என்ன கண்டிஷன்? புதுசா இருக்கே! ஓ அதான் திருமதி. சரவணன் பிங்க் கலர் சாரில திருமணம் செஞ்சுக்கிட்டாங்களா?"

"யாருப்பா அது? Mrs. Saravanan?"

"அதான், அடாவடியா துருதுருன்னு நிறைய படத்துல நடிச்சாங்களே! ஜோதிகான்னு கூட சிலர் கூப்பிடறதா நம்ம தலைவருடைய சிட்டுக்குருவி சொல்லிச்சு.."

"Out of topic எல்லாம் போகாதீங்க ஃபிரண்ட். உங்க தெம்ப்லேட் (template) கலர் மாத்த போறீங்களா இல்லையா!!!!"

நண்பர் கடுப்பாக..
நான் "அய்யோ மிரட்டாதீங்க தோழரே! வீராசாமி விமர்சனர்த்தை வலையில் படிச்சு.. பாவம் நான் பயந்து போய்.. இன்னும் அந்த பயத்திலிருந்து மீளவே இல்லை. அதுக்குள்ள இன்னொன்றா? நான் மாத்திருறேங்க.."

அப்புறம் என்ன.. நம்ம ப்ளாக்லேயும் என்னென்னவோ சேர்த்தும்.. சிலவைகளை கழித்தும்.. எனக்கு பிடித்த கலரையும் சேர்த்தேன்.

ஆனாலும் அந்த பிங்க் கலரை போடனும்ன்னு துளி கூட ஞாபகம் இல்லை.. எல்லாமே நீல மயமாக மாறிட்டது.. இப்போ THe WoRLD oF .:: MyFriend::.-இல் நான் ஒருவர் மட்டும் பதிவர் இல்லை.. Official-ஆக இன்னொருவரும் இணைந்திருக்கிறார்..

Let me welcome Mr. Siddarth with a big round of applause.... :-D (இவர் பதிவு எழுதினாலும் என் பெயரில்தான் எழுதுவார். அதுனால் எது அவர் எழுதினார்.. எது நான் எழுதினேன் என்ற சின்ன பிள்ள தனமா கேக்கக்கூடாது.. சொல்லிட்டேன் ஆமா!) :-P

அப்புறம் நேற்று செந்தழல் ரவியோட காதலர் தினம்: என்ன உடை - என்ன அர்த்தம் என்பதை படித்தேன். அட ஆமா: ரவி, நீங்க சொன்னது ரைட்தான் போல.. :-P என் ப்ளாக் நீலத்துல இருக்கு.. அப்ப நான் சும்மாத்தானிருக்கிறேன்.. ஃப்ரீரீரீ...

சரி.. இப்போ என்னை சுத்தி நடந்ததை சொல்லுறேன்.. நேற்று ஏதோ கொஞ்சம் ஃப்ரீயாத்தான் இருந்தேன். ஒருத்தி சும்மா இருந்தா எப்படித்தான் மத்தவங்களுக்கு மூக்குல வேர்க்குமோ தெரியாது.. நம்ம நண்பர்கள் எல்லாம் என் ரூம்ல வந்து கூடிட்டாங்க.. ஏதோ மாநாடு நடக்குற ஒரு எஃபேக்ட்டு..

ஒரே தாமாஷ்தான் அதுக்கு பிறகு.. பேசினோம்.. அரட்டை அடிச்சோம்.. கிண்டல் பண்ணோம்.. அப்படியே போயிக்கிட்டே இருந்தது.. திடீர்ன்னு:

"சுட்டும் விழி சுடரே..
சுட்டும் விழி சுடரே..
என் உலகம் உன்னை சு..."


"ஹலோ.."
பார்த்தால் என் தோழியின் கைத்தொலைபேசி ரிங்டோன்..

"Hey, will be back in a while.."ன்னு சொல்லிக்கிட்டே ரூம்மை விட்டு வெளியே போயிட்டாங்க..

சரி ஏதோ பர்சனல் கால்ன்னு நாங்கள் பேச்சை தொடர்ந்தோம்..

"பாக்காதே என்னை பாக்காதே..
கொட்டும் பார்வையாலே என்னை பார்க்.."
வரி முடியறதுக்குள்ளே

இன்னொருத்தவங்க "Urgent.. சீக்கிரமா வந்துடறேன்"ன்னு சொல்லி நழுவிட்டாங்க..

அவங்க பின்னாலேயே இன்னொருத்தவங்க "கீழே வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"ன்னு நழுவிட்டாங்க..

இன்னொருத்தவங்க இங்க நடக்கிறதையெல்லாம் கவனிக்காமல் மும்முறமா குறுஞ்செய்தி எழுதுறலேயே பிசியா இருந்தாங்க..

நான் அவங்களை கூப்பிட "நீ என்னை ரொம்பவே கிண்டல் பண்ற.. நான் கோபிச்சுகிட்டு போறேன்.."ன்னு கிளம்பிட்டாங்க.

பார்ரா... ரூமை விட்டு வெளியே போறதுக்கு இப்படியும் ஒரு வழியா?

நான் கடுப்பாகி "யார் யார் கிளம்பனும்ன்னு நினைக்கிறீங்களோ, இப்பவே கிளம்பலாம்.. ஒன்னு ஒன்னா கலண்டுக்கிறது நல்லா இல்ல சொல்லிட்டேன்"ன்னேன்..

ஒரு கும்பலா சிலர் எழுந்திருச்சி கிளம்பிட்டாங்க..

அதுலேயும் கடைசியா வெளியானவங்க என் பக்கத்தில வந்து நின்னு என்னை பாவமா பாத்தாங்க.

நான்: என்ன?
அவங்க: எவ்வளவு பேர் வெளியானாலும் நீ தாங்கிகிற.. நீ ரொம்ம்ம்ம்பபப நல்ல்லவ.. அவ்வ்வ்வ்..

சொல்லிக்கிட்டே ஓடிட்டாங்க.. என்னை வெறுப்பேத்துறதுக்குன்னே ஒரு க்ரூப் இப்படி சுத்திக்கிட்டு இருக்கு போல.. என்ன பன்றது.. என் தலைவிதி..

சரி போனால் போகட்டும் போடான்னு சொல்லிட்டு மிச்சம் இருக்கிற கூட்டணிய எண்ணினா... 1... Count again.. 1....அடப் பாவமே! என்னையும் சேர்த்து மொத்தமே 2 பேர்தான்...

என் தோழி: "கவலைப் படாதே! நான் இருக்கிறேன்.. எல்லாருக்குமே பார்த்னர் இருக்கு.. காதலர் தினம் கொண்டாட கிளம்பிட்டாங்க.. நமக்குதான் இல்லையே.. நீ உன் நண்பர்கள் நல்லா கவிதை கதையெல்லாம் எழுதியிருக்காங்கன்னு சொன்னியே.. வா.. நாம் அதையெல்லாம் படிக்க...."

"காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்..
கரையில் வந்த பின்னும் நான் விழுந்தேன்.."

இது அவளுடைய குறுஞ்செய்தி ரிங்டோன்..

"ஏய்.. இது காதல் வைத்து படல்தானே.. வரிகள் நல்லா இருக்கு"ன்னு நான் சொன்னேன்..

பதிலுக்கு அவள் : "அந்த படம் என் கிட்ட இருக்கு.. நான் போய் எடுத்துட்டு வரேன்"ன்னு சொல்லி ஒரே ஓட்டமா ஓடிட்டாள்..

அப்போ புரிஞ்சுக்கிட்டேன்.. இவளும் எஸ்கேப்ன்னு..
என்னங்க பன்றது.. எல்லாரும் ரெண்டு ரெண்டா சுத்துறாங்க..
நான் இன்னும் தனி ஆள்தான்.. சரி.. நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் நினைச்சிகிட்டு டவுன்லோட் பண்ணி வைத்திருந்த தீபாவளி படத்தை தனிமையில் உட்கார்ந்து பார்த்தேன்.

எல்லாரும் சொல்றதை போல நானும் என் பங்குக்கு வாழ்த்து சொல்லிகிறேன்:

காதலர்களாய் சுற்றுபவர்களுக்கு : "காதலர் தின வாழ்த்துக்கள்!"

ஒற்றையாய் இருப்பவர்களுக்கு : (பெப்சி உமா தோனில்) நான் என்னங்க சொல்ல போறேன்.. பலர் வருஷ கணக்கில முயற்சி ஷெய்திருப்பீங்க.. ஆனா லைன் (பொண்ணு / பையன்) கிடைச்சிருக்காது. சிலர் இன்னைக்குதான் முயச்ஷித்திருபீர்கள். உடனே கிடைத்திருக்கும். வருசத்துல 365 நாள் இருக்குங்க.. முயற்சி பண்ணுங்க.

(இது என்னுடய குரலில்) காதலர்கள் ஏன் காதலர் தினத்தை ஸ்பெஷலா கொண்டாடுறாங்கன்னு தெரியுமா? வருசத்துல 365 நாட்கள்ல 364 நாட்கள் எதுவும் ஸ்பெஷலா நடக்கததுனால இந்த ஒரு நாள ஸ்பெஷலா ஆக்கிகிட்டாங்க.. அப்ப காதலர் இல்லாதவங்களுக்கு 365 நாட்களும் ஸ்பெஷலான நாட்கள்தானே!! (அப்படின்னு நாமலே நினைச்சு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்..)

ஒற்றையாய் சுற்றும் அன்பர்களுக்கு "அன்பர் தின வாழ்த்துக்கள்!"

Monday, February 12, 2007

161. நல்லவர் சொல்லை நாம் கேட்போம் தமிழா..

இதுவரை நான் இங்கு எழுதிய பாடல்கள் எல்லாமே சினிமா பாடல்கள்தான். இன்றைக்கு ஒரு வித்தியாசத்துக்கு ஒரு மலேசிய கலைஞசர்களின் பாடலை பற்றி சொல்லலாமே என்றுதான் இந்த பதிவு..

ஏற்கனவே மடை திறந்து என்ற பாடலை நிறைய பேர் கேட்டு மலேசிய கலைஞர்களின் திறமையை உணர்ந்துள்ளனர். இங்கெ இன்று நட்சத்திரமாய் வந்திருப்பது பூமெராங்-X (BoomerangX) என்னும் குழு. இவர்கள் ராப் இசை கலைஞசர்கள். தம்ழில் சரளமாய் பேச தெரியாவிட்டாலும் இவர்களின் பாடலில் நல்ல ஒரு கருத்து இருப்பதனாலேதான் இந்த பாடலை நான் இங்கே எழுதுகிறேன்..

தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இங்கே பிரிட்டீஷ் காலத்தில் வரவைக்கப்பனர் தோட்டத் தொழிலுக்கு.. அன்றிலிருந்து தமிழர்களின் இடம் தோட்டங்கள்தான் என்று ஆகிவிட்டது.. 20 வருடத்துக்கு முன்பிலிருந்துதான் ஒவ்வொறு தமிழனாய் பட்டணத்துக்கு வர ஆரம்பித்தார்கள்... (இதை விடுங்கள்.. இதை பற்றி பின்பு ஒரு பதிவாய் போடுகிறேன்.)

இந்த பாடலில் அந்த வலியையும், கஷ்டங்களையும் சொல்லும் விதமே என்னை கவர்ந்தது.. இதில் மற்றொன்று எனக்கு பிடித்தது: அந்த பெண் குரல் (Featuring artiste: அலிண்டா) (வீடியோவில் தேவதை உடையில் இருப்பார்). இவர் வானவில் பாடல் திறன் போட்டியில் (2nd Season) முதன்மை நிலை வெற்றியாளர். இவர் தன் குரலை மாற்றி மாற்றி பாடும் வல்லமை படைத்தவர். 'மலேசிய பெண் SP பாலா' என்று சொன்னால் மிகையாகாது. இவர் கடைசி சுற்றில் பாடிய பாடல் என்ன என்று கேட்டால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள். அவ்வை சண்முகியில் சுஜாதாவும் கமலஹாசனும் சேர்ந்து பாடிய ருக்கு ருக்கு. இவர் இவருடைய குரலை இரண்டு மோடுலேஷனில் பாடியது அவ்வளவு அருமையாய் இருந்தது.

சரி இப்போது வீடியோ க்ளிப்பையும் அதனை தொடர்ந்து பாடல் வரியையும் பார்ப்போம்..



ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம்..
நாமெல்லாம் ஒரு ரத்தம்.. தெரியும்..
உலகம் பூரா நாம செதரிக்கெடக்கிறோம்..
4 பேரு சிரிக்கிறோம்..
4 பேரு அழுவுறோம்..
4 பேரு அழியிறோம்..
ஒருத்தன் ஞானியாவுறான்..
என்ன நடக்குது?
புரியுது.. புரியலை..

கிட்ட கொண்டுவா உன் கதை..
சொல்ல போறேன் பல கதை..
சொந்த கதை.. சொந்த கதை..
தாத்தா பாட்டி வந்த கதை..
இயற்கை மண்ம் வீசும் பால் பரக் காட்டுலே
வாழ்க்கை தேயும் செம்மண்ணின் ரோட்டுல..
அந்த பரம்பரை..மீண்டும் ஒரு முறை..
ஆள நினைப்பது என்ன குறை..

நல்லவர் சொல்லை நாம் கேட்போம்..
நலமாய் வாழ வழி வகுப்போம்..
தலைவர் சொல்ல வழி நடப்போம்..
தாய் நாட்டினையே வாழ வைப்போம்..

தமிழன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நீ நில்லடா..
கேட்க எல்லாம் நல்லா இருக்கு அண்ணே..
முதல் வந்து பாரு தோட்டத்து மண்ண..
தோட்டத்து மக்கள்க்கு ஒரு செய்தி.
நல்லது கேட்க இல்ல ஒரு நாதி..
மரம் வெட்ட போனா உயிர் பாதி..
மறந்து நீ போனா அதோ கதி..
தோட்ட தமிழா அது செய்தி..
கேட்கவா தமிழா அது நீதி..
பட்டணத்து வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்..
இருந்தும் உன் பிள்ளை உருப்படும்..
கெட்டது இல்லாமல் பட்டுபோக
மலக்காடு இருக்கு வேலைகாக..
மாச சம்பளம் உனக்கில்லை..
மாசம் கடைசி வரும் தொல்லை..

ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சிறந்து விளங்கினோம்..
ஆனால் இன்று தோட்டப்புறத்துல மாதச் சம்பளம் பிரச்சனை..
பட்டணத்துல படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத பிரச்சனை..
ஒரு சிலர் நல்லாயிருந்தாலும்..
பலர் வருமையில வாடும் அவலம் இன்னும் இருக்கவே செய்யுது..
வந்தவருக்கெல்லம் வாரி தந்த அந்த காலம்..
இனி மீண்டும் எப்போ மலரும்?

பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை..
நாம் பார்த்து வாழ கூடாது..
(பசிக்கும்..)
வதக்கும் மனிதன் இருந்தாலே..
இங்கு பறிக்கும் மனிதன் தோண்ரிடுவான்..
(நல்லவர்..)

மழையில வெயிலில நனைஞ்சோம்.. காஞ்சோம்..
ஓடா தேஞ்சோம்.. அது மிச்சம்..
வீட்டைக் கட்டி.. வாயைக் கட்டி..
உழைச்சி..
10 வட்டி..கடன் கட்டி..
அழிச்சி..
வாழ்நாள் பாட்டாளி..
வருமையோட கூட்டாளி..
ஒருநாள் தான்டா தீபாளி..
இதுதான் இங்கே என்றும் கதி..
அல்லும் பகலும் உழைப்பதற்க்கு..
கல்லும் முள்ளும் உனகெதற்கு?
இல்லும் முள்ளும் கிடைக்கிற்து..
தெளிவாய் செல்லு..
நீ வெல்லு..
நாட்டை கூட நீ வளர்த்த..
காட்டுகுள்ள இன்னும் கிடக்க..
(இயற்கை..)

(நல்லவர்..)
(நல்லவர்.. & தமிழன்..)
(தமிழன்..)

Friday, February 09, 2007

160. ஆட்டோ - ஷேர் - ஆட்டோ


படத்தை பார்த்தீங்களா?


அர்ஜுனரை போல் படத்தில் நான் குறி வைப்பது ஆர்யாவை அல்ல..
அதோ!
அவர் பின்னால் நிற்கும் ஆட்டோவைதான்..

குருஷேத்ரம் படத்தில் வடிவேலுவின் ஒரு ஜோக்கை பார்த்து இன்னமும் குழம்பிகொண்டு இருக்கிறேன்.
அதாங்க..
கைப்புள்ள வேலை தேடி பட்டணத்துக்கு வருவாரு.. பலர் அவரை ஏமாத்தி பண்ம் பறிப்பாங்க.. (இவரு ரொம்ப நல்லவரு!!! அவ்வ்வ்....)

அப்போ ஒருத்தர் "ஷேர் ஆட்டோன்னா 10 பேர் ஏறலாம். எல்லாரும், கொஞ்சம் கொஞ்சம் பணம் தருவாங்க. கடைசி ஆளும் அந்த அட்டோகாரரும் பணத்தை பங்கு போட்டுக்குவாங்க.."ன்னு சொல்லி கைப்புள்ளைய மொத்து மொத்துன்னு அடி வாங்க வைப்பாரே!

எங்க ஊருல ஆட்டோவே இல்லை.. ஆட்டோவை சினிமாவிலும், வலையுலகிலும் பார்த்திருக்கிறேனே தவிர.. நேரடியாக பார்த்ததும் இல்லை.. ஏறியதும் இல்லை..

ஆட்டோ சீட்டை பார்த்தால் மொத்தமே 3 பேர்தான் ஏறமுடியும் போல் இருந்தாலும்,

எப்படிங்க 10 பேர் ஏர்றீங்க?
அந்த ஷேர் ஆட்டோன்னா என்ன?

அது புரியாமல் அந்த ஜோக்குக்கு என்னால் சிரிக்க கூட முடியவில்லை..

யாராவதுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க.. (அது உங்களோட பதிவாய்.. நீளமாய் போட்டாலும் எனக்கு சந்தோஷம்தான்..) ;-)

Saturday, February 03, 2007

159. பெண்: என் கேள்விக்கென்ன பதில்?

தற்செயலாக திவ்யாவின் கலைப்பாடங்களில் பட்டப்படிப்பு படிக்கலாமே என்னும் பதிவை படித்தேன். என்னுள் பல பல கேள்விகள்...

இந்தியாவில் மட்டும்மல்ல.. அனேக நாடுகளில் நம் தமிழினத்தில் பெண்களை சீக்கிரம் திருமணம் செய்து வைக்க நிறைய பெற்றோர்கள் கங்கணம் கட்டி திறீகிறார்கள்.

ஏன்?

1- உங்களுக்கு நாங்கள் என்ன பாரமா?

2- நாங்கள் படிப்பிலும் தொழிலிலும் வெற்றி பெற மாட்டோம் என்று நினைக்கிறீர்களா?

3- சீக்கிரம் திருமணம் புரியாவிட்டால் மற்றவர்கள் குறை சொல்வர் என்றா?

4- மாப்பிள்ளை கிடைக்காதென்றா?

5- உங்களின் கடமைகளை சீக்கிரமே முடிக்க வேண்டும் என்பதாலா?

பிறகு எதற்க்கு சின்ன வயசிலிருந்தே நன்றாக படிக்க வேண்டும், பள்ளியில் முதன்மையாக வரவேண்டும் என்று எங்களை தொல்லை படுத்தினீர்கள்?

பரிட்சையில் புள்ளிகள் குறைந்ததற்க்கு எங்களை பிரம்பு பிய்யும் வரை அடித்தீர்கள்?

உங்களின் அந்த அடியும் கட்டளைகளும்தான் எங்கள் மனதில் தீயானது. படித்து உங்களின் ஆண் பிள்ளகளை விட ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்ற வெறி..

ஆனாலும் மேல் நிலை கல்வி படிக்கும் போது திரும்பவும் பிரச்சனை.. எங்களின் லட்சியத்தை அடைய விடாமல் செய்யும் உங்களின் இந்த திருமண ஆசை..

எங்களை எங்கள் வழியில் விட்டு பாருங்கள். பல ஆயிரம் சரித்திர பெண்களையும் சாதிக்கும் பெணளையும் நீங்கள் கான்பீர்கள்... அது உங்களுக்கு பெருமை தானே??

பதில் சொல்லுங்கள் என் கேள்விகளுக்கு...