Tuesday, December 30, 2008

12 வருடத்துக்கு பிறகு ஒரு வெற்றிகரமான சந்திப்பு : 28 மாணவர்கள் + 2 ஆசிரியர்கள்

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பப்புள்ளியில் செய்யும் தவறு முதல் இடத்தில் வெற்றிப்பெற வேண்டிய வாய்ப்பை இழக்க வைத்துவிடும். இதுவே ஆரம்பப்புள்ளியில் சரியான நேரத்தில் புறப்பட்டு சீராக ஓடியிருந்தால் வெற்றி நிச்சயம்! அதனால்தான் இப்படிப்பட்ட விளையாட்டில் எப்படி முடிக்க வேண்டும் என்பதை விட எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர்கள் மிக கடுமையான பயிற்சிகளை விளையாட்டாளர்களுக்கு வளங்குவர்.

எவ்வளவுதான் படித்திருந்தாலும், என்னவெல்லாம் சாதித்திருந்தாலும், எங்கெல்லாம் போயிருந்தாலும் ஆரம்பப்புள்ளியை மறக்க முடியாது. ஆமாம்! நாம் வாயில் நுழையாத படிப்பெல்லாம் படித்து ஏ.சி. அறையிலும், விமானத்திலும், சொகுசு கார்களிலும் இப்போது பயணம் செய்தாலும், இதற்கெல்லாம் வித்தாக இருந்த நமது அ, ஆ சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களும், ஆரம்பப் பள்ளியும், நண்பர்களும், அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளும், வாங்கிய அடிகளும், ஓடிய ஓட்டங்களும், சிரித்து மகிழ்ந்த தருணங்களும், கண்கள் கலங்கி நின்ற சம்பவங்களும், பரிட்சையில் பிட் அடித்த நேரங்களும் எப்போதுமே மனதில் பசுமரத்தாணிப்போல் பதிந்து புதைந்து கிடைக்கின்றன.

வெகு சிலர் மட்டுமே அந்த பழைய நட்புகளை இன்னும் தன் தொடர்பில் வைத்திருக்கின்றனர். பலர் தன் வாழ்க்கை சக்கரம் ஓடும் வேகத்தில் இதற்கெல்லாம் நேரம் ஏது என்பதுபோல சுழன்று கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நீங்கள் நின்று திரும்பிப் பார்க்கும்போது “ச்சே.. வாய்ப்பு கிடைத்தபோது இந்த நட்பை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டதே! இப்போது இவர்களெல்லாம் எங்கே எப்படி இருக்காங்களோ!” என்று தோன்றவைக்கும் தருணம் மனதை மிகவும் புண்படுத்தும். பழைய நினைவுகளை நினைவில் கொண்டுவந்து கொஞ்சம் திருப்தி அடையவே முடியும்.

1996-ஆம் ஆண்டில் நாங்களும் எங்கள் ஆசிரியர்களும்

நான் சிறு வயதில் படிக்கும்போது ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பில் சொல்லும் ஒரு விசயம்: ”இன்னும் சில வருடம் கழித்து நீங்களெல்லாம் படித்து நல்ல வேலையில் இருக்கும்போது எங்கேயாவது எங்களை பார்த்தால் “வணக்கம் டீச்சர், நாந்தான் உங்கள் மாணவன்/மாணவி. 19XX வருடத்தில் உங்கள் வகுப்பில் படித்தேன். இப்போது ஒரு டாக்டராக/வக்கீலாக/ஆசிரியராக/பொறியியலாலராக வேலை பார்க்கிறேன்” என்று அன்று சொல்லப்போகும் ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக ஆக்கும். ஒரு பெண்ணுக்கு தாய்மை எப்படி அவளை முழுமையாக்குகிறதோ, அதேப்போல இந்த ஒரு வார்த்தைதான் எங்களை ஒரு முழு ஆசிரியராக்கும்”. அப்போதே என் மனதில் புதைந்த விசயம்! நானும் எப்போதாவது எனக்கு படித்து கொடுத்த ஆசிரியர் முன்னாள் நின்று “டீச்சர் என்னை நினைவிருக்கிறதா? 96-ஆம் ஆண்டு உங்கள் வகுப்பு மாணவியாக இருந்தேனே? வீட்டுப்பாடம் செய்யாமல் உங்களிடம் அடிவாங்கினேனே! கணிதப்பாடம் நன்றாக செய்ததுக்கு நீங்க கூட தட்டிக்கொடுத்து முத்தம் கொடுத்தீங்களே!” என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த சந்தர்ப்பம் 12 வருடங்கள் கழித்து நேற்று அமைந்தது!
பத்துமலை ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் ஆறாம்வகுப்பு வரை படித்து 1996-இல் நானும் நண்பர்களும் வெளியானோம். 12 வருடம் கழித்து ஒரு 2 மாதத்துக்கு முன்பு திரும்ப நண்பர்களெல்லாம் ஒன்றாக சந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ஒவ்வொருவராக தேட ஆரம்பித்தேன். பல வகையிலும் கஷ்டப்பட்டு சிறுக சிறுக ஒவ்வொருவராக சேர்த்து 29/12/08-இல் சந்திக்கலாம் என ஏற்பாடானது.

காலை 11 மணிக்கு பத்துமலை கோவிலில் (முன்னாள் எங்கள் பள்ளி இந்த இடம்தான். பக்கத்திலேயே புதிதாக பள்ளி கட்டிக்கொண்டு அங்கே போனதும் எங்கள் பழைய பள்ளிக்கூடம் உடைக்கப்பட்டு கார் நிறுத்துமிடமாகவும், திருமண விருந்து நடக்கும் ஹாலாகவும் மாற்றப்பட்டுவிட்டது) எல்லாரையும் சந்தித்து சிறிது நேரம் அரட்டை அடித்தோம். பிறகு அனைவரும் கூட்டமாக பள்ளிக்கு சென்றோம். அப்போது எங்கள் மலாய் ஆசிரியை இப்போது அதே பள்ளியில் துணை தலைமையாசிரியராக பணியாற்றுகிறார். அவர் எங்களை பார்த்ததும் மகிழ்வுடன் வரவேற்றார். மற்ற ஆசிரியர்களை கூப்பிட்டு “இவர்கள்தான் என் பழைய மாணவர்கள்” என எங்கள் அனைவரையும் அந்த ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

அவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு, எங்களில் நால்வர் (மற்ற அனைவரின் சார்பில்)அவருடன் பள்ளி அலுவலகத்துக்குள் சென்று இப்போதுள்ள பள்ளியின் நிலவரம், மாணவர்கள், ஆசிரியர்கள், பிரச்சனைகள், அதற்க்கான தீர்வுகள் என சில விசயங்களை கலந்தாலோசித்து விட்டு வந்தோம். அதன் பிறகு போட்டோஸ், போட்டோஸ், போட்டோஸ் என ஆங்காங்கே க்ளிக்கிக் கொண்டு பசி வந்ததும் அடுத்த இடம் பார்த்து கிளம்பினோம்.

மலாய் ஆசிரியர் ராஜேஸ்வரி டீச்சருடன் நாங்கள்

28 பேர் தாராளமாக உட்கார்ந்து சாப்பிட வசதியான இடம் எது என்று ஒரு பெரிய கேள்விக்கு விடை காணும் விதமாக அனைவரும் எஸ்.டி.சி ரெஸ்டாரண்டுக்கு பயணமானோம். அங்கே சுற்றி உட்கார்ந்த அனைவரும் எங்களையே பார்க்கும்படி பலவிதமான கூத்துகளை செய்து, உணவு அருந்தி, கலந்துரையாடினோம். இங்கேயும் போட்டோஸ் சில க்ளிக்கிவிட்டு அடுத்த இடத்துக்கு பயணத்தை தொடரலாமா என்று அனைவரின் கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் புறப்படலாம் என ஒரு மனதாய் முடிவெடுத்த பிறகு, நாங்கள் வாங்கிய நினைவுசின்னங்களை ஆளுக்கு ஒன்று என கொடுத்துவிட்டு 7 கார்களில் ரவாங்கை நோக்கி புறப்பட்டோம்.

உணவு விடுதியில் நாங்கள்

அங்கேதான் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கலாவதி வசிக்கிறார். அவரிடம் முன்னமே நாங்கள் வரும் தகவலை அவரிடம் சொல்லியிருந்தபடியால், அவர் எங்களை வர சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தோம். அவரும் அதே நேரம் அங்கே வந்திருந்தார். “வாங்க.. அனைவரும் என் வீட்டும் போகலாம்” என சொன்னதும் 7 கார்களும் அவருடைய வாஜா காரை தொடர்ந்தோம்.

அருமையான இரண்டு மாடி வீடு. பல வித வித்தியாசமான பொருட்களால் அலங்கர்க்கப்பட்டிருந்தது. வீட்டில் டீச்சரின் கணவரும், அவருடைய மூன்று அழகிய மகள்களும் எங்கள் அனைவரையும் சந்தோஷமாக வரவேற்றனர். அங்கிள் வீட்டில் இருந்த அனைத்து நாற்காலிகளையும் எடுத்து வந்து வைக்க வைக்க, நாங்கள் வீட்டின் உள்ளே வர வர.. ”என்னடா வந்துட்டே இருக்காங்க.. எத்தனை பேரப்பா!”ன்னு அவருக்கே பிரமிப்பாய் இருந்திருக்கும்.

ஒரு வழியாக எல்லாரும் வந்து அவர் வீட்டும் ஹால் நிறைத்துவிட்டோம். டீச்சர் எங்களின் வருகை அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொண்டுவந்துள்ளது என்று விளக்கினார். அவரின் குடும்ப உறுப்பினர்ர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அவரின் இப்போதைய பள்ளியை பற்றியும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் சொன்னார்.

வருடத்துக்கு முன் டீச்சர் எங்களுக்கு என்னென்னமோ பரிட்சையெல்லாம் வைத்திருக்கிறார். இப்போது டீச்சருக்கு நாங்கெல்லாம் சேர்ந்து பரிட்சை வைத்தோம். நான் 12 வருடத்துக்கு முன் எடுக்கப்பட்ட வகுப்பு போட்டோவை எடுத்து வந்திருந்தேன். அதை டீச்சர் கையில் கொடுத்ததும் அவர் அந்த போட்டோவை வைத்து எங்கள் ஒவ்வொருவரையும் கண்டுப்பிடிக்கும் வேலையில் இறங்கினார். அவர் ஒவ்வொருவராக கண்டுப்பிடிக்க, நாங்கள் எங்கள் இப்போதைய நிலை என்ன என்றும் அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அனைவரும் நல்ல நிலையில் இருப்பதை கேட்டு அவர் மிகவும் பூரித்து போனார்.

டீச்சரிடம் நாங்கள் அனைவருமே ஒரு தடவையாவது அடி வாங்கியுள்ளோம். அந்த தருணங்களை இப்போது ஒன்று கூடி அவரிடம் பகிர்ந்துக்கொண்டோம். அவர் எங்களை கிள்ளியது, அடித்தது, அறைந்தது, என அப்போது கசப்பான தருணங்கள் இப்போது பகிர்ந்துகொண்டபோது ஒவ்வொருவரும் சிரித்துக்கொண்டோம். ஒருவர் பாடம் செய்யாததால் இன்னொருவர் அடி வாங்கிய சம்பவங்களிலிருந்து, நாங்கள் செய்த குறும்பால் எங்கள் வகுப்பு தலைவன் ஓட ஓட துரத்தப்பட்டது வரை சம்பவங்கள் இப்போது நகைச்சுவையாக மட்டுமே தோன்றியது.

இதையும் தாண்டி டீச்சர் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த தருணங்கள், அவர் எங்களுக்கு சொன்ன அறிவுரைகள், பிரச்சனையான மாணவர்களை தனியே கூட்டிச்சென்று அவர்களின் பிரச்சனைகளை பகிர்ந்துக்கொண்டு அவர் வருத்தப்பட்ட நேரங்கள், நாங்கள் நன்றாக பரிட்சையெழுதி வெற்றிப்பெற வேண்டும் என்று அவர் கடவுளை பிரார்த்தித்த வேளைகள், நிறைமாத கர்ப்பிணியாய் உடல் நலம் சுகமில்லாமல் இருந்த சமயங்களிலும் எங்கள் நலனுக்காக பள்ளியில் எங்களுடன் எங்கள் கல்விக்காக அர்ப்பணித்த அந்த சமயங்கள், நாங்கள் வெற்றிப்பெற்ற அந்த சமயத்தில் அவர் எங்கள் பக்கத்தில் இல்லாத அந்த சமயங்கள்... இப்படி பல மனதை நெகிழ வைத்த பல சம்பவங்கள் எங்கள் முன் தோன்றி கலங்க வைத்தன. ஆனால், எல்லாமே இப்போது வெற்றிக்கணியை பறித்ததில் ஒரு மகிழ்ச்சியான தருணமாக மாறியது.

நாங்கள் இப்படி கடந்த காலத்தை பற்றி நினைவு கூர்ந்த நேரத்தில் அங்கிள் எங்களுக்காக பலகாரங்கள் வாங்கி வந்து மேஜையை நிரப்பி விட்டார். பிறகு டீச்சர் கலக்கிய மைலோவும், டீயும், ஜூஸும் குடித்துக்கொண்டே பலகாரங்களை சுவைத்தோம். மீண்டும் பல இனிமையான தகவல்களை பறிமாறிக்கொண்டோம்.

அடுத்து அனைவரும் எப்போது சந்திக்கலாம்; எங்கு சந்திக்கலாம் போன்ற தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டது. அடுத்த மாதம் தோழி பிரேமாவின் திருமண வைபோகத்தில் எல்லாரும் அவசியம் கலந்துக்கொள்ளவேண்டும் என அன்பு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டது. டீச்சரும் எங்களுடன் கலந்துக்கொள்வதாக தீர்மானமானது. அதற்கு முன் வரும் ஜனவரி ஒன்றில் திலகவதியின் வீட்டில் நடக்கும் வருடப்பிறப்பு விருந்தில் கலந்துக்கொள்ள அனைவரும் அழைக்கப்பட்டனர்.

இனி, யாரும் தொடர்பு அறுந்து போகக்கூடாது என்பதற்க்காக ஒரு ஸ்ட்ராங்கான இணைப்பு தேவை என்பத்இல் அனைவரும் ஆம்மோதித்தனர். ஒரு க்ரூப் ஆரம்பித்தால் எல்லா வித தகவல்களும் ஒரே இடத்தில் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருக்குமென எங்களில் ஒருவர் அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டோம். இதையும் தவிர்த்து சில நல்ல காரியங்கள் ஒன்றாக சேர்ந்து செய்ய திட்டமிட்டுள்ளோம். எல்லாம் நலம்பெற, நல்லபடியாக நடக்க இறைவன் அருள்புரிவானாக..

கிளம்பும்போது திரும்ப இன்னொரு குழு போட்டோ டீச்சருடன் எடுத்துக்கொண்டோம். டீச்சர் எங்களை ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து தழுவி முத்தங்களுடன் வழியுனுப்பிவைத்தார். அங்கிள் மற்றும் டீச்சரின் புதல்விகளுக்கும் இவ்வேளையில் எங்கள் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

வகுப்பு ஆசிரியர் கலாவதி டீச்சருடன் நாங்கள்

நேற்றிரவு அனேக நண்பர்களிடமிருந்தும் எனக்கு குறுந்தகவல்கள் வந்தன. அனைவரும் எந்த அளவு ரசித்தனர் என்ற திருப்தியை குறுந்தகவலாக எனக்கு அனுப்பியதை படிக்கும்போது எங்கள் சந்திப்பின் வெற்றியை அறியமுடிந்தது. இது இத்தோடு நிற்காமல் இன்னும் பல வருடங்கள் தொடர வேண்டும்; அதுவும் இது வெறும் ஒரு சந்திப்பாக மட்டும் இல்லாமல் பலருக்கு நன்மை பெயர்க்கும்படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். இதற்கு பலரும் சம்மதித்ததால் நம்மின் அடுத்த கட்ட வேலைகளில் நேற்றிலிருந்தே நான் ஈடுப்பட ஆரம்பித்துள்ளேன்.

ஒரு நாள்.. ஆனால், பல வருட ஆசைகள் நிறைவேறிய திருப்தி! இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்குமா என்று பலரும் ஏங்கும் சமயத்தில், நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியதில் எல்லையில்லா மகிழ்ச்சி. இந்த ஒரு நாள் என் வாழ்வில் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். இதை மறக்ககூடாது என்ற ஒரு எண்ணத்தில் எனது டைரி குறிப்பாக இங்கே என் வலைப்பதிவில் செதுக்குகிறேன்.

Thursday, December 11, 2008

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு!


எதிர்வரும் 14-ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) டிசம்பர் மாதம், முதன்முறையாக தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இச்சந்திப்பின் விபரங்கள் பின்வருமாறு :

திகதி / நாள் : 14 திசம்பர் 2008
(ஞாயிற்றுக் கிழமை)

சந்திப்பிடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல்
(Restoren Kari Kepala Ikan, Sentul)
( செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)

நேரம் : பிற்பகல் மணி 2.00

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள் :
விக்னேஸ்வரன் - 012 5578 257
மூர்த்தி- 017 3581 555

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.. :-)

Saturday, December 06, 2008

உலு கிள்ளானில் மீண்டும் நிலச்சரிவு!!

இன்று அதிகாலை கோலாலம்பூர், உலு கிள்ளான், புக்கிட் அந்தாரா பங்சாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் 14 பங்களா வீடுகள் புதையுண்டது. இதுவரை நால்வர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 93 பேர் உயிர்சேதமின்றி தப்பினர். இடிபாடுகளின் நடுவில் இன்னும் பலர் சிக்கி தவிப்பதாக நம்பப்படுகிறது. மீட்புப்பணிக்குழு அவர்களை கண்டுப்பிடிப்பதில் காலையிலிருந்து மும்முரமாக இருக்கின்றனர்.





நிலச்சரிவினால் சம்பந்தப்பட்ட வீடமைப்புப் பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் புக்கிட் அந்தாராபங்சா தொலைதொடர்பு, மின்சாரம், தண்ணீரும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

சம்பவ இடத்துல் குடியிருக்கும் ஏறக்குறைய 3000 பேர் இடம்பெயர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிலத்தடியில் ஏற்ப்பட்ட நீர் ஓட்டத்தினால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. காலையிலிருந்து இடைவிடாத மழையினால் மீட்புப்பணிகள் செயல்ப்படுவதற்கு சிரமமாக உள்ளது.





இதற்கு முன் 1999 டிசம்பர் 11-இல் புக்கிட் அந்தாரா பங்சா ஹைக்லண்ட்ஸ் டவர் இதேப்போல் நிலச்சரிவில் இடிந்துவிழுந்ததில் 48 பேர் இறந்த சம்பவம் இன்று நடந்த இடத்திலிருந்து வெறும் 1.5 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.

இந்த வாரத்திலே இது மூன்றாவது நிலச்சரிவு. முதல் சம்பவம் கடந்த ஞாயிறு அன்று உலு யாம் கோம்பாக்கில் நடந்த நிலச்சரிவில் ஒரு பங்களா புதையுண்டதில் சகோதரிகள் இந்தான் (9) மற்றும் அதிரா (11) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு டாமான்சாரா ஹைக்ட்ஸ் ஜாலான் செமாந்தானில் மண் சரிவு ஏற்ப்பட்டதில் 11 கார்கள் புகையுண்டதில் அன்று முழுதும் பலத்த வாகன நெரிசலும் ஏற்ப்பட்டது.

இந்த மழை காலத்தில் மேலும் நிலச்சரிவு ஏற்ப்படலாம் என்று நம்பப்படும் வேளையில் கோலாலம்பூர் பொது மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை மற்றும் அம்பாங் மருத்துவமனையில் வேலை செய்யும் அனைத்து வேலையாட்களுக்கும் விழாக்கால விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு வேலையில் சேர அழைப்பு விடப்பட்டுள்ளது.





Wednesday, November 19, 2008

முத்துக்கா முப்பெரும் விழா வாழ்த்துக்கள்


சிறுமுயற்சி முத்துலெட்சுமி என்றால் நாமெல்லாம் சொல்லும் முதல் வார்த்தை முத்துக்கா..

நேற்று அவங்க வலைப்பதிவு சிறுமுயற்சி இரண்டாம் ஆண்டு நிறைவை கொண்டாடியதுக்கு முதல் வாழ்த்து தெரிவித்துக்கொள்வோம்.

இன்று முத்துக்காவுக்கே பிறந்தநாள். அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வோம்.

இந்த மூன்றாவது வாழ்த்து ரொம்ப ரொம்ப முக்கியமானது. முத்துக்கா மகள் மாதினி இன்று டான்ஸில் ப்ரோஃபீசியன்ஸி அவார்ட் வாங்கிறார். என்ன அவார்ட்ட்ன்னு அக்கா வந்து பின்னூட்டத்தில் விளக்குவாராக. ஆனாலும், மாதினி அக்காவுக்கு நம்முடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் அள்ளிக் குவிப்பது நம் கடமையாச்சே. கடமையை என்றாவது மீறியிருக்கோமா நாமெல்லாம்? அதான்..

வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..

Wednesday, November 12, 2008

தேடுகிறேன்: பத்துமலை தமிழ்ப்பள்ளி நண்பர்கள்


1996-இல் பத்துமலை தமிழ்ப்பள்ளியில் 6 ரோஜா (6 Rose)-இல் படித்த நண்பர்களே, உங்களை தேடுகிறேன். 12 வருடங்களுக்கு பிறகு நாமெல்லாம் ஒன்று கூடும் இந்த அறிய சந்தர்ப்பத்தில் உங்களையும் எதிர்ப்பார்க்கிறேன். இப்போதைக்கு நம்மில் 25 பேர் வருகை நிச்சயமானபோதும் மீதி உள்ள 15 பேரின் வருகையை நான் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன். நம்முடைய சந்திப்பு வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை - பொதுவிடுமறை நாள் [Awal Muharam]) நிகழவுள்ளது. மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: engineer2207@gmail.com

பி.கு 1: 6 ரோஸ் தவிர்த்து 6 மல்லிகை, செண்பகம், டாஹ்லியா, ஆர்கிட், தாமரை மற்றும் கேக்வா வகுப்பு நண்பர்களும் என்னை தொடர்பு கொள்ளவும்.

பி.கு 2: இதை படிக்கும் நண்பர்களே, இந்த சந்திப்பு வெற்றியடைய உங்கள் ஆதரவும் தேவை. இதை உங்களுக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தில் பரப்பி எங்கள் நண்பர்களை கண்டுப்பிடிக்க உதவுவீர்களாக.

அன்புடன்,
.:: மை ஃபிரண்ட் ::. @ அனுராதா .இரா

----------------------------------------------------------------------------------------------
I am looking for friends from 6 Rose, SRJK (T) Batu Caves, 1996 batch. We will be having a class reunion on coming December 29 (Public Holiday - Awal Muharam). So far 25 of our classmates had confirmed their attendance. For me each of your presence is very important. Please contact me for further details. Thanks.

my email address: engineer2207@gmail.com

p/s 1: 6 Melur, Cempaka, Dahlia, Orchid, Teratai & Kekwa friends are also invited. Please contact me.

p/s 2: Those who are reading this, please forward this information to your friends. May this helps to reach my classmates.

Thanks.

Best Regards,
.:: MyFriend ::. @ Anuradha .R

Monday, October 27, 2008

தீபாவளி வாழ்த்துக்கள்


அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

இந்த மங்கள திருநாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்வில் நலன்களும் மகிழ்ச்சிகளும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தீபாவளி சிந்தனையாக போன வருடம் தீபாவளிக்கு எழுதிய குமரனுடன் சில நிமிடங்கள் படிக்கலாம் வாங்க.

Monday, October 13, 2008

சினிமா சினிமா - கேள்வி பதில்

இந்த மாசக் கணக்கு எதுல இருந்து ஆரம்பிக்கிறதுன்னு நெனச்சிட்டே இருந்தேன். பரிசல் காரரு பரிசல் கொடுத்து காப்பாத்திட்டாரு. ;-)

சினிமா என் உயிரு..
சினிமா என் உயிர் மூச்சு..
சினிமா என் ரத்ததுல்ல ஓடுது..
சினிமா தான் நானு..
நாந்தான் சினிமா!

இப்படியெல்லாம் சொல்லுவேன்னு நெனச்சீங்களா?
அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க..

சினிமா..
சின்ன பிள்ளையா இருக்கிறப்போ அப்பா என்ன படம் டேப் வாடகை வாங்கிட்டு வந்தாலும் கூட உட்கார்ந்து பார்ப்போம்.. (குடும்பத்தோட..)
அதுவும் 9 மணி ஆச்சுன்னா “டைம் ஆச்சு.. போதும்.. பாத்ரூம் போயிட்டு படுக்க போங்க”ன்னு அப்பாவோட சவுண்ட் வரும். படத்துல என்ன ஆயிருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே ரூம்க்கு போயிட்டு அப்பா சொன்னது போல படுத்துப்போம். ஆனா தூங்க மாட்டோம். மெல்ல,

என் அண்ணாட்ட கேட்பேன். “அடுத்து என்ன ஆயிருக்கும்?”
உடனே என் அண்ணா முழு படத்தையும் ஏற்கனவே பார்த்துட்ட மாதிரி கதை சொல்வார். நானும் “ஆ”ன்னு வாயா திறந்துட்டு கதை கேட்பேன். கடைசியில் என் அண்ணன் “கதையும் முடிஞ்சிடுச்சு.. கத்திரிக்காயும் காய்ச்சிருச்சு”ன்னு சொல்வார். அப்பத்தான் தெரியும் இவ்வளவு நேரம் விட்டது எல்லாம் ரீலுன்னு.

கொஞ்சம் வளர்ந்ததும் (நம்புங்கப்பா கொஞ்சம் வளர்ந்துட்டேன் அப்போ)
அப்போ டேப் வாடகை வாங்கும் காலம் போய் நாங்க டேப் வாங்கும் காலம் வந்தது. அப்போ சின்ன வயசுல மிஸ் பண்ண படமெல்லாம் அண்ணாதான் ஞாபகம் வச்சி எடுப்பார்.
இந்த காலக் கட்டத்துல ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுசா தியேட்டர்ல வந்த படத்தை பார்க்க குடும்பத்தோட போவோம். தீபாவளின்னா பட்டாசுங்கிற காலம் போய் தீபாவளின்னா புதுப் படம் தியேட்டர்லன்ற காலம் வந்துச்சு. அதுவும் அப்போதெல்லாம் ஒவ்வொரு தீபாவளிக்கும் ரஜினி அல்லது கமல் படம் கட்டாயம் வரும். சில நேரங்கள்ல அம்மாதான் வரலைன்னு அடம் பிடிப்பாங்க. அவங்களை கன்வீன்ஸ் பண்ணி தியேட்டர்க்கு போறதுக்குள்ள சில நேரம் நள்ளிரவு காட்சிக்குதான் டிக்கேட் கிடைக்கும். அப்போதெல்லாம் தியேட்டர்ல (அந்த சத்தத்துல) தூங்கின தூக்கம் இருக்கே.. ஆஹா.. என்ன சுகம்!

கல்லூரி காலம்.. முதன் முதலில் நண்பர்களுடன் சினிமா பார்க்கப் போன காலம். வருஷத்த்துக்கு ஒன்னுன்னு ஆரம்பிச்சு, டெமெஸ்டருக்கு ஒன்னுன்னு வளர்ந்து, அப்புறம் நல்ல படம்ன்னு நம்பிக்கை உள்ள எல்லா படங்களுக்கு முதல் ஷோவுக்கே டிக்கேட் பூக் பண்ணி போக ஆரம்பிச்சோம்.
அது மட்டுமா? என்ன படம் வந்தாலும் (மொக்க படங்களையும் சேர்த்து) டவுன்லோட் பண்ணி விடிய விடிய தூங்காமல் படம் பார்த்து, அதையும் external hardiskல போட்டு அல்லது internal torrentல அப்லோட் பண்ணி நண்பர்களுக்கும் கொடுத்துன்னு 24 மணி நேரம் பத்தவே பத்தாது படம் பார்க்க. ஒரு மொழி படம் பார்த்தாலே பத்தாத இந்த சமயத்துல தமிழ், மலாய், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, ஜப்பான், சீனா, ஹாங் காங், கொரீயா, இந்தோனிசியான்னு பாராபட்சம் பார்க்காமல் எல்லா மொழி படங்கள், நாடகங்கள், டாக்குமெண்ட்ரீஸ், நகைச்சுவை தொகுப்புகள்ன்னு கலந்து கட்டி ஆடுன சமயம்..

சரி.. ரொம்ப பேசிட்டேன்.. பரிசல்காரரோட கேள்விக்கு என்ன பதில்?

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

என்ன வயசுன்னு சுத்தமா ஞாபகம் இல்ல. அப்படியே பார்த்திருந்தாலும் முழுப்படம் பார்த்தேனா இல்லையாங்கிறது இன்னொரு கேள்வி. ஆனா, நினைவு தெரிந்து நான் பார்க்கணும்ன்னு நினைச்ச ஒரு படம் இருக்கு. படத்தோட தலைப்பு என்னன்னு அப்போதும் (இப்போதும்) ஞாபகம் இல்ல. அதுல பாண்டியன், ஆனந்த பாபு மற்றும் ஒருத்தர் (அவரும் ஞாபகம் இல்ல) நடிப்பாங்க. இவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு நாள் யாரோ குழந்தைய விட்டுட்டு போயிருப்பாங்க. பாண்டியன் அந்த சமயம் ஊருக்கு போயிருப்பாரு. அவரு ப்லேபாய் என்பதால் இது பாண்டியனோட குழந்தையா இருக்கும்ன்னு நண்பர்கள் எடுத்து பார்த்துப்பாங்க. அப்புறம் பாண்டியன் வந்து இல்லன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. குழந்தையின் உண்மையான தந்தை யாருன்னு தெரியும்போது அந்த குழந்தையை பிரிய மனசிருக்காது. கடைசி வரை அந்த குழந்தைக்கு பேரு கூட வைக்காம தாயம்மான்னு கூப்பிடுவாங்க.. அப்போ எனக்கு ரொஉ 4-5 வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறேன். அந்த மூனு ஹீரோக்களும் ஒரு வித மோட்டர்சைக்கிள் உபயோகிப்பாங்க. அந்த மோட்டரை அப்போதெல்லாம் எங்க பார்த்தாலும் தாயம்மா மோட்டார் தாயம்மா மோட்டார்ன்னு நான் கத்துனது இப்போ நெனச்சாலும் சிரிப்பா வருது. அந்த படம் பிற்காலத்துல ஹிந்தில கூட பார்த்திருக்கேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

பரிசல், Give me Five.. :-)
நானும் கடைசியாக பார்த்தது சரோஜாதான். படம் முழுக்க சிரிச்சு சிரிச்சு படம் முடிஞ்சதும் அடுத்த ஷோ இருந்தா திரும்ப போகலாம்ன்னு சொல்ல கவுண்டரில் கேட்டா, டிக்கேட் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லி கெளம்ப வச்சிட்டாங்க..

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

நேற்று ஆஸ்ட்ரோ வெள்ளித்திரையில் வைதீஸ்வரன் படம் பார்த்தேன். மறுபிறவி இருக்கா இல்லையா என்பதை இயக்குனர் நல்லா குழப்பி சொல்லியிருக்கார்.
அதனால ரிலாக்ஸ் பண்றதுக்காக பொம்மரில்லு படம் பார்த்தேன். எத்தனை தடவை பார்த்தாலும் புதுசா இருக்கு. சித்தார்த் கலக்கிட்டார். படம் பார்த்து முடிந்ததும் சந்தோஷ் சுப்ரமணியத்தில் ரவியின் சொதப்பலை நினைத்து கோபம் கோபமாக வந்தது..

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய இருக்கு.
குறிப்பா சொல்லணும்ன்னா உள்ளம் கேட்குமே. நான் ரசித்து, சிரித்து, அழுது பார்த்த படம். பல முறை பார்த்திருப்பேன் (தனியாக, நண்பர்களுடன்). ஆனால், எப்போது பார்த்தாலும் புதுசாக பார்ப்பதுப்போல் தோன்றும். கல்லூரி வாழ்க்கை மட்டுமல்ல. என் பள்ளி வாழ்க்கை, பழைய நண்பர்கள் என அனைவரையும் நினைவு கூற வைக்கும் படம். பல முறை ஓ மனமே பாடலை கேட்கும்போதே என்னை அறியாமலேயே கண்களில் நீர் கோர்க்கும் சமயங்களில் படத்தை திரும்ப நினைத்துப்பார்ப்பேன்.. உள்ளம் கேட்குமே.. எப்போதும் இந்த நட்பை என் உள்ளம் கேட்குமே!

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்னும் இல்லை. ;-)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்ப சம்பந்தம் என்றவுடன் எனக்கு தோன்றுவது safetiness in shooting placeதான். சில வருடங்களுக்கு முன் ஒரு லைட்பாய் ஆறடி உயரத்திலிருந்து விழுந்து மரணமடைந்தது. படங்களில் நாம் அறுவருப்பாய் நினைக்கும் வில்லன்கள் aka ஸ்டண்ட்மேன்கள். இவர்கள் ஒவ்வொரு படத்திலும் எடுக்கும் ரிஸ்க்ஸ்தான் எத்தனை எத்தனை! பலருக்கு பல காயங்களும், சில நேரங்களில் தன் உறுப்புக்கள் இழக்க நேரிடலும், அதையும் தாண்டி உயிரும் போகும்வரை அவர்கள் எடுக்கும் ரிஸ்க் நினைத்தாலே இப்படிப்பட்ட படங்கள் தேவையான்னு சில நேரம் என்னை நானே கேட்டுப்பேன். இவர்களின் வாழ்க்கையையும் படமாக எடுத்து நமக்கு இவர்களின் கஷ்டத்தை திரையிட்டு காட்டிய சசிக்கு இவ்வேளையில் நன்றிகள்.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இது இல்லாமலா? தினமும் தினசரி படிக்கிறேனோ இல்லையோ.. கண்டிப்பாக இணையத்தில் சினிமா நியூஸ் படிக்கிறது வழக்கமாயிடுச்சு.
வலைப்பூக்களில்:
கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் வரும் குவீஸ்களும் தகவலும் & முரளிக்கண்ணனின் சினிமா பற்றிய ஆராய்ச்சிகளும் விரும்பி படிக்கிறேன்

7.தமிழ்ச்சினிமா இசை?

என்ன கேள்வி இது?
காலையில் எழுந்ததும் பாடும் என் கணிணி
பயணத்தில் கைக்கொடுக்கும் என் காரின் ரேடியோ + ஐபோட் + FM Transmitter
மீண்டும் ஆபிஸில் என் கணிணி
வீடு வந்ததும் டீவியில் பாடல் மற்றும் ஒளிப்பரப்பாகிற சேனல்
இப்படி தினசரி இசையில் லயித்துக்கொண்டே இருக்கிறேன்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஹிந்தி:
கடைசியா பார்த்த தாரே ஜமீன் பர் என்னை மிகவும் பாதித்தது

ஜப்பான்:
One Little of Tears
என்னை மிகவும் பாதித்த ஒரு கதை. உண்மையில் நடந்த கதையின் தொகுப்பு இது. ஒரே ஒரு சொட்டுன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க அழவைத்த படம். குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை கதையை அவள் 25 வயதில் இறக்கும் வரை முழுக்க காட்டிய காவியம். தன் நோயை அறிந்தப்பின் ஒரு மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவள் எழுதிய டைரியின் தொகுப்பே இக்கதை. அவளிடைய டைரி பிற்காலத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டு 1.1 மில்லியன் புத்தகங்கள் விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

ஹாங்காங்:
The Flying Fox of The Snowy Mountain
20 வருடங்களுக்கு முன் மர்மமாக இறந்த தன் தாய்தந்தையை பற்றிய விவரங்கள் தேடி அலையும் ஒரு இளைஞனின் கதை. இது ஜின்யோங் என்ற எழுத்தாளரின் சிறுகதைகளின் தொகுப்பு. கடைசியில் வரும் சண்டை காட்சி பிரமாதமாக இருக்கும்

மலாய்:
Jalinan Kasih
ஒரு ஏழை இளைஞனுக்கும் பணக்கார பெண்ணுக்கும் நடுவில் ஏற்படும் காதல். நம்ம தமிழ் படம் கதை போலவே. ஆனாலும் இது எங்கே மாறுப்படுதுன்னா அந்த பெண் தன் தந்தை (அவர் நல்லவர்ப்பா) பேச்சை மதித்து அவர் காட்டும் ஒருத்தரையே (இவரும் நல்லவர்ப்பா) மணம் புரிவார். காதல் தோல்வியடைந்த ஹீரோ ஒரு கம்பேனியில் வேலைக்கு சேர்றார். அங்க அவரோட முதலாலியின் மகள் அவரை ஒருதலையாக விரும்பிகிறார். அப்புறம் எப்படியோ ரெண்டு பேரும் திருமணம் பண்ணதால நம்ம ஹீரோ பணக்காரராயிடுறார். பணக்கார ஹீரோவும், முன்னாள் காதலியின் கணவரும் நண்பர்களாகிடுறாங்க. ஒரு கட்டத்துல ஹீரோவை ஒரு விபத்துல இருந்து முன்னால் காதலியின் கணவர் காப்பாற்றும்போது உயிர் இழக்கிறார். அதுக்கப்புறம் என்ன நடக்குது? இதுதான் கதை அன்பின் பினைப்பு aka ஜாலினான் காசே..

ஆங்கிலம்:
Passion of The Christ
Mel Gibson தயாரித்து இயக்கிய படம். யேசுவின் கடைசி 12 மணித்துளிகள். ஒன்னும் சொல்ல முடியல. அந்த அளவுக்கு பாதித்த படம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆரம்பக் கல்வி பயிலும்போது என் பள்ளி பத்துமலை வளாகத்தின் உள்ளேதான் இருந்தது. அப்போதெல்லாம் தமிழ் சினிமா பாடல்கள், காட்சிகள் பத்துமலை முருகன் தளத்தில் படம் பிடிக்க கும்பல் கும்பலாக வருவார்கள். அப்போ வகுப்பறை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தது ஞாபகம் இருக்கு

கொஞ்சம் வளர்ந்தப்போ Dr. Bombay டாக்ஸி டாக்ஸி என்ற பாடலுக்கு படம் பிடிக்கிறார் என்றும் அது என் வீட்டுக்கு அருகில்தான் என்றதான் பார்க்க போகலாம் என நண்பர்கள் கூப்பிட்டார்கள். ஏனோ போய் பார்க்கணும்ன்னு தோணல.

அதுக்கப்புறம் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேகாவில் சரத்குமாரும், தேவயானியும் ஆடிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக நான் ஏறியிருந்த பேருந்த கடந்தது.

போன வருடம் பில்லா படத்து சேவல் கொடி பறக்குதடா பாடல் காட்சி பத்துமலையில் படமாக்குக்கிறார்கள் என என் தோழன் கூப்பிட்டிருந்தான். வேறு நல்ல வேலை (ப்ளாக் எழுதுறதுதான்!) இருக்குன்னு சொல்லிட்டேன்.

இந்த அளவுதான் எனக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

போன வாரம் இதே தலைப்பில் என் சில நண்பர்களுடன் விவாதித்திருந்தோம். இப்போது ரீமேக் என்பது மிகப் பிரபளம் ஆகிவிட்டது. தெலுங்கிலிருந்து தமிழ், மலையாளத்திலிருந்து தமிழ், ஹிந்தியிலிருந்து தமிழ், ஆங்க்லத்திலிருந்து தமிழ்ன்னு இருந்த தமிழ் சினிமா இப்போ சீனாவிலிருந்து தமிழ், ஜப்பானிலிருந்து தமிழ், ஜெர்மனிலிருந்து தமிழ், அரபுலிருந்து தமிழ்ன்னு வருது. நல்ல கதை கொடுக்கிறவங்க ஒன்னு ஒரு படம் எடுக்க 5-7 வருடம் எடுக்குது (உதாரணம் பாலா) , இல்லண்ணா நானும் ஒரு ரீமெக் படம் எடுக்கிறேன்னு அன்னிய மொழியிலிருந்து கதை சுடுறாங்க (உதாரணம் மிஷ்கின்). நல்ல கதைக்களம் கொண்ட தமிழ்சினிமா எழுத்தாளர்கள், இயக்குனர்கள் எத்தனை பேர் இருக்காங்க. இருக்கிறவங்க ஒழுங்கா வருஷத்துக்கு ஒன்னு கொடுத்தாலே போதும்.. தமிழ் சினிமா எங்கேயோ போயிடும்.

ஆனா, நம்ம இயக்குனர்களுக்கு இப்போது கதாநாயகர்கள் ஆசை வேற வளர்ந்துட்டே போகுது. நல்ல படங்கள் கொடுக்கிற இயக்குனர்களும் மத்த இயக்குனர்கள் படத்துல ஹீரோவா நடிக்க போயிட்டா எப்போ நாம் ரசிச்சு பார்க்கிற படம் இயக்கப்போறாங்க? அப்புறம் ரீமேக் ராஜா போன்ற ஆளுங்கத்தான் தமிழ் சினிமாவை ஆழ்வாங்க.

இது நடந்துச்சுன்னா ஒரு 10 வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமா சொல்லும்: “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!!” :-(

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நல்லது..
இருக்கவே இருக்கு மத்த மொழி படங்கள்.
இன்னும் பார்க்காத மொழிப்படங்கள் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டு அந்த படங்களையெல்லாம் தேடி தேடிப் பார்க்கலாம்.
மேலே சொன்னது எனக்கு.

கீழே சொல்ல போறது நம்ம தமிழ் சினிமா பத்தி:
டீவியில சித்தி, அண்ணாமலை, அரசி போன்ற மெகா சீரியல் அதிகரிக்கும், ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாரும் அதில் நடிக்கலாம்

டீவி இண்டர்வியூ போன்ற சமாச்சாரங்கள் காந்தி ஜெயந்தி, விநாயகர் சதூர்த்தி போன்ற நாட்களில் போட மாட்டாங்க என்பதால் வீடு வீடாக போய் ரசிகர்களுக்கு பேட்டி கொடுக்கலாம்

திரும்ப பழைய வேலைக்கே (ஊருல விவசாயம் பார்க்கிறது) திரும்பலாம்.

ஜே கே ரித்திஷ் போன்ற ஆட்கள் திரும்ப அரசியலுக்கு திரும்பி முதலமைச்சருக்கே சவாலாக இருக்கலாம்.

நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன்ன்னு எல்லா நடிகர்களும் எழுத்தாளர் ஆகி புத்தகம் வெளியிடலாம்.

இப்படி நிறைய விஷயங்கள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கு. ஆனால் இதெல்லாம் நடந்தால் உட்கலவரம் நடகும் என்பதால் இப்படிப்பட்ட தடைகள் வராதுன்னு நம்பறேன். :-P
------------------------------------------------------------------
பரிசல்காரரே, 5 பேரையா கூப்பிடணும்? கூப்பிட்றலாம்:

1- சிங்கப்பூர் விஷால் ரசிகர் மன்ற தலைவி தமிழ்மாங்கணி
2- கத்தார் ஷ்ரேயா கோஷல் ரசிகர் மன்ற தலைவர் ஆயில்யன்
3- அகில உலக வீக்-எண்ட் ஜொல்லுஸ் முன்னேற்ற கழகம் முன்னாள் தலைவர் மங்களூர் சிவா
4- அகில உலக வீக்-எண்ட் ஜொல்லுஸ் முன்னேற்ற கழகம் புதுத் தலைவர் சஞ்சய் காந்தி
5- உலக .:: மை ஃபிரண்ட் ::. ரசிக மன்ற தலைவி கயல்விழி முத்துலெட்சுமி ;-)

Thursday, September 11, 2008

திருமண வாழ்த்துக்கள் மங்களூர் சிவா - பூங்கொடி


வீக்-எண்ட் ஜொல்லு புகழ் சிவா கடந்த சில வாரங்களாக கவிப்பேரரசு வைரசிவா ஆனதுக்கு காரணம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இப்போது நீங்க இந்த வாழ்த்து பதிவை படிக்கும் போது குமாரன் சிவா திருவாளர் சிவாவாக மாறியிருப்பார். வாழ்க்கை துணையாக ஜெர்மன் புகழ் பூங்கொடி அண்ணி வரும் இந்நல்ல நேரம் இத்தம்பதியருக்கு நல்ல பலன்களுடன், நோய் நொடியின்றி, வாழ்க்கை முழுதும் ஒருவருக்கு இன்னொருவர் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழ பிரார்த்திபோமாக.

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
சிவா ண்ணா - பூங்கொடி ண்ணி!

Thursday, August 28, 2008

நல்ல படங்களை நாலு பேரு பார்க்கணும்ல. அதுக்குதான்!

ரொம்ப நாள் ஆச்சு நல்ல படம் பார்த்து! ஆனால், இன்று மூன்று படம்! நல்ல படங்களாய் பார்த்துவிட்ட திருப்தி. மூன்றும் மூன்று மொழி; வெவ்வேறு கருக்களை ஏந்தி நிற்க்கின்றன.

1- படம்: தாரே ஜமீன் பர்
இயக்கம்: அமீர்கான்
நடிகர்கள்: டர்ஷீல் சஃபாரி, அமீர்கான், தனய் சேடா, திஸ்கா சோப்ரா, விபின் ஷர்மா
இசை: ஷங்கர் - எஹ்சான் - லோய்


மூன்றாம் வகுப்பையே இரண்டு முறை படித்து திணறுகிறான் சிறுவன் இஷான். Dyslexia என்ற நோயால் புத்தகத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும், எண்களும் அவன் முன் நடனமாடுகின்றன. ஆனாலும் சிறுவனுக்கு அபார கற்பனாசக்தி இருக்கிறது. அழகாய், அறிவாய் படம் வரைகிறான். ஒவ்வொரு ஓவியத்திலும் உயிர் இருக்கின்றது. நேரம் எடுத்து மெதுவாய், பதறாமல் செய்ய வேண்டிய காரியம் நம்மில் எத்தனை பேரால் செய்ய முடியும்? ஆனால், இஷான் செய்கிறான். தன்னுடைய இயலாமையை மறைக்க இஷான் ஒவ்வொரு விஷயத்திலும் பிடிவாதம் பிடிக்கிறான். நடுத்தர குடும்பத்தின் பெற்றோர் (கண்டிப்பான அப்பா, அன்பான அம்மா, பாசமுள்ள அண்ணன்) தன் மகனின் நிலையை புரிந்துகொள்ள முடியாமல் பையனுக்கு டிசிப்ளின் முக்கியம் என்று நினைத்து போர்டிங் பள்ளியில் சேர்க்கின்றனர். இந்த நிலமையில்தான் தற்காலிக ஆசிரியராய் அப்பள்ளிக்கு வரும் அமீர்கான் இஷானை சந்திக்கிறார். இஷானின் நிலையை கண்டு அவன் பெற்றோரை சந்திக்கிறார். இஷானின் இன்னிலையின் நிஜ காரணத்தை கண்டறிந்து அவன் பெற்றோரிடமும் விளக்குகிறார். சிறுவன் மேல் அதிக கவனத்தை செலுத்தி ஒவ்வொன்றிலும் அதி சிரத்தை எடுத்து சொல்லிக்கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவனுள் உள்ளும் திறமை ஒரு பிரமிக்கவைக்கும் திறமை என்று வெளியுலகுக்கு (முக்கியமாக இஷானுக்கே) புரியவைக்கிறார். சிறுவனின் தாழ்வு மனப்பான்மையை போக்குகிறார்.

சிறுவன் இஷானின் நடிப்பில் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல இளம் கதாநாயகர்களிடம் கூட இல்லாத திறமை தெரிகிறது. படம் முழுக்க இவனையே சுற்றி வருவதால் இவனுடைய ஒவ்வொரு அசைவையும் நன்று கவனிக்க முடிகிறது. மற்ற கதாப்பாத்திரங்களும் பொருத்தமாய் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஓவர் ஆக்டிங்கோ, அல்லது இது ஒரு நடிப்பு என்று தெரியாதவாறு படு இயல்பாக இருக்கின்றது. அமீரின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். வாழ்த்துக்கள் அமீர்! ஹீரோ ஒரு படத்துக்கு இயக்குனரானால் பெரும்பாலுமே அந்த படம் முழுக்க அவரது ஹீரோயிஸம்தான் மேலோங்கும். ஆனால், இதில் அமீர் மற்றவர்களைப்போல் ஒரு துணை நடிகராய் மட்டுமே வந்து போகிறார். இந்த படம் தமிழில் வால் நட்சத்திரம் என்று டப் ஆகப்போகிறது. கண்டிப்பாக சிறுவர்களும், முக்கியமாக பெற்றோர்களும் பார்க்க வேண்டிய அருமையான படம்.

2- படம்: ஹேப்பி டேய்ஸ்
இயக்கம்: சேகர் கம்முல்லா
நடிகர்கள்: வருண் சந்தேஷ், ராஹுல், நிகில், வம்சி கிருஷ்ணா, தாமன்னா, காயத்ரி ராவ், சோனியா, மோனாலி சவ்திரி
இசை: கிஷோர் சௌக்ஸி




ரொம்ப நாளாய் பார்க்க வேண்டும் என நினைத்த படம். ரெண்டு நாள் முன்புதான் சப்டைட்டிலுடன் படம் கையில் சிக்கியது. நாம் நிறைய நட்பு சம்பத்தப்பட்ட படங்களும், கல்லூரி வாழ்க்கை சம்பந்தப்பட்ட படங்களும் பார்த்திருப்போம். ஆனால், இதுவும் கண்டிப்பாக நாம் பார்த்து ரசிக்கும் படங்களின் வரிசையில் சேறும். படம் கல்லூரி அட்மிஷன் நாளில் ஆரம்பித்து கல்லூரி கடைசி நாளில் நண்பர்களின் பிரிவுடன் முடிகிறது. படத்தில் ஒரு சின்ன குறை என்னவென்றால் நண்பர்கள் கூட்டணியில் கடைசியில் அனைவரும் ஆளுக்கு ஒரு ஜோடியாய் முடிவதுதான். ஹீரோ சந்து - ஹீரோயின் மது, ராஜேஷ் - அப்பு, அர்ஜூன் - ஷ்ராவணி, ஷங்கர் - சங்கீதான்னு நண்பர்களுக்குள்ளேயே காதல் ஜோடிகளாகிக்கொண்டனர். நடுவில் ஒரு ஜோடிக்கு ஊடலென்றால் அந்த கேப்பை ஃபில் அப் பண்ணுவதுக்கு எவனாவது வந்து விடுகிறான். ஹ்ம்.. இது மட்டும்தான் கொஞ்சம் இடிக்குது. மற்றப்படி படம் அருமை. கல்லூரி நண்பர்களுடன் இந்த படத்தை பாருங்கள். அதன் ஆழம் அனுபவிப்பீர்கள்.

படத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் அர்ஜூன் @ டைசன். இண்ட்ரோ காட்சியிலேயே பையன் என்னமோ பண்ண போறான்னு தோணுச்சு. படம் முழுக்க ஏதாவது இண்ட்ரெஸ்டிங்கா செய்துக்கொண்டே இருக்கிறார். அவருடைய காதலும் அவர் ஷ்ராவணியை துரத்துவதும் நன்றாய் இருக்கின்றது. முக்கியமாய் ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் அர்ஜூன். ஹீரோ சந்து @ வருண் சந்தேஷ் கூட அந்தளவுக்கு பிரகாசிக்கவில்லை (இவர் சித்தார்த் க்லோன் என்பதால்தான் நான் இப்படி சொல்கிறேன் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது. படம் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் ;-)). அப்புறம் தாமன்னா. கல்லூரி படத்திலே பிரகாசித்த அளவு இதில் இல்லை என்றே சொல்லணும். பாடல்கள் அருமையாக இருக்கின்றது. அரேரே அரேரே, ஹேப்பி டேய்ஸ்,ஜில் ஜில் ஜிங்கா, ஓ மை ஃபிரண்ட் (அட என் பேருல ஒரு பாட்டு) எல்லாம் ரசிக்கும்படி இருக்கு (நாந்தான் பாடல் வரியையும் சப்டைட்டிலில் படித்தேன்ல).

3- படம்: சுப்ரமணியப்புரம்
இயக்கம்: சசிகுமார்
நடிகர்கள்: ஜெய், ஸ்வாதி, சசிகுமார், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி
இசை: ஜேம்ஸ் வஸந்த்


இந்த படத்துடைய விமர்சனம் தமிழ்மணத்துல ஏற்கனவே கிழி கிழின்னு கிழிச்சுட்டாங்க. அதனால் கதை பற்றி நான் ஒன்னும் சொல்ல விரும்பல. அதே கொலவெறி ஆயுதங்களுடன் ரத்த வெள்ளம். ஆனால், நடுநடுவில் காதல் படகு அழகாய் நீந்துகிறது. நடிகர்கள் தேர்வு மிகச்சரியாய் இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது. திரைக்கதையை அழகாய் தொகுத்திருக்கிறார் இயக்குனர் @ தயாரிப்பாளர் @ நடிகர் சசிகுமார். இயக்குனர் பாலா, அமீர் பேட்டர்ன் தெரிகிறது. பாடல்கள் அருமை. 80களில் நடக்கும் கதை என்பதால் படம் முழுக்க 80களில் பிரபலாமான பாடல்கள் படம் முழுக்க பிண்ணனியில் வருவது நல்ல முயற்சி.

இப்படிப்பட்ட ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டுமென நண்பனிடம் டிக்கெட் வாங்க சொன்னால், சத்யம் என்ற மொக்கை படத்துக்கு டிக்கேட் வாங்கி வந்து, பிறகு அந்த மொக்கை படத்தை தியேட்டரில் பார்த்த கொடுமை இருக்கே! அப்பப்பா! இந்த மொக்கை படத்துக்கு நம்ம கவிதாயினி கூடிய சீக்கிரமே விமர்சனம் எழுதுவாராக.. ;-)

Thursday, August 14, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள்

பெய்ஜிங் 2008 நடத்திக்கொண்டிருக்கும் சீனா மற்றும் உண்மையான சீனா. நிறைய வித்தியாசம் இருக்குங்க.இந்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணியாக போறீங்களா? ஊரை பார்த்து இதுதான் சீனா என்று தப்பாக எடை போடாதீர்கள்! In China, Things are not always as they seem.

எல்லா ஒலிம்பிக் நகரங்களை போல சீனாவும் தனக்கு புது/ சூப்பரான இமேஜ் உருவாக்கிக்கொள்ள முயற்சி பண்ணியிருக்கின்றது. பிச்சைக்காரர்கள் வேறு மாநிலத்துக்கு புலம் பெயர்க்கப்பட்டார்கள். தலைநகத்தில் உள்ள தொழிற்சாலைகள் நகரத்துக்கு வெளியே இடம்பெயர்க்கட்டன (இதற்கு எவ்வளவு செலவு பண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?).

ஒலிம்பிக்காக ஒரு மாநிலத்தை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சீனா நாட்டையே சுத்தும் செய்தது சீனா அரசாங்கம். சாலைகளை சுத்தம் செய்து, புது சாலைகளை உருவாக்கி, பழுதடைந்து கிடந்த சமிக்ஞை விளக்குகளை சரிப்படுத்தி, சுத்தமாக துடைத்தெடுத்திருக்கின்றனர். சாலைகள் கண்ணாடிப்போல பளப்பளக்குதாம். சாலையோரங்களில் பூக்களும், தோட்டங்களும், மரங்களும் நடப்பட்டன. செடிகள் என்றால் சாதாரண செடிகள் இல்லை. எல்லா செடிகளிலும் பூக்கள் பூத்துக்குலுங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டு முடியும்வரை இந்த செடிகளுக்கு, தோட்டங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பேணிக்காக்க எக்கச்சக்க வேலையாட்களை நியமித்தது சீனா அரசாங்கம். எல்லா கட்டடங்களுக்கும், வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டன. பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமானப்பணிகள் அப்படியே இருந்தால் அசிங்கமாக காட்சியளிக்கும் என கருதி அவைகளுக்கும் வர்ணம் பூசி, சுத்தம் செய்தார்கள். சீனாவில் இன்னொரு பெரிய பிரச்சனை புகைமூட்டம். தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வரும் புகைமூட்டத்தினால் 10 அடி தள்ளியிருக்கும் பொருளும் மங்களாகத்தான் தெரியும் (முக்கியமாக பெய்ஜிங்கில்). செயற்கை மழை, அது இது என்று செய்து புகைமூட்டத்தை (சீனா முழுக்க) போக்கியிருக்கின்றன. ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்னரே பெய்ஜிங்க் நகரில் நுழைய எந்த கார்களும் அனுமதிக்கபடவில்லை. ஆக மொத்தத்துல சீனா சீனாவாகவே இல்லை. என் மேனஜர் இரண்டு மாதத்துக்கு முன்னாடி சீனாவுக்கு போய் வந்தார். போய் வந்தவுடன் ஒரு நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுத்தமான காற்று இல்லாததால் வந்த வினை. அவருக்கு ஏற்கனவே நுரையீரலில் ஒரு சின்ன சிக்கல் இருந்தது. பிறகு 2 வாரத்துக்கு முன்னரும் சென்றிருந்தார். நம்பவே முடியாத அளவில் சீனா மாறியிருந்தது. தெளிந்த வானம், சுத்தமான இடம் என்று உருத்தெரியாமல் மாறியிருந்தது. அவர் காட்டிய படங்களை பார்க்கும்போதே புரிந்துவிட்டது சீனாவின் தந்திரம்!

இவையெல்லாம் தன் நாட்டிற்கு பாசிட்டிவ் இமேஜ் உருவாக்குறதுக்காகத்தான் சீனா செய்தது. தப்பே இல்லை! ஒரு விளையாட்டுக்காக ஒரு நாடே சுத்தம் செய்வது பெரிய விஷயம். அதுவும் இதற்காக மட்டுமே இவ்வளவு செலவு பண்ணியிருக்காங்களே. எந்த நாடு இவ்வளவு செலவு பண்ணும்?


ஆனால், இவையெல்லாம் தவிர்த்து ஒலிம்பிக் திறப்புவிழாவில் சீன அரசாங்கம் செய்த பொய்த்தனம் இருக்கே! உலக மக்கள் நாம் அனைவரையும் முட்டாள் ஆக்கிவிட்டது!!!!

பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் திறப்புவிழாவை கண்டு வியக்காத மக்களே இல்லை. யூடியூப்பில் ஒவ்வொரு வீடீயோக்கு கிடைத்த ஹிட்ஸை பார்த்தாலே தெரியும்! உலக மக்கள் பார்த்து மிகவும் வியந்த ஒரு நிகழ்வு வானவேடிக்கை. பல நாடுகள் அந்த வானவேடிக்கையை புகழ்ந்து தள்ளின. "இப்படி செய்வது மிகவும் கடினம். ஆனால் சீனா சிறிது தவறுமின்றி செய்தது" என்று பல பத்திரிக்கைகள் சொல்லியிருந்தன.

ஆனால், அந்த வானவேடிக்கைகளில் பாதி பொய்யானது. ஏற்கனவே வெடித்து அதை பதிவு செய்து திறப்புவிழா அன்று உண்மையான வானவேடிக்கைகளையும் போலியையும் கலந்திருக்கிறார்கள். பார்த்த நமக்கு எது உண்மையானது எது போலியானது என்று கூட கண்டுப்பிடிக்க முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறது! உண்மையில் அவர்கள் வெடிக்க வைத்திருந்து சில வானவேடிக்கைகள் வெடிக்காமல் செயலிழந்தும் இருந்திருக்கின்றன. அதையும் நாம் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தியானெந்மென் (Tiananmen) சதுரங்கத்திலிருந்து விளையாட்டரங்கத்துக்கு நகர்ந்த ராட்சச்ச சுவடுகள் கூட உண்மையானதில்லை. அது கணிணியால் உருவாக்கப்பட்ட பொய்யான வானவேடிக்கைதான்! They can do anything under the sky!

இதையும் தவிர்த்து இன்னும் பெரிய பொய்யை நம் தலையில் கட்டியிருக்கிறது சீனா!

திறப்புவிழாவில் அத்தனை மக்களின் மனதையும் கொள்ளைக்கொண்ட சிறுமி லின் மியோகே (Lin Miaoke). சிவப்பு நிற கவுனில் ரெட்டை வால் முடிக்கட்டி சிரித்த முகத்துடன் சீனாவின் தேசியகீதத்தை பாடினாள். மறுநாள் எல்லா நாளிதழிலும், தொலைக்காட்சிகளிலும் "The Rising Star of East" என்று வர்ணிக்கப்பட்டாள். அறுபுதமான குரல், நல்ல குரல்வளம், பெரிய பாடகியாய் வருவாள் என வர்ணிக்கப்பட்டாள். பல விளம்பரங்களில் நடிக்க கோறியும், பல இண்டர்வியூவில் பங்குப்பெறவும் அழைப்புகள் இச்சிறுமிக்கு வந்துக்கொண்டே இருக்கின்றது. ஆனால், அந்த சிறுமியை அதே பாடலை இப்போது பாடச் சொல்லுங்களேன் பார்ப்போம்!

உண்மையில் இந்த பாடலை பாடியவர் யங் பெய்யீ (Yang PeiYi) என்ற 7 வயது சிறுமி. சில ஒத்திகைகளிலும் பெய்யீயை உபயோகப்படுத்திவிட்டு, திறப்புவிழாவில் இன்னொரு பெண்ணை நிற்க வைத்திருக்கிறார்கள். ஏன்? என்று நாம் கேட்கும் காரமான கேள்விக்கு சீனா அரசாங்கமும் நிகழ்ச்சி நடத்துணர்களும் பதில் சொல்கிறார்கள்:

" பெய்யீ அழகாக இல்லை. பற்கள் சீராக இல்லை. நாங்கள் ஒரு நேர்த்தியான நாட்டின் இமேஜை பிரதிப்பலிக்க நினைக்கிறோம். இந்த இமேஜுக்கு பெய்யீயின் முகம் சரிவராது. அதனால்தான் மியோகோவை தேர்ந்தெடுத்தோம்"

அடப்பாவிமக்கா.. பெய்யீயும் உங்க நாட்டு பொண்ணுதான்! மியோகோவும் உங்க நாட்டு பொண்ணுதான்! அழகாய் இல்லைன்னா இவள் உங்க நட்டு பெண்ணாய் இருக்க முடியாதா? இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இவர்களையெல்லாம் நாடு கடத்திடுவீங்க போல?

அழகா முக்கியம்? அறிவு, திறமைதானே முக்கியம்! அதுவும் அறிவியல் மற்றும் எல்லா விஷயங்களிலும் முதன்மையில் நிற்கும் சீன நாட்டின் பேச்சா இது!!!!!

பெய்யீக்கு என்ன குறை? அவள் அழகாய்தானே இருக்கா? சின்ன பிள்ளைகள் எப்படி இருந்தாலும் அவர்கள் அழகுதான். cute-தான். அதற்காக அவளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை இப்படியா முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பார்கள்?

உண்மை வெளியே தெரிந்ததில் பெய்யீக்கு ஒரு வகையில் நல்ல விஷயம்தான். ஆனால் மியோகோவின் நிலமை? infact, நிகழ்ச்சியில் அவள் பாடும் (நடிக்கும்)போது இன்னொரு பெண்ணின் குரலுக்கு தான் வாயசைக்கிறோம் என்று கூட தெரியாமல் இருந்திருக்கலாம்! அவள் பாடியது மற்றவர்களுக்கு கேட்காது என்ற உண்மை அவளிடமிருந்தே மறைக்கப்பட்டிருக்கலாம். நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்து இண்டர்வியூவில் கலந்துக்கொண்டபோது அவள் திறமைக்கு கிடைத்த பரிசென்று நினைத்திருக்கும் மியோகோ இனி எப்படி வெளியே தன் முகத்தை காட்டுவாள்? எல்லாரும் அவளை கேலி பண்ண மாட்டார்களா?

சீனா தன் இமேஜுக்காக மியோகோவை ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டதென்று சொல்லலாமா?

ரக்ஷா பந்தன் வித் நமீதா



நமஸ்தே.. செய்தீகல் வாசிக்குது நமீஈஈத்தா.. (நமீதா தமிழ் பேசுறாங்கல்ல. இப்படிதானே இருக்கும்?)

இன்னீக்கி ரக்ஷா பந்தன். நான் சின்ன வயசு இருக்கு. எனக்கு ரொம்போ பாய் ஃபிரண்ட்ஸ்.. எல்லாரும் ஆல்வேய்ஸ் வித் மீ. பட் இன்னிக்கீ டே மட்டும் ஆல் மிஸ்ஸிங். எனக்கு ரொம்ப ஆசை இருக்குது. எல்லா பாய் ஃபிரண்ட்ஸுக்கும் ராக்கி கட்டணும்ன்னு ரொம்ப ஆசை இருக்குது.

என்ன பண்ண போகுதுன்னுன்னு ஒன்னுமே பிரியல. யெஸ்.. காட் இட். எனக்கு ப்ளாக் ஃபிரண்ட்ஸ் அதிகம் இருக்குது. ஒன்னுக்கு ஒன்னா பிடிச்சு கட்ட போகுது.. நோ நோ நோ நோ.. ராக்கி கட்ட போகுது. ஜாய்ன் மீ பீப்ஸ்.

*******************************************************************************
அம்பி

நமீதா: ஷோ மீ யூர் ஹேன்ட்

பல்லை இளித்துக்கொண்டே கையை நீட்டுகிறார்.

நமீதா: நான் ஒன்னு குடுக்குது, நீ கண்ணை மூடிக்குது

அம்பி: ம்ஹூம் மேடம். கண்னை மூடுனா உங்களை ஜொல்லு விடும் டைம் வேஸ்ட் ஆகிடுமே

நமீதா: நோ நோ நோ நோ.. அம்பி கண்ணை மூடுது. நமீதா கிஃப்ட் குடுக்குது.

அம்பி கண்ணை மூடின கேப்ல நமீதா ராக்கி கட்டிட்டு,

நமீதா: அண்ணா...

அம்பி: என்ன கொடும தங்காச்சி இது!!!! :-(

*******************************************************************************
அய்யனார்

நமீதா: வணக்கம்

அய்யனார்: தமிழக புயலே, என்னை பார்க்க வந்த தேவதையே. உனக்காக நான் சொல்லவா ஒரு கவிதை. கவிதையே கவிதையா இருக்கும்போது இன்னொரு கவிதை அவசியமா என்று குசும்பன் கேட்டாலும் நான் சொல்லியே தீருவேன்.

உன் பேச்சுக்கு
பூனைக்குட்டிகளின் முகங்களை
மனதில் தருவிக்கிறேன்
அவை உன் பேச்சின் மீது
இன்னும் வாஞ்சையைத் தூண்டுகின்றன
உன் கோபம்
எரிச்சல்
மகிழ்வு
சிரிப்பு
கிண்டல் அழுகை
என உணர்வுகளுக்கேற்றார்போல்
பூனைக்குட்டிகளின் முகங்கள்
வந்து வந்து போகின்றன
சொல்
நீயொரு பூனைக்குட்டியா?

அய்யனாரின் உரையை கேட்டு முடித்தவுடன் நமீதா பலமா கைத்தட்டி வாழ்த்து கூறுகிறார்

அய்யனார்: எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. சக வலைப்பதிவாளர்களே என்னை அடர்கானக புலி, பின்நவீனத்துவவாதி, எழுதுறது புரியவில்லை என்று சொல்வார்கள். ஆனால், உங்களுக்கோ என் கவிதை புரிந்து கைத்தட்டி வாழ்த்து சொல்கிறீர்கள். நன்றி.

நமீதா: இப்பிடி பிலோசாஃபி ரெயின் பொழிந்த உன்க்கு நான் கிஃப்ட் குடுக்கும். கை காட்டு

சடார்ன்னு பையிலிருந்த ராக்கி அய்யனார் கைக்கு தாவியது. கட்டி முடித்ததும்,

நமீதா: குசும்பு சொல்லிச்சு. உங்களுக்கு கவிதை ஆஹா ஓஹோன்னு சொல்லிச்சுன்னா, ரொம்ப ஹேப்பின்னு. அதான், எனக்கு பிடிச்சிருக்கு சொல்லிச்சு. அய்யனார் கை காமிச்சுச்சு. மீ ராக்கி கட்ட்டிச்சு! ;-)

அய்யனார்: நமீதா.. யூ டூ?

*****************************************************************************
மங்களூர் சிவா

சிவா: ஆஹா.. நமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதாஆஆஆஆஆஆஆ....

நமீதா: வாயில ஈ.. ஈ எண்டர் ஆச்சு...

சிவா: து து து.. ஓக்கே. இப்போ ஓக்கே. என்ன விஷயமா நமீதா என்னை பார்க்க வந்திருக்கீங்க?

நமீதா: ஓவர் பில்ட் அப் பாடிக்கு நோட் கூட். (சிரிக்கிறார்) சிவாக்கு நமீதா ஒரு கிஃப்ட் குடுக்குது

சிவா: ம்ம்.. தாராளமா

தன் கண்ணத்தை காட்டுகிறார்.

நமீதா: ஹாஹாஹா.. இங்கே குடுக்கணும்னா சிவா ஹீரோ ஆகுது. விஜய், அஜித் மாதிரி ஆகுது. நமீதா குடுக்குது.

கண்ணத்தில் செல்லமா (கொஞ்சம் வேகமாகவே.. அது அறைதான்னு நான் சொல்லி தெரியணுமா என்ன?) தட்டுகிறார்.

சிவா: யாரும் பார்க்கல. மீசையில மண்ணு ஒட்டல..

நமீதா: வாட்?

சிவா: ஒன்னுமில்ல. குஜராத்தி மொழி கத்துக்கலாம்ன்னு இருக்கேன் நமீதா

நமீதா: தாட்ஸ் சோ ஸ்வீட் ஆஃப் யூ சிவா. உன்க்கு கையை நீட்டு

சிவா: நமீதாவுக்கக என் கை என்ன உயிரையே கொடுப்பேன்

சிவா கையை நீட்டிக்கிட்டே பகல் கனவு காணுகிறார். நமிதா வந்த வேலையை முடித்துட்டு சிவாவை கூப்பிடுறார்.

நமீதா: அண்ணா..

சிவா: நமீதா... வச்சிட்டியே ஆப்பு!!

*****************************************************************************
நிஜமா நல்லவன்

நமீதா: ஆர் யூ ட்ரூலி கூட் பெர்சன்?

நிஜமா நல்லவன்: என்னம்மா பேசுற? ஒன்னுமே புரியலையே!!! (சிவாஜி கணேசன் ஸ்டலில்..)

நமீதா: நிஜ்மா நல்வன்?

நிஜமா நல்லவன்: நாந்தான் நாந்தான்.. ஆஹா.. என்னை தேடி வந்திருக்கா நமீதா.. (மனதுக்குள்..) டேய் பாரதி, உனக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்குல்ல. ;-)

நமீதா: நான் உன்க்கு ஒரு கிஃப்ட் குடுக்குது..

நிஜமா நல்லவன்: நன்றி நன்றி.. டேய் ஆயில்யா, இங்கே பார்றா.. நமீதா எனக்கு பரிசு கொடுத்திருக்கா.

ஆயில்யன்: என்னது? என் கிட்ட காட்டு பார்ப்போம்.

கிஃப்ட்டை பார்த்து ஷாக் ஆகி,

ஆயில்யன்: நீ நிஜமாவே நல்லவனா? இல்லை நல்லவன்னு வேஷம் போடுறீயா? இல்ல எல்லாரும் சுலபமா ஏமாத்தி நீ ரொம்ப நல்லவண்டான்னு சர்டிபிகேட் கொடுத்துட்டாங்களா?

நிஜமா நல்லவன்: ஏன்?

ஆயில்யன்: இது என்னன்னு தெரியுதா?

நிஜமா நல்லவன்: ஏதோ கை செயின் மாதிரி இருக்கு

ஆயில்யன்: அடப்பாவி.. மஞ்ச கலர்ல ஒரு ராக்கி கட்டினா அது உனக்கு செயினா தெரியுதா? நமீதா உன்னை அவளுக்கு அண்ணனா ஆக்கிட்டு போயிட்டா...

நிஜமா நல்லவன்: அவ்வ்வ்வ்வ்... போனால் போகட்டும் போடா.. அவ்வ்வ்வ்......

*****************************
நேரம் பற்றாக்குறையினால் நமீதா நாலு பேருக்குதான் ராக்கி கட்டியிருக்காராம். மீதி நிறைய ராக்கி வச்சிருக்கிறார். பசங்களே ஜாக்கிறத்தை!!!!

நாளை மறுநாள் ராக்ஷா பந்தன். என்னுடைய வாழ்த்துக்களை எல்லா அண்ணன்களுக்கும் தெரிவித்துக்கொள்(ல்)கிறேன். ;-)

Monday, August 11, 2008

நஸ்கா (Nazca) ராட்சச கோடுகள்

உலகத்தில் இன்னும் தீர்வுக்காணாத/ முடியாத பல அதிசயங்களும் மர்மங்களும் ஆச்சர்யங்களும் தினம் தினம் நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கின்றது. சில மர்மங்களுக்கு இப்படி இருக்குமோ என்று நாமே சில யூகங்களை உண்டாக்கிக்கொண்டு திருப்தியடைந்துக்கொள்கிறோம்.

நஸ்கா ராட்சச கோடுகள் (Nazca Lines) என்பதும் இன்று வரை மர்மங்களில் ஜொலிக்கும் ஒரு விஷயமாகவே இருந்துக்கொண்டிருக்கிறது. இதன் உருவாக்க ரகசியம் பற்றி பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. எந்த காலக்கட்டத்தில் யாரால் உருவாக்கப்பப்ட்டது? எப்படி இதை செய்தார்கள்? இந்த கோடுகள் உருவாக்கத்தின் பின்னனி மற்றும் நோக்கம்தான் என்ன? ம்ஹூம்.. ஒன்றுமே தெரியாத மர்மம்தான் இது.

பெரு நாட்டின் பம்பா மற்றும் நஸ்கா இடங்களில் இந்த கோடுகளை பார்க்கலாம். பெரு பட்டணத்திலிருந்து ஒரு 400 கிலோமீட்டர் தென்கிழக்கு நோக்கி போக வேண்டும். 450 கிலோமீட்டர் சதுர அளவில் இந்த கோடுகள் அமைந்திருக்கின்றன. அம்மாம்பெரிய கோடுகளா என்கிறீர்களா? ஆமாம். நீங்கள் இந்த இடத்தில் நின்று எங்கே அந்த கோடுகள் என்று தேடினால் கண்டு பிடிக்கவே முடியாது. இந்த கோடுகளையும், சித்திரங்களையும் பார்க்க வேண்டுமானால் உங்களுக்கு ஒரு சாட்டிலைட் அல்லது ஒரு விமானம் தேவைப்படும். கடலிலிருந்து 600 மீட்டர் உயரத்தில் நின்றால் மட்டுமே தெரியும். குறைந்த பட்சம் உங்களுக்கு கூகுல் ஏர்த் (Google Earth) இருந்தாலும் பரவாயில்லை. (ஆனால், தேடிக்கண்டு பிடிக்க உங்களுக்கு பொறுமை மிக அவசியம்).

[பெரு மற்றும் நஸ்கா நகரம்]

இந்த கோடுகள் 1920-ஆம் ஆண்டுகளில்தான் பேசப்பட ஆரம்பித்தது. இந்த காலக்கட்டத்தில்தான் அமேரிக்க கமர்ஷியல் விமானங்கள் நஸ்கா நகரை கடந்து போக ஆரம்பித்தன. அப்போதுதான் பயணிகளும், விமானிகளும் விமானத் தறையிரங்கும் தடங்கள் தெரிவதாக சொல்லியிருக்கின்றனர். ஆளே இல்லாத இடத்தில் யார் விமானத்தடங்களை அமைத்திருப்பார்கள்? இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்முன்னரே குரங்கு, பல்லி, எட்டுக்கால் பூச்சி என்று மிருகங்களின் ராட்சச ஓவியங்களையும் விமானப் பயணிகள் கண்டுள்ளனர்.

[விமானத் தடமாக தெரிந்த கோடுகள்]

புதுசா ஒன்று ஆச்சர்யம் கொடுக்கும் அளவு இருந்தால் விடுவார்களா நம் விஞ்ஞானிகள்? தொல்பொருள் நிபுணர்கள் கிளம்பிட்டாங்க பெரு நகருக்கு. என்னத்தான் அதிசயம் அங்கு காத்திருக்கு? எப்படி இதெல்லாம் வரைந்தார்கள்? ராட்சச மனிதர்கள், இயந்திரங்கள் கிடைக்குமா? எல்லா கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும் என அதீத நம்பிக்கையில் பெட்டி கட்டி கிளம்பிட்டாங்க.

அவர்களின் ஆராய்ச்சி என்ன சொல்கின்றது என்றால், இந்த கோடுகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. ஆனாலும் எந்த காலக்கட்டத்தில், எந்த இனத்தவரால், எதுக்காக என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஏனென்றால், அந்த கோடுகளில் சிக்கலான ஆனால் நேர்த்தியான வேலைப்பாடுகள் தெரிந்தன. இந்த அளவுக்கு நேர்த்தியாய் செய்ய விஞ்ஞான வளர்ச்சி கண்டிப்பாக அந்த காலக்கட்டத்தில் இருந்திருக்காது. அவ்வளவு நேர்த்தியாகவும் ப்ராட்சச உருவத்திலும் எப்படி செய்ய முடிந்தது? ஆகாயத்திலிருந்து ஒருத்தவர் கவனித்து சொல்லியிருந்தால் கூட இந்த அளவுக்கு பரிப்பூர்ண ஓவியம் வரைவது கஷ்டமே! அப்படியென்றால், இவர்கள் ரோம், மெசோப்போதாமிய மக்களை விட அறிவாளிகளா? ஒரு துறுப்பு சீட்டு கூட கண்ணுக்கு கிடைக்கலையே. எதையும் எழுதி வைத்த மாதிரியும் இல்லையே?

[குரங்கு வடிவில் நஸ்கா கோடுகள்]

ஆனாலும், தொல்பொருள் நிபுணர்கள் இந்த நஸ்கா கோடுகளை கஹூவாச்சி (Cahuachi) என்ற ஆதிவாசிகளின் முன்னோர்கள் வரைந்திருக்கக்கூடும் என நம்புகிறார்கள். இவர்கள் நஸ்கா நகரின் சுற்றுப்புற இடங்களில் இன்னும் வசிக்கின்றனர். ஏன் இவர்கள்? கஹூவாச்சி மக்கள் வசிப்பிடத்தில் பழைய கோட்டையின் ஒரு பகுதி கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தவிர்த்து மம்மிகள் மற்றும் நஸ்கா கோடுகளின் சில படங்களின் கல்சுவடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த யூகம் தப்பாக இருக்கலாம் என்று நிபுணர்களே சொல்லியிருக்கார்கள். இது கஹூவாச்சி மக்களுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் இருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் வேலைப்பாடுகளாய் இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், அவர்கள் யார்?

பல நூற்றாண்டுகள் முன்னர் உருவான இந்த ஓவியங்கள் / கோடுகள் இன்று வரை அப்படியே இருக்க காரணம் என்ன? நஸ்கா வட்டாரத்தின் இயல்பியலே இதற்கு முக்கிய காரணம். மழை இந்த இடத்தில் பெய்வது மிக மிக குறைவு. வருடத்துக்கு 20 நிமிடங்கள் மட்டுமே. உலகில் மிகக் குறைவான அளவில் மழை பெய்யும் இடங்களில் இதுவும் ஒன்று. நஸ்கா நிலம் கடினமான, கற்பாறைகளால் நிறைந்தவை. தூசு, குப்பை பறவாத நிலம் மற்றும் மிகக் குறைந்த அளவில் மழை; இதுவே வரைந்த கோடுகள் இன்று வரை கொஞ்சம் உருமாற மர்மத்தின் ரகசியம்.


[ராட்சச வௌவால்]

இதை தவிர்த்து ஒவ்வொரு கோடுகளின் முனையிலும் இதனை வரைந்தவர்கள் ஒரு வெளிச்சமான வர்ணங்களின் இன்னொரு அடுக்கை கொடுத்திருக்கின்றனர். அதனால் எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் மிகவும் தெளிவாகவும் பிரகாசமாகவும் தெரியும். பல நூறு வருடங்கள் ஆனாலும் அழியாது.

[ஹும்மிங் பறவை]

[நஸ்கா கோடுகளில் பல ஓவியங்கள் இதில் தெரிகின்றது]

[திமிங்கிலம்]

இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட ஓவியங்கள் / கோடுகள்:

- எட்டுக்கால் பூச்சி (46 மீட்டர் நீளம்)
- குரங்கு (55 மீட்டர் நீளம்)
- ராட்சச வௌவால் (குவானோ பறவை) (280 மீட்டர் நீளம்)
- பல்லி (180 நீளம்)
- ஹும்மிங் பறவை (50 மீட்டர் நீளம்)
- திமிங்கிலம் (65 மீட்டர் நீளம்)
- Pelican (285 மீட்டர் நீளம்)

[நஸ்கா கோடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஓவியங்கள்]

References:
http://en.wikipedia.org/wiki/Nazca_lines
http://www.peru-explorer.com/nasca.htm
http://unmuseum.mus.pa.us/nazca.htm

Thursday, August 07, 2008

நினைத்தாலே இனி(கச)க்கும் - 2

முதல் செமெஸ்டர்லதான் பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி டாக்டரை விரிவுரையாளராக்கி 3 நாள் எம்.சி எடுத்து லேப் இன்னொரு நாளில் செய்து அந்த செமெஸ்டரை முடித்தேன். இனி எப்போதுமே எம்.சி எடுக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக் கொண்டேன்.

காலங்கள் உருண்டோடின (காலத்துக்கு சக்கரங்கள் இருக்குன்னு என் டீச்சர் எனக்கு சொல்லியே தரலையே..). இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பமானது. இந்த தடவை முதல் வாரத்துலேயே என்னுடைய லேப் க்ரூப் (அதே எட்டாவது க்ரூப்தான்), லேப் தேதிகள் எல்லாமே குறித்து வைத்துக் கொண்டேன். இனி பாருங்க. "எப்படி கரேக்டா எல்லா லேப்லயும் அட்டெண்டண்ஸ் போடுறேன்"ன்னு நண்பர்களிடம் பெருமையா சொன்னேன்.

இந்த தடவை 6 லேப் செஷன் மட்டுமே. ஒன்றாவது லேப் முடிந்து இரண்டாவதும் முடித்து விட்டேன். மூன்றாவது லேப் செல்லும்முன், திரும்ப அதே க்ளீனிக்கின் வாசலில் போய் நின்றேன். இந்த தடவை என் கூட ஒன்னொரு தோழியும் நின்றிருந்தாள்.

அவளை வெளியேயே நிக்கச் சொல்லிட்டு உள்ளே வந்து "Doctor On Duty" பலகையில் யார் பெயர் போட்டிருக்கு என்று திருட்டுத்தனமா பார்த்தேன். அப்பாடா.. நல்ல வேளை. இன்னைக்கு அந்த டாக்ரர் லீவூ போல. யாரோ இன்னொரு அம்மணி டாக்டரா இருக்காங்க என்ற திருப்தியில் வெளியே சென்று என் தோழியை அழைத்தேன்.

கவுண்டரில் மெடிக்கல் கார்ட் எல்லாம் காட்டி அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிவிட்டு சோபாவில் அமர்ந்தோம். அப்போது அங்கே இருந்த தொலைக்காட்சியில் ஏதோ நல்ல படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. விருவிருப்பான காட்சி. அன்னார்ந்து தொலைக்காட்சியில் முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டிருந்தபோது என் முன்னே ஒருவர் வந்து நின்றார்.

ஆஹா.. ஆப்பு இன்னைக்கு கண்ஃபார்ம்தான்! என் முன்னாடி நிற்பவர் நான் முன்னாடி ஒரு நாள் பின்னாடி இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சபதம் எடுத்ததுக்கு காரணமானவர். ஒரு பக்கம் பக் என்று இருந்தாலும் நிலைமையை சரி செய்ய..

"அடடே டாக்டர்.. கூட் மார்னிங் டாக்டர். சௌக்கியமா?"

"என் சௌக்கியம் இருக்கட்டும். என்ன இந்த பக்கம்? யாரோ ஒருத்தவங்க இனி இந்த பக்கமே வர மாட்டேன்னு சபதம் போட்டுட்டு போனதால ஞாபகம்?"

"யாரு டாக்டர்? ரொம்ப வித்தியாசமான கேரக்டரா இருக்கே? எனக்கு அறிமுகப்படுத்துறீங்களா?"

" ம்ம்.. வாய் நீண்டுடுச்சு போல? உள்ளே வா.. ஒரு ஊசி போடுறேன். அப்போ தெரியும் யாரந்த கேரக்டர்ன்னு" என்று திரும்பி டாக்டர் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

"டாக்டர், டாக்டர். நில்லுங்க. அது ச்சும்மா தமாசுதான். நோ டென்ஷ்ன் ப்ளீஸ். இன்னைக்கு வேற ஒரு டாக்டர் பெயர் On Dutyல எழுதியிருக்கு? ஆனால், நீங்க வந்திருக்கீங்க?"

"ம்.. யாரு டூட்டில இருக்கா? யாரிடம் ஈசியா ஏமாத்தி எம்.சி வாங்கலாம்ன்னு பக்காவா ப்ளான் போட்டுதான் வந்திருக்கியா? On Duty வேற டாக்டர்தான். ஆனால், உன் கேஸ் மட்டும் நானே கவனிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். உன் டர்ன் வரும்போது உள்ளே வா."

வில்லத்தனமான சிரிப்பு என்று சொல்வார்களே. எனக்கு தெரிந்து நான் பார்த்த முதல் வில்லத்தனமான சிரிப்பு.. அதுவேதான்.

திரும்ப என் தோழியின் பக்கம் வந்து "இன்னைக்கு எம்.சி எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால், எப்படியாவது எம்.சி வாங்கிடணும்ன்னு உறுதியா இருக்கேன். முடியுமா?"ன்னு தோழியிடம் கேட்டேன். அவள் "இன்னைக்கு முயற்சி தோல்விதான். கண்ஃபார்மா சொல்றேன்"ன்னு ஒரு குண்டை போட்டாள்.

எங்க டர்ன் வந்ததும் உள்ளே போனோம். On Duty டாக்டர் எதிர்த்தாப்புல உள்ள நாற்காலியில் நமக்கு வேண்டப்பட்ட டாக்டரும் உட்கார்ந்திருந்தார். நாங்க உள்ளே வந்ததும் எங்க டாக்டர் அவர் வேலையை ஆரம்பித்துட்டார்.

"டாக்டர், இந்த பொண்ணுக்கு என்ன சீக்குன்னு எனக்கு தெரியும். நீங்க ஒரு எம்.சி எழுதுங்க முதல்ல"

அந்த டாக்டர் கொஞ்சம் ஷாக் ஆன மாதிரிதான் இருந்துச்சு. ஆனாலும் திரும்ப சகஜ நிலைக்கு வந்து "ஓ.. உங்க பேஷண்டா? ஃபாலோ அப்க்கு வந்திருக்காளா? செக் பண்ணிடுவோம்ன்னு மெடிக்கல் கார்டில் பார்த்தாங்க."

கார்டை பார்த்துட்டு "ஒரு நோயும் இருக்கிற மாதிரி தெரியலையே. நீ வந்து என் பக்கத்துல உட்காரும்மா"ன்னு சொன்னாங்க.

நான் நமக்கு வேண்டிய டாக்டர் பக்கத்துல உள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன். என் தோழி On Duty டாக்டர் பக்கத்துல உட்காந்தாள்.

"டாக்டர், இந்த பொண்ணுக்குதான் உடம்பு சரியில்லை. முதல்ல ரெண்டு பேரையும் இடம் மாறி உட்கார சொல்லுங்க"ன்னு நம்ம டாக்டர் சொல்ல.. டாக்டர் மெடிக்கல் கார்டில் உள்ள பெயரை உற்சரித்து இது யாருன்னு கேட்க, என் தோழி அவள்தான் என்று சொல்ல.. நான் நம்ம டாக்டரை பார்க்க.. அவரும் என்னை பார்க்க... ஆஹா.. இந்த காட்சியை இன்னும் எந்த இயக்குனரும் தன்னோட படத்துல போடலையே.. அந்த அளவு சூப்பரானா காட்சி.

தோழியை டாக்டர் செக்-அப் செய்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லி ஒரு எம்.சியும் கொடுத்தார்.

ரெண்டு டாக்டருக்கும் "டா டா.. பை பை" சொல்லிட்டு வெளியே வரும்போது நம்ம டாக்டருக்கு ஸ்பெஷலா ஒரு "டா டா பை பை" சொன்னேன்.

அவரோ என்னை பார்த்து பாராட்டி "இப்போல்லாம் நீ ரொம்ப பொறூப்பா இருக்கே. ஏற்கனவே நல்லா படிக்கிற பொண்ணு. தன்னோட வேலையே பெருசுன்னு மத்தவங்க நினைக்கிற இந்த காலக் கட்டத்துல தோழிக்கு உடம்பு சரியில்லைன்னதும் கூட வந்து உதவி செய்ததில் மனிதாபிமானம், நட்பு, பாசம் எல்லாமே உனக்கு அதிகம் இருக்கு. கீப் இட் அப்" என்றூ சொல்லி தன் கட்டை விரலை உயர்த்தினார்.

"டாக்டர், என்னை ரொம்ப புகழாதீங்க. எனக்கு வெட்கமா இருக்கு"ன்னு ஒரு பிட்டை போட்டு நாங்க ரெண்டு பேரும் அங்கே இருந்து எஸ்கேப் ஆகிட்டோம்.

க்ளீனிக் வெளியே வந்ததும்,

"பார்த்தீயா.. உனக்கு கண்டிப்பா எம்.சி வாங்கி கொடுத்துடுவேன்னு சொன்னேன்ல. ஒரு தடவைதான் ஏமாறுவேன். அதுல இருந்து நல்லா பாடத்தை கற்றுக்கொண்டு இன்னைக்கு உன்னை நடிக்க வச்சு எம்.சி வாங்க வச்சுட்டேன்" என்று தோழியிடம் சொன்னேன்.

"அந்த டாக்டர் வந்து அப்படி சொன்னதும் இன்னைக்கு எனக்கு எம்.சி கிடைக்கவே கிடைக்காதுன்னுதான் நினைச்சேன். நான் நடிக்கிறேன்னு கண்டு பிடிச்சிடுவாரோன்னு பயந்துட்டே இருந்தேன். ஆனால், அவர் நீதான் பேஷண்ட்ன்னு நெனச்சதால என் மேலே அவ்வளவு அக்கறை காட்டாததுனால இது நடிப்புன்னு கண்டுபிடிக்கல. எப்படியோ எனக்கு எம்.சி கிடைச்சுடுச்சு. நன்றி"ன்னு சொன்னாள்.

ம்ம்.. எம்.சி.. இரண்டாவது செமெஸ்டரில் எனக்கு நான் எடுத்துக்கலை. தோழிக்கு எடுத்துக் கொடுக்க உதவினேன். அப்படியே இரண்டாவது செமெஸ்டர் முடிந்தது.

ஆனால், இந்த எம்.சி எடுக்கிற பழக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. மூனாவது செமெஸ்டர் வந்துட்டே இருக்கு.

[தொடரும்..]

Tuesday, August 05, 2008

நினைத்தாலே இனி(கச)க்கும் - 1

விக்னேஷ்வரனின் புதைந்த நினைவுகள் படித்த போது எனக்கும் கொசுவர்த்தி சுற்றிவிட்டது.

விக்னேஷ் ரொம்ப நல்லவர் போல. ச்சும்மா பதுங்கி பதுங்கி, அதுவும் ஒரே ஒரு எம்.சிதான் எடுத்திருக்கார். நானெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமல் ஒவ்வொரு செமெஸ்டருக்கும் ஒன்னுன்னு எடுத்துட்டு இருந்தேனாக்கும்.

என்ன கதை?-ன்னு கேட்குறீங்களா? அதை சொல்லத்தானே வந்திருக்கேன். என் பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நல்லாவே தெரியும் என் அபார(!!) ஞாபக சக்தியை பற்றி. என்னுடைய பொறியியல் கல்வியில் ஒரு செமெஸ்டருக்கு ஒரு 8-10 லேப் செஷன் இருக்கும். ஒரு வகுப்புக்கு ஒரு நாள்ன்னு ஒதுக்கியிருந்தா நான் யேனுங்க இப்படி பொந்தேங் (ponteng) / லீவு எடுக்க போறேன்? கூட்டாளிங்க லேப் போனால் என்னையும் மறக்காமல் கூட்டிட்டு ப்யிடுவாங்கல்ல. அல்லது atleast நம்மை ஞாபகமாவது பண்ணிடுவாங்க. பாசக்கார பயப்புள்ளைங்க. விரிவுரையாளர்களுக்கு அவங்க பெரிய மேதைன்னு நெனச்சிப்பாங்களோ? ( ஆமா ஆமா.. அவங்க மேதைதான்). ஆனா, ஒரு ரெண்டம் லிஸ்ட் ரெடி பண்ணி எங்களை எல்லாம் மிக்ஸ் பண்ணி ஒரு பட்டியல் ரெடி பண்ணி வச்சிருப்பார். அவங்க கணக்கு படி என் பெயர் 8-ஆவது க்ரூப்பில் இருந்திருக்கு. மொத்தம் ஒரு 52 க்ரூப் இருக்கும்.

முதல் செமெஸ்டர்ல, இப்படி ஒரு க்ரூப் இருக்கிறது கூட தெரியாத அப்பாவி(!!!)யா இருந்துட்டேன். என்னோட நிலமையை பாருங்க. அந்த செமெஸ்டர்ல முதல் லேப் செஷன் எங்க க்ரூப்க்குதான். 2-3 நாள் கழிச்சு ஒரு தோழன் வந்து என் கிட்ட கேட்டான்.

"லேப் எப்படி இருந்துச்சு? எனக்கு லேப் கேள்விக்கு பதில் கொடுக்கிறாயா?"

"லேப்-ஆ? அப்படின்னா?"

"உனக்குதான் 2 நாள் முன்னாடி இஞ்சினியரிங் லேப் இருந்துச்சே? போகலையா நீ?"

அப்புறம் அவனிடம் என்ன விஷயம் ஏது விஷயம்ன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். என்னோட க்ரூப் எட்டுன்னும் முதல் லேப் ரெண்டு நாள் முனனடியே முடிஞ்சிடுச்சு. சூப்பர்! முதல் லேப்க்கே சூப்பர் அட்டெண்டண்ஸ் போட்டாச்சு. இனி காலம் முழுசா இப்படித்தானோ? சரி, அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன். முதல் லேப்க்கே போகலைன்னா ஆப்பு ரொம்ப பெருசுன்னு சீனியர்ஸ் வேற சொன்னாங்க. அப்படி போகாமல் விட்டாலும் valid காரணம் இல்லைன்னா சான்ஸே இல்ல. valid காரணம் இருந்தாலும் மறுநாளே நான் என்னுடைய வராத காரணத்தை தெரிவித்திருக்கணும்ன்னு குண்டு இல்ல.. பெரிய பாம் தூக்கி போட்டாங்க.

என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கும்போது ஒருத்தன் கையில கட்டோடு என்னை பாஸ் பண்ணான். ஆஹா.. கடவுள் விட்ட வழி. In-campus க்ளீனிக்ல போய் தஞ்சம் அடைஞ்சிடலாம்ன்னு போனேன்.

டாக்டர் கிட்ட " டாக்டர் டாக்டர், எனக்கு 2-3 நாளா ஒரே தலை வழி.. தாங்கலை. என்னன்னு பாருங்க"

டாக்டரும் என்னன்னெனமோ செக் பண்ணிட்டு "எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கே?"ன்னு சொன்னார்..

"இல்ல டாக்டர். 2-3 நாளா ஒரே வலி."

டாக்டர் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு, "க்ளாஸ் இருக்கா இப்போ?"

"இல்லை டாக்டர்."

"சரி, மருந்து எழுதி தர்றேன். ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு. எல்லாம் சரி ஆயிடும்"

"டாக்டர்.. எம்.சி?"

"எம்.சியா? உனக்குதான் க்ளாஸ் இல்லைன்னு சொன்னியே?"

"2-3 நாளாவே வலின்னு சொன்னேனே.. 2 நாளுக்கு முன்னாடி வலின்னால லேப்க்கு போக முடியல. அதுக்குதான் எம்.சி வேணும்..."

"அப்படி வா வழிக்கு. எல்லாம் நார்மலா இருக்கும்போதே நெனச்சேன்."ன்னு சொல்லி ஒரு முறை முறைச்சார்.

"சாரி டாக்டர். உண்மையை சொல்லிடுறேன்"ன்னு எல்லாத்தையும் சொல்லி இனிமேல் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன். இதுக்கு மட்டும் கொடுத்துடுங்க. என் வாழ்க்கை பிரச்சனைன்னு வாயில வந்தது எல்லாத்தையும் போட்டு எப்படியோ அவரை கூல் பண்ணிட்டேன்.

"சரி, நான் கேட்குற கேள்விக்கு சரியா பதில் சொல்லு. உனக்கு நான் எம்.சி கொடுக்குறேன்"ன்னு சொல்லி இஞ்சினியரிங் mathematics-ல இருந்து ரெண்டு கேள்வியும், 2 physics கேள்வியும் கேட்டார்.

maths நமக்குதான் கை வந்த கலையாச்சே. அதுக்கு சரியான பதில் சொல்லிட்டு physicsல நீங்க theory கேட்குறீங்க. எனக்கு அது ஞாபகத்துல இல்ல. எனக்கு தெரிஞ்ச வேற ஒரு theory சொல்றேன்ன்னு விளக்கினேன்.

என்னோட பதிலில் அவருக்கு பூரண திருப்தி போல. "கூட். இந்தா உனது எம்.சி. இனிமேல் எம்.சி வேணும்ன்னு இந்த க்ளினிக் பக்கம் பார்க்க கூடாது. சரியா?"ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னார்.

என்ன ஆச்சர்யம்! 2-3 நாள் சீரியஸ் வலி மாதிரி அந்த எம்-சி எழுதி 3 நாள் எம்.சி போட்டிருந்தார். "டாக்டர், எனக்கு அந்த ஒரு நாளுக்கு மட்டும்தான் எம்.சி வேணும். நீங்க மூனு நாளுக்கு கொடுத்திருக்கீங்களே?"ன்னு கேட்டேன்.

அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். "2 நாள் முன்னாடி உனக்கு லேப்ன்னு சொல்ற. அப்படின்னா நேற்றே உன் எம்.சி நீ லேப்ல சப்மிட் பண்ணியிருக்கணும். அப்படி பண்ணலைன்னா அந்த எம்.சி expiredதான். நீ அந்த லேப் எப்போதுமே ரிப்லேஸ் பண்ண முடியாது. நல்லா படிக்கிற புள்ளையாட்டம் இருக்கே. நீ அந்த லேப் செய்யணும். 3 நாள் எம்.சின்னா நாளைக்கு காலையில இந்த எம்.சி சப்மிட் பண்ணாலும் ஏன்னு கேள்வி கேட்காமல் எடுத்துப்பாங்க. கூட் லக்". சொல்லிக்கொண்டே தன் கட்டை விரலை உயர்த்தினார்.

ஆஹா.. இப்படியும் ஒரு டாக்டரா?

இதுவரை க்ளீனிக் அலல்து மருத்துவமனை பக்கம் வந்தாலே ஒன்னு யாராவது நண்பர் அல்லது உறவினரை பார்க்கத்தா போயிருந்தேன். அல்லது இந்த மாதிரி ஆபத்து அவசரத்துல எம்.சி எடுக்க மட்டுமே இந்த மருந்து வாடை இடத்தில் நுழைந்திருந்திருக்கிறேன். இனி நானே சீரியஸா இருந்தாலும் க்ளீனிக் / மருத்துவமனை பக்கம் வரவே கூடாது. முக்கியமாக எம்.சி எடுப்பது பற்றி நினக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன்.

ஆனால், முடிவு அடுத்த செமெஸ்டரே மாறும்ன்னு நான் கூட நெனச்சி பார்க்கலையே!

[தொடரும்.....]

எம்.சி: MC --> Medical Certification.
பொந்தேங் : Ponteng --> வகுப்புக்கு போகாமல் மட்டம் போடுவது

Saturday, July 26, 2008

போவோமா.. LKG-க்கு. ;-)

நம்ம மக்களுக்கு அறிவு ஜாஸ்திங்க. அறிவு மட்டுமில்ல. ரொம்பவே க்ரியேட்டிவானவங்க. நமக்கெல்லாம் பதிவெழுத மேட்டர் இல்லன்னு எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ? (ஒரு வேளை இவங்க எல்லாம் விஞ்ஞானியாகவோ, துப்பறியும் வல்லுனராகவோ ஆக வேண்டியவங்களோ?) இப்படி புதுசு புதுசா டேக் கண்டுபிடிச்சு நம்ம ப்ளாக்கையும் வாழ வைக்கிறாங்கப்பா.. இதை ஆரம்பித்த புண்ணியவான்களுக்கும் முத்துக்காக்கும் நன்றி சொல்லி நாம் எல்லாரும் LKG-க்கு போவோம்..

அட என்னங்க.. இது A for ஆப்பிள் வகுப்புதான். கொஞ்சம் அட்வான்ஸா நாம் அடிக்கடி போகுற வலைகளின் சுட்டிகளை கேட்குறாங்க. நான் இந்த வகுப்புல 2 தடவை கலந்துக்கப் போறேன். முதல் வகுப்புல, நான் சுற்றும் வலைப்பூக்கள். இரண்டாவது சுற்றுல நான் சுற்றும் மற்ற வலைத்தளங்கள்.

***********************************************************************

A for அம்பி, அனுசுயா, அபி அப்பா, அகிலன், அய்யனார், அருட்பெருங்கோ, அருண் சிவா, அருண்குமார், ஆயில்யன், ஆஷ் அம்ருதா, ஏஸ், அரும்புகள், அவந்திகா
B for பரணி, பத்மபிரியா, ப்ளாக் யூனியன்
C for CVR, ச்சின்னப் பையன்
D for தேவ், டுபுக்கு டிசைபிள், ட்ரீம்ஸ், திவ்யா
E for எழில்பாரதி
G for G ராகவன், G3
I for இம்சை அரசி, இம்சை, இளா
J for ஜில்லென்று ஒரு மலேசியா, ஜேகே, ஜீவ்ஸ், ஜி, ஜொல்லுப்பாண்டி
K for கடல் கணேசன், கார்த்திகேயன், கண்மணி, கப்பி பய, காயத்ரி, கே4கே, கேகே, குசும்பன், கோபிநாத், கோப்ஸ், குட்டீஸ் கார்னர், கீத்துக் கொட்டாய், கானா பிரபா, கே.ஆர்.எஸ்
M for மங்களூர் சிவா, மங்கை, மின்னுது மின்னல், முத்துலெட்சுமி, மது, மாதினி
N for நாமக்கல் சிபி, நிஜமா நல்லவன், நான், நிலவு நண்பன், நிலா ரசிகன், நிலா, நானானி
P for பயமரியா பாவையர் சங்கம், பவன், ப்ரியா, பொன்ஸ், பொற்கொடி, பாசமலர், புதுகைத் தென்றல், புனிதா, பேரண்ட்ஸ் கிளப்
R for ராம், றேடியோஸ்பதி, ரசிகன், ரம்யா, ராஜி, ராப், ரிஷான் ஷெரிப், ரம்யா ரமணி
S for சஞ்சய், சந்தோஷ், சினேகிதி, சுமதி, ஸ்யாம், சுவரொட்டி, சரவணக்குமார், சென்ஷி, SP VR சுப்பையா, சதீஸ்குமார்
T for தேன்கிண்ணம், தமிழ்மணம், தேன்கூடு, தம்பி, துர்கா, துளசி கோபால், தூயா, TBCD, தமிழ் புகைப்படக்கலை, தமிழ் பிரியன், தருமி
U for உங்கள் நண்பன் சரா
V for வலைச்சரம், வீடியோஸ்பதி, விக்னேஸ்வரன், வினையூக்கி, வெங்கட்ராமன், வெட்டிப்பயல், வேதா, வேடந்தாங்கல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், வல்லி சிம்ஹன்
Y for யோகேஸ்வரன்
# for 24/7 ஃப்ரேம்ஸ்

*****************************************************************************

A for AllAboutSymbian --> சிம்பியன் ஃபோன் வகைகளின் applications மற்றும் கைத்தொலைப்பேசிகளின் விபரங்கள் முழுமையாக கிடைக்குமிடம்
AsteriskGuru --> சொந்தமா PBX சர்வீஸ் செய்யுறதை பற்றி விளக்குறாங்க
B for Blogger --> இதுக்கு மட்டும் வராமல் இருந்தால் பதிவு எப்படி போடுறதாம்?
C for CoolToad --> என்ன பாடல் தேடினாலும் கிடைக்குமிடம்
CineSouth --> சினிமா நியூஸ்
D for Dell --> எல்லா கணிணியூம் மடிக்கணிணியும் சூப்பரா இருக்குல்ல. ;-)
F for FileHippo --> இலவசமாக சாஃப்ட்வேர் டவுன்லோட் செய்ய
Friendster --> நண்பர்கள் கூட்டணி
Facebook --> நண்பர்கள் கூட்டணியுடன் கேம் விளையாட
G for GSC --> எந்த படம் என்ன தியேட்டர்ன்னு தெரிஞ்சிக்கத்தான் ;-)
Gmail --> மின்னஞ்சல் நிறைய வருமே. ;-)
Google --> தினமும் இதன் முகத்தில் விழிக்கலைன்னா வேலையே நடக்காது
H for HowStuffWorks --> எப்படி சுறா மீனிடமிருந்து தப்பிகிறதுங்கிற சுலபமான கேள்வியிலிருந்து எப்படி மேகி போடுறது என்ற கஷ்டமான கேள்வி வரைக்கும் பதில் கிடைக்கும் இங்கே.
Happy --> எந்த மொபைல் அல்லது லேன்லைனுக்கு கால் பண்ணினாலும் 45 நிமிடத்துக்கு just RM0.99 தான் (மலேசியாவில் மட்டுமே)
I for Imeem --> பாடல்களை அப்லோட் செய்யவும், கேட்கவும்
K for Kumudam --> ஓசியில் படிக்கத்தான்
L for LowYat --> என்னைப் போல கம்ப்யூட்டர்வாதிங்களுக்கு சொர்க்கம்
M for MalaysiaKini --> மலேசிய அரசியல் செய்திகள் தெரிந்துக்கொள்ள
Maps of Google --> எங்கே போறதென்றாலும் இங்கே பார்த்துட்டுதான் போகணும்.
Mobile88 --> மலேசியாவில் ஃபோன் வாங்கனுமா? எல்லா தகவலும் இங்கே கிடைக்கும்
O for Orkut --> ஃப்ரெண்ட்ஸ்தெரோட பிரதர்
P for PCB123 --> வேலை வேலைன்னு ஒன்னு இருக்குல்ல. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கு
R for RHBBank -->RHB வங்கி ஆன்லைன்
S for Siddharth-Online --> சித்தார்த் ஸ்பெஷல்
Scribd --> நிறைய புத்தகங்கள் இலவசமா கிடைக்கும்
T for Twitter --> பேசிட்டே இருக்க.
U for UserTube --> சில வீடீயோ க்ளிப்ஸ் பார்க்க
V for VMWare --> ஒரே நேரத்துல விண்டோவ்ஸ், லினக்ஸ்ன்னு புகுந்து விளையாட..
W for Wikipedia --> கூகிலுடைய தங்கச்சி. எதையும் தெரியாதுன்னு சொல்லவே சொல்லாது
Y for YouTube --> நல்லா பொழுது போகும்.
# for 123Greetings --> வாழ்த்துக்கள் பறிமாற.

*****************************************************************************
மூனு பேர டேக் பண்ணனுமாமே?

1- கானா பிரபா
2- சென்ஷி
3- ஜீவ்ஸ்