Sunday, November 25, 2007

உன்னை சரணடைந்தேன்..

சேரனின் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு பாடல் எப்போதும் முனுமுனுக்க வைக்கிற மாதிரி அமைந்திடும்.. இதோ தவமாய் தவமிருந்து படத்திலிருந்து இந்த ஒரு பாடல்..

பிரசன்னாவின் குரல் இனிமையானது. காதல் வந்து (சரவணா), வெயிலோடு விளையாடி(வெயில்), ராதா காதல் வராதா (நான் அவன் இல்லை) என்ற பாடல்களை கேட்டவர்களுக்கு இவரின் குரலை கண்டிப்பாக பிடித்திருக்கும். கல்யாணி மட்டும் சும்மாவா? காலை அரும்பி (கனா கண்டேன்), சும்ம கிடந்த (தம்பி), கோழி குண்டு (எம்டன் மகன்), ஆசை கனவே (இம்சை அரசன்) , கடவுள் தந்த (மாயாவி) போன்ற பாடல்களையே அவர் குரலால் அழகு படுத்தியவர்.





பாடல்: உன்னை சரணடைந்தேன்
பாடகர்: பிரசன்னா, கல்யாணி
இசை: சபேஷ் - முரளி
படம்: தவமாய் தவமிருந்து


பெ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள் இமையை விட்டு என்னையே வந்து நிற்க..
ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்ல..
தாயாக மாறிப்போனாயே
வேறாக தாங்கி நின்றாயே
அயராது ஓடி வந்து
இசையாக நீ இருக்க
கண்ணிருடன் மாயத்திலே
காலமெல்லாம் உப்பைப்போல
உந்தனுள்ளே நானிருப்பேனே..
(உன்னை..)

ஆ: தினந்தோறும் சாமிக்கிட்ட
தீராத ஆயுள் கேட்பேன்
நீ பார்க்கும் பார்வைப்போல
பூவெல்லாம் பூக்க கேட்பேன்
நீ நடக்கும் நிலத்தினிலும்
நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும்
தாய்மையை தந்திடுவேன்
உன் உலகத்தின் மீது நான் மழையாகுவேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதியாகுவேன்

ஆ: உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
காதல் என்ற சொல்லில் காதலே இல்லையென்பேன்
வாழும் வாழ்க்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்
சொந்தங்கள் யாவும் ஆனாயே
சோகங்கள் ஆற்றி விட்டாயே
அடைக்காக்கும் தாய்க்குருவி
சிறகாகி நீ அணைக்க
முட்டைக்கூட்டில் ஓடுடைத்து
முட்டி மோதும் குஞ்சைப்போல
தினமும் புதிதாய் நானும் பிறப்பேனே..

இதே இசை வேறொரு வரியில்...



Wednesday, November 14, 2007

காதல் குளிர் வில்லனை பார்க்கணுமா?

காதர் குளிருக்கு வில்லன் போட்டோ வேணும்ன்னு ராகவன் அண்ணனும் துர்காவும் கேட்டாங்க..

சரின்னு இது கொடுத்தேன்:


வில்லன் சிரிச்சுட்டே இருக்கார்.. என்னமோ லிஃப்ட் கேட்க நிக்குற மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டாரு அண்ணன். (சிரிச்ச முகத்துக்காரரு அண்ணன் கே.ஆர்.எஸ்.. என்ன செய்தாலும் அவர் முகத்துல வடியிற பாலை துடைக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க.. )

வேற ஒன்னு ட்ரை பண்ண சொன்னார்.. மேன் இன் ப்ளாக் மாதிரி வேணும்ன்னு சொன்னார்.. இப்போ வில்லன் கே.ஆர்.எஸ்:

எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு!
கருப்பு உடையிலும் கலையா இருக்காரு வில்லன்..

கடைசியா இது காட்டினேன்.

இதைப் பார்த்துட்டு ராகவன் அண்ணா சொன்னது: “இவன் வில்லன் மாதிரி இல்ல.. ஹீரோ மாதிரில இருக்கான்.. இதெல்லாம் நான் என் ப்ளாக்ல போட மாட்டேன்”

ம்ம்.. அவர் போடலைன்ன என்ன.. நாமே வெளியிட்டுடுவோம்ன்னு முடிவு பண்ணியாச்சு.. எப்படி இருக்காரு நம்ம வில்லன்?? ;-)

Saturday, November 10, 2007

அழகிய(??) தமிழ்(!!) மகன்???

குடும்பத்தோட கடைசியா நான் தியேட்டரில் பார்த்த படம் பிதாமகன். இந்த வருட தீபாவளிக்கு எப்படியும் எல்லாரும் ஒன்னா ஒரு படம் பார்த்திடணும்ன்னு எங்கண்ணா கங்கணம் கட்டிக்கிட்டு திரிஞ்சாரு. அவர் ஒரு தடவை முடிவு பண்ணிட்டார்ன்னா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம்! என்ன கொடுமை சரவணா இது!!

சரி, என்ன படத்துக்கு போகலாம்ன்னு நாங்க லிஸ்ட் போட ஆரம்பிச்சிட்டோம். ஆப்ஷன்ல மூனு படம் செலக்ட் ஆச்சு: வேல், அழகிய தமிழ் மகன், கண்ணாமூச்சி ஏனடா. அப்பா உடனே, சூர்யா நல்லா நடிப்பான்ல. அந்த பொண்ணு அசின் கூட நல்லா கியூட்டா நடிக்குதுன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அம்மா ஒரு லுக்கு விட்டாங்க பாருங்க. அப்பா அடங்கி போயிட்டாரு. அப்போ டீவில அழகு குட்டி செல்லம்ன்னு பிருத்திவிராஜ் ஆடிக்கொண்டிருந்தார். அப்பா, இவரோட படம் கூட ஒன்னு ரிலீஸ் ஆகுதுப்பா. சத்தியராஜ், ராதிகா கூட நடிக்கிறாங்கன்னு நான் சொன்னதும் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச 2 ஓல்ட் ஜெனெரேஷன் ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறதை கேள்விப்பட்டதும் ஓக்கேன்னு சொல்லிட்டாங்க. அண்ணன் வந்தாரு. அழகிய தமிழ் மகனுக்குதான் போகணும்ன்னு ஒரே அடம்.

சரி, சிங்கம் சிங்கிளா கொண்டாடுற கடைசி தீபாவளி. இன்னும் கொஞ்ச நாள்ல மஞ்ச தண்ணி தெளிச்சு பலி கெடா கொடுக்கப்போறதுக்கு முன்னே ஆசையை நிறைவேற்றி வைக்கலாம்ன்னு ஓகே சொல்லிட்டாங்க. விஜய் படமா? அதே மசாலா கதைதானே! என்ன பண்றதுன்னு நான் யோசிக்க, சரி, ஒரு பதிவெழுத ஐடியா கிடைச்சாச்சுன்னு நானே என்னை சமாதான படுத்திக்கிட்டேங்க. அப்பா செலவுல (டிக்கேட் பணம் அப்பாதேனே போடபோறார்) சூனியம்ன்னு தெரிஞ்சும் படவிமர்சனம் எழுதி பல மாதங்கள் ஆச்சேன்னு ஓகே சொல்லிட்டேன்.

படம் ஆரம்பிக்கும்போதே டாக்டர் விஜய்ன்னு வரும்போது பின்னால விசில் பறக்குது! நான் தலையில அடிச்சுக்கிட்டேன். (டாக்டர் பட்டம் இப்படி ச்சீப்பா போச்சே!) படம் ஆரம்பிச்சதும், ஒரு சண்டை, அதை தொடர்ந்து ஒரு பாட்டு, ஹீரோயின் இண்ட்ரோ, ஹீரோயினோட சின்ன சண்டை, அதுக்கப்புறம் காதல் டூயட், அப்புறம் ஹீரோவோட தனி ட்ராக் = கதை(??), சண்டை, சுபம்ன்னு எல்லா விஜய் படம் போலவே இதுவும் அமைஞ்சிருக்கு. நடுநடுவில் குத்துப்பாட்டு. வித்தியாசம் என்னன்னா மற்ற படத்துல ஹீரோ விஜய், வில்லை இன்னொருத்தர். ஆனால் இதில், ஹீரோ = விஜய், வில்லன் = விஜய்.

படம் ஆரம்பிக்கும்போதே காட்டாறு அக்காவை வம்பிழுக்கிற மாதிரி ஒரு பஞ்ச் டயலோக். அடுத்த காட்சியிலேயே நம்ம கவிதாயினி தமிழ் M.Aக்கு போட்டியா ஒரு கவிதை:

"நீயும் நானும் ஒன்னு
காந்தி பிறந்த மண்ணு
டீக்கடையில நின்னு
தின்னு பாரு பன்னு.. "

இதுக்கு க(கா)விதை போட்டியில முதல் பரிசு. என்ன கொடுமை கவிதாயினி இது!!

படம் முழுதும் பஞ்ச் டயலோக் பறக்குது. “எவ்வ்வ்வ்வளவோ செஞ்சிட்டோம்.. இது கூட செய்ய மாட்டோமா என்ன”, “அடடடடடே”, “நான் போக்கிரிடா”ன்னு மார் தட்டி பெருமை பட்டுகொள்கிறார் கதாநாயகன். படம் முழுதும் ஆங்காங்கே இவர் மாலையுடந்தான் திரிகிறார். மாலை மற்றும் புகழ் மேல் என்ன ஈர்ப்போ தெரியவில்லை..

ரஹ்மான் பாடல்களை அருமையாக கம்போஸ் பண்ணியிருக்கிறார். ஆனால், படத்தில் ஒவ்வொரு பாடல்களும் கஷ்டப்பட்டு திணிக்கப்பட்டதுபோல கதைக்கும் பாடல்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் வருகிறது. ஒட்டவே இல்லை! என்ன கொடுமை ரஹ்மான் இது!!

பல காட்சிகளில் விஜயின் நடிப்பு மற்ற நடிகர்களை ஞாபகப்படுத்துகிறது. இரட்டை வேடத்தில் விஜய் என்று அறிவிக்கும்போது, ஏதாவது வித்தியாசம் இருக்குமோ (இல்லைன்னு தெரிஞ்சும்) என்று எதிர்ப்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்! அதே கிறுக்குத்தன நடிப்புதான் இதிலேயும்!

ஷ்ரேயா.. என்னத்த சொல்றது!!! திருவிளையாடல் ஆரம்பம் ஷ்ரேயா, சிவாஜி ஷ்ரேயா, அழகிய தமிழ் மகன் ஷ்ரேயா.. இதில் குறைந்த பட்சம் அஞ்சு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியுமா என்னாலன்னு எனக்கே தெரியலை. அதே கதாப்பாத்திரம், அதே ஸ்டைல், அதே மாதிரி உடைகள்!

தேவையே இல்லாத ஒரு கதாப்பாத்திரம்.. நமிதாவுடையது.. எதுக்கு வந்தார்ன்னே தெரியவில்லை! அந்த அளவு அவருடைய கேரக்டர் படத்துல ஸ்ட்ரோங்கா(!!) இருக்கு! சின்ன வயசுல போடாமல் விட்ட உடையெல்லாம் இப்போ அணிந்தே தீருவேன்னு சபதம் எடுத்துட்டார் போல.. அவர் ஆசையெல்லாம் நிறைவேற்றிகொண்டார்..

ஆங்.. நமிதா கேரக்டரை பத்தி சொல்லும்போது இன்னொரு கேரக்டர் ஞாபகம் வருது. ஷாகிலா! எதுக்கு இவர் வரணும்? அவசியம் என்ன? கடைசி வரைக்கும் எனக்கு விடை கிடைக்கலைங்க. உங்கள் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா..

கதாப்பாத்திரங்கள்தான் சொதப்பிடுச்சு. கதையாவது.... (சாரி.. டாக்டர் விஜய் படத்துல கதையெல்லாம் எதிர்ப்பார்க்கலாமா? ) ரசிக்கும்படியாக இருக்குமான்னு பார்த்தாலும் நீங்க ஏமாந்துதான் போவீர்கள் என்று இப்போதே எச்சரிக்கை கொடுத்துவிடுகிறேன். வீட்டுல ஓட்டையடைக்கிறதுக்கு சுண்ணாம்பு உபயோகிப்பாங்க. அந்த மாதிரி 2 டின் உபயோகிச்சாலும் எல்லா ஓட்டையும் அடைக்க முடியாதுங்க.

2 விஜய்க்கும் வித்தியசம் கூட தெரியவில்லை விஜயின் நெருங்கிய நண்பர்களுக்கு. கருமம் இவங்களுக்குதான் தெரியவில்லை.. காதலி ஷ்ரேயாவுக்குமா தெரியவில்லை? சரி, ஓட்டப்பந்தயம் வச்சி யார் ரியல்.. யாரு போலின்னு கண்டுபிடிக்கிறேன்னு ஒரு அறிவுப்பூர்மா முடிவெடுத்தீங்க. அவங்க ஓடும்போதுக்கூடவா உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை?

க்ளைமேக்ஸ் முன்னே நடக்கும் ச்சேஸிங் காட்சியில் ஒன்றைக்கூட நம்புற கரமா இல்லை. மோட்டர்லேயே 360 டிக்ரீ சுற்றுவதும் பாய்ந்து லாரியில் ஏறுவதும்.. என்ன கொடுமை சார் இது!

இப்படி பட பார்க்கும்போது நானே நிறைய கேள்விகளை அடுக்கி வச்சேன். வந்து எழுதுறதுக்குள்ள எல்லா பாய்ண்டைஉம் மறந்துட்டேன். வேணும்ன்னா திரும்ப பார்த்துட்டு அந்த விட்டுப்போனா ஓட்டைகளை எழுதுவோம்.
ஓட்டையிலேயே பெரிய ஓட்டை க்ளைமேக்ஸ் சீன். அது என்னன்னு நீங்களே பர்த்து தெரிஞ்சிக்கோங்க. யாம் பெற்ற துன்பம் இவ்வகையும் பெருக. :-P

படத்தில் எல்லாமே சொதப்பலாக இருந்தாலும் 2 ப்ளஸ் இருக்கு. ஒன்னு ரஹ்மான். இரண்டாவது எடிட்டிங் ஆண்டனி. அவருடைய எடிட்டிங் சூப்பரா வந்திருக்கு. கேளாயோ பாடலில் வரும் க்ராஃபிக்ஸ் அருமையா வந்திருக்கு.

அழகிய தமிழ் மகன் = அழகிய(??) தமிழ்(!!) மகன்???


பி.கு: இது சங்கம் போட்டிக்கு அல்ல. ;-)