Saturday, December 06, 2008

உலு கிள்ளானில் மீண்டும் நிலச்சரிவு!!

இன்று அதிகாலை கோலாலம்பூர், உலு கிள்ளான், புக்கிட் அந்தாரா பங்சாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் 14 பங்களா வீடுகள் புதையுண்டது. இதுவரை நால்வர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 93 பேர் உயிர்சேதமின்றி தப்பினர். இடிபாடுகளின் நடுவில் இன்னும் பலர் சிக்கி தவிப்பதாக நம்பப்படுகிறது. மீட்புப்பணிக்குழு அவர்களை கண்டுப்பிடிப்பதில் காலையிலிருந்து மும்முரமாக இருக்கின்றனர்.





நிலச்சரிவினால் சம்பந்தப்பட்ட வீடமைப்புப் பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் புக்கிட் அந்தாராபங்சா தொலைதொடர்பு, மின்சாரம், தண்ணீரும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

சம்பவ இடத்துல் குடியிருக்கும் ஏறக்குறைய 3000 பேர் இடம்பெயர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிலத்தடியில் ஏற்ப்பட்ட நீர் ஓட்டத்தினால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. காலையிலிருந்து இடைவிடாத மழையினால் மீட்புப்பணிகள் செயல்ப்படுவதற்கு சிரமமாக உள்ளது.





இதற்கு முன் 1999 டிசம்பர் 11-இல் புக்கிட் அந்தாரா பங்சா ஹைக்லண்ட்ஸ் டவர் இதேப்போல் நிலச்சரிவில் இடிந்துவிழுந்ததில் 48 பேர் இறந்த சம்பவம் இன்று நடந்த இடத்திலிருந்து வெறும் 1.5 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.

இந்த வாரத்திலே இது மூன்றாவது நிலச்சரிவு. முதல் சம்பவம் கடந்த ஞாயிறு அன்று உலு யாம் கோம்பாக்கில் நடந்த நிலச்சரிவில் ஒரு பங்களா புதையுண்டதில் சகோதரிகள் இந்தான் (9) மற்றும் அதிரா (11) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு டாமான்சாரா ஹைக்ட்ஸ் ஜாலான் செமாந்தானில் மண் சரிவு ஏற்ப்பட்டதில் 11 கார்கள் புகையுண்டதில் அன்று முழுதும் பலத்த வாகன நெரிசலும் ஏற்ப்பட்டது.

இந்த மழை காலத்தில் மேலும் நிலச்சரிவு ஏற்ப்படலாம் என்று நம்பப்படும் வேளையில் கோலாலம்பூர் பொது மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை மற்றும் அம்பாங் மருத்துவமனையில் வேலை செய்யும் அனைத்து வேலையாட்களுக்கும் விழாக்கால விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு வேலையில் சேர அழைப்பு விடப்பட்டுள்ளது.





2 Comments:

said...

அச்சச்சோ.. :(

said...

இயற்கையின் கோரத்தாண்டவம் எல்லா இடங்களுக்கும் பரவிட்டது :(