கண்ணுக்கு மை அழகு..
கவிதைக்கு பொய் அழகு..
கண்ணத்தில் குழி அழகு..
கார் கூந்தல் பெண் அழகு..
ம்ம்.. நானும் அழகு பதிவைத்தான் எழுத போகிறேன் என்று தெரிந்திருக்கும் உங்களுக்கு! கிடேசன் பார்க்கிலிருந்து கோபி நீங்க எழுதியே ஆகணும்ன்னு வற்ப்புறுத்தினார். ஆன் ஆர்பரில் இருந்து சி.வி.ஆர் உங்கள் பெயரையும் விளையாட்டில் சேர்த்துக்கவா என்று அனுமதி கேட்டார். Dr.டிடியின் பக்கத்து ஆத்து அம்பி அவர்கள் நீ எழுதுற... மறுபேச்சு அதுக்கு இல்லைன்னு சொல்லிட்டு கிளம்பிட்ட்டார்.
நான் இப்போது எழுதும்போது அனேகமா எல்லாரும் ஆடியே முடிச்சிருப்பீங்க. நான் சொல்ல வந்த குறும்பு, குழந்தை, தமிழ், தனிமை, நட்புன்னு ஒன்னு விடாமல் எல்லாருமே சொல்லிட்டீங்க. எனக்கும் இந்த ஆறு மட்டும்தான் அழகு என்று சொல்வதில் உடன் பாடு இல்லைங்க. அதனால், அந்த ஆறில் ஒன்னே ஒன்னு பற்றியதை மட்டும் எழுதலாம்ன்னு நினைக்கிறேன்.
எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வருவதே நட்பு. அந்த நட்பில் இந்த குறுகிய காலத்தில் எனக்கு கிடைத்த நட்பு வட்டாரங்களில் சிலரின் நான் ரசிக்கும் சில அழகுகள்:
கார்த்தியின் கிராமத்தின் ஏக்கம் அழகு..
கடல் கணேசனின் கடல் பயணம் அழகு..
சி.வி.ஆரின் சிந்தனைகள் அழகு..
ஜியின் நையாண்டிகள் அழகு..
அம்பியின் காமெடி சென்ஸ் அழகு..
அருணின் நக்கல் அழகு..
ஜி3யின் G3 (சுடுவது) அழகு..
ஸ்யாமின் தீர்ப்புகள் அழகு..
சந்தோஷின் விமர்சன ரசனை அழகு..
ராமின் குழந்தைத்தனம் அழகு..
புலியின் உதவி மனப்பான்மை அழகு..
அபி அப்பாவின் அபி பாப்பா அழகு..
தேவின் கதைகள் அழகு..
இம்சை அரசியின் எழுத்துத்திறன் அழகு..
கண்மணியின் டைமிங் காமெடி அழகு..
கோபியின் கிடேசன் பார்க் அழகு..
வெட்டியின் தெலுங்கு ரசணை அழகு..
இளாவின் விவசாய கலை அழகு..
துர்காவின் குறும்புகள் அழகு..
பொற்கொடியின் சமையல் டெஸ்டிங் அழகு..
ரம்யாவின் அன்பு அழகு..
பரணியின் பில்லு கட்டும் கடமை அழகு..
தம்பியின் கும்மியடிக்கும் திறன் அழகு..
ப்ரியாவின் கதை சொல்லும் திறன் அழகு..
டிடியின் காதல் திருமணம் அழகு..
கோப்ஸின் வணக்கங்கள் அழகு..
இன்னும் நிறைய பேரின் அழகை இங்கே மறக்க காரணமான
என் ஞாபக மறதியும் அழகு. :-D (ராம், நீங்க சொல்றதுக்குள்ள நானே சொல்லிட்டேன்..:-P)
இங்கே பல பேரோட பெயர்கள் விட்டு போயிருக்கு.. அதற்க்காக நோ ஃபீலிங்ஸ் ப்லீஸ்.. :-D (அதுவும் ஒரு அழகுன்னு சொல்லி சமாளிச்சுக்கிறேன்.. )
சரி.. அப்படியே முடிச்சிட்டா நல்லா இருக்காது.. அதனால இன்னும் ரெண்டு போனஸ் அழகை இங்கே சேர்த்துக்கிறேனுங்கோ..
1- எப்பவும் போல நம்ம ப்ரின்ஸ்தானுங்கோ.. பாருங்கோ!!!

2- என்னைக் கவர்ந்த ஒரு குரல்.. எல்லா நேரமும் என்னுடன் துணையாய் இருக்கும் ஒரு குரல்.. எந்த ஒரு மூட்டிலும் எனக்கே எனக்காய் ஆதரவாக ஒரு குரல்.. அது என் சுஜாதாவின் குரல்தானுங்கோ.. அந்த அழகிய குரல் இப்போதும் என் காதில் ரீங்காரம்மிட்டுக்கொண்டிருக்கிறது..

இவ்வளவு லேட்டா பதிவை போட்டு டேக் பண்ண ஆள் தேடுவது கொடுமையிலும் கொடுமைங்க.. என்ன கொடுமை "சிங்கம்லே ACE" இது!!
அதனால இந்த போஸ்ட்டை படிக்கும் பதினெட்டு பட்டி மக்களுக்கும் என்ன சொல்ல வர்றேன்னா, யார் இன்னும் அழகு போஸ்ட் எழுதலையோ.. எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க.. நானே உங்களை டேக் பண்ணிடுறேன்..
டாட்டா...