Wednesday, October 03, 2007

நானா நீயா? - 2

"பாட்டுதான் இது பாட்டுதான்.. சூப்பர் பாட்டுதான்!"

இப்படி பாடுனவரு யாரும் இல்லைங்க.. சாட்சாட் அந்த இயக்குனரேதான்!

நேத்து நைட் என்ன நடந்துச்சு தெரியுமா?? "நீங்க" யாரும் வர்றாததுனால யாரோ ஒரு இசையமைப்பாளரை கூப்பிட்டு கம்போஸிங் செய்ய சொன்னார் இயக்குனர். அந்த இசையமைப்பாளர் இசை கம்போஸ் பண்றேன்னு சொல்லி ஆர்மோனியப்பெட்டியை ஒரு வழி பண்ணிட்டார்.. அப்போதுதான் தெரிஞ்சது அவர் இசையமைப்பாளர் இல்ல.. தஞ்சோங் ரம்பூத்தான்ல இருந்து (இந்தியாக்கு ஒரு கீழ்பாக்கம்ன்னா மலேசியாவுக்கு இது ஒரு தஞ்சோங் ரம்புத்தான்) தப்பி ஓடி வந்த பேஷண்ட்..

இயக்குனர் வேற வழியில்லாமல் கம்போஸ் பண்றேன்னு ஒரு பியானோவை தூக்கி வச்சு உட்கார்ந்தார்.. அப்போ ஒரு பாட்டு காற்றுல கலந்து வருது...

நானா இல்லை நீயா.. நானா இல்லை நீயா..
நானா நீயா நானா நீயா X 4

இவன் இவனும் எதையும் அறியாதவன்
நல்லவன் அப்பளசாமி பாவம் இவன்
என்ன இது பூமி யாரவன் குண்டோதரன்
ஆணவம் கூடாது சாமி
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
அதை அறியாமல் காலை விட்டு விட்டு
கொஞ்சம் திரும்பி பார்த்து
சிரித்து நீயும் கைகளால் தட்டு தட்டு
தட்டு தட்டு போடு ஆட்டம் போடு
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்
கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்
ஏன் இந்த போட்டி சொல்வதுக்கெல்லாம் தலை ஆட்டி
வெளியே வஞ்சக பார்வை உள்ளெ விஷமாய் இருப்பது
இது பழகியது மருபடியும் முடிவாகும்..
ஏன் இது..

சொல் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
சொல் வேண்டாம் வேண்டாம்
வம்பு வேண்டாம் சண்டை வேண்டாம்
சொல் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் கோபம் வேண்டாம்

Don't Want It.. Don't Need It
வேண்டும் வேண்டும்
அன்பு வேண்டும் பண்பு வேண்டும்
சொல் வேண்டும்
வேண்டும் வேண்டும் பாசம் வேண்டும்

We Want It... We Need It..

சதி மேல் சதி இதுதான் கதி
வாழ்வினில் பாதி புரிந்தால் சரி
ஏன் ஏன் எதர்கிந்த போட்டி
பார் பார் ஆசை பேராசை
முடிந்ததை மறந்துவிடு
நல்ல வழி நீ உனக்கு தேடு
ஒரு மாட்டுக்கு ஒரு சூடு
நீ செய்வது தப்பு
இனி தேவை பாதுக்காப்பு
உனவில் உண்ட உப்பு
மீண்டும் மீண்டும் தப்பு
இனும் என்ன பண்ண
தப்பு மேலே தப்பு பண்ண
இல்லற வாழ்க்கை அல்ல சில்லறை வாழ்க்கை

சின்ன குழந்தை அல்ல
நான் இன்னும் எடுத்து சொல்ல
அரசன் அன்று கொல்வான்
இறைவன் நின்று கொல்வான்
இதை புரிந்தவன்
பிழைத்து கொல்வான் விழித்து கொல்வான்..

வெற்றியா இல்லை தோல்வியா..
நம் கைகளில் Forever
(வெற்றியா..) X 2

நானா இல்லை நீயா புயலா இடி மழையா
சரி தப்பு எது என்று அறியாமல்
காலை விட்டு முழிப்பது யார் என்று
(நானா...)

(வேண்டாம்..)

யோ யோ MC லோகா Together Vizz Da Blizz
அஹா Check It Out
Hyp Hyp.. Hyperkinetix
செல்வாக்கை விட சொல்வாக்கு முக்கியம்
Check Check Check Check It Out

நானா நீயா. நானா நீயா..
நானா நீயா. நானா நீயா..
நானா நீயா. நானா நீயா..

இயக்குனர் அசந்துட்டார் போங்க.. அவர் கேட்ட வரியில் அருமையா கம்போஸிங் ஆகியிருக்கு பாட்டு.. "யாரு.. இது யாரு.. அசத்திட்டு இருப்பவர் யாரு?"ன்னு அவர் வெளியே வந்து பார்த்தார்..

தலையில் திருப்பி போட்ட தொப்பி, கூலிங் க்லாஸ், கழுத்துல பட்டையா ஒரு சங்கிலி, பெரிய சட்டை. அதுக்கு மேலே ஒரு வெஸ்ட்.. ரெண்டு பேர் நுழையிற அளவுக்கு ஒரு ஜீன்ஸ் பேண்ட்னு அப்படியே ஹிப் ஹோப் ஸ்டைல்ல ரெண்டு பேர்...

இயக்குனர்: யாரய்யா நீங்க?

MC லோகா: MC லோகா from Hyp yp.. HYPERKINETIX..

கையை ஆட்டி ஆட்டி ஹிப் ஹோப் ஸ்டைல்ல ஒரு வணக்கத்தை சொல்ல..

இயக்குனர்: இந்த சின்ன பையன் யாரு?

Vizz: Vizz Da Blizz

இயக்குனர்: ஆஹா.. வெள்ளைகாரன் கணக்கா இங்கிலீசு பேசுறாரு துரை. இந்த பாட்டு பாடுனது நீங்கதானா?

பேசும்போதுதான் தெரிய வந்தது.. Vizzக்கு இப்போதுதான் 12 வயது. இப்பவே Rap நல்லா பண்றான். நன்றாகவே பாடும் திறனும் இருக்கு. cute-ஆவும் இருக்கான். உடனே அவருடைய "நானா நீயா?" என்கிற தெலிமூவீயில் இடம் பெறும் 8 பாடலுக்கு 4 பாடல் பாடும் வாய்ப்பை வழங்கிவிட்டார்.. MC லோகாவும் இந்த படத்துல பாடுறார்..

வேயிட் வேயிட்.. கதை இன்னும் முடியலை..அதுக்குள்ள கிளம்பினா எப்படி? இந்த படம் ஒரு காமெடி படம். 2 மணி நேரம் முழுக்க முழுக்க காமெடி வெலி வெலிக்க போகும்படம்.. மிஸ் பண்ணாமல் எல்லாரும் வந்து பார்க்கணும்ன்னு இயக்குனர் ஆசைப்படுறார்.. படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள் நீங்க MC லோகாவும் Vizz-உம் பாடும் நானா நீயாவை பார்த்து ரசியுங்கள். :-)


பி.கு: இன்று மாலை ஒரு அழகான காதல் காவியம் உங்கள் அபிமான ப்ரௌஸரில்... காணதவறாதீர்கள். :-P

9 Comments:

said...

Vilambaram jaasthiya irukkae ;)

Anonymous said...

ஓடுங்க ஒடுங்க சுனாமி வருது...:)

Anonymous said...

G3 said...
Vilambaram jaasthiya irukkae ;)
//

அதுக்கு தான் பதிவ படிக்க கூடாது



MR X

said...

சதி மேல் சதி இதுதான் கதி
//

இப்ப தான் புரியுது

Anonymous said...

G3 said...
Vilambaram jaasthiya irukkae ;)
///


உங்களூக்கு பின்னுட்டமே போட தெரியலை


மி த ஃபஸ்ட்டுனு போடனும்

:)

said...

சூப்பர் X 4

said...

:) :) ம்... காசுபோட்ட தயாரிப்பாளர் கூட இத்தனை விளம்பரம் செய்திருக்க மாட்டாரு...என்ன அக்கறை உங்களுக்குத்தான்.

said...

வருவீயா...

வருவீயா....

ஒடு.. ஒடு....

said...

நல்ல எழுத்து நடை:-))