Thursday, July 10, 2008

காத்திருந்த காதலி - பாகம் 8


இதுவரை காத்திருந்த காதலி:

வடகரை வேலன் பாகம் 1
பரிசல் காரன் பாகம் 2
வெயிலான் பாகம் 3
கிரி பாகம் 4
ஜெகதீசன் பாகம் 5
டிபிசிடி பாகம் 6
கயல்விழி முத்துலெட்சுமி பாகம் 7

....மருத்துவமனை ஒன்றாம் எண் வாசலில் கௌரியின் அப்பா கார்நுழைந்த அதே நேரம் கார்த்திக் கார் இரண்டாம் எண் வாசல் வழியாக நுழைந்தது. இருவரும் வேறு வேறு படிக்கட்டுகளில் சங்கர் அறையை நோக்கி ஏறிக்கொண்டிருந்தார்கள்.

**********************************************************
இது முத்துக்கா எழுதியது.. நான் பாட்டுக்கு தேன்கிண்ணத்துல பாட்டு போட்டுக்கிட்டு, 24/7 ஃப்ரேம்ஸ்ல வீடியோ போட்டுக்கிட்டு, அப்பப்போ யாராவது பதிவு எழுதி கொடுத்தா அதை என் வலைப்பதிவுல போட்டுக்கிட்டு, அப்பப்போ கொஞ்சம் கும்மியும் ஆடிட்டு இருந்தேன். கதை எழுது நீன்னு ஆர்டர் போட்டுட்டு போயிட்டாங்க முத்துக்கா. என்ன கொடும சார் இது! கதையா? நானா?ன்னு எனக்கே ஒரு நிமிடம் ஒன்னும் புரியல. தயவு செய்து விளக்கவும் நிலமைதான். சரி, என்னை நம்பி வாக்கு கொடுத்துட்டாங்களே. எழுதி கொடுத்துடுவோம்ன்னு இறங்கிட்டோம்ல. ;-)
முத்துக்கா வலுக்கட்டாயமா டில்லியை சேர்த்துக்கிட்டதால நான் கேரக்டர் அனைவரையும் மலேசியா கூட்டிட்டு வரணும்ன்னு பார்த்தேன். ஃப்ளைட் டிக்கேட்ஸ் கட்டுப்படியாகாததுனால ஒருத்தரை மட்டும் மலேசியாவிலிருந்து இந்தியா கொண்டு வந்திருக்கேன். ஹீஹீஹீ.. இப்போ நம்ம கதை. படிச்சுட்டு நீங்க அடிக்க வர்றதுக்குள்ள நான் அப்பீட்டு..

**********************************************************

சங்கரின் பெற்றோர்கள் பின் தொடர கார்த்திக் வெகு வேகமாக படிக்கட்டுகளில் ஏறி சங்கரின் அறையை அடைந்தான். மற்றவர்கள் அறைக்கு வந்து சேறுவதற்கு முன்பே சில காரியங்கள் செய்ய வேண்டும் என முன்பே குறித்துவைத்திருந்தான்.
உள்ளே சீருடையில் நர்ஸ் மட்டுமே இருந்தாள்.

கார்த்திக்கை பார்த்ததும் நர்ஸ் எழுந்து அவன் அருகில் வந்தாள்.

"சிறிது நேரம் பேஷண்டை பார்த்துக்குறீங்களா? நான் சில மருந்துகளை எடுத்துட்டு வந்துடுறேன்"

"சரி சிஸ்டர்"

நர்ஸ் ஒரு துண்டு சீட்டை எடுத்துட்டு வெளியாவதை நின்ற இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். நர்ஸ் தன் பார்வையிலிருந்து மறைந்ததும் சங்கர் கட்டிலின் அருகே போனான்.

சங்கர் தூக்க மாத்திரையின் தாக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஆனாலும் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்போது பக்கத்தில் யாராவாது பேசினால் நோயாளிகளுக்கு கேட்குமாமே! கார்த்திக் கொஞ்சம் குனிந்து சங்கரின் காதில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தான்.

சடாறென்று யாரோ கண்ணத்தில் ஓங்கி அறைந்த வேகத்தில் அப்படியே விழுந்து கட்டிலின் இரும்பில் மோதி தலைக்கு மேல் நட்சத்திரங்கள் சுற்றுவது போல் இருந்தது. தன்னை சுதாகரித்துக்கொள்வதுக்குள் மேலும் மேலும் அடிகள் விழ ஆரம்பித்தன.

"ஐயா!!!! எம்பையனை எதுக்குயாஅடிக்கிறீங்க??" என்று தன் சேலையின் முந்தானையை பிடித்துக்கொண்டு ஓடி வந்தார் சங்கரின் அம்மா. அப்பாவோ தன் பங்குக்கு தன் மகனை கௌரியின் தந்தையிடமிருந்து காப்பாற்ற பாடுப்பட்டார்.

"ம்ம்.. நீங்கதான் இவன பெத்தவங்களோ?? %@*#&(%" இளக்காரமாய் கேட்டார் ராமச்சந்திரன்.

"சார்.. வார்த்தையை அளந்து பேசுங்க"

"ஓ பண்றதையும் பண்ணிட்டு மரியாதையா வேற பேசணுமோ?"

"சார். என்ன விஷயம்ன்னு சொல்ல்லுங்க"

"உம் மையனையே கேளுய்யா.. சொல்லுவான் அவன் வண்டவாளத்தை"

"டேய்.. என்னடா பண்ணே? எதுக்கு இந்த ஐயா என்னென்னமோ சொல்லுராரேடா.. என்னப்பா நடந்துச்சு. சங்கர் வேற இப்படி கெடக்குறான். இந்த நிலமையில..." துக்கம் தொண்டையை அடைத்தது சங்கரின் அம்மாவுக்கு.

" அம்மா... அது ஒன்னும் இல்லம்மா. இவர்தான் கௌரியோட அப்பா. சங்கர் காதலிக்கிறான்னு அன்னைக்கு போன்ல சொன்னானே. அந்த பொண்ணோட அப்பா"

"அவர் ஏண்டா உன்னை அடிக்கணும்?" இது அப்பா..

"அப்பா.. அது வந்து.. வந்து.. அதுதான் எனக்கும் தெரியல.."

"பண்றதெல்லாம் பண்ணிட்டு தெரியலைன்னா சொல்றே!!!" மிகவும் ஆக்ரோஷத்துடன் சீறி பாய்ந்தார் ராமச்சந்திரன்.

அதற்க்குள் சங்கர் முனுமுனுக்க எல்லாரும் சங்கரின் பக்கத்தில் வந்து நின்றார்கள்.

"மாப்பிள்ள.. இப்போ எப்படி இருக்கு?"

சங்கர் அவரை பார்த்து மீண்டும் முனுமுனுத்தான். "சரியா விளங்கல. என்ன சொன்னே?"

அவர் காதை சங்கரின் வாய் அருகே வைத்தார். சங்கர் திரும்ப முனுமுனுத்தான்.

ஷாக் அடித்தது போல ஒரு ரியாக்ஷனுடன் ராமச்சந்திரன் நிமிர்ந்தார். அதற்குள் மருந்து எடுக்க சென்ற நர்ஸ் ஓடி வந்தாள்.
"கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா. கொஞ்சம் காத்து வரட்டும்"

"மிஸ்டர் சங்கர், இப்போ பரவால்லையா.. இன்னும் வலி இருக்கா?"

"ம்ம்.."

"இன்னும் ஒரே ஒரு ஊசி. இன்னும் 15 நிமிடத்துல உங்களுக்கு ஆப்பரேஷன். எல்லாம் சரியாகிடும்" என சொல்லிகொண்டே மயக்க ஊசியை குத்தினாள். சங்கர் திரும்ப மயக்க நிலைக்கே திரும்பினான்.

"சார், என் பையன் என்ன சொன்னான்?"

சத்தம் இல்லை. திரும்பி பார்த்தால் ராமசந்திரனும் அங்கே இல்லை. "எங்கே போயிட்டாரு இந்த மனுஷன்?" என சிந்தித்துக்கொண்டே அறைக்கு வெளியே எட்டிப்பார்த்தார். காரிடோர் வெறிச்சோடி கிடந்தது.
--------------------------------------------------------------
"ட்ரிங் ட்ரிங்.." சங்கரின் மொபைல் அலறியது.

"ஹேல்லோ"

"ஹெல்லோ கேட்டரிங் சங்கர்?"

"இல்ல. ஐ எம் கௌரி. சங்கர் வெளியே போயிருக்கார். என்ன விஷயம்?"

"ஒரு கேட்டரிங் ஆர்டர் கொடுக்கணும். ஏற்கனவே சாருடன் பேசிட்டேன். இன்னைக்கு ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வர சொன்னார். வந்துட்டேன். வீடு பூட்டியிருக்கு."

"சாரிங்க. நீங்க எங்க ஆபிஸ்க்கு வர முடியுமா?"

"ஆபிஸா? எனக்கு எப்படி வர்றதுன்னு தெரியாதுங்க. நான் மலேசியாவில் இருந்து வந்திருக்கேன். இந்த அட்ரஸையே 3 மணி நேரமா தேடிதான் கண்டு பிடிச்சிருக்கேன். புதுசா இன்னொரு அட்ரெஸ்ஸெல்லாம் தேடுறது ரொம்ப ரொம்ப சுசா (கஷ்டம்).."

"ம்ம்.. சரிங்க. நீங்க அங்கேயே இருங்க. ஒரு 45 நிமிடத்துல ஒருத்தர் உங்களை அங்கே சந்திப்பார்"

சங்கரின் போனில் கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்தாள்.

"You have no suffient balance for outgoing calls" என ஒரு பீட்டரக்கா குரல் ஒலித்தது.

ஹேண்ட்பேக்கில் தன்னுடைய போனை தேடினாள். "ஓ மை காட். போன் அப்பா ஆபிஸ்லேயே விட்டுட்டேன் போலிருக்கு."
'ம்ம்.. நானேதான் சங்கரோட க்ளையேண்டை மீட் பண்ணனும் போல..' என்று எண்ணிக்கொண்டு தன் ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு தன் காரை நோக்கி நடந்தாள்..

40 நிமிடங்களிலேயே சங்கரின் வீட்டை அடைந்ததும், ஏற்கனவே சங்கரின் பொருட்களை கார்த்திக் தன்னிடம் ஒப்படைத்ததில் சங்கர் வீட்டு சாவிக் கொத்தும் இருந்ததனால் வீட்டை திறந்து உள்ளே போனால். மலேசிய க்ளையேண்டிடம் ஒரு 20 நிமிடங்கள் வியாபர பேச்சு நடத்தியதில் நல்ல முடிவில் முடிந்தது. மலேசியா க்ளையேண்ட் "தெரிமா காசே" என்று நன்றியுரைத்து உற்சாகமாக திரும்பினார்.

கௌரி காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததனால் பசி வயிற்றை கிள்ளியது. சமையல் அறையில் ஏதாவது இருக்குமா என்று தேடிச் சென்றாள். பேச்சலர்ஸ் வீடு மட்டும்தான் அலங்கோலமாக இருந்ததே தவிர சமையல் அறை சுத்தமாக இருந்தது. பசங்க வீட்டில் சமைக்கிறதே இல்ல போல என்று எண்ணி ஃப்ரிஜ்ஜை திறந்து ஐஸ் வாட்டர் மட்டுமே குடித்தாள்.

திரும்ப ஹாலுக்கு வந்த போது ஒரு அறையின் கதவு லேசாக திறந்திருந்தது. இது சங்கரோட அறையாக இருக்குமோ என்றெண்ணிக்கொண்டே 'என்னைப் பற்றி ஏதாவது கவிதை எழுதி வைத்திருக்கிறானா என் அருமை காதலன்' என அந்த அறையினுள் நுழைந்தாள்.

துவைக்காத துணிகள், அடுக்கி வைக்கப்படாத புத்தகங்கள், கலந்து கிடக்கும் மெத்தை, ஒரு மூளையில் 1 மாதத்துக்கும் மேலாக துவைக்கப்படாத ஜீன்ஸ் எல்லாம் கிடந்தது. பேச்சுலர் அறை என்றாலே இப்படித்தானோ என்று மேஜை அருகே வந்தாள். மேஜை மேலே ஒரு டைரி. டைரியை எடுத்து முதல் பக்கம் திறந்தாள். கார்த்திக்கின் படத்தை அந்த முதல் பக்கத்தில் பார்த்ததும் இது கார்த்திக்க்கின் அறையோ.. நாம்தான் தப்பா வந்துட்டோம் என்று வெளியாக முற்ப்பட்டாள். கதவருகே வந்ததும், கார்த்திக் ஏற்கனவே அவளிடம் ஒரு விஷயத்தை பற்றி சொன்னது ஞாபகம் வந்தது

@@@@@@@@@@@@
சின்ன ஃப்ளாஷ்பேக்:

கௌரி: கார்த்திக், நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போறே?
கார்த்திக்: கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல
கௌரி: ஏன்? காதல் மேலே வெறுப்பா?
கார்த்திக்: இல்ல. ஒருத்தருக்கு ஒரு தடவைதான் காதல். நான் ஏற்கனவே காதலிச்சிட்டு இருக்கேன்
கௌரி: அட்ரா சக்க.. யாரந்த பொண்ணு?
கார்த்திக்: இது ஒரு தலை காதல். நான் அவ கிட்ட சொல்றதுக்கு முன்னவே செத்து போச்சு. யாரென்று கேட்காதே ப்ளீஸ்..
@@@@@@@@@@@@@@

கார்த்திக் யாரை காதலிக்கிறான் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் திரும்ப அறையினுள் நுழைந்தாள்.

**********************************************************
நான் முடிச்சுட்டேன். அடுத்த ஆப்பு பாசக்கார அண்ணன் கோபிநாத்.
அண்ணா, இந்த மாதம் கோட்டா இன்னும் காலியா இருக்கு. எழுதி ஜமாய்ங்க. ;-)


30 Comments:

said...

:)))

said...

காத்திருந்த காதலியில் இம்புட்டு நீட்டமா?.... மாறி மாறி ட்விஸ்டைக் கொண்டு வர்றீங்களே... )

said...

தொடர் தீபம் பாசக்கார குடும்பத்திற்குள் வந்திடுச்சா? இனி இங்கே தானே சுத்தி முடியும்... :)))

said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கா.. இது அடுக்குமா? என்னை போய் கதை எழுத சொன்னால் என்ன பண்ணும் இந்த பச்சைப்புள்ள....
7/10/2008 7:03 PM ///
//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆனாலும் உங்க பேச்சை மாற முடியாதுங்கரதுனால எழுதிட்டேன்.. உங்க அளவு இல்லைன்னாலும் சபரி அளவாவது எழுதியிருப்பேன் என்ற நம்பிக்கையில்..

.:: மை ஃபிரண்ட் ::.
http://engineer2207.blogspot.com/2008/07/8.html
7/10/2008 7:05 PM ////
இரண்டே நிமிஷத்தில் தொடர்கதையின் ஒரு பகுதியா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

தலைப்புக்கேற்ற அட்டகாசமான படம்..ஆனா என்ன ஒரு அழகான காதலியா இருந்தா கௌரி .. அழகு படத்தை யாருமே போடல.. ஆனா எப்படி இருந்த அவ இப்படி ஆகிட்டாளே.. இப்ப போட்டிருக்கியே.. ஹ்ம்..:(

said...

மைப்ரண்ட் இத்தனை சீக்கிரம் எழுதிட்டயே.. நல்லபொண்ணு.. .. கதையின் முதல்வரியில் சின்ன மிஸ்டேக் நான் அவன் மட்டும் தான் அவங்கம்மாக்குதெரியாம கிளம்பரதா சொன்னேன் நீ குடும்பத்தோட கிளப்பிட்டு போயிட்ட பரவாயில்லை .. நல்லா ட்விஸ்ட் வச்ச அதுக்கு நடுவில் பேச்சிலர் பசங்களுக்குஒரு குட்டு வேற.. :)

said...

அருமை அருமை...

தொடர்...தொடரட்டும்...

(முத்தக்காவிற்கு ஈனோ ஒரு பொட்டலாமோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் )

Anonymous said...

செம வேகத்துல எழுதுனாலும், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்!

கதையோட முற்பகுதியின் சுட்டியெல்லாம் கதை ஆரம்பத்தில போட்டாத்தான் படிக்கிறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.

said...

எனக்கு பொறாமைப்படத்தெரியாது.. அதுமட்டுமில்லாம அவள் நல்லா எழுதிருப்பதாக பாரட்டினால், மைப்ரண்டு சரியா எழுதுவான்னு அவளிடம் கொடுத்ததால் சரியான ஆளிடம் கொடுத்தோம் என்று பெருமை தானே எனக்கு சேருகிறது.. ஈனோவை நீங்களே பயன்படுத்தவும். :))

Anonymous said...

மிகக் குறைந்த நேரத்தில் மிக நல்ல பங்களிப்பு

நன்றி

said...

@ஜெகதீசன்:

//:)))//

நானும் சிரிப்பேன். :-)))))

said...

@தமிழ்பிரியன்:

//காத்திருந்த காதலியில் இம்புட்டு நீட்டமா?.... மாறி மாறி ட்விஸ்டைக் கொண்டு வர்றீங்களே... )//

அதான் சிம்பால்லிக்கா படத்தை வச்சி சொல்லியிருக்கேனே.. கௌரியின் நிலமையை. :-P

//தொடர் தீபம் பாசக்கார குடும்பத்திற்குள் வந்திடுச்சா? இனி இங்கே தானே சுத்தி முடியும்... :)))//


ஹீஹீ.. பாசக்கார குடும்பத்துலத்தான் நிரைய எழுத்தாளர்கள் இருக்காங்களே. கோபி, சென்ஷின்னு. அசத்திடலாம். ;-) (அடுத்த ஆப்பு சென்ஷிக்கா?) :-P

//இரண்டே நிமிஷத்தில் தொடர்கதையின் ஒரு பகுதியா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்//

ஸ்பீடுன்னா அந்து மை ஃபிரண்டுன்னு இனி வரலாறு பேசும். :-P

said...

@கயல்விழி முத்துலெட்சுமி:

//தலைப்புக்கேற்ற அட்டகாசமான படம்..//

நன்றி ஹை..

//ஆனா என்ன ஒரு அழகான காதலியா இருந்தா கௌரி .. அழகு படத்தை யாருமே போடல..//

அது முன்னால எழுதிய அக்கா போட்டிருக்கணும். ;-)

//ஆனா எப்படி இருந்த அவ இப்படி ஆகிட்டாளே.. இப்ப போட்டிருக்கியே.. ஹ்ம்..:(//

ஆமா ஆமா.. வீவேக் மாதிரி ஆயிட்டா. ;-)

//மைப்ரண்ட் இத்தனை சீக்கிரம் எழுதிட்டயே.. நல்லபொண்ணு.. .. //

நன்றி நன்றி

//கதையின் முதல்வரியில் சின்ன மிஸ்டேக் நான் அவன் மட்டும் தான் அவங்கம்மாக்குதெரியாம கிளம்பரதா சொன்னேன் நீ குடும்பத்தோட கிளப்பிட்டு போயிட்ட பரவாயில்லை ..//

அட ஆமாவா? நீங்க எல்லாரையும் கூட்டிட்டு வர்ற மாதிரி தெரிஞது.. சரி.. அடஹியே மெயிண்டெயின் பண்ணுவோம்ன்னு போட்டாச்சு. ;-)

//நல்லா ட்விஸ்ட் வச்ச அதுக்கு நடுவில் பேச்சிலர் பசங்களுக்குஒரு குட்டு வேற.. :)//

ஆஹா.. அக்கா மாட்டி விட்டுட்டீங்களே.. இன்னைக்கு எத்தனை பேரு என்னை வந்து குட்ட போறாங்கன்னு தெரியல.. :-P

//எனக்கு பொறாமைப்படத்தெரியாது.. அதுமட்டுமில்லாம அவள் நல்லா எழுதிருப்பதாக பாரட்டினால், மைப்ரண்டு சரியா எழுதுவான்னு அவளிடம் கொடுத்ததால் சரியான ஆளிடம் கொடுத்தோம் என்று பெருமை தானே எனக்கு சேருகிறது.. ஈனோவை நீங்களே பயன்படுத்தவும். :))//

அவ்வ்.. இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்புது.. :-))))

said...

@TBCD:

//அருமை அருமை...

தொடர்...தொடரட்டும்...

(முத்தக்காவிற்கு ஈனோ ஒரு பொட்டலாமோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் )//


கதைக்கும் ஈனோவுக்கும் என்ன சம்பந்தம்? புரியல. தயவு செய்து விளக்கவும். :-P

said...

@வெயிலான்:

// செம வேகத்துல எழுதுனாலும், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்!//

நன்றி. :-)

// கதையோட முற்பகுதியின் சுட்டியெல்லாம் கதை ஆரம்பத்தில போட்டாத்தான் படிக்கிறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.//

மாற்றிட்டேன். மீண்டும் நன்றி. :-)

said...

@வடகரை வேலன:

// மிகக் குறைந்த நேரத்தில் மிக நல்ல பங்களிப்பு

நன்றி//

நன்றி. :-)

said...

நல்ல எளிமையான நடையில் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நீங்க எதுவும் கண்டிஷன் போடலியா மைஃப்ரண்ட்?

வடகரைவேலன் இத என்கிட்ட குடுத்தப்போ சந்தோஷமா இருந்தது.. ஏன்னா என் மனைவி பேர் ”உமாகௌரி”. (உமா-ங்கறது தான் வேலண்ணாவுக்கு தெரியும்!) அதுனால கௌரி-ங்கற பேர் இருக்கற நாயகியை தைரியமானவளா காட்டணும்னு சில ட்விஸ்ட் நான் கதைல வெச்சேன். நல்லவேளை யாரும் அவளை நட்டாத்துல விடலை. (அப்புறம் யாரு இங்க வாங்கிக் கட்டிக்கறது) இதுல உமா தினமும் சீரியல் கதை கேட்கற மாதிரி, இன்னிக்கு காத்திருந்த காதலி என்னாச்சுங்க' என்று விசாரிக்கவேறு செய்கிறார்.

பாத்து எழுதுங்க மக்கா....

said...

கடமையை செய்ய டைம் வேணும் தங்கச்சி ;)

said...

மெகா சீரியல் மாதிரியா இந்த தொடர் விளையாட்டு??

said...

இன்னும் எத்தனை பார்ட் போகுமோ!?

said...

எட்டாவது பாகம்தான் மொதல்ல படிச்சேன் பாதி கதை புரிஞ்சிடுச்சு!

said...

நம்ம கோபி என்ன எழுதறார் பாக்கலாம்!

said...

/
ஸ்பீடுன்னா அந்து மை ஃபிரண்டுன்னு இனி வரலாறு பேசும். :-P
/

அப்ப புவியியல்???

said...

25

said...

யக்கா ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுகறேன்...நம்ம சுறுசுறுப்பு தான் தெரியுமே...என்னைக்கு ஏழு பகுதி படிச்சிட்டு இதுக்கு வரது... :-)

said...

உங்கள் காத்திருந்த காதலியில்
கடைசியை நான் முடிவு செயதுட்டேன்.

அதை பாசக்கார அண்ணன் கோபிநாத் எழுதுவாரா?

காத்திருக்கமாட்டேன!

said...

காத்திருந்த காதலி: பாகம் 9

http://gopinath-walker.blogspot.com/2008/07/9.html

போட்டாச்சு ;)

said...

\\கிருபா said...
உங்கள் காத்திருந்த காதலியில்
கடைசியை நான் முடிவு செயதுட்டேன்.

அதை பாசக்கார அண்ணன் கோபிநாத் எழுதுவாரா?

காத்திருக்கமாட்டேன!
\\

கிருபா....முடிவு என் கையில் இல்லை..அது 16வது பாகத்தில் தான் ;))

said...

சிந்துபாத் படக்கதை ரேஞ்சுக்கு போகும்போல..:))

said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..

இந்த கதைய எழுதிக் குடுத்தது யாரு? :)